பரிசுத்த ஆவி ஆள் தத்துவம் கொண்டவரா? - பாகம் 2

 பாகம் 2:






✍️ பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தில் "மூன்றாவது கடவுள் நிலையை கொண்டவர்" என்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இதுபோன்ற ஆதாரமற்ற அணுகுமுறையின் அடியில் பதுங்கியிருக்கும் பெரிய ஆபத்து என்னவென்றால், ஒரு பெரிய லட்சிய ஏமாற்றுக்காரன் [சாத்தான்] கடவுளைப் பற்றி பைபிளில் உள்ள நிச்சயமான உண்மைகளைப் புரிந்து கொள்வதிலிருந்து மக்களை தடுக்கும் வேலையை, போலியான குருட்டு நம்பிக்கையின் மூலம் செய்கிறான் (வெளிப்படுத்துதல் 12: 9; 2 கொரிந்தியர் 4: 4)  .



✍️ பரிசுத்த ஆவியானவர் அதன் சொந்த சுதந்திரமான விருப்பத்தையும் ஆளுமையையும் கொண்ட ஒரு "நபர்"  என்று இன்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். இதுவே கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர் திரித்துவ தத்துவத்தின் அடிநாதமாகவும் இருக்கிறது.  இதை பைபிளிலிருந்து உண்மையிலேயே நிரூபிக்க முடியுமா?  பைபிள் உண்மையில் என்ன சொல்கிறது?



✍️ இந்த சர்ச்சைக்குரிய மற்றும் மர்மமான தலைப்பை சரியாக புரிந்து கொள்ள, திறந்த மனதுடன் இந்த விஷயத்தை பகுப்பாய்வு செய்ய தர்க்கரீதியான, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் விவிலிய அடிப்படையிலான அமைப்பை நாம் கொண்டிருக்க வேண்டும். பாரம்பரிய கிறிஸ்தவத்தின் ஒரு முக்கிய கோட்பாடாகவும் பிரபலமானதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், முழு பைபிளிலும் “திரித்துவம்” என்ற வார்த்தையைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது மிகவும் விசித்திரமான மற்றும் ஆச்சரியமான விஷயம்;  பழைய ஏற்பாட்டிலும் கிறித்துவம் பற்றி எதுவும் இல்லை, புதிய ஏற்பாட்டிலும் திரித்துவம் பற்றி எதுவும் இல்லை.




📝 ‘திரித்துவம்’ என்ற சொல் பைபிளில் காணப்படவில்லை.  இது இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் டெர்டுல்லியனால் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இக்கொள்கை 4 மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளில் மட்டுமே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் மற்றும் முறையான தெளிவுபடுத்தலையும் பெற்றது.

New Bible Dictionary, 1996,



📝 திரித்துவம் பிற்கால கிறிஸ்தவ கோட்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தாலும், இந்தச் சொல் புதிய ஏற்பாட்டில் சொல்லப்படவில்லை என்பது வியக்க வைக்கிறது. அதேபோல் பிற்காலத்தில் வளர்ந்த மூன்று சம பங்காளிகளை கொண்ட கடவுள் கொள்கை புதிய ஏற்பாட்டில் தெளிவாக எங்கும் கண்டறிய முடியவில்லை.

(The Oxford Companion to the Bible: Bruce Metzger & Michael Coogan)


1️⃣ பரிசுத்த ஆவி - தேவ வல்லமை


👉 பரிசுத்த ஆவியை தனிநபராக வரையறை செய்யாமல் “உன்னதமானவருடைய பலம்” என்றே பைபிள் வரையறுக்கிறது. 


✝️ தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

(லூக்கா 1:35)





2️⃣ பரிசுத்த ஆவி “அதன் சொந்த அதிகாரத்தைப் கொண்டிராதது”




✝️ சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

 (யோவான் 16:13)


👉 யோவான் 16:13 வசனம் பரிசுத்த ஆவியை பற்றிய பேசவில்லை என்றும் முஹம்மது நபியை குறித்து தான் பேசுகிறது என்று முஸ்லீம்கள் நம்பிய போதிலும், அந்த வசனம் கிறிஸ்தவர்களின் பார்வையில் அது பரிசுத்த ஆவியை பற்றியே பேசுகிறது என்ற நம்பிக்கையை கொண்டிருப்பதால் நாம் அந்த வசனத்தையும் ஆதாரமாக இங்கு பதிவு செய்துள்ளோம். உண்மையில் கிறிஸ்தவர்களின் இந்த நம்பிக்கை அவர்களுக்கு எதிராகவே அமைந்துள்ளது. ஏனெனில் இயேசு போதித்த சத்திய ஆவியோ சுயமான அதிகாரத்தை கொண்டிராமல் தேவனின் அதிகாரத்திற்கு உட்பட்டவராகவே இருக்கிறார். ஆனால் கிறிஸ்தவர்கள் நம்புகின்ற பரிசுத்த ஆவி சுயமான ஆள்தத்துவம் கொண்டவர். ஆனால் மேற்கண்ட வசனம் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு முரணாக இருக்கிறது.


3️⃣ பரிசுத்த ஆவி ஒரு பரிசுப் பொருளாக கொடுக்கப்படுபவது




✝️ பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

(அப்போஸ்தலர்  2:38)


✝️ மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே.

(1 தீமோத்தேயு  4:14)



👉 பரிசுத்த ஆவி ஒரு தனிநபராக கருதப்படாமல் கர்த்தரின் ஊழியக்காரர்களுக்கு கர்த்தரிடமிருந்து பெறுகின்ற ஒரு வரமாகவே பைபிள் போதிக்கிறது.



4️⃣ பரிசுத்த ஆவி "தூண்டப்பட கூடியது

 


✝️ இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.

(2 தீமோத்தேயு  1:6)


👉 தனிநபராக இல்லாமல் தேவனின் புறத்திலிருந்து வருகின்ற வரம் என்றும், கர்த்தரின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துவதன் மூலம் அந்த வரத்தை தூண்ட முடியும் என்றும் பைபிள் போதிக்கிறது. இதன் மூலம் பைபிள் பரிசுத்த ஆவியை தனிநபராக சித்தரிக்காமல் தேவனின் வல்லமையாகத்தான் போதிக்கிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.


5️⃣ பரிசுத்த ஆவியை  “தணிக்க” முடியும்

  

✝️ ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.

(1 தெசலோனிக்கேயர்  5:19)



👉 தேவ நம்பிக்கை மற்றும் நல்ல செயல்கள் மூலம் எவ்வாறு பரிசுத்த ஆவியை தூண்ட முடியுமோ அதே போல கெட்ட நம்பிக்கை மட்டும் கெட்ட செயல்கள் மூலம் பரிசுத்த ஆவியை தனிக்க முடியும் என்றும் பைபிள் போதிக்கிறது. இதன் மூலம் பரிசுத்த ஆவியை தனிநபராக சித்தரிக்காமல் தேவ வல்லமை என்ற அடிப்படையில்தான் பைபிள் போதிக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.


6️⃣ பரிசுத்த ஆவி தனிநபராக சித்தரிக்கப்படாமல் "சுத்திகரிக்கும்"  தேவ வல்லமையாக கூறப்பட்டுள்ளது.



✝️ நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

 (தீத்து  3:5)



7️⃣ பரிசுத்த ஆவி மீட்பின்  “முத்திரை”


✝️ அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.

 (எபேசியர்  4:30)


✍️ மேற்கண்ட வசனத்திலும் பரிசுத்த ஆவியை ஒரு நபராக சித்தரிக்காமல் முத்திரை என்று ஒரு பொருளோடு ஒப்பிடப்பட்டுள்ளது.


8️⃣ பவுலின் வாழ்த்தில் இடம்பெறாத பரிசுத்த ஆவி



ஆச்சரியப்படும் விதமாக பரிசுத்த ஆவி பவுலுடைய எந்தவொரு நிருபத்திலும் பவுலின் வாழ்த்துக்களில் (வாழ்த்துக்கள்) ஒருபோதும் சேர்க்கப்படவில்லை: இதிலிருந்து ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு இடையே திரித்துவம் இல்லை என்பதும், பரிசுத்த ஆவி ஒரு நபராக அறியப்படவில்லை என்பதும் உறுதியாகிறது.


✝️ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

 (ரோமர்  1:3)


✝️ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

(1 கொரிந்தியர்  1:3)



9️⃣ பரிசுத்த ஆவி ஒரு நபரை போலல்லாமல் தண்ணீரை போல் தேவ வல்லமையாக "ஊற்றப்படுபவர்" என்று பைபிள் சொல்கிறது.



✝️ கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;

 (அப்போஸ்தலர்  2:17)

 


1️⃣0️⃣ எல்லா தரிசனங்களிலும், பிதாவின் இடது புறம் வெறுமையாக இருந்தாலும், பரிசுத்த ஆவி தந்தையுடனும் மகனுடனும் ஒருபோதும் காணப்படுவில்லை:


✝️ கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

 (சங்கீதம்  110:1)


✝️ அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு:

 (அப்போஸ்தலர்  7:55)


✝️ நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

 (வெளி 3:21)


1️⃣1️⃣ பரிசுத்த ஆவியானவர் ஒரு தனி நபர் அல்ல



✝️ அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

 (மத்தேயு  1:20)


👉 மிக தெளிவாக, பரிசுத்த ஆவியானவர் மரியாவை கர்ப்பமாக்கினார் என்று மேற்கண்ட வசனத்தில் சொல்லப்படுகிறது.  பரிசுத்தஆவி ஒரு தனி நபராக இருக்கும் பட்சத்தில் தர்க்கரீதியாக மற்றும் உயிரியல் ரீதியாக, இயேசுவின் உண்மையான தந்தை பரிசுத்த ஆவியாக இருக்க வேண்டும். இருப்பினும், லூக்கா 1:35, “பரிசுத்த ஆவி மரியாளைச் கர்ப்பமாக்குவதற்கு, அவளின் மீது வரும் என்றும், மேலும் உன்னதமானவருடைய பலம் மரியாளின் மேல் நிழலிடும் என்றும் கூறுகிறது.  ஆகையால், பிறக்கவிருக்கும் பரிசுத்தர் [இயேசு / யெஷ்ஷுவா] தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுவார் என்றும் கூறுகிறது. ”



✝️ தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

லூக்கா 1:35


✍️ இதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் மரியாவை கர்ப்பமாக்கினார் என்று தெளிவாக தேவதூதர் கேப்ரியல் சொன்னாலும், பிறக்கும் மகன் பரிசுத்த ஆவியின் மகன்” என்று அறியப்படாமல்,  “தேவனுடைய குமாரன்” என்று அழைக்கப்படுவார் என்று சொல்லப்பட்டுள்ளதன் மூலம் பரிசுத்த ஆவி தனிப்பட்ட ஆள் தத்துவம் கொண்டவர் அல்ல என்பது நிரூபணமாகிறது.



✍️ அதேசமயம் தேவனின் அதிகாரத்தின் கீழ் பேசவந்த வானவர்களை குறிக்கவும் பரிசுத்த ஆவி என்ற சொல்லாடல் பைபிளில் ஒரு சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் மறுக்க முடியாது. அதனை குறித்தும் அடுத்தடுத்த பதிவுகளில் இனி காண்போம்.



                                                              இன்ஷா அல்லாஹ் இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் தொடரும்….‌

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்