முஹம்மது நபி சாத்தானினிடமிருந்து வஹீயை பெற்றார்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒலியெழுப்பும் மணி, ஷைத்தானின் இசைக் கருவியாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 4295. ஒலி எழுப்பும் மணியை ஷைத்தானின் இசைக் கருவி என்று மேலே இருக்கின்ற ஹதீஸ் கூறுகிறது. இங்கு சொல்லப்பட்டுள்ள ஒலி எழுப்புகின்ற மணி என்பது அல்லாஹ்வின் நினைவிலிருந்து மக்களின் இதயங்களை திசை திருப்பக் கூடிய இசைக்கருவியாகும் எழுப்பப்படும் ஒலி ஆகும். மணியோசை சாத்தானின் கருவி என்று முஹம்மது நபி சொல்லி இருப்பதால், மணி ஒலிப்பது போன்ற இறை வெளிப்பாடுகள் இறைவனிடமிருந்து வந்தவை அல்ல, மாறாக அவை சாத்தானிடமிருந்து வந்தவை என்பது கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு கேட்ட மணி ஒலிப்பதைப் போன்ற சப்தம் என்பது , ஒரு கருவியால் எழுப்பப்படுகின்ற சப்தம் அல்ல. மாறாக அது இறைவனிடமிருந்து வருகின்ற ஆன்மீக செய்தியாகும். ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?' எனக் கேட்டதற்கு, 'ச...