உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும். ✍️ பைபிள் மனிதக் கரங்களால் கரை படிந்து விட்டது என்பதை குர்ஆன் தெள்ளத் தெளிவாக கூறுகிறது. இதற்கு பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு மற்றும் அது கடந்து வந்த வரலாற்றையும் படிக்கும்பொழுது, பைபிள் மனித கரங்களால் மிக மோசமான அளவு சிதைந்து போயிருக்கிறது என்பதை மிகத்தெளிவாக உணர்த்திவிடும். இதனால் விரக்தி அடைந்த கிறிஸ்தவர்கள் தாங்கள் வேதம் என்று நம்பும் பைபிளை காப்பாற்றிக் கொள்வதற்காக குர்ஆனின் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டும் என்பதற்காக உதுமான் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனை முன்வைத்து கிறிஸ்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அந்த குற்றச்சாட்டுகளில் ஒன்று தான் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனின் மாற்றம் செய்து விட்டார் அல்லது திருத்தி விட்டார் என்னும் குற்றச்சாட்டாகும். அவற்றை குறித்து இனி ஆய்வு செய்வோம். ✍️ உத்மான் ரலி அவர்களின் ஆட்சியின் போது ஆர்மீனியா, அஜர்பைஜன் போன்ற பகுதிகளையும் இஸ்லாம் சென்றடைந்தது. ஆகவே இஸ்லாம் பல அரபு அல்லாத நாடுகளை எ...
கருத்துகள்
கருத்துரையிடுக