பரிசுத்த ஆவி தனி ஆள்தத்துவம் கொண்டவரா? பாகம்-5

 📝பரிசுத்த ஆவியின் தெய்வீகத் தன்மைக்கான மறுப்பு





✍️ இந்த விசித்திரமான நம்பிக்கையை ஆய்வு செய்தால், கிறிஸ்தவர்கள் நம்பும் அர்த்ததில் "பரிசுத்த ஆவியானவர்" பைபிளில் இல்லை என்பதை அறியலாம். பரிசுத்த ஆவியானவரை குறிப்பிடும் இடங்களை நாம் கவனமாக படித்தால், இந்த நம்பிக்கையின் வித்தியாசத்தைப் பற்றி நாம் உறுதியாக காணமுடியும்........


📝பைபிளை பொருத்தவரையில் பரிசுத்த ஆவி தன்னை வெவ்வேறு உருவங்களாக அவதரித்துள்ளது. ஒன்று பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல உடல் வடிவத்தில் இயேசுவின் மீது இறங்கினார்(லூக்கா 3/22)". இதற்காக அந்த புறாவை கடவுள் என்று சொல்ல முடியுமா.????


🖋மற்றொரு நேரத்தில் அக்னிமயமான நாவுகளுடன், 


அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு…..."

(அப்போஸ்தலர்= 2/2-4)


📝பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர் 10:19-22 குறிப்பிட்டுள்ளபடி ஒரு வானவராக இருக்கலாம் என்பதை ஏன் கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை? பரிசுத்த ஆவியானவர் கொர்நேலியஸ் மற்றும் பேதுருவிடம் வந்தார், அவர் தேவதூதர்களில் ஒருவராக இருந்தார்...."ஆவியானவர் அவனை நோக்கி : இதோ, மூன்று மனிதர்கள் உங்களை தேடுகிறார்கள். எழுந்து, கீழே சென்று அவர்களுடன் தயங்காமல் அவர்களுடன் செல்லுங்கள், ஏனென்றால் நான் அவர்களை அனுப்பியிருக்கிறேன் என்று பேதுருவிடம் ஆவியானவர் ஆக பேசிய அதே பரிசுத்த வானவர் தான் கொர்நேலியஸிடம் தன் ஆட்களை பேதுருவிடம் அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்...


பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியாக அறியப்படுகின்ற கர்த்தரின் தூதனானவர் இஸ்ரவேலின் எதிரியாகவும் அறியப்பட்டு உள்ளார். கர்த்தரின் தூதனானவர் இஸ்ரவேல் மக்களை பலமுறை காப்பாற்றி அவர்களுக்கு உதவி செய்தபோதிலும் இஸ்ரவேலர்கள் கர்த்தரின் தூதனாவரை துக்கப்படுத்தியதால் பிறகு அவர் இஸ்ரவேலின் எதிரியாக மாறியதாகவும் பைபிள் கூறுகிறது. 


9: அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார் அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வ நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.


10: அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.

ஏசாயா 63:9-10


இஸ்ரவேலர்கள் கர்த்தரின் தூதனானவரின் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தி அவருடைய அன்பை பகைமையாக மாற்றினர்.....


🖋இஸ்ரேவேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறிய போது பரிசுத்த ஆவியானவர் அவர்களுடன் இருந்தார். "ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும் தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறப்பண்ணினவர் இப்பொழுது எங்கே? அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக் கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்தியகீர்த்தியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து," (ஏசாயா=63/11) ஆனால் அவர் கிறிஸ்தவர்கள் நம்புகிற படி ஒரு தெய்வீக மனிதர் அல்ல. "வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்." (யாத்திராகமம்=23/20)

பரிசுத்த ஆவியானவர் இஸ்ரவேலர்களுடன் இருந்த தேவதூதர் என்று பழைய எற்பாடு தெள்ளத்தெளிவாக சொல்கிறது. பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் தேவதூதர்களில் ஒருவராகத்தான் பார்க்கப்பட்டார் என்பதற்கு மேலே உள்ள வசனங்கள் போதுமான ஆதாரமாக இருக்கின்றன. இஸ்ரவேலர்கள் பரிசுத்த ஆவியை தேவனாக ஒருபோதும் பார்க்கவில்லை.


📝 "கர்த்தரின் ஆவி" என்பது ஒருவருக்கு மட்டும் அல்லாமல், "இது பல தேவதூதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது". வெளிப்படுத்தின விசேஷத்தில் "அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்". (வெளிப்படுத்துதல்=5/6), யோவான் கண்ட ஆவிகள் தெய்வங்கள் அல்ல. யோவான் கண்ட ஆவிகள் தெய்வங்களாக இருந்திருந்தால் கிறிஸ்தவத்தில் "திரித்துவம் மூன்று பேராக இருக்காது, பத்து ஆக "தசத்துவமாக" இருந்திருக்கும்.


🖋 வெளிப்படுத்தின விசேஷத்தில்

கர்த்தரின் இந்த ஏழு ஆவிகள் பற்றி மேலும் இரண்டு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது :

"அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன." (வெளிப்படுத்துதல்=4/3), 


"சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது;" 

(வெளிப்படுத்துதல் = 3/1) 



பரிசுத்த ஆவி சுயசார்பு கொண்டது அல்ல


📝 பரிசுத்த ஆவியானவர் யாராக அறியப்பட்டாலும் அவர் கர்த்தர் அல்ல. அவர் கடவுள் தன்மை உடையவர் அல்ல. பரிசுத்த ஆவி தேவனாக இருந்திருந்தால் அவர் எல்லாவற்றையும் தானாகவே செய்ய வேண்டும். ஆனால் அவரால் அவ்வாறு செய்ய முடியாது. பேதுரு சொல்கிறார், "தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்" (2,பேருது 1/21). பரிசுத்த ஆவியானவர் ஒரு நித்திய கடவுளாகவும், எல்லாவற்றிலும் பிதாவுக்கு சமமாகவும் இருந்தால், அவர் மக்களை தனது சொந்த வார்த்தைகளை கொண்டு பேச வைத்திருப்பார்.


🖋 பரிசுத்த ஆவியின் தெய்வீகத்தன்மையை மறுக்கும் மற்றொன்று அவருடைய அறியாமையே ஆகும். நியாயத்தீர்ப்பு நேரத்தை கர்த்தர் ஒருவர் தவிர குமாரன் அல்லது வேறு எந்த ஒரு தூதரும் அறிய மாட்டார்கள் என்று சொல்லி பரிசுத்த ஆவியின் தெய்வீகத் தன்மையை பைபிள் மறுத்து விடுகிறது. 


👉 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

(மாற்கு = 13/32)


📝 பரிசுத்த ஆவியின் தெய்வீகத்தை மறுக்கும் மற்றொரு உண்மை என்னவென்றால், இயேசு சொன்னது போல, பக்திமான்களுக்கு பரிசுத்த ஆவி தேவனிடமிருந்து கொடுக்கப்படும் பரிசாக பேசப்படுகிறது.


👉 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.

(லூக்கா = 11/13)


விசுவாசிகளுக்கு பரிசாக கொடுக்கப்படும் ஒன்று தேவனுக்கு சமமான நபர் என்று சொல்வது அறிவுக்கு ஒருபோதும் பொருந்தாது.



📝 மேலும், பரிசுத்த ஆவியானவர் தேவன் என்றால், அவர் இறங்கிய மக்களை கடவுளாக நாம் கருத வேண்டும். அவர் தாவீதின் மீது இறங்கியது போன்று பல மக்கள் மீது இறங்கினார், "இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்" (1, இராஜாக்கள் = 6/13). 'சிமியோன் என்ற மனிதனும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவனாக இருந்தான், " அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்"(லூக்கா =2/25). சீஷர்களும் பரிசுத்த ஆவியை கொண்டவர்கள் என்று பைபிள் கூறுகிறது. "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்"(அப்போஸ்தலர் = 1/8). கொரிந்து மக்கள் மீது பரிசுத்தஆவி நிரம்பி இருந்ததாகவும் பைபிள் கூறுகிறது. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? (1கொரிந்தியர் = 6/19). - பரிசுத்த ஆவியானவர் தேவனாக இருந்தால், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு அனைத்தும் வணங்கத்தக்கவை ஆகிவிடுமே. 



🖋 பரிசுத்த ஆவியானவரை நம்புவர்களை பைபிள் விசுவாசிகளாக கருதுவது போல், பரிசுத்த ஆவியானவரை அறியாத மக்களையும் விசுவாசிகளாகவே கருதுகிறது. மேலும் பரிசுத்த ஆவியை அறியாத போதிலும் அவர்களை சீடர்களாகவே கருதுகிறது. "அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள் (அப்போஸ்தலர்=19/1-2). இது சந்தேகத்திற்கு இடமின்றி பரிசுத்த ஆவியின் தெய்வீகத்தன்மையை மறுக்கிறது. ஏனெனில் பரிசுத்த ஆவி தேவனாக இருந்திருந்தால் பரிசுத்த ஆவியை அறிந்து இருப்பது விசுவாசிக்களுக்கு அடிப்படை கடமையாக இருந்திருக்கும். ஆனால் பரிசுத்த ஆவியை அறியாத மக்களும் விசுவாசிகளாகவே அறியப்பட்டனர் என்பதாக பைபிள் கூறுகிறது.


✍️ "தேவன் ஆவியாயிருக்கிறார்" (யோவான் 4/24) என்ற வசனத்தின் மூலம் பரிசுத்த ஆவியின் தெய்வீகத்தை கிறிஸ்தவர்கள் முன்னிருத்துவது மிக தவறானது. மேற்கண்ட வசனத்தில் தேவனின் தன்மை பற்றி சொல்லப்படவில்லை. “தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவான் 4/16), “தேவன் ஒளியாயிருக்கிறார்” (1 யோவான் 1/5) என்பது போன்று அவருடைய குணாதிசயங்களில் ஒன்றைப் பற்றி மட்டுமே யோவான் 4:24 பேசுகிறது. 


✍️ சர்வவல்லமையுள்ள கடவுளை யாரும் பார்க்க முடியாது என்று அர்த்தத்தில் தான் யோவான் குறிப்பிடுகின்றார். ஏனென்றால் லூக்கா சொல்வது போல், அவர் பார்ப்பதற்கு மாம்சமும் இரத்தமும் நிறைந்த பொருள் அல்ல. “ஒரு ஆவிக்கு மாம்சமும் எலும்புகளும் இல்லை” (லூக்கா 24/39) மேலும் அவர் பொருள் சார்ந்தவர்களை விட மிக உயர்ந்தவர், சிதைக்க முடியாதவர்." 


✍️ எனவே பரிசுத்த ஆவியானவர் கடவுள் அல்ல. திரித்துவத்தின் கருத்து ஒரு புனையப்பட்ட நம்பிக்கை ஆகும்; இந்த நம்பிக்கையை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் பைபிளில் இல்லையென்றாலும், போப் மற்றும் பேரரசர்களின் விருப்பங்களின்படி தேவாலய சபைகளால் திரித்துவம் புனையப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிகள் கேள்விப்படாத, இயேசுவால் ஒருபோதும் குறிப்பிடப்படாத, சீடர்களுக்குத் தெரியாத ஒரு நம்பிக்கை தான் திரித்துவம் என்பதாகும்..    






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்