பரிசுத்த ஆவி தனி ஆள் தத்துவம் கொண்டவரா? பாகம் 8
பரிசுத்த ஆவியைப் பற்றிய மிக முக்கியமான ஆய்வு. கர்த்தரின் சித்தம் இருந்தால் கர்த்தரால் நேசிக்கப்படும் அனைத்து உண்மையுள்ள விசுவாசிகளும் இதனை படித்து பரலோக ராஜ்யத்தில் இடம் பெற சிந்தியுங்கள்!
📃 சாத்தானின் மிகப்பெரிய ஒரு சூழ்ச்சி உங்களுக்கு தெரியுமா நண்பர்களே⁉️
சாத்தான் மனிதர்களிடத்தில் தந்திரமாக பேசி இயேசு ppuh அவர்கள் பெயரை பயன்படுத்தி அற்புதங்கள் செய்ய வைத்து பரிசுத்த ஆவி என்ற பெயரில் இந்த உலகில் சாத்தான் மனிதர்களை வழிகெடுப்பான் என்று இயேசு ppuh அவர்கள் பைபிளில் ஒரு வசனத்தில் தெளிவாக கூறியுள்ளார் என்பது பைபிளை படிக்கும் எத்தனை கிறிஸ்தவ தோழர்களுக்கு தெரியும்⁉️
கீழே உள்ள இந்த வசனத்தை கூட சிந்திக்கவில்லை என்றால் நிச்சயமாக கிறிஸ்தவ சகோதரர்கள் பைபிளை தூக்கி சுமப்பது வீண்தான்.
🎯 ஆதாரம் கீழே⬇️
மத்தேயு:7:22,23
🔍நியாயத்தீர்ப்பு நாளில் கிருஸ்தவ மத போதகர்கள் இயேசு ppuh அவர்களை நோக்கி கூறுவது⬇️
📃 கர்த்தாவே உமது நாமத்தைக்கொண்டு தீர்கதரிசனம் உரைத்தோம் மற்றும் அற்புதங்கள் செய்தேமால்லவா
🔍இயேசு ppuh அந்த போதகர்களை பார்த்து கூறுவது⬇️
📃நான் உங்களை அறியவில்லை, நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது.
மேலே உள்ள... வசனத்தில் மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த உலகில் பல கள்ள போதகர்களை பயன்படுத்தி பரிசுத்த ஆவி என்ற பெயரில் சைத்தான் அதிசயங்கள் புரிவான். அதை நம்பி மக்கள் பலர் நரகத்தின் புதைக்குழிக்கு போவார்கள் என்பது தெளிவாகிறது. இதற்கு பிறகும் இந்த பரிசுத்த ஆவி யார் மீது இறங்கும்? இதில் எது உண்மை என்று சிந்திக்காமல் பரலோகராஜியத்தின் மீது ஆசைப்படுவது டிக்கேடே இல்லாமல் பேருந்தில் பயணம் செய்வதற்கு சமம். எப்போது வேண்டுமானாலும் பரிசோதகர் உங்களை கீழே தள்ளி விடலாம். ஆகையால் கர்த்தர் சித்தம் இருந்தால் இந்த பதிவை முழுமையாக படித்து சிந்தியுங்கள் எனதருமை கிறிஸ்தவ தோழர்களே
இந்த சாத்தானின் போலி வேஷத்தை கண்டறிய பைபிள் மற்றொரு இடத்தில் சைத்தானின் ஆச்சரியமான சூழ்ச்சியை ஒரு வசனத்தில் வெளிப்படுத்துகிறது.
🎯ஆதாரம் கீழே⬇️
📖எரேமியா 8:8
நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்குகிறது.
⬆️🔍✒️மேலே உள்ள கர்த்தரின் வசனம் மிக தெளிவாக பைபிளில் சாத்தான் வார்த்தைகள் கள்ள எழுத்தாணிகளால் எழுதப்பட்டு மனிதர்களை நரகத்திற்கு இழுக்க சாத்தான் சதி செய்துள்ளான் என்பது தெளிவாகிறது.
🔍இந்த சாத்தானின் வார்த்தைகளை எப்படி கண்டுபிடிப்பது⁉️⬇️
கர்த்தர் பைபிளில் தன் தூதர்களை வைத்து வெளிப்படுத்திய கர்த்தரின் வார்த்தைகளுக்கு எதிராக உள்ள அனைத்து வார்த்தைகளும் சாத்தானின் வார்த்தைகளாகும் என்பது நமக்கு நன்றாக தெரியும்.
சாத்தானின் சதியை கீழே பாருங்கள்🔍
✒️கர்த்தரின் வார்த்தைகளையும் அதற்கு 100% எதிரான சாத்தானின் வார்த்தைகளையும் கீழே பாருங்கள்.
1️⃣ மத்தேயு 7:21📖
✒️இயேசு ppuh கூறுகிறார் யார் என்னை கர்த்தர் என்று அழைத்தால் அவர்கள் நரகம் செல்வார்கள்.
2️⃣📖மத்தேயு4:6
இயேசு ppuh கூறுகிறார் உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரை தொழுது கொண்டு அவருக்கு மட்டுமே ஆராதனை செய்
3️⃣📖யேவான்10:9
இயேசு ppuh கூறுகிறார் அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், பிதா யாருக்கும் சமானமில்லை.
📖📖📖 (4)..... நியப்பிரமானத்தைப்பற்றி இயேசு ppuh பேதித்த போதனைகள்⬇️
1️⃣✒️1யோவான் 3:4
பாவஞ்செய்கிறவன் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்.
2️⃣✒️மத்தேயு 5;17
ஏச ppuh கூறுகிறார் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றவே வந்தேன், அதை குழி தோண்டி புதைக்க வரவில்லை.
3️⃣மத்தேயு19:16-17
நீ பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க விரும்பினால் நியாயப்பிரமாணத்தை கைகொள்.
📖இதுபோல் பல இடங்களில் நியாயப்பிரமாணம் வழியுறுத்தப்பட்டதை பழைய ஏற்பாடு மற்றும் 📖 புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் காணலாம்
இயேசு ppuh இந்த உலக மக்களுக்கு கடைசியாக எச்சரித்த மிக மிக முக்கியமான வசனம்
⬇️⬇️⬇️⬇️
🎯மத்தேயு24:25-26
இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
⬇️⬇️⬇️
ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள், நம்பாதிருங்கள்.
🎯மத்தேயு 10:40-41
இயேசு சீஷர்களை நோக்கி உங்களை எவன் ஏற்றுக்கொள்வானோ அவன் என்னை ஏற்றுக் கொள்வான்
⬆️⬆️⬆️⬆️⬆️
மேலே உள்ள இந்த வசனங்களுக்கெல்லாம் 100% முரணாக யார் கூறினாலும் அது சாத்தானின் சதி வேலை என்பதை நாம் தெளிவாக அறிய முடியும். கீழே ⬇️ சாத்தானின் வார்த்தைகளை அடுக்கடுக்காக பட்டியலிட்டுள்ளேன். கர்த்தரை உண்மையாக நீங்கள் நேசித்தால் சத்தியத்தை தேடி பாருங்கள். கீழே உள்ள ஆதாரங்களை பாருங்கள் சகோதரர்களே.
1️⃣ வசனத்திற்கான 100%முரண்பாடான வசனம் பவுலின் கடிதங்களில்⬇️⬇️⬇️
1️⃣❌ரோமர்10:9❌
இயேசுவை உன் வாயால் கர்த்தர் என்று அறிக்கையிட்டு விசுவாசித்தால் உனக்கு சொர்க்கம்
இயேசு தன்னை கர்த்தர் என்று கூறினால் நரகம் என்று கூறியிருக்க பவுல் இயேசுவை கர்த்தர் என்று கூறினால் சொர்க்கம் என்று விசுவசமாக கூறியிருக்கிறார். இதில் யாரை கிறிஸ்தவர்கள் பின்பற்றுகிறார்கள்?
❌❌❌📖✒️
2️⃣❌அப்17:18❌
பவுல் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாக இருக்கிறான்.
❌❌❌📖✒️
பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டில் இயேசு ppuh மற்றும் பல தீர்கதரிசிகள் கர்த்தர் ஒருவரே என்று போதித்திருக்க எந்த ஒரு தூதர்களும் முன்னறிவிக்கப்படாத பவுல் போதிக்கும் ஆதிபாவம், சிலுவை மரணம் மற்றும் அதன்மூலம் உண்டாகும் பாவ மன்னிப்பு போன்ற அந்நிய மதக் கொள்கைகளை ரோமர்களின் கலாச்சாரத்திலிருந்து வடிவமைக்கப்பட்ட இந்த பவுலின் கோட்பாடு 100%கர்த்தருக்கு முரணானது சகோதரர்களே
❌❌❌📖✒️
நியாயப்பிரமாணத்தை முற்றிலும் எதிர்த்தவர் பவுல் என்பது உலகறிந்த உண்மை. ஆதாரங்கள் கீழே
❌கலாத்தியர்3:10.❌
நியாயப்பிரமாணத்தை பின்பற்றுகிறவர்கள் சாபத்திற்கு உட்பட்டவர்கள்
❌ரோமர்ஷ3:20❌
நியாயப்பிரமாணத்தால் யாரும் நீதிமானக்கப்படுவதில்லை
❌கலாத்தியர்2:16❌
நியாயப்பிரமாணம் தேவையில்லை
❌ரோமர் 4:5❌
நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் தேவையில்லை விசுவாசம் போதும்
⬆️மேலும் ஒரு அதிர்ச்சி
⬇️⬇️⬇️
மேலே உள்ள பவுலின் வார்தைகளை கேட்ட இயேசு ppuh அவர்களின் சகோதரனும் சீஷருமான யாக்கோபு பவுலை பார்த்து பவுலின் கொள்கை சாத்தான் கொள்கை என்று அன்றே கூறிவிட்டார் ஆதாரம் கீழே⬇️
✅✅✅⬇️⬇️⬇️
யாக்கோபு 2:19-20
தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான். பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.
✅✅✅
வீணான மனுஷனே, நியாயப்பிரமாண கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறிய வேண்டுமோ?
இயேசு ppuh சீஷர்களை ஏற்றுக் கொண்டவனே என்னை ஏற்றுக் கொண்டான் என்று சொல்லியிருக்க சீஷர்களை முற்றிலும் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்தார் பவுல் ஆதாரம் கீழே⬇️
❌❌❌
கலாத்தியர் 2:11-14
பேதுருவை முகமுகமாய் எதிர்கிறார் பவுல்
❌❌❌
அப்போஸ்தலர் 15:39
பவுலுக்கும் பர்னபாவிற்கு கடுங்கோபம்
மாற்குவோடும் முரண்பாடு
❌❌❌
இதேபோல் சீஷர்களோடு இயேசுவின் போதனைக்கு முரண்பாடான போதனைகளை கூறி சீஷர்களோடு எதிர்த்து பல இடங்களில் பவுல்
சண்டையிட்ட பல ஆதாரங்கள் பைபிளில் உள்ளது
1️⃣இயேசு ppuh அவர்களின் போதனைக்க 100% எதிரான கருத்துக்களைக் கூறிய பவுல்...
2️⃣நியாயப் பிரமாணத்தை குழிதோண்டி புதைத்த பவுல்...
3️⃣சீஷர்களை ஏற்றாக்கொள்ளாமல் கடுமையாக எதிர்த்த பவுல்…
🎯 இத்தனை சூழ்ச்சிகளையும் செய்த பவுல் இதையெல்லாம் நான் செய்யக்காரணம் இயேசுவை பாலைவனத்தில் கண்டேன் என்னை நம்புங்கள் என்று கூறுகிறார்.
ஆதாரம் கீழே⬇️
❌❌❌
அப்போஸ்9:3-15
வனாந்தரத்திலே இயேசுவை கண்டேன் அவர் என்னோடு பேசினார்.
✒️✒️✒️ இயேசு ppuh அவர்கள் கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல் வனாந்தரத்திலே என்னைக்கண்டால் நம்பாதீர்கள் என்று கூறியிருக்க பவுல் கூறும் இந்த மிகப்பெரிய பொய்யை நம்பி நரகத்தின் வழியில் செல்வது நியாயமா⁉️
பரிசுத்த ஆவி என்ற பெயரில் அற்புதங்கள் செய்யும் சாத்தானின் சூழ்ச்சியை பைபிள் தெளிவாக கூறுகிறது.
ஆதாரம் கீழே⬇️⬇️⬇️
🎯மத்தேயு 4:6📖
இயேசுவிற்கு சாத்தான் நோயை ஏற்படுத்தி இயேசுவோடு பேசுகிறான். இயேசுவை தன்னை வணங்குமாறு சாத்தான் கூறுகிறான்.
⬆️⬆️⬆️ இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் பைபிள் அடிப்படையில் சாத்தானால் நோயை ஏற்படுத்த முடியும். அதை ஒரு சாக்காக கொண்டு மக்களை சாத்தானை வணங்க வைக்க முடியும் என்று தெளிவாகிறது. இன்று இந்த உலகில் கிறிஸ்தவ போதகர்கள் நடத்தும் அற்புத சபைகளில் பிறவிகுருடையோ அல்லது பிறவி ஊமையையோ அல்லது பிறவியிலேயே ஏற்படும் எந்த நோயையும் யாரும் குணப்படுத்துவதில்லை. மாறாக பரிசுத்த ஆவி என்ற பெயரில் தீராத தலைவலி தீராத வயிற்று வலி தீராத கால்வலி கைவலி இப்படித்தான் நாம் பார்க்கிறோம். ஆகையால் இந்த பரிசுத்த ஆவி என்பது சைத்தானின் இரட்டை வேடம் என்பதை நாம் தெளிவாக கணிக்க முடிகிறது.
சாத்தானின் ஆசை என்னவென்று பைபிளை படிக்கும் கிறிஸ்தவர்கள் எத்தனை நபர்களுக்கு தெரியும்⁉️⁉️⁉️
🎯ஆதாரம் கீழே⬇️
ஏசாயா 14:14
சாத்தான் ஆசை நான் மேகங்களுக்கு மேலாக ஏறுவேன் உன்னதமான கர்த்தருக்கு ஒப்பாவேன்
✒️அன்று சாத்தானின் ஆசையை இன்று நாம் கண்கூடாக காண்கிறோம் கர்த்தருக்கு நிகராக நாம் யாரையும் வணங்கக்கூடாது என்று தெளிவாக தெரிந்தும் சாத்தானின் பேச்சைக் கேட்டு
|-பிதா
|-குமாரன்
|-ஆவி (சாத்தான்)
என இம்மூவரையும் கிறிஸ்தவர்கள் வணங்குகிறார்கள்.
✒️சாத்தான் தேவனுக்கு நிகராக ஆசைப்பட்டான். பரிசுத்த ஆவி என்ற பெயரில் கிறிஸ்தவ போதகர்கள் மூலமாக அறிமுகமாகி தேவனுக்கு நிகராக தன்னையும் வணங்க வைத்துவிட்டான். சாத்தானின் சதியை புரிந்து தப்பிக்கவில்லை என்றால் நரகம் உறுதி. கிறிஸ்தவ தோழர்களே ஆகையால் சிந்தியுங்கள். இதைவிட மிகப்பெரிய அதிர்ச்சி கீழே உள்ளது பாருங்கள்⬇️
✒️ஆதி மனிதன் ஆதம் ppuh அவர்களை எந்த வார்த்தையைக் கூறி சாத்தான் வழிகெடுத்தான் என்று உங்களுக்கு தெரியுமா? அதே வார்த்தையை பவுல் மூலமாகவும் சாத்தான் பயன்படுத்தி மக்களை தெளிவாக கெடுத்துள்ளான் ஆதாரம் கீழே⬇️?
ஆதமை வழி கெடுத்த வார்த்தை⬇️
ஆதியாகமம் 3:1,2,3
🔍🔍🔍
சாத்தான் ஆதமை பார்த்து நீங்கள் இந்த பலத்தை புசித்தால் வானவர்களை போல் இந்த சொர்க்கத்தில் நிரந்தரமாக வாழ்வீர்கள் என்று கூறி கர்த்தரின் கட்டளையை மறக்கச்செய்தான். பின்பு கனியை புசிக்க வைத்து வழிகெடுத்தான்.
✒️ ஆதாமை எவ்வாறு சாத்தான் வழிக்கெடுத்தானோ அதேபோன்று பவுலை பயன்படுத்தி கிறிஸ்தவர்களை வழிகெடுக்கும் சாத்தான். ஆதாரம் கீழே⬇️
1 கொரிந்தியர் 15:44
பவுல் கூறுகிறார்…. தனது கொள்கையை பின்பற்றினால் வானவர்களை போல் சொர்க்கத்தில் நிரந்தரமாக வாழலாம் என்று.
முக்கிய குறிப்பு:
பவுலின் கட்டளை என்பது இயேசுவின் போதனைக்கு முரணானது, சீஷர்களை எதிர்த்த போதனை மற்றும் நியாயப்பிரமாணத்தை குழி தோண்டி புதைத்த போதனை. ஆக ஆதமிடம் வந்து இதே ஆசை வார்த்தை கூறி வழிகெடுத்த அதே சாத்தான் தான் இன்று பவுலைப் பயன்படுத்தி அதே ஆசை வார்தைகளை கூறி இயேசுவின் போதனைகளையும் பழைய ஏற்பாட்டின் போதனையையும் யோசிக்கவிடாமல் செய்து நரகத்தின் பாதைக்கு பலரை பரிசுத்த ஆவி என்ற பேரில் சாத்தானை வணங்கவைத்து அவனது ஆசையை நிறைவேற்றி மக்களை வழிகெடுத்துவிட்டான் சாத்தான்.
📖நியாயபிரமாணத்தின் முதல் கட்டளையே கர்த்தருக்கு இணையாக வானத்திலும் புமியிலும் எதையும் உருவாக்காதீர்கள். இதற்கு மாற்றமாக பரிசுத்த ஆவி என்ற பெயரில் சாத்தானை திரித்துவமாக இணையாக வைத்து வணங்கி இன்று கிருஸ்தவர்கள் கர்த்தருக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
🔍✒️ எதார்த்த உண்மை⬇️⬇️⬇️
ஆதமோடு பேசிய சாத்தான்!
இயேசுவோடு பேசிய சாத்தான்!
இந்த சாத்தான் பவுலோடு பேசி இந்த உலகமக்களில் பலரை வழிகெடுத்தது உண்மை. இந்த உண்மையை யாரும் சொல்லத் தேவையில்லை. சத்தியத்தைத்தேடும் ஆண்மையான விசுவாசிகளுக்கு கர்த்தரே பைபிளிலிருந்து பரலோகராஜியம் செல்வதற்கான வழியைக் காட்டிக்கொடுப்பார். சாத்தானின் சதியிலிருந்து தப்புவிப்பார் சேனைகளின் கர்த்தர்.
கருத்துகள்
கருத்துரையிடுக