எகோ எமி(நான்) என்பது கர்த்தரின் நாமமா?

⭐⭐எகோ எமி(நான்) என்பது கர்த்தரின் நாமமா?⭐⭐




➡️அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
(யோவான் 8:58)

✍யோவான் 8;58இல் இயேசு எகோ எமி என்ற வார்த்தையை பயன்படுத்தியபோது, அவர் ​​கர்த்தருடைய பெயரை பயன்படுத்துவதாக யூதர்கள் அறிந்திருந்தனர் என்று திரித்துவத்தை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். எனினும்
இந்த கூற்று பல காரணங்களுக்காக அபத்தமானது.

✍எகோ எமி என்பது கிரேக்கத்தில் கர்த்தருடைய நாமங்களில் ஒன்று கிறிஸ்தவர்கள் வாதிடுகின்றனர். இது ஒரு முட்டாள்தனமான வாதம். எந்த காலத்திலும் யூதர்கள் நான்(எகோ எமி) என்ற சொல்லை கர்த்தருடைய நாமங்களில் ஒன்று என்று நம்பவில்லை. பைபிளில் பல இடங்களில் நான்(எகோ எமி) என்ற சொல் பலராலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான்(எகோ எமி) என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் இயேசுவை இறைவன் என்று சொல்வதாக இருந்தால் பைபிளில் பலரையும் அவ்வாறு இறைவன் என்று சொல்ல வேண்டி வரும்.

💎லூக்கா 1:19 இல்  காபிரியேல் தூதரும் நான்(எகோ எமி)  என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்.

➡️தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான்(எகோ எமி)  தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
(லூக்கா 1:19)

💎யோவான் 1:20இல் நான் கிறிஸ்து அல்ல என்று சொல்ல எகோ எமி என்ற சொல்லை யோவான் பயன்படுத்தி இருப்பார்.

💎மத்தேயு 8:9இல் நூற்றுக்கு அதிபதியும் நான்(எகோ எமி) என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார்.

✍புதிய ஏற்பாட்டில் மட்டுமல்ல பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிப்பெயர்ப்பிலும் பலரும் எகோ எமி(நான்) என்ற சொல்ல பயன்படுத்தி உள்ளதை பார்க்க முடியும். ஆனால் அதை இறைவனின் நாமம் என்று யூதர்கள் தவறாக புரிந்து கொள்ளவில்லை.

உதாரணத்திற்கு
💎2 சாமுவேல் 2:20இல் ஆசகேல் நான்(எகோ எமி) என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். 

✍நான்(எகோ எமி) என்ற சொல்லை  பயன்படுத்தி இருப்பதால் இயேசுவை இறைவன் என்று சொல்வதாக இருந்தால் பைபிளில் பலரையும் இறைவன் என்று சொல்ல வேண்டி வரும்.

✍எகோ எமி என்ற சொல் கர்த்தர் நாமம் தானா என்று பார்த்தால் நிச்சயமாக கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

➡️அதற்குத் தேவன்: "இருக்கிறவராக இருக்கிறேன்(எகோ எமி ஹோ ஆன்)" என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
(யாத்திராகமம் 3:14)

✍யாத்திராகமத்தில் 3:14 இல் கர்த்தர் வெளிப்படுத்திய நாமம் "எகோ எமி ஹோ ஆன்" அதாவது "இருக்கிறவராக இருக்கிறேன்" என்பதாகும். ஆனால் கிறிஸ்தவர்கள் அந்த நாமத்தில் சொல்லப்பட்ட பாதி பெயரை வைத்து கொண்டு இயேசுவை இறைவன் என்று வாதிடுவது கிறிஸ்தவர்களின் அறியாமையை காட்டுகிறது. இதற்கு மேலாவது அப்பாவி கிறிஸ்தவர்கள், அந்தி கிறிஸ்தவர்களின் சதியை விட்டும் தங்களை பாதுகாத்து கொள்ளட்டும். எல்லா தீர்க்கதரிசிகளும் வணங்கிய அந்த ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்கி ஈருலக வெற்றியை அடையட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்