இடுகைகள்

டிசம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழைய ஏற்பாடு திரித்துவ(Echad) தேவனை போதிக்கிறதா?

படம்
பழைய ஏற்பாடு திரித்துவ தேவனை போதிக்கிறதா? ✍எந்த தீர்க்கதரிசியும் போதிக்காத திரித்துவத்தை பழைய ஏற்பாட்டில் புகுத்த கிறிஸ்தவர்கள் கையாளும் தந்திரம் தான் Echad என்ற சொல் ஆகும். 👉இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே(Echad) கர்த்தர். (உபாகமம் 6:4) ✍Echad என்ற சொல் ஒன்று என்று மொழிப்பெயர்க்கப்பட்டாலும், அது பன்மையில் ஒருமை என்று அர்த்தம் கொண்டது என்பதே கிறிஸ்தவர்களின் வாதம். இந்த வாதத்தை பயன்படுத்தி உபாகமம் 6:4இல் சொல்லப்பட்ட கர்த்தர் ஒருவரே தேவன் என்பது திரித்துவ தேவனை உள்ளடக்கும் என்று கிறிஸ்தவர்கள் வாதிடுகின்றனர். Echad என்ற சொல் பன்மையில் ஒருமையை குறிக்கும் ஒன்று என்று சொல்வதற்கு கீழ்க்கண்ட வசனங்களை ஆதாரமாக கிறிஸ்தவர்கள் காட்டுகின்றனர். 👉அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். (ஆதியாகமம் 2:24) 👉அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; (ஆதியாகமம் 11:6)                            ⭐⭐⭐⭐⭐⭐ ✍Echad என்ற சொல் "பன்மையில் ஒருமையை குறிக்கும் ஒன்று" என்ற அடிப்படையில் பயன்படுத்தப...

எகோ எமி(நான்) என்பது கர்த்தரின் நாமமா?

படம்
⭐⭐ எகோ எமி(நான்) என்பது கர்த்தரின் நாமமா? ⭐⭐ ➡️அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 8:58) ✍யோவான் 8;58இல் இயேசு எகோ எமி என்ற வார்த்தையை பயன்படுத்தியபோது, அவர் ​​கர்த்தருடைய பெயரை பயன்படுத்துவதாக யூதர்கள் அறிந்திருந்தனர் என்று திரித்துவத்தை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த கூற்று பல காரணங்களுக்காக அபத்தமானது. ✍எகோ எமி என்பது கிரேக்கத்தில் கர்த்தருடைய நாமங்களில் ஒன்று கிறிஸ்தவர்கள் வாதிடுகின்றனர். இது ஒரு முட்டாள்தனமான வாதம். எந்த காலத்திலும் யூதர்கள் நான்(எகோ எமி) என்ற சொல்லை கர்த்தருடைய நாமங்களில் ஒன்று என்று நம்பவில்லை. பைபிளில் பல இடங்களில் நான்(எகோ எமி) என்ற சொல் பலராலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான்(எகோ எமி) என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் இயேசுவை இறைவன் என்று சொல்வதாக இருந்தால் பைபிளில் பலரையும் அவ்வாறு இறைவன் என்று சொல்ல வேண்டி வரும். 💎லூக்கா 1:19 இல்  காபிரியேல் தூதரும் நான்(எகோ எமி)  என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். ➡️தேவதூதன் அவ...

குர்ஆன் சாத்தானின் வார்த்தையா??

படம்
💎💎 குர்ஆன் சாத்தானின் வார்த்தையா?? 💎💎 ✍அல்லாஹ்வின் இறுதி வேதமான குர்ஆனை நிராகரிக்க தள்ளப்பட்ட தூதனின் அதாவது சாத்தானின் வார்த்தை தான் குர்ஆன் என்று அவதூறு பிரச்சாரத்தை குர்ஆனுக்கு எதிராக செய்கின்றனர். இவர்களது இந்த பிரச்சாரம் இயேசுவின் அடிப்படை போதனைகளுக்கு முரணானது. அது எவ்வாறு என்பதை இனி காண்போம். ✍இன்று எவ்வாறு கிறிஸ்தவர்கள் முஹம்மது நபி மீது அவதூறு பிரச்சாரம் செய்கிறார்களோ அதுப்போன்று தான் இயேசுவின் போதனைகளை கண்டு வெறுப்புற்ற யூதர்களும் இயேசுவை பிசாசுகளின் தலைவன் என்று கூறி புறக்கணித்தனர். அதற்கு பதிலாக இயேசு அளித்த பதில் தான் கீழ்கண்ட வசனம். ➡️25. இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. ➡️26. சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? (மத்தேயு 12) ✍இதே பொருளில் அமைந்த வசனங்கள் மாறகுவிலும் பதிவு செய்யப்பட்டு...

பைபிளில் சொல்லப்பட்ட முஹம்மது நபி பற்றிய முன்னறிவிப்பு

படம்
⭐ பைபிளில் சொல்லப்பட்ட முஹம்மது நபி பற்றிய முன்னறிவிப்பு ⭐ ✍உலக மக்கள் அனைவருக்காகவும் இறுதி தூதராய் வரப்போகின்ற முஹம்மது நபியை குறித்து முந்தைய வேதங்களில் அல்லாஹ் சொல்லப்பட்டுள்ளதாக குர்ஆனில் அல்லாஹ் சொல்கின்றான். ➡️எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். (அல்குர்ஆன் 7:157) ✍முந்தைய வேதமான பைபிளில் இயேசுவும் முஹம்மது நபியின் வருகையை பற்றி முன்னறிவிப்பு செய்துள்ளார். 👉நான் ...

லா'ஒரெல்-யுனெஸ்கோ விஞ்ஞான மகளிர் விருதுகளை தட்டி சென்ற முஸ்லீம் பெண்கள்

படம்
லா'ஒரெல்-யுனெஸ்கோ விஞ்ஞான மகளிர் விருதுகளை தட்டி சென்ற முஸ்லீம் பெண்கள் ✍மர்வா பலஹா, நூஹ் முஸ்தபா மற்றும் அமீரா அல்-யாதீபி என்கிற மூன்று எகிப்திய முஸ்லீம் பெண் விஞ்ஞானிகளும் 2018ஆம் ஆண்டிற்கான லா'ஒரெல்-யுனெஸ்கோ விஞ்ஞான மகளிர் விருதுகளை தட்டி சென்றனர். ✍இந்தத் துறையில் தங்கள் சாதனைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளை சார்ந்த மற்ற  பெண்களும் கலந்து கொண்டனர். ✍பெண் விஞ்ஞானிகளுக்காக 19 ஆண்டுகளுக்கு முன்னர் எல்'ஓரெல்-யுனெஸ்கோ தொடங்கப்பட்டது. இது இளம் பெண்களை விஞ்ஞான துறையில் நுழைய ஊக்கமளிக்கவும் மற்றும் பெண் ஆராய்ச்சியாளர்களை அங்கீகரிக்கவும் இது ஆரம்பிக்கப்பட்டது. ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍ #மர்வா_பலாஹா  ஒரு எகிப்திய மருந்தாளர் மற்றும் வேதியியலாளர். புற்றுநோய் செல்களை அழிக்கும் புதிய செல்களை வடிவமைத்தல் மற்றும் கட்டமைக்கக்கூடியவர். இந்த செல்கள் நுரையீரல் புற்றுநோய்க்கு மாற்று மருந்தாக பயன்படுகின்றது.  ✍அந்த செல்கள் பரிசோதிக்கப்பட்டு ஏற்கனவே உள்ள புற்றுநோய் சிகிச்சையுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. ✍நுரையீரல் புற்றுநோய்களின் சிகிச்சையில் உயிரணுக்களின் வடிவத்தையும் அவற்...

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்

படம்
⭐⭐ அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் ⭐⭐ 💎"நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு 'பஃலு' (எனும் சிலையை) வணங்குகிறீர்களா? (அல்குர்ஆன் 37:125) ✍படைப்பாளர்களில் எல்லாம் மிகச்சிறந்த படைப்பாளன் என்று குர்ஆன் ஒரு சில இடங்களில் சொல்வதை தவறாக புரிந்து கொண்டு கிறிஸ்தவர்கள் விஷம பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். அவர்களுக்கு விளக்கம் தரும் பதிவே இது. ✍அரபு மொழியில் "காலிக்" என்ற சொல் படைத்தல் மற்றும் உருவாக்குதல்("சனி") என இரண்டையும்  குறிக்கும். எனவே எவர் எதைச் செய்தாலும், எதை உற்பத்தி செய்தாலும் அவர் அரபியில் "காலிக்" என்றே அழைக்கப்படுகின்றார். ✍இரண்டு வகையான படைப்புகள் உண்டு. ➡️ஓன்று இல்லாமையில் இருந்து படைப்பது. ➡️மற்றொன்று இருக்கின்ற பொருள்களில் இருந்து படைப்பது அதாவது உருவாக்கம். ✍படைப்பு மற்றும் உருவாக்கம் என இரண்டையும் குறிக்க அரபியில் காலிக் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ✍மனிதர்களுக்கு பொருள்களை கொண்டு மற்றொரு பொருளை உருவாக்கும் அதிகாரத்தை அல்லாஹ்  தந்துள்ளான். அதனால் தான் இங்கு படைப்பாளர்களில் எல்லாம் மிகச்சி...