பரிசுத்த ஆவி தனி ஆள் தத்துவம் கொண்டவரா? பாகம் - 6

வ்வாக்கம் பரிசுத்த ஆவி பற்றிய தெளிவை உங்களுக்கு ஏற்படுத்துவதுடன் பரிசுத்த ஆவி பற்றிய பிழையான புரிதலையும், பரிசுத்த ஆவி பற்றிய மூட நம்பிக்கைகளையும் பைபிள் அடிப்படையில் நீக்கும் என்று நம்புகிறோம்.





கிறிஸ்தவர்கள் மத்தியில் பல விதமான நம்பிக்கைகள் பரிசுத்த ஆவி பற்றி நம்பப்படுகிறது. அதில் முக்கியமான சில  பிரிவினர்கள் எப்படி பரிசுத்த ஆவியை பற்றி நம்புகிறார்கள் என தெரிந்து கொண்டு ஆய்வுக்கு நகர்வோம்.


01.ஒரு சாரார் திருத்துவத்தில் பரிசுத்த ஆவி ஒரு ஆள் என நம்புகின்றனர். அதாவது கடவுள் பிதாவாகவும் , இயேசுவாகவும் , பரிசுத்த ஆவியாகவும் இருப்பதாக பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இவர்கள் இயேசு பிறப்பதற்கு முன்  வாழ்ந்த தீர்க்கதரிசிகளுக்கு முன்னறிவிப்புகளை வழங்குவதற்காகவும் இயேசுவுக்கு பிறகு அனைவர் மீதும் பரிசுத்த ஆவி வரும் என்றும் நம்புகின்றனர்.


இவ்வகை நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவி எல்லோரிலும் வரக்காரணம் தவறுகளை கண்டிப்பதற்கும், பைபிளை கற்றுத்தருவதற்கும் வருகிறது என்று நம்பிக்கை கொள்கின்றனர்.


02. சில கிறிஸ்தவ பிரிவினர் பரிசுத்த ஆவி இறைவனின் ஓர் வல்லமையே தவிர ஒரு ஆள் தத்துவம் அல்ல என நம்புகின்றனர். இதே நம்பிக்கையே யூதர்களிடத்திலும் உண்டு.


03.இன்னும் ஒரு  குழுவாகிய தேவ மாணக்கர்கள் என்பவர்கள் பரிசுத்த ஆவி ஓர் சாத்தான் எனவும் நம்புகின்றனர்.


பைபிள் அடிப்படையில் இவ் வெவ்வேறான 3 நம்பிக்கை பற்றி என்ன பேசுகிறது என ஆராய வேண்டிய தேவை இருக்கிறது. ஆக அதனை நோக்கி பயணப்படுவோம்.


01. சத்திய ஆவி தனியானதொரு ஆள் தத்துவமா?


இதற்கு ஆதாரமாக 

"நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

(மத்தேயு 12:28)" என்ற வசனத்தை மேற்கோள் காட்டுவர். இதில் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்தி இருக்கிறார் இயேசு ஆக தேவனுடைய ஆவி ஓர் ஆள்தத்துவம் என பேசுவர்.   ஆனால் பைபிளில் இதே பொருளில் லூக்கா 11:20 இல் பின்வருமாறு பேசுகிறது "நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.(லூக்கா 11:20)"என்று பேசுகிறது.


மத்தேயு 12:28 படி சத்திய ஆவி இறைவனின்  ஆள்தத்துவம் எனில் லூக்கா 11:20 இன் படி இறைவனின் விரலும் ஓர் ஆள் தத்துவமாக இருக்க வேண்டும். ஆனால் இறைவனின் விரலை ஆள் தத்துவமாக எடுக்காமல் இறைவனின் ஆவியை மாத்திரம் ஆள்தத்துவமாக பேசுவது பிழையான புரிதலே..  ஆக இவ்விரு வசனமும் இறைவனின் ஆவியும் , இறைவனுடைய விரலும் இறைவனுடைய வல்லமையையே குறிக்கிறது தவிர ஆள் தத்துவத்தை அல்ல.


02. பரிசுத்த ஆவி அனைவர் மீதும் வருமா? 


வரும் என்பதற்கு ஆதாரமாக யோவான் 14:17 ஐ கிறிஸ்தவர்கள் எடுத்து வைப்பதை பார்க்க முடிகிறது. அது கூறுகிறது "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ள மாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.(யோவான் 14:17)" .


பைபிளின் படி இது சத்திய ஆவியை பற்றி தான் பேசுகிறது என கண்டிப்பாக கூற முடியாது காரணம் "ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும்" இருக்கின்ற படியால் என்ற வாசகம் சத்திய ஆவிக்கு பொருந்தாது.  ஏன் எனில் சத்தியாவியை அநேகர் கண்டும் அறிந்தும் இருக்கிறார்கள் உதாரணமாக புறா வடிவிலும் , எலிசபத்தின் வைற்றிலும் இருந்த ஆவியை அநேகர் கண்டதாக பைபிள்  பேசுகிறது.


மத்தேயு 3:16

இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப் போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். 


 லூக்கா 1:15

அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். 


மேலும் பல தீர்க்கதரிசிகளும் (இயேசு உற்பட) அவர்களுடைய சமுதாயமும் சத்திய ஆவியை கண்டதாகவே இருக்கிறது. ஆக அனைவர் மீதும் பரிசுத்த ஆவி வரும் என்பதற்கு இவ்வசனம் சரியான ஆதாரமல்ல..


03. பரிசுத்த ஆவி பைபிளை கற்று கொடுக்குமா?


இதற்கு ஆதாரமாக யோவான் 16:13,14 ஐ சில கிறிஸ்தவர்கள் ஆதாரமாக கொண்டுவருவர். அவ் வசனம் சொல்கிறது 


"சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப் பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.

(யோவான் 16:13,14)


இவ் வசனம் சத்திய ஆவியை குறித்து என்றும் "வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார், 

அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்" என்பது பைபிளை கற்று தருவது என்றும் சில சகோதரர்கள் ஆதாரம் காட்டுவதுண்டு.  ஆனால்  உண்மையில் இவ் வசனம் சத்திய ஆவியை குறிக்கும் வசனம் அல்ல ஏன் எனில் இதற்கு முந்தைய வசனங்களில்  சில நிபந்தணைகளை இயேசு கூறினார் 

யோவான் 16:7 இல இயேசு போன பின்பே தேற்றரவாளன் வருவார் என்கிறது. அவ் வசனம்

"நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்

(யோவான் 16:7)" இவ் வசனத்தின் படி தேற்றரவாளன் வருவதானால் இயேசு போக வேண்டும் ஆக தேற்றரவாளன் என்பது பரிசுத்த ஆவியல்ல காரணம் இயேசு போக முன்பே புறாவடிவிலும் , எலிசபத் கருவிலும் பரிசுத்த ஆவி இருந்தது. ஆக இவ் வசனம் தேற்றரவாளனை குறிப்பதல்ல மற்றும் யோவான்  16:12 இல் இன்னுமொரு நிபந்தனையை இயேசு கூறுகிறார் "நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. " பரிசுத்த ஆவியை தேற்றரவாளன் என கொண்டால் இயேசு சொல்லாத எந்த தாங்கி கொள்ள முடியாத விஷயத்தை பரிசுத்த ஆவி சொன்னார்.? 


ஆக இவ் வசனம் பரிசுத்த ஆவியை குறித்தது அல்ல மாறாக இயேசுக்கு பிறகு வரக்கூடிய வல்லமையான ஒரு தேற்றரவாளன் குறித்தது. இவ் வசனத்தை ஆதாரமாகக் கொண்டு பரிசுத்த ஆவி பைபிளை கற்றுக் கொடுக்கும் என கருத முடியாது.


மேலும் பைபிளை பரிசுத்த ஆவி கற்று கொடுக்கிறது என்றால் ஏன் ஒரே பரிசுத்த ஆவி ஒரே வசனத்திற்கு வெவ்வேறான விளக்கத்தை வெவ்வேறு மனிதனுக்கு கொடுக்க வேண்டும்?


உதாரணமாக  மாற்கு 16: 18 க்கு பிறகு வரக்கூடிய வசனங்கள் பைபிளில் இடைச்செருகள் என டேவிட் பூட் போன்ற கிறிஸ்தவர்களிடமும், ஏனைய கிறிஸ்தவர்களிடம் "இல்லை, அவ்வசனங்கள் இறைவனின் வார்த்தை" என ஒரே சத்திய ஆவி எப்படி மாறி மாறி கூறுகிறது. இதில் எது உண்மை? எது பொய்? அப்படி மாறி மாறி பைபிளை கற்று கொடுக்கும் சத்திய ஆவி பொய் கூறுமோ?


04. பரிசுத்த ஆவி தவறுகளை தண்டிக்குமா?


இதற்கு ஆதாரமாகவும் யோவான் 16:13 ஐயே காட்டுவர் அதில் "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்" என்ற வசனத்தை மேற்கோள் காட்டுவர்.இவ் வசனம் சத்திய ஆவி குறித்தது அல்ல தேற்றரவாளன் குறித்தது என மேலே விளக்கமாக பார்த்திருந்தோம். 


சரி தவறுகளை சத்திய ஆவி எப்படி உணர்த்தி தடுக்கிறது என கேட்டால் என் உள் மனம் தவறு செய்ய உறுத்துகிறது அதனை செய்தவர் சத்திய ஆவி என்பர். அப்படியாயின் இந்த தவறுகளை உணர்ந்து மனம் உறுத்தும் தன்மை எல்லா மதத்தவர்களிடமும் உண்டே.. எல்லா மதத்தவர்களுக்கும் சத்திய ஆவி வருமா ?


அடுத்து பரிசுத்த ஆவி இருக்கும் போதே பல கிறிஸ்தவ போதகர்கள் தவறு செய்கிறார்களே.. அது எப்படி சத்திய ஆவி தவறுகளை தடுக்காமல் ஒளிந்து கொண்டது? அல்லது தவறு செய்யும் போது போதகரை விட்டு போய் தவறு செய்து முடித்த பிறகு மீண்டும் வருமோ?


ஆக பரிசுத்த ஆவி தேவத்துவம் நிறைந்த ஒரு நபராக தவறுகளை தடுக்கும் என்பது ஒரு மூட நம்பிக்கையே அன்றி வேறில்லை.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்