பூமி தட்டை என்று குர்ஆன் சொல்கிறதா??
பூமி தட்டை என்று குர்ஆன் சொல்கிறதா??
மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 13:3)
மேலே உள்ள குர்ஆன் வசனத்தை பதிவு செய்து பூமி உருண்டை என்பது அல்லாஹ்விற்கு தெரியாதா என்று கேள்வி கேட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் மூடத்தனத்தை வெளிக்காட்டுகின்றனர்.
பூமி உருண்டை என்பது அல்லாஹ்வுக்கு தெரியும் என்பதால்தான் பூமியில் இரவு பகலை முடூகிறது என்றும் பகல் இரவை முடூகிறது என்றும் இலக்கிய நயத்துடன் பேசியுள்ளான். இந்த பூமியில் இரவும் பகலும் தொடர்ந்து மாறி மாறி வருவது என்பது உண்மையான ஒன்றாகும். இரவு பகலை முடூகிறது என்பதும் பகல் இரவை முடூகிறது என்பதையும் அறிவு உடையவர் எவரேனும் சிந்தித்துப் பார்த்தால் அதன் மூலம் பூமி உருண்டை என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஏனெனில் பூமி உருண்டையாக இருப்பதால்தான், இரவும் பகலும் ஒன்றை ஒன்று பூமியில் மூடிக்கொண்டு இருந்தாலும், அவை தொடர்ந்து வருகிறது. பூமி உருண்டையாக இல்லாமல் இரவும் பகலும் ஒன்றையொன்று மூடி இருந்தால் அவை தொடர்ந்து வராது.
பூமி மிகப் பெரியது மற்றும் அதன் வளைவு சிறிது தொலைவில் இருந்து பார்க்க முடியாது, பூமியின் தரை விரிப்பாக பரவி காணப்படுகிறது. பூமியில் வாழும் எவரும் எங்கே சறுகி கீழே விழுந்து விடுவோமோ என்று நினைத்து பயப்படும் அளவுக்கு பூமியின் வளைவுகள் தோன்றாமல், விரிப்பு போன்று காணப்படுகிறது. இதை தான் குர்ஆன் பூமியை விரிப்பாக ஆக்கியுள்ளதாக சொல்கிறது.
பூமி உருண்டை என்று சொன்னவர்களை கொன்ற கிறிஸ்தவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள்.
அல்லாஹ் பூமியை விரித்தான் என்ற சொல்லை கொண்டு பூமி தட்டையானது என்று கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்றால் இதே போன்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் வசனத்தையும் பூமி தட்டையானது என்ற அர்த்தத்தில் தானே புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கர்த்தர் பூமியை பரப்பினார் என்று பைபிளும் சொல்கிறது.
ஏசாயா 44
24: உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.
Thus saith the LORD, thy redeemer, and he that formed thee from the womb, I am the LORD that maketh all things; that stretcheth forth the heavens alone; that #spreadeth_abroad_the_earth by myself; (KJV)
நடுநிலை சிறிதுகூட இல்லாமல் தங்கள் வேதத்தை ஒரு மாதிரியாகவும் மற்றவர்கள் நம்பக்கூடிய வேதத்தை வேறு ஒரு மாதிரியாகவும் பார்த்து குழம்பி போய் தங்கள் அறியாமையை வெளிப்படுத்தும் கிறிஸ்தவர்களின் மூடத்தனத்தை என்னவென்று சொல்வது?
இஸ்லாமிய வரலாற்றில் எங்குதேடி பார்த்தாலும் எந்த ஒரு காலத்திலும் பூமி உருண்டை என்று சொன்ன எந்த ஒரு அறிவியலாளர்களும் இஸ்லாமிய அறிஞர்களால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்படவில்லை. ஆனால் பூமி உருண்டை என்றும் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்றும் சொன்ன கிறிஸ்தவ விஞ்ஞானிகள் பலர் கிறிஸ்துவ அறிஞர்களால் துன்புறுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதற்கு கிறிஸ்துவ வரலாற்றில் ஆதாரம் உள்ளது.
இது சம்பந்தமாக ஏற்கனவே சத்தியத்தை நோக்கி பக்கத்தில் ஒரு பதிவு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதோ அதற்கான லிங்க்:
https://m.facebook.com/story.php?story_fbid=180002859311127&id=156500341661379
கருத்துகள்
கருத்துரையிடுக