வெளிப்படுத்தின விசேஷம் இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா?

வெளிப்படுத்தின விசேஷம் இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா?





✍️ பைபிளை பொறுத்தவரையில் வெளிப்படுத்தின சுவிசேஷம் என்பது மிக முக்கியமானது. ஏனெனில் அந்த புத்தகம் இயேசுவின் சிலுவைப் பலி க்கு பிறகு கர்த்தரால் இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், இயேசுவின் தூதர் மூலமாக யோவானுக்கு கொடுக்கப்பட்டதாக கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. அதனால் இந்த புத்தகத்தில் இயேசுவைப்பற்றி சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு வசனமும் மிக முக்கியமானதாக இருக்கின்றது. இயேசுவை இறைவன் என்று சொல்வதற்கு மிக உறுதியான ஆதாரமாக வெளிப்படுத்தின சுவிசேஷம் பார்க்கப்படுகிறது. ஆனால் வெளிப்படுத்தின சுவிசேஷம் கிறிஸ்தவ நம்பிக்கையை உடைத்து விடுகிறது என்றே அதைப் படிப்பவர் புரிந்து கொள்ள முடியும்.

✍வெளிப்படுத்தின சுவிசேஷமும் இயேசுவை இறைவன் என்று சொல்லவில்லை. பூமியில் மனிதனாக வாழ்ந்த இயேசு இறந்து மீண்டும் உயிர்த்தெழுந்த பிறகு இறைவனாக மாறி விட்டார் என்பதே கிறிஸ்தவர்களின்(ஆதாரமற்ற) நம்பிக்கையாக உள்ளது. ஆனால் கிறிஸ்தவர்களின் அந்த நம்பிக்கையும் வெளிப்படுத்தின சுவிசேஷத்தின் வசனங்களோடு முரண்படுகின்றது. இயேசு உயிர்த்தெழுந்த(கிறிஸ்தவ நம்பிக்கைப்படி)  பிறகும் கர்த்தர் ஒருவரையே தன்னுடைய தேவன் என்றும், தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் கர்த்தரால் கொடுக்கப்பட்டது என்றும் இயேசு சொல்கிறார். 

➡️Rev2:26. ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.

✍சுயமான அதிகாரம்   இல்லாமல் பிறரிடம் இருந்து அந்த அதிகாரத்தை வாங்குபவர் இறைவன் என்று எவ்வாறு சொல்ல முடியும்? ஒருபோதும் அவ்வாறு சொல்ல முடியாது. ஒட்டுமொத்த பைபிளில் நீங்கள் எங்கு தேடி பார்த்தாலும் இயேசு சுயமாக எந்த ஒரு அதிகாரத்தையும் பெற்றிருந்ததாக எந்த ஒரு வசனத்தையும் காட்ட முடியாது.

➡️Rev3:
12. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும்  என்  தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.

✍மேற்கண்ட வசனத்தில் இருந்து  பைபிள் அடிப்படையில் இயேசு உயிர்த்தெழுந்த நிலையிலும் கர்த்தரை தேவன் என்று இயேசு அழைப்பது இயேசு தேவன் அல்ல என்பதையும், கர்த்தர் ஒருவரே தேவன் என்பதையும் இயேசு கர்த்தரின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவர் என்பதையும் காட்டுகிறது. மேலும் இந்த வசனத்தின் மூலம் கிறிஸ்தவர்கள் நம்புகின்ற திரித்துவமும் உடைந்து விடுகிறது. ஹலோ பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகிய மூன்று நபர்களும் இறைத் தன்மையை சமமானவர்களாக ஒரே தேவனாக செயல்படுகிறார்கள் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு மாறாக இயேசு கர்த்தரிடமிருந்து அதிகாரத்தை பெற்றவராகவும் கர்த்தரை தேவனென்று அழைப்பவராகவும் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பரிசுத்த ஆவியை எந்த ஒரு இடத்திலும் கர்த்தருக்கு இறைத்தன்மையில் சமமானவர் ஆக எங்கும் போதிக்கவில்லை. இதிலிருந்து கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பது மனித இடைச்செறுகள் என்பது நிரூபணமாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்