இயேசு பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தவரா???
இயேசு பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தவரா???
▶️பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
(யோவான் 3:13)
✍மேற்கண்ட வசனத்தில் இயேசு பரலோகத்தில் இருந்து வந்தவர் என்று சொல்லப்பட்டுள்ளதால், இயேசு இந்த உலகத்திற்கு அனுப்பப்படும் முன்னரே இருந்துள்ளார் என்றும், அதனால் இயேசு தெய்வீகத்தன்மை வாய்ந்தவர் என்றும் வாதிடுகின்றனர்.
✍இயேசுவை குறித்து உவமையாக சொல்லப்பட்டதை கொண்டு அவரை இறைவன் என்று வாதிடுவது கிறிஸ்தவர்களின் அறியாமை ஆகும். எந்த வசனத்தையும் முன்பின் வசனங்களோடு படிக்கும்போது தான் அதன் உண்மை தன்மையை புரிந்து கொள்ள முடியும். மேற்கண்ட வசனம் உள்ள யோவானின் 3ஆம் அத்தியாயத்தில் இயேசு யாரிடம் பேசினாரோ அந்த நபரே இயேசு போதகர் என்பதை அறிந்து வைத்திருந்து அதை இயேசுவிடம் கூறுகிறார். அதை இயேசு மறுக்காமல் தான் இந்த உரையை நடத்துகின்றார். இதன் மூலம் இயேசு தான் ஒரு போதகர் தான் என்பதை மறுக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
▶️1. யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
▶️2. அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: #ரபீ, #நீர்_தேவனிடத்திலிருந்து_வந்த_போதகர்_என்று_அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
(யோவான் 3)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍அதுமட்டுமல்ல பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தவர் என்ற உவமை சொல் இயேசு கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் இயேசுவின் வார்த்தை கொண்டே அறிந்து கொள்ளலாம்.
▶️18. நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, #நானும்_அவர்களை_உலகத்தில்_அனுப்புகிறேன்.
(யோவான் 17)
✍மேற்கண்ட வசனத்தில் இயேசு எவ்வாறு இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டாரோ அதே போன்று இயேசுவும் தமது விசுவாசிகளை உலகத்திற்கு அனுப்புவதாக சொல்கிறார். உண்மையில் கிறிஸ்தவர்கள் எவரும் பரலோகத்தில் இருந்து பூமிக்கு அனுப்பப்பட்டவர்கள் அல்ல. இயேசு தனது விசுவாசிகள் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டவர்கள் என்று பொய் சொல்லவுமில்லை, மாறாக அவர்கள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற அர்த்தத்தில் தான் இயேசு அத்தகைய உவமை சொல்லை பயன்படுத்துகிறார் என்பதையும் இயேசுவின் வார்த்தையை கொண்டு அறிந்து கொள்ளலாம்.
▶️6. நீர் #உலகத்தில்_தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
(யோவான் 17)
✍மேற்கண்ட வசனத்தில் இயேசுவின் விசுவாசிகள் எவ்வாறு கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டார்களோ அதே போன்று தான் இயேசுவும் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டவர். அதனை தான் உவமையாக யோவானில் சொல்லப்பட்டுள்ளது. அதனால் இந்த வசனம்(யோவான் 3:13) இயேசுவை இறைவன் என்று சொல்கிறது என யாராலும் வாதிட முடியாது.
▶️பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
(யோவான் 3:13)
✍மேற்கண்ட வசனத்தில் இயேசு பரலோகத்தில் இருந்து வந்தவர் என்று சொல்லப்பட்டுள்ளதால், இயேசு இந்த உலகத்திற்கு அனுப்பப்படும் முன்னரே இருந்துள்ளார் என்றும், அதனால் இயேசு தெய்வீகத்தன்மை வாய்ந்தவர் என்றும் வாதிடுகின்றனர்.
✍இயேசுவை குறித்து உவமையாக சொல்லப்பட்டதை கொண்டு அவரை இறைவன் என்று வாதிடுவது கிறிஸ்தவர்களின் அறியாமை ஆகும். எந்த வசனத்தையும் முன்பின் வசனங்களோடு படிக்கும்போது தான் அதன் உண்மை தன்மையை புரிந்து கொள்ள முடியும். மேற்கண்ட வசனம் உள்ள யோவானின் 3ஆம் அத்தியாயத்தில் இயேசு யாரிடம் பேசினாரோ அந்த நபரே இயேசு போதகர் என்பதை அறிந்து வைத்திருந்து அதை இயேசுவிடம் கூறுகிறார். அதை இயேசு மறுக்காமல் தான் இந்த உரையை நடத்துகின்றார். இதன் மூலம் இயேசு தான் ஒரு போதகர் தான் என்பதை மறுக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
▶️1. யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
▶️2. அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: #ரபீ, #நீர்_தேவனிடத்திலிருந்து_வந்த_போதகர்_என்று_அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
(யோவான் 3)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍அதுமட்டுமல்ல பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தவர் என்ற உவமை சொல் இயேசு கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் இயேசுவின் வார்த்தை கொண்டே அறிந்து கொள்ளலாம்.
▶️18. நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, #நானும்_அவர்களை_உலகத்தில்_அனுப்புகிறேன்.
(யோவான் 17)
✍மேற்கண்ட வசனத்தில் இயேசு எவ்வாறு இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டாரோ அதே போன்று இயேசுவும் தமது விசுவாசிகளை உலகத்திற்கு அனுப்புவதாக சொல்கிறார். உண்மையில் கிறிஸ்தவர்கள் எவரும் பரலோகத்தில் இருந்து பூமிக்கு அனுப்பப்பட்டவர்கள் அல்ல. இயேசு தனது விசுவாசிகள் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டவர்கள் என்று பொய் சொல்லவுமில்லை, மாறாக அவர்கள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற அர்த்தத்தில் தான் இயேசு அத்தகைய உவமை சொல்லை பயன்படுத்துகிறார் என்பதையும் இயேசுவின் வார்த்தையை கொண்டு அறிந்து கொள்ளலாம்.
▶️6. நீர் #உலகத்தில்_தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
(யோவான் 17)
✍மேற்கண்ட வசனத்தில் இயேசுவின் விசுவாசிகள் எவ்வாறு கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டார்களோ அதே போன்று தான் இயேசுவும் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டவர். அதனை தான் உவமையாக யோவானில் சொல்லப்பட்டுள்ளது. அதனால் இந்த வசனம்(யோவான் 3:13) இயேசுவை இறைவன் என்று சொல்கிறது என யாராலும் வாதிட முடியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக