அல்குர்ஆன் 9 31 வசனம் இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா?






✍️ கிறிஸ்தவர்களின் தவறான குர்ஆன் மொழிபெயர்ப்பு வசனம்:

👉 9:31. அவர்கள் அல்லாஹ்வையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் விட்டு தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும்  தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.

✍️ முஸ்லிம் அல்லாத மாற்று மதத்தவர்கள் கூட அல்லாஹ் ஒருவனே இறைவன் என்று இஸ்லாம் போதிக்கிறது என்பதை அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால் பைபிளைக் கொண்டு திரித்துவத்தை நிரூபிக்க முடியாத கிறிஸ்தவர்கள், திரித்துவத்தின் இரண்டாவது ஆள் தத்துவமான இயேசுவை இறைவனாக நிரூபிக்க குர்ஆன் வசனத்தை தவறாக மொழிபெயர்ப்பு செய்து தங்களது மூடத்தனத்தையும் இயலாமையையும் காட்டுகின்றனர். இப்போது அந்த வசனத்தை குறித்து பார்ப்போம்.

اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ‌  وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا‌  لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌  سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَ‏
👉 அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.
(அல்குர்ஆன் : 9:31)

✍️ அல்லாஹ்வுடன் கூட்டாளர்களாகக் துறவிகள் மற்றும் அறிஞர்களைப் வேதக்காரர்கள் எடுத்துக் கொண்டதை பற்றியே இந்த வசனம் பேசுகிறது.  அறிஞர்கள் மற்றும் துறவிகளுடன் சேர்ந்து, அவர்கள் மேசியா [நபி ஈசா (ஸல்)] அவர்களையும் ஒரு கூட்டாளராக எடுத்துக் கொண்டனர் என்பதையும் இந்த வசனம் குறிப்பிடுகிறது.

✍️ அடிப்படை அரபியை அறிந்த எவருக்கும் மேலே உள்ள வசனத்தில் 'மேசியா' (மசீஹ்) என்ற சொல் அதன் முடிவில் ஒரு  "ஃபத்தா(fatha)" இருப்பதை அறிவார். இது மசீஹ் என்ற வார்த்தையில் 'ஹா'  சேர்க்கப்படுவதன் மூலம் "மசீஹா" என்று குறிக்கப்பட்டுள்ளது.  இது வசனத்தின் வினைச்சொல்லின் நேரடி செயற்படுபொருள் (மஃபூல் பிஹி-maf'ool bihi) என்பதை குறிக்கிறது.

✍️ வசனத்தில் உள்ள வினைச்சொல் "அவர்கள் எடுத்து கொண்டனர் (இத்தகாத்து)".  ஆகவே, மேசியா வினைச்சொல்லின் செயற்படுபொருள், அதாவது மேசியா ஒரு இறைவனாக எடுத்துக் கொள்ளப்பட்டார் என்று வசனம் கூறுகிறது. அதாவது வேதக்காரர்கள் தங்களுடைய ரப்பிகளையும் துறவிகளையும் மற்றும் மேசியாவையும் தங்கள் இறைவனாக எடுத்துக் கொண்டனர் என்று அர்த்தம்.

✍️ கிறிஸ்தவர்கள் சொல்வது போல் அதாவது அவர்கள் அல்லாஹ்வையும் மேசியாவையும் இறைவனாக எடுத்துக் கொள்வதற்கு பதில் அவர்கள் தங்கள் ரப்பிகளையும் துறவிகளையும் இறைவனாக எடுத்துக் கொண்டார்கள் என்று இந்த வசனம் சொல்ல விரும்பினால், வ அல்மசீஹீ(waalmaseehi) என்று சொல்லியிருக்கும்.

✍️ அல்லாஹ் என்ற வார்த்தை உடன் "ஹீ" என்ற வார்த்தை சேர்ந்து "அல்லாஹீ" என்று இருப்பதுபோல், வ அல்மசீஹீ என்று சொல்லப்பட்டு இருந்தால் அல்லாஹ்வையும் மசீஹையும் விடுத்து, அவர்கள் தங்கள் ரப்பிகளையும் துறவிகளையும் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர் என்று அர்த்தமாகி இருக்கும். ஆனால் குர்ஆன் அவ்வாறு சொல்லவில்லை.

✍️ அல்லாஹ்வைத் தவிர இறைவனாக தவறாக எடுத்துக் கொள்ளப்பட்ட ரப்பீக்கள் மற்றும் துறவிகளுடன் இயேசுவையும் குர்ஆன் அரபு இலக்கணம் தெளிவாக முன் வைக்கிறது. உதாரணமாக, அல்-மசீஹாவுக்கு முன் இணைத்தல் (வா), மற்றும் குறுகிய உயிரெழுத்து ஃபத்தா (அ) இருப்பது,  அல்-மசீஹா என்பது வினைச்சொல்லின் நேரடி செயற்படுபொருள்(accusative proper noun) என்பதை குறிக்கிறது. எனவே மசீஹா முதல் இரண்டோடு சேர்ந்து அதாவது அவர்களின் ரப்பீக்கள் மற்றும் துறவிகள்" ahbarahum waruhbanahum, ") சேர்ந்து விடுகிறது. எனவே இந்த வாக்கியத்தை கீழ்க்கண்டவாறு படிக்க வேண்டும்.

✍️ அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.
(அல்குர்ஆன் 9:31)

✍️ அதுமட்டுமில்லாமல் அந்த வசனத்தின் பிற்பகுதி ஒரே இறைவனைத் தவிர வேறு எவரையும் இறைவனாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கட்டளை இடப்பட்டுள்ளதையும் எடுத்துக்கூறுகிறது. அனைத்து இறைத்தூதர்களுக்கும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்றும் வஹீ அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதையும் குர்ஆன் மிகத் தெளிவாக சொல்கிறது.

👉 (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்" என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.
(அல்குர்ஆன் 21:25)

✍️ இறுதி நபியான முகமது நபியும் இயேசுவை குறித்து எவ்வாறு நம்ப வேண்டும் என்பதையும் முஸ்லிம்களுக்கு தெளிவாக விளக்கி கூறியிருக்கிறார். அல்லாஹ்வின் வார்த்தை மற்றும் ஆன்மா என்று சொல்லப்படும் இயேசு அல்லாஹ்வுடைய அடியார் என்பதை முஹம்மது நபி மிகத்தெளிவாக முஸ்லீம்களுக்கு விளக்கிக் கூறி இருக்கும்பொழுது கிறிஸ்தவர்களுடைய நயவஞ்சகத்தனம் ஒருபோதும் முஸ்லிம்களிடம் எடுபடாது.

👉 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாளன் யாருமில்லை. முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன்; (இறைத் தூதர்) ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய அடிமையின் புதல்வரும் ஆவார்; அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ("ஆகுக" எனும்) ஒரு வார்த்தை(யில் பிறந்தவர்); அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை என்றெல்லாம் யார் உறுதிமொழி கூறுகின்றாரோ அவரைச் சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக அல்லாஹ் நுழைவிப்பான்.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆனால், (அதன் இறுதியில்) "அவரை அல்லாஹ் அவருடைய செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்" என்று இடம்பெற்றுள்ளது. "சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக நுழைவிப்பான்" என்பது இடம்பெறவில்லை.
ஸஹீஹ் முஸ்லிம் : 46. 
அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்