முஹம்மது நபியை திருநங்கை என்று சொல்லும் கிறிஸ்தவர்களுக்கு மறுப்பு
✍️இஸ்லாத்தின் மீது கிறிஸ்தவர்கள் கொண்ட வெறுப்பானது அவர்களது சிந்திக்கும் தன்மையை முழைமையாக மழுங்கச் செய்து இஸ்லாத்திற்கு விரோதமான அவதூறுகளை பலகீனமான ஹதீஸ்களின் பக்கம் ஓட செய்துள்ளது. பலகீனமான ஹதீஸ்களுக்கு மிக எளிமையாக முஸ்லிம்கள் பதில் கொடுத்துவிடுகிறார்கள் என்பதற்காக, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை முழுமையாக பதிவு செய்யாமல், சிலவற்றை விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் பதிவு செய்து இஸ்லாத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில் மிக முக்கியமாக முஹம்மது நபியை திருநங்கையை போல் சித்தரித்து காட்டுவதற்காக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக் காட்டி வெறுப்பு பிரச்சாரம் செய்து வருகின்றனர். கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் பயன்படுத்தும் ஹதீஸ்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1️⃣ முகமது நபியை திருநங்கையுடன் ஒப்பீடு செய்வதற்காக அவர்கள் பயன்படுத்தும் வாதங்களில் ஒன்று தான்முஹம்மது நபியவர்கள் தனது தலைமுடிக்கு ஹென்னாவை பயன்படுத்தினார்கள் என்பது ஆகும். ஹென்னாவை பெண்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள் என்பது போல் கிறிஸ்தவர்கள் சித்தரித்துக் காட்டுகின்றனர். ஆனால் அது பொய்யாகும். இஸ்லாமிய சமூகத்தை பொறுத்தவரையில் நரை முடிக்கு கருப்பு கலர் சாயம் பூசுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதனால் நரை முடிக்கு சாயம் பூச ஹென்னாவை பயன்படுத்துவது வழக்கம். இது முஹம்மது நபியின் காலத்தில், முஹம்மது நபியால் அனுமதி அளிக்கப்பட்டு ஸஹாபாக்களும் இவ்வாறு செய்துள்ளனர். இது நபிவழிகளில் ஒன்றாகும்.
👉நபித் தோழர் ஜாபிர் அவர்கள் கூறினார்கள்:
'மக்கா வெற்றி நாளில் நபித் தோழர் அபூபக்கர் அவர்களின் தந்தை அபூ குஹாஃபா அவர்கள் நபியவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் பொல வெள்ளை வெளேர் என்று இருந்தது. அப்போது நபியவர்கள் 'இந்த வெள்ளை நிறத்தை ஏதேனும் சாயம் கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.' என்று கூறினார்கள்.
ஆதார நூல் முஸ்லிம்: 4270
👉அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
நரை முடியை மாற்ற சிறந்த விஷயங்கள் மருதாணி மற்றும் கதம்.
(அல்-திர்மிதி, 1753; அபு தாவூத், 4205; இப்னு மஜா, 3622
👉நபி(ஸல்) அவர்களின் ஊழியரான அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவர்கள் தம் தோழர்களில் அபூ பக்ர்(ரலி) மட்டுமே கருப்பு - வெள்ளை முடி உடையவர்களாக இருந்தார்கள். அன்னார் மருதாணியாலும், 'கத்தம்' எனும் (ஒரு வகை) இலைச் சாயத்தாலும் தம் (தாடி) முடியைத் தோய்த்து (நரையை) மறைத்துக் கொண்டார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3919.
அத்தியாயம் : 63. அன்சாரிகளின் சிறப்புகள்
2️⃣ இரண்டாவது சுர்மா அதாவது கண் மை. இதையும் கிறிஸ்தவர்கள் பெண்கள் மட்டுமே செய்யும் பழக்கங்களில் ஒன்றாக கருதுகின்றனர்.
✍️சுர்மா – இத்மித் – குஹ்ல் என்னும் கண்-மை இட்டுக் கொள்வதை நபி வழிகளில் ஒன்றாக கருதுகிறது இஸ்லாம். அது நபிவழி (சுன்னத்) என்னும் அந்தஸ்த்தில் உள்ள காரியம். அது ஒப்பனையோ கற்பனையோ அல்ல.
✍️’இத்மித்’ என்று அரபியில் அழைக்கப்படும் மூன்றாம் ஆண்டிமொனி சல்ஃபைடு பற்றி நபிகள் நாயகம் நயந்துரைத்த மொழிகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபி-மொழி:
👉“உங்கள் அஞ்சனங்களில் சிறந்தது இத்மித். அது பார்வையைத் தெளிவாக்குகிறது, இமையின் முடிகளை வளர்த்துகிறது” (நூற்கள்: சுனன் நஸாயீ #5113, சுனன் அபுதாவூத் #3837).
✍️கண்களுக்கு இத்மித் என்னும் சுர்மாவை நபியின் காலத்தில் ஸஹாபாக்கள் பயன்படுத்தி உள்ளனர் என்பதற்கு மேலே உள்ள ஹதீஸ் மிகத் தெளிவான ஆதாரமாகும்.
👉நபித்தோழர் அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
"நபி (ஸல்) தன் கண்களுக்கு மை இடுகையில் வலக் கண்ணில் மூன்று முறையும் இடக் கண்ணில் இரண்டு முறையும் இடுவார்கள்” (நூல்: முஸன்னஃப் இப்னு அபீஷைபா)
3️⃣ Hadith
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ، - رَجُلٍ مِنَ الأَنْصَارِ - قَالَ بَيْنَمَا هُوَ يُحَدِّثُ الْقَوْمَ وَكَانَ فِيهِ مِزَاحٌ بَيْنَا يُضْحِكُهُمْ فَطَعَنَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي خَاصِرَتِهِ بِعُودٍ فَقَالَ أَصْبِرْنِي . فَقَالَ
اصْطَبِرْ "
قَالَ إِنَّ عَلَيْكَ قَمِيصًا وَلَيْسَ عَلَىَّ قَمِيصٌ فَرَفَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ قَمِيصِهِ فَاحْتَضَنَهُ وَجَعَلَ يُقَبِّلُ كَشْحَهُ قَالَ إِنَّمَا أَرَدْتُ هَذَا يَا رَسُولَ اللَّهِ
👉அன்சாரின் ஒரு மனிதரான உசைய்த் இப்னு ஹுதைரை மேற்கோள் காட்டி அப்துர் ரஹ்மான் இப்னு அபு லைலா அவர் கேலி செய்வதும் மக்களுடன் பேசியும் அவர்களை சிரிக்க வைத்து கொண்டு இருந்த போது, நபி (ﷺ) அவரை விலா எலும்புகளின் கீழ் ஒரு குச்சியால் குத்தினார். அவர் கூறினார்: நான் இதற்கு பழி வாங்குவேன் என்று அவர் கூறினார். அதற்கு பழி வாங்கி கொள்ளுங்கள் அவர் கூறினார்: 👉நீங்கள் ஒரு சட்டை அணிந்திருக்கிறீர்கள், ஆனால் நான் சட்டை அணிந்திருக்கவில்லை. என்று அவர் கூறினார். பின்னர் நபி (ﷺ) தனது சட்டையை உயர்த்த, அந்த நபர் அவரைத் தழுவி, அவரது உடலில் முத்தமிடத் தொடங்கினார். பின்னர் அவர் கூறினார்: அல்லாஹ்வின் தூதரே! இதைத்தான் நான் விரும்பினேன்.👈
(சுனன் அபுதாவூத்: 5224)
✍️ மேற்கண்ட ஹதீஸை முழுமையாக பதிவு செய்யாமல் அதை எடிட் செய்து ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் பதிவு செய்து நபியை தவறான முறையில் சித்தரிக்க கிறிஸ்தவர்கள் விரும்புகின்றனர். எங்கே அந்த ஹதீஸை முழுமையாக பதிவு செய்தால் முகமது நபியின் மென்மையான குணமும் அவரது நீதி குணமும் வெளியாகி விடுமோ என்ற அச்சத்தில் பாதி ஹதீஸை மறைத்து மீதி ஹதீஸை மட்டும் பதிவு செய்துள்ளனர். முகமது நபி ஒரு சமூகத்திற்கு ஆன்மிகத் தலைவராகவும் அரசியல் தலைவராகவும் இருந்தும் கூட தனது மக்களிடத்தில் அன்புடனும் சகோதரத்துடனும் எவ்வாறெல்லாம் பழகி உள்ளார் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. ஒரு சமூகத்திற்கு அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவராக இருந்தும்கூட தன்னிடத்தில் பழி வாங்க விரும்பிய நபரை, பழி வாங்கி கொள்ளுங்கள் என்று அனுமதி கொடுக்கிறார். இந்த அளவுக்கு தனது மக்களுடன் சகோதர வாஞ்சையுடன் எந்த ஒரு அரசியல் மற்றும் ஆன்மீக தலைவரும் இருக்கமாட்டார்கள். பைபிள் சொல்லும் எலிசா எனும் தீர்க்கதரிசியை சின்னஞ்சிறு சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக மொட்டைத்தலை என்று அழைத்ததற்காக, எலிசா தீர்க்கதரிசி அந்த சிறுவர்களை கர்த்தரின் நாமத்தை கொண்டு சபித்தார். இந்த சாபத்தின் காரணமாக காட்டிலிருந்து இரண்டு கரடிகள் வந்து அந்த நாற்பத்தி இரண்டு குழந்தைகளையும் பீறீ போட்டதாக பைபிள் சொல்கிறது.(2 இராஜாக்கள் 2:23-24) சின்னஞ்சிறு சிறுவர்களிடம் கூட இரக்கம் காட்டாத பைபிள் போதிக்கும் தீர்க்க தரிசிகளையும், கர்த்தரையும் படித்த கிறிஸ்தவர்களுக்கு முஹம்மது நபியின் மிக எளிமையான குணமும் நீதியான நடத்தையும் தவறாக தெரிவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
4️⃣ கிறிஸ்தவர்களின் வாதம்:. (நபித் தோழரில் ஒருவரான சாஹிர் என்பவர், தன்னை நபி காதலிப்பதாக கூறிக்கொண்டு வந்தார்)*. முஹம்மது (ஸல்) அவர்கள், *சாஹிர் எனும் (நபித்தோழர்) ஒருவருக்கு பின்னால், மெல்ல நகர்ந்து, அவர் அறியாதவாறு, அவரை இறுக்க கட்டியணைத்தார். அதற்கு சாஹிர் : “என்னை விடு !, யார் இது ?” என கேட்டார். பின்பு அவர் தன் தலையை திருப்பி, *அது அல்லாஹ்வின் தூதர் என்பதை அறிந்து அவரும், தன் பின்பகுதியை (இன்னும் நெருக்கமாய்) நபியின் இருதய பகுதியோடு ஒட்ட தொடங்கினார்.
✍️மேற்கண்ட ஹதீஸில் முகமது நபி அவர்கள் சஹாபா ஒருவரின் பின்பக்கத்திலிருந்து அவரது கண்களை மூடி விளையாடியதை, முஹம்மது நபியின் மீது அவதூறு சொல்வதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உள்ளனர். இந்த ஹதீஸை முழுமையாக பதிவு செய்து படித்தோம் என்றால் கிறிஸ்தவர்கள் எந்த அளவு தரம் தாழ்ந்தவர்கள் என்பது தெரிந்துவிடும்.
👉அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்: வனாந்தரத்தில் வசிப்பவர் ஜாஹிர் (இப்னு ஹிராம் அல்-அஷ்ஜீ), அவர் ரசூலுல்லாஹு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தை பார்வையிட வரும் போதெல்லாம் வனப்பகுதி காய்கறிகள் போன்றவற்றை அவருடன் கொண்டு வந்து நபி அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவார். அவர் மதீனாவை விட்டு வெளியேற விரும்பியபோது, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருக்கு நகரத்தின் பொருட்களை அன்பளிப்பாக வழங்குவார். ஒருமுறை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "ஜாஹிர் எங்கள் வனப்பகுதி, நாங்கள் அவருடைய நகரம்" என்று கூறினார்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த வனவாசியுடன் மிகவும் அன்புடன் இருந்தார். ஜாஹிர் ரலியல்லாஹு அன்ஹு மிகவும் அழகானவர் அல்ல. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருமுறை அவர் தனது பொருட்களை விற்கும்போது அவரை அணுகினார். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரை (ஸாஹிர் ரலியல்லாஹு அன்ஹு) பார்க்க முடியாத வகையில் பின்னால் இருந்து கைகளுக்கு இடையில் பிடித்தார். ஸாஹிர் ரதியல்லாஹு அன்ஹு, "இது யார்? என்னை விட்டு விடுங்கள்" என்றார். ஆனால் அது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று தனது ஓர கண்ணால் பார்த்து அறிந்து கொண்டபோது, அவர் தனது முதுகை நேராக்கி, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தின் மார்பில் அழுத்தத் தொடங்கினார். அப்போது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "இந்த அடிமையை யார் வாங்குவது?" என்று கேட்டார்கள். அதற்கு ஸாஹிர் ரலியல்லாஹு அன்ஹு, "அல்லாஹ்வின் ரசூல் அவர்களே, நீங்கள் என்னை விற்பதாக இருந்தால், நீங்கள் ஒரு குறைபாடுள்ள பொருளை விற்கிறீர்கள். இதனால் மிகக் குறைந்த தொகையை சம்பாதிப்பீர்கள்" என்று பதிலளித்தார். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இல்லை, நீங்கள் அல்லாஹ்வின் பார்வையில் குறைபாடுடையவர்கள் அல்ல, மிகவும் மதிப்புமிக்கவர்” என்று கூறினார்கள்.
(முஸ்னத் அஹமத், ஹதீஸ் : 12237)
✍️தன்னை நேசிக்கும் ஒரு காட்டுரபியிடம் எந்த அளவிற்கு முஹம்மது நபி மிக நெருக்கமாக அன்புடன் நடந்து இருந்திருக்கிறார்கள் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் சுட்டிக் காட்டுகிறது. அந்த காட்டுரபி முஹம்மது நபிக்காக பொருட்களை அன்பளிப்புச் செய்வதும், பதிலுக்கு முஹம்மது நபியும் அவருக்கு அன்பளிப்புச் செய்வதுமாக தங்களது சகோதர பிணைப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஒருநாள் சந்தையில் அந்த காட்டரபி பொருட்களை விற்றுக் கொண்டிருக்கும் பொழுது பின்பக்கமாக வந்த முகமது நபி அவர்கள் அவரது கண்களை மூடி விளையாடி உள்ளார். ஒரு நாட்டின் அரசியல் தலைவராகவும் ஆன்மீகத் தலைவராகவும் தளபதியாகவும் இருந்தாலும்கூட தன்னை நேசிக்கும் கூட்டத்திடம் இந்த அளவு முஹம்மது நபி அவர்கள் அன்புடன் நெருக்கமாக பழகி இருக்கிறார்கள். இதுபோன்ற நபரை வரலாற்றில் எவரேனும் பார்க்க முடியுமா? முஹம்மது நபி பின்புறத்திலிருந்து கண்களை மூடி விளையாடியபோது, தன்னைத்தானே தரம் தாழ்த்தி அந்த சஹாபி பேசிய பொழுதும் கூட, அல்லாஹ்வின் பார்வையில் அந்த ஸஹாபி கண்ணியமானவர் என்றும் மிக மதிப்பு மிக்கவர் என்றும் முஹம்மது நபி கூறுவதிலிருந்து கிறிஸ்தவர்கள் சொல்லும் பொய் குற்றச்சாட்டு சுக்கும் நூறாகிவிடுகிறது.
✍️மக்கள் நடமாடும் சந்தையில் பல பேர் முன்னிலையில், லூத் நபியின் சமூகத்தார் எந்த காரணத்திற்காக அழிக்கப்பட்டார்களோ அதை அல்லாஹ்வின் தூதர் செய்தார்கள் என்று சொல்வது மாபெரும் பொய்யாகும்.
5️⃣
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا كَهْمَسٌ، عَنْ سَيَّارِ بْنِ مَنْظُورٍ، رَجُلٍ مِنْ بَنِي فَزَارَةَ - عَنْ أَبِيهِ، عَنِ امْرَأَةٍ، يُقَالُ لَهَا بُهَيْسَةُ عَنْ أَبِيهَا، قَالَتِ اسْتَأْذَنَ أَبِي النَّبِيَّ صلى الله عليه وسلم فَدَخَلَ بَيْنَهُ وَبَيْنَ قَمِيصِهِ فَجَعَلَ يُقَبِّلُ وَيَلْتَزِمُ ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الشَّىْءُ الَّذِي لاَ يَحِلُّ مَنْعُهُ قَالَ الْمَاءُ " . قَالَ يَا نَبِيَّ اللَّهِ مَا الشَّىْءُ الَّذِي لاَ يَحِلُّ مَنْعُهُ قَالَ " الْمِلْحُ " . قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الشَّىْءُ الَّذِي لاَ يَحِلُّ مَنْعُهُ قَالَ " أَنْ تَفْعَلَ الْخَيْرَ خَيْرٌ لَكَ " ."
👉புஹாய்சா தனது தந்தையின் அதிகாரத்திலிருந்து அறிவிக்கிறார்:
என் தந்தை நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரினார். (அனுமதி வழங்கப்பட்டதும், அவர் அருகில் வந்ததும்) அவர் தனது சட்டையைத் தூக்கி, அவரை முத்தமிட்டு அரவணைக்கத் தொடங்கினார் (அவர் மீதுள்ள அன்பினால்). அவர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே, மறுப்பதில் சட்டவிரோதமானது எது? நீ யார் என்று நபி பதிலளித்தார். அவர் மீண்டும் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே, மறுப்பதில் சட்டவிரோதமானது எது? உப்பு என்று நபி பதிலளித்தார். அவர் மீண்டும் கேட்டார்: அல்லாஹ்வின் நபியே, மறுப்பதில் சட்டவிரோதமானது எது? அவர் கூறினார்: உங்களுக்கு நன்மை தரும் நல்லதை செய்வது.
Da'if (Al-Albani)
Sunan Abi Dawud 1669
✍️இந்த ஹதீஸை அறிவிப்பவரான புஹைஸா ஃபஸரியா என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்பதால் இவர் மூலம் வரும் ஹதீஸ் பொய்யென்று ஹதீஸ் கலை வல்லுனர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹதிஸ்களை பொறுத்தவரையில் ஒரு செய்தியை அறிவிக்கும் நபர் மற்றும் அந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக அல்லது இல்லையா என்பதை பொருட்டே அந்த ஹதீஸின் தரம் வகைப்படுத்தப்படும்.
6️⃣ ஆயிஷாவின் போர்வைக்குள் வஹி:
👉 அது ஆயிஷாவின் போர்வையல்ல. அது ஆயிஷாவின் வீடு என்பதே இங்கு உவமையாக சொல்லப்பட்டுள்ளது.
👉 நபியின் காலக்கட்டத்தில் போர்வை என்ற சொல் உவமையாக பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம்
🌟 அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.78:10
⭐உம்மு ஸலாமா, ஆயிஷாவை தவிர வேறு எந்த என் மனைவியின் வீட்டில் இருக்கையிலும் வஹீ எனக்கு வரவில்லை
Musnad Ahmad, 27271
sahih ibn haban 7109
✍️அதுமட்டுமல்ல ஆண்கள் ஆடையை பெண்கள் அணியவும், பெண்களின் ஆடையை ஆண்கள் அணிவதையும் முஹம்மது நபி அவர்கள் தடுத்துள்ளார்கள்.
👉பெண் அணிவதைப் போன்று ஆடை அணிகின்ற ஆணையும், ஆண் அணிவதைப் போன்று ஆடை அணிகின்ற பெண்ணையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 3575)
கருத்துகள்
கருத்துரையிடுக