இயேசுவைப் பின்பற்றும் உண்மையான விசுவாசிகள் யார்?
இயேசுவைப் பின்பற்றும் உண்மையான விசுவாசிகள் யார்?
✍️இயேசுவை உண்மையாக பின்பற்றுபவன் யாரெனில் இயேசு போதித்த அந்த ஒரே இறைவனையே வணங்குபவன் ஆவார்.
⭐இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
(மாற்று 12:29)
✍️இயேசுவை உண்மையாக பின்பற்றுபவன் யாரெனில், இறைவனது சட்டங்களையும் மற்றும் தீர்க்கதரிசிகளின் போதனைகளையும் உண்மையாக மதித்து, அதை பின்பற்றுபவன் ஆவான்.
⭐நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
(மத்தேயு 5:17)
✍️இயேசுவை உண்மையாக பின்பற்றுபவன் யாரெனில், இயேசு போதிக்காத திரித்துவத்தை நிராகரித்து, இயேசு வணங்கிய அந்த ஒரே இறைவனை பணிந்து கொண்டு வணங்குபவன் ஆவான்.
⭐இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
(லூக்கா4:8)
✍️இயேசுவை உண்மையாக பின்பற்றுவோர் யார் எனில் இயேசுவைப் போன்று ஒரே இறைவனையே வணங்குபவன் ஆவான்.
⭐அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
(லூக்கா 6:12)
✍️இயேசுவை உண்மையாக பின்பற்றுபவன் யாரெனில் இயேசு இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டவர் என்று நம்புபவன் ஆவான்.
⭐இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
(மத்தேயு 10:5-6)
✍️இயேசுவை உண்மையாக பின்பற்றுபவன் யாரெனில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இறைவனை சேவிக்காமல், தினந்தோறும் இறைவனை வணங்குபவன் ஆவான்.
⭐சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
(லூக்கா 18:1)
✍️இயேசுவை உண்மையாக பின்பற்றுபவன் யாரெனில், நித்திய ஜீவனை அடைவதற்கு இயேசு வழங்கிய அந்த ஒரே இறைவனையே வணங்கி தீர்க்கதரிசிக்கு கொடுக்கப்பட்ட சட்டங்களை பின்பற்றுபவன் ஆவான்.
⭐அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
(மத்தேயு19:16-17)
✍️இயேசுவை உண்மையாக பின்பற்றுபவன் யாரெனில், இறைவனால் அனுப்பப்பட்ட தேற்றரவாளனாகிய முகமது நபியை விசுவாசித்து அவரை பின்பற்றுபவன் ஆவான்.
⭐என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
(யோவான் 14:26)
✍️இயேசுவை உண்மையாக பின்பற்றுபவன் யாரெனில், இயேசு கர்த்தர் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்றும் கர்த்தரே உண்மையான இறைவன் என்றும் விசுவாசிப்பவன் ஆவான்.
⭐ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
(யோவான் 17:3)
⭐அதற்கு ஜனங்கள்: கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
(மத்தேயு 21:11)
✍️இயேசுவை உண்மையாக பின்பற்றுபவன் யாரெனில், ஆதிபாவம் திரித்துவம் போன்ற மனிதர்களுடைய கற்பனைகளை கைக்கொள்ளாமல் இயேசுவின் போதனைகளை பின்பற்றுபவன்.
⭐மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
(மத்தேயு 15:9)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
⭐⭐ (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்" என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.
(அல்குர்ஆன் 21:25)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
கருத்துகள்
கருத்துரையிடுக