வெளிப்படுத்தின விசேஷம் இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா?

வெளிப்படுத்தின விசேஷம் இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா? ✍️ பைபிளை பொறுத்தவரையில் வெளிப்படுத்தின சுவிசேஷம் என்பது மிக முக்கியமானது. ஏனெனில் அந்த புத்தகம் இயேசுவின் சிலுவைப் பலி க்கு பிறகு கர்த்தரால் இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், இயேசுவின் தூதர் மூலமாக யோவானுக்கு கொடுக்கப்பட்டதாக கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. அதனால் இந்த புத்தகத்தில் இயேசுவைப்பற்றி சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு வசனமும் மிக முக்கியமானதாக இருக்கின்றது. இயேசுவை இறைவன் என்று சொல்வதற்கு மிக உறுதியான ஆதாரமாக வெளிப்படுத்தின சுவிசேஷம் பார்க்கப்படுகிறது. ஆனால் வெளிப்படுத்தின சுவிசேஷம் கிறிஸ்தவ நம்பிக்கையை உடைத்து விடுகிறது என்றே அதைப் படிப்பவர் புரிந்து கொள்ள முடியும். ✍வெளிப்படுத்தின சுவிசேஷமும் இயேசுவை இறைவன் என்று சொல்லவில்லை. பூமியில் மனிதனாக வாழ்ந்த இயேசு இறந்து மீண்டும் உயிர்த்தெழுந்த பிறகு இறைவனாக மாறி விட்டார் என்பதே கிறிஸ்தவர்களின்(ஆதாரமற்ற) நம்பிக்கையாக உள்ளது. ஆனால் கிறிஸ்தவர்களின் அந்த நம்பிக்கையும் வெளிப்படுத்தின சுவிசேஷத்தின் வசனங்களோடு முரண்படுகின்றது. இயேசு உயிர்த்தெழுந்த(கிறிஸ்தவ நம்பிக்கைப்படி) பிறகும் கர...