கிறிஸ்தவர்களால் மூன்று நூற்றாண்டுகள் வரை அறியப்படாத திரித்துவம்....

✝️ கிறிஸ்தவர்களால் மூன்று நூற்றாண்டுகள் வரை அறியப்படாத திரித்துவம்.... ✍️இன்றைய கிறிஸ்தவர்களால் நம்பப்படும் திரித்துவம் என்பது ஆரம்பகால கிறிஸ்தவர்களால் அறியப்படாத ஒன்றாகும். முதல் மூன்று நூற்றாண்டுகள் வரை கிறிஸ்தவ சமூகத்தில் திரித்துவம் இல்லாமல்தான் இருந்தது. இதை ஆரம்பகால சர்ச் பிதாக்களின் மடல்களையும், அவர்களது கருத்துக்களையும் ஆய்வு செய்யும் பொழுது திரித்துவம் என்பதே ஆரம்பகால கிறிஸ்தவ சமூகத்தில் இல்லை என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. இயேசுவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவத்தை இஸ்ரவேல் அல்லாத மக்கள் ஏற்றுக் கொண்ட பொழுது தங்களுடன் தங்கள் மூடநம்பிக்கைகளையும் கிறிஸ்தவ மதத்திற்கு சேர்த்து எடுத்து வந்தனர். இது போன்ற மூட நம்பிக்கைகளை இன்றும் காணமுடியும். எவ்வாறு இந்து சமூகத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களால் எவ்வாறு இந்து மத நம்பிக்கைகள் கிறிஸ்தவ சமூகத்திலும் புகுத்தப்பட்டுள்ளதோ அதே போன்ற நிலைமைதான் ஆரம்பகாலத்தில் கிறிஸ்தவத்தில் திரித்துவம் புகுவதற்கு இஸ்ரவேல் அல்லாத சிலை வணங்கிகளின் மதம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. திரித்துவம் என்பது இயேசு உ...