முஹம்மது நபி சாத்தானினிடமிருந்து வஹீயை பெற்றார்களா?

 முஹம்மது நபி சாத்தானினிடமிருந்து வஹீயை பெற்றார்களா?




அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒலியெழுப்பும் மணி, ஷைத்தானின் இசைக் கருவியாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 4295. 



ஒலி எழுப்பும் மணியை ஷைத்தானின் இசைக் கருவி என்று மேலே இருக்கின்ற ஹதீஸ் கூறுகிறது. இங்கு சொல்லப்பட்டுள்ள ஒலி எழுப்புகின்ற மணி என்பது அல்லாஹ்வின் நினைவிலிருந்து மக்களின் இதயங்களை திசை திருப்பக் கூடிய இசைக்கருவியாகும் எழுப்பப்படும் ஒலி ஆகும். மணியோசை சாத்தானின் கருவி என்று முஹம்மது நபி சொல்லி இருப்பதால், மணி ஒலிப்பது போன்ற இறை வெளிப்பாடுகள் இறைவனிடமிருந்து வந்தவை அல்ல, மாறாக அவை சாத்தானிடமிருந்து வந்தவை என்பது கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டாகும்.



நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு கேட்ட மணி ஒலிப்பதைப் போன்ற சப்தம் என்பது , ஒரு கருவியால் எழுப்பப்படுகின்ற சப்தம் அல்ல. மாறாக அது இறைவனிடமிருந்து வருகின்ற ஆன்மீக செய்தியாகும். 


ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?' எனக் கேட்டதற்கு, 'சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்' என ஆயிஷா(ரலி) குறிப்பிட்டார். மேலும், 

'கடும் குளிரான நாள்களில் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி(ஸல்) அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்' என ஆயிஷா(ரலி) கூறினார்.

ஸஹீஹ் புகாரி : 2. 





நபி அவர்கள் பெற்ற இறைவெளிப்பாடு என்பது மணி ஓசை அல்ல மாறாக மணியை போன்ற ஒரு ஒலி என்றே நபி குறிப்பிடுகின்றார். இங்கு நபியவர்கள் சொல்லுகின்ற மணியை போன்ற ஒலி என்பது மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு சொல்லப்பட்ட ஒரு உதாரண வார்த்தை மட்டுமே.



ஒரு கருவியால் எழுப்பப்படும் மணியோசைக்கும், பிறர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட மணியை போன்ற ஒலியும் வேறு வேறானது.  இந்த அடிப்படைக்கூட புரியாமல் கிறிஸ்தவர்கள் வஹீயை தவறாக பேசுவது அவர்களின் அறியாமை ஆகும். வஹீயீன் மீது இத்தகைய குற்றச்சாட்டு வைக்கும் கிறிஸ்தவர்கள் உண்மையில் தங்கள் வேதத்தை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கிறார்கள்.



பிசாசுகளை துரத்திய இயேசுவை யூதர்கள் பிசாசுகளின் தலைவன் பிசாசுகளை துரத்துகிறான் என்று சொன்ன போது, சாத்தான் தனக்குத்தானே விரோதமாக செயல்பட்டால்தான் என்று கூறுகிறார். 




தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத்தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?

(மத்தேயு 12:25-26)



குர்ஆனை ஓதுவதற்கு முன்பு விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுதல்:



மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக.

(அல்குர்ஆன் 16:98)


குர்ஆனை ஓதுவதற்கு முன்பு விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடச் சொல்கிறது அல்குர்ஆன். அப்படி இருக்கும் போது எவ்வாறு முஹம்மது நபியவர்கள் சாத்தானினிடமிருந்து வஹீயை பெற்றிருக்க முடியும்? ஏனெனில் சாத்தான் தனக்குத்தானே விரோதமாக செயல்படமாட்டான் என்று இயேசு போதித்து இருக்கிறார்.




சாத்தான் தனக்குத்தானே விரோதமாக இருக்க மாட்டான் என்று இயேசு சொல்லிய பிறகும் கூட முஹம்மது நபி சாத்தானிடம் இருந்துதான் வஹீயை பெற்றார்கள் என்று கிறிஸ்தவர்கள் எவரேனும் கூறினால், அது இயேசுவின் போதனைக்கு முரணான அந்தி கிறிஸ்துவ போதனையாகும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்