முஹம்மது நபியின் மிஃராஜ் பயணம் குறித்த ஹதீஸ்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறதா?

 முஹம்மது நபியின் மிஃராஜ் பயணம் குறித்த ஹதீஸ்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறதா?





✍️ நபி (عليه السلام) அவர்களின் சொற்கள், செயல்கள் மற்றும் ஒப்புதல் ஆகியவைகள் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களில் குர்ஆனுக்கு அடுத்த இடத்தில் ஹதிஸ்களாக உள்ளன. அல்லாஹ்வின் தூதருக்கு(ஸல்) வெளிப்படுத்தப்பட்ட தெய்வீக வெளிப்பாட்டின் மற்றொரு வடிவமே ஹதிஸ்கள்.


✍️ சுன்னாவின் முக்கியத்துவம் முதலில் அது அல்லாஹ்வின் புத்தகத்தை விளக்குகிறது. பின்னர் அது குர்ஆனை சொல்லப்படாத மற்ற சட்டங்களையும் பேசுகிறது.


✍️ குர்ஆன் பற்றிய விளக்கவுரையில் ஹதிஸ்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதனை குறித்து அல்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்): 


🕋 தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.

(அல்குர்ஆன் 16:44)


👉 அல்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள தொழுகை நோன்பு ஹஜ் சமூகம் சார்ந்த பல குர்ஆன் வசனங்களுக்கும் ஹதிஸ்கள் விளக்கவுரையாக அமைந்துள்ளது.


👉 இறை வெளிப்பாட்டின் சுன்னா இரண்டாவது பகுதி என்பதால், சேர்த்தல் அல்லது கழித்தல் ஆகியவற்றிலிருந்து அல்லாஹ் அதைப் பாதுகாக்கிறான். இதனை குறித்து அல்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்): 


🕋 நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

Al-Hijr 15:9


✍️ அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள் அனைத்தும் வஹீ (வெளிப்பாடு) என்று கூறுவதால் அதன் நம்பகத்தன்மை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சுன்னா இறை வெளிப்பாட்டின் ஒரு பகுதி என்றாலும், அதற்கும் குர்ஆனுக்கும் ஒரு வித்தியாசம்  உள்ளது என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம். அதாவது குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாகும். இது நபி (ஸல்) அவர்களிடம் சொற்களஞ்சியமாக வெளிப்படுத்தப்பட்டது. அதேசமயம் சுன்னா அல்லாஹ்வின் சொற்களாக இல்லை, மாறாக அதன் கருத்தாக்கம் இறை வெளிப்பாடாக இருக்கிறது. எனவே இது நமக்கு சொல்லுக்கு சொல் ஒன்று போன்று இருக்க வேண்டிய அவசியமில்லை. சொற்கள் வேறுப்பட்டாலும்அதன் பொருள் பாதுக்காக்கப்பட்டதாக நமக்கு வருகிறது.


✍️ இந்த வேறுபாட்டை நாம் புரிந்துகொண்டால், சுன்னாவை புரிந்து கொள்வதற்கான புள்ளி என்பது நபி (ஸல்) அவர்கள் கூறிய அதே சொற்கள் அல்லாமல், அதன் அர்த்தங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அல்லாஹ் குர்ஆனின் சொற்களை  முழுமையாகப் பாதுகாக்கிறான். ஆனால் சுன்னாவில் பொதுவான அர்த்தங்களை அல்லாஹ் பாதுகாக்கிறான்.  


✍️ ஆரம்ப நூற்றாண்டுகளில் இந்த உம்மாவின் அறிஞர்கள் ஷரீஅத்தையும் சுன்னாவையும் பாதுகாக்க நபி (ஸல்) அவர்களின் சொற்களை, அவர்கள் கூறியது போலவே சேகரித்து, அதில் உண்மை மற்றும் பொய்யான ஹதிஸ்களுக்கு இடையில் வேறுபடுத்தி காட்டியுள்ளனர்.  அதன் ஆதார தன்மையை நிறுவியுள்ளனர்.


✍️ ஆகவே ஹதிஸ்களை சொல்பவர்களில் ஒருவர் எதேனும் ஒரு இடத்தில் தவறு செய்திருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில்அவர் தனது ஹதிஸை மற்றவர்கள் அறிவிப்பில் இருந்து வேறுப்படுத்தி சொல்லியிருப்பார்.  ஹதிஸ்களை ஒன்றுக்கொன்று ஒப்பிடு செய்வவதன் மூலம் தவறைக் கண்டறிய முடியும்.  இதைத்தான் அறிஞர்கள் சுன்னா மற்றும் தக்ரீஜ் புத்தகங்களில் செய்தார்கள். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்களில் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் ஆக இருந்த போதிலும் நம்பகமான அறிவிப்பாளர்கள் மூலமாக சில நேரங்களில் சில தவறுகள் எழும்பி இருக்கக்கூடும்.


✍️ ஸஹீஹான ஹதீஸ்கள் சில நேரங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருக்கும்பொழுது, அவ்வாறு முரண்பட்டு இருக்கும் ஹதீஸ்களில் எது அதிக நம்பகத்தன்மை வாய்ந்த அறிவிப்பாளர் வரிசையில் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது அல்லது எந்த ஹதீஸ் அதிகமான அறிவிப்பாளர் வரிசையில் வழியாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதை ஆய்வு செய்வதன் மூலம் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யப்படுகிறது. ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருக்கும் ஸஹீஹான ஹதீஸ்களில் எது சரியான ஹதீஸ் மற்றும் எது தவறான ஹதீஸ் என்பதை அடையாளம் காண பயன்படுத்தப்படும் வழிமுறைகளில் மேற்கண்ட வழிமுறையும் ஒன்றாகும். 


👉 கிறிஸ்தவர்கள் முரண்பாடாக இருக்கும் ஹதீஸ்கள் என்று குறிப்பிடுபவை ஸஹிஹ் புகாரி(3207, 7517, 3887)  ஸஹீஹ் முஸ்லிம்(259) நஸயீ(450). இதில் முஹம்மது நபியின் மிஃராஜ் பயணத்தின் போது எந்தெந்த தீர்க்கதரிசிகள் எந்தெந்த வானத்தில் இருந்தார்கள் என்பதில் வேறுபாடு இருப்பதாக கிறிஸ்தவர்கள் அடையாளப்படுத்தி காட்டுகின்றனர். கிறிஸ்தவர்கள் குறிப்பிடும் ஐந்து ஹதீஸ்களில் நன்றாக பார்த்தால் இரண்டு ஹதீஸ்கள் மட்டுமே மற்ற ஹதீஸ்களோடு முரண்பட்டு நிற்பதை புரிந்து கொள்ள முடியும். அதில் அவர்கள் குறிப்பிடும் ஹதீஸ்களில் நஸயீயில்(450) சொல்லப்பட்டுள்ள ஹதீஸ் என்பது ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். அதனால் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் ஹஸன் ஹதீஸ் என்பது ஸஹீஹான ஹதீஸ்களுக்கு அடுத்த துணை ஆதாரமே ஆகும். புகாரியில் சொல்லப்பட்டுள்ள ஒரு ஹதீஸ்(7517) அதே புகாரி(3207, 3887) மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில்(259) சொல்லப்பட்டுள்ள  ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரண்பாடாக இருக்கிறது. அதாவது ஸஹீஹ் புகாரியில் சொல்லப்பட்டுள்ள ஒரு ஹதீஸ்(7517) நபி மூஸா, நபி இப்ராஹிம், நபி மூஸா எந்த வானத்தில் இருந்தனர் என்பதில் மற்ற ஆதாரபூர்வமான ஹதீஸ்களுடன் முரண்பட்டு நிற்கிறது. இவ்வாறு முரண்பட்டு நிற்கும் இந்த ஹதீஸ்(7517),  ஸஹீஹ் தரத்தில் அறியப்பட்டு இருந்தாலும் இது மற்ற அறிவிப்பாளர்கள் வரிசையில் மூலமாக வந்துள்ள ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரண்பட்டு இருப்பதால், மற்ற அறிவிப்பாளர்கள் வரிசையில் மூலமாக வந்துள்ள முரண்பாடு இல்லாத ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதுவே ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும். அதாவது இந்த ஒரே ஒரு ஹதீஸை(7517) தவிர்த்து மற்ற ஸஹீஹான ஹதீஸ்கள் அனைத்தும் எந்தெந்த தீர்க்கதரிசிகள் எந்தெந்த வானத்தில் இருந்தார்கள் என்பதில் உடன்பட்டு இருக்கிறது. அதில் எந்த விதமான முரண்பாடும் இல்லை. இதன்மூலம் இத்ரீஸ் (அலை) அவர்கள் எந்த வானத்தில் இருந்தார் என்ற கிறிஸ்தவர்களின் கேள்விக்கான பதிலும் கிடைத்துவிடுகிறது. அதாவது இத்ரிஸ்(عليه السلام) நான்காவது சொர்க்கத்தில் இருந்தார் என்பதையே மற்ற அறிவிப்பாளர்கள் வரிசையில் மூலமாக அறியப்பட்ட ஸஹீஹான ஹதிஸ்கள் உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக கதாதா (ஸஹிஹூல் புகாரி 3207) மற்றும் தபித் (ஸஹிஹ் முஸ்லிம் 162 அ) வழியாக அறியப்பட்ட ஹதிஸ்கள் ஒன்றுக்கொன்று உடன்படுகின்றன. 


✍️ அந்த அடிப்படையில் தீர்க்கதரிசி இத்ரிஸ்(عليه السلام)  அவர்கள் முஹம்மது நபியின் மிஃராஜ் பயணத்தின் போது நான்காம் வானத்தில் இருந்தார் என்பதே சரியான கருத்தாகும்.


✝️ இவ்வாறு ஸஹீஹான ஹதீஸ்களுக்கு இடையே முரண்பாடு இருக்கும்பொழுது, அதிக நம்பகத்தன்மை வாய்ந்த அறிவிப்பாளர்கள் வழியாக அல்லது அதிகமான அறிவிப்பாளர்கள் வழியாக வந்துள்ள ஸஹீஹான ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்துக் கொள்வதில் கிறிஸ்தவர்கள் ஒருபோதும் குறைகாண முடியாது. ஏனெனில் அவர்கள் இறை வேதம் என்று நம்புகின்ற பைபிளே இதேபோன்று அடிப்படையில்தான் ஒவ்வொரு பதிப்பாக வெளியிடப்படுகிறது அல்லது மொழியாக்கம் செய்யப்படுகிறது. ஏனெனில் ஆராயிரத்திற்கும் மேற்பட்ட பைபில் நகல் கையெழுத்து பிரதிகள் இருந்தாலும் கூட எந்த ஒரு இரண்டு நகல் கையெழுத்து பிரதியும் பைபிளை பொருத்தவரையில் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாகத்தான் பைபிளில் இருக்கின்ற மொத்த வார்த்தைகளைக் காட்டிலும் பைபிளின் நகல் கையெழுத்து பிரதிகளில் இருக்கின்ற முரண்பாடுகள் ஏராளம் என்று பைபிள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த அளவிற்கு பைபிள் கையெழுத்துப் பிரதிகளில் முரண்பாடுகள் இருக்கின்றன. கிறிஸ்தவர்கள் இன்று வைத்திருக்கும் அனைத்து பைபிளுக்கும் இந்த நகல் கையெழுத்து பிரதிகள் தான் மூலாதாரம் ஆகும். ஏனெனில் பைபிளின் மூலப்பிரதி என்பது இல்லாத ஒன்றாகும். அதன் காரணமாக கிறிஸ்தவர்கள் மூலப்பிரதியில் இருந்து எடுக்கப்பட்ட தவறுகள் நிறைந்த, பிழைகள் நிறைந்த, முரண்பாடுகள் நிறைந்த நகல் கையெழுத்து பிரதிகளை சார்ந்து இருக்கின்றனர். 


✝️ இந்த நகல் கையெழுத்துப் பிரதிகளில் நீக்கப்பட்ட புத்தகங்களும், வசனங்களும் மற்றும் சேர்க்கப்பட்ட புத்தகங்களும், வசனங்களும் ஏராளம் இருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். இவ்வாறு முரண்பாடுகள் நிறைந்த நகல் கையெழுத்துப் பிரதிகளில் எது உண்மையானது எது பிழையானது என்பதை ஆய்வு செய்வதற்கு பைபில் அறிஞர்கள் பயன்படுத்தும் வழிமுறைகளில் ஒன்றுதான் உரை விமர்சனம்(Textual criticism) என்பது ஆகும். இந்த உரை விமர்சனத்தை பயன்படுத்தி ஒன்றுக்கொன்று முரண்பாடு இருக்கும் பைபில் நகல் கையெழுத்துப் பிரதிகளில் எது சரியானது எது பிழையானது என்பதை அறிந்து கொள்கின்றனர். அதாவது பைபிள் அறிஞர்களின் கூற்றுப்படி அசல் மூலப் பிரதியில் இருந்து நகல் எடுக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகளில் தவறுகள் என்பது இயற்கையான ஒன்று. அந்த தவறுகளை பல நகல் கையெழுத்துப் பிரதிகளுடன் ஒப்பீடு செய்யும் பொழுது சரியானதை பெற முடியும் என்பது பைபிள் ஆய்வாளர்களின் கூற்றாகும். பைபிளின் நம்பிக்கை தரம் என்பது முஸ்லிம்கள் நம்புகின்ற ஹதீஸ்களின் தரத்தை காட்டிலும் மிகக் கீழான ஒன்றாகும் இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும். இப்படிப்பட்ட நிலையில் கிறிஸ்தவர்கள் ஸஹீஹான ஹதீஸ்களுக்கு இடையே ஏற்படுகின்ற முரண்பாட்டை ஒருபோதும் குறை சொல்லவே முடியாது ஏனெனில் ஹதீஸ்கள் என்பது அல்லாஹ்வின் வார்த்தை கிடையாது. மாறாக அந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள கருத்தாக்கம் என்பது தான் அல்லாஹ்வின் வஹீயாக அல்லது வெளிப்பாடாக இருக்கிறது. அல்லாஹ்வின் வெளிப்பாடு என்பது ஹதீஸ்களில் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அதனால் ஹதிஸீல் உள்ள சில வார்த்தைகளுக்கு இடையே முரண்பாடு இருப்பதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. ஏனெனில் ஹதீஸ்கள் அல்லாஹ்வின் வார்த்தை கிடையாது. ஆனால் பைபிள் கர்த்தரின் வார்த்தை என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. ஆனாலும் பைபிள் கையெழுத்துப் பிரதிகளுக்கு இடையே ஏகப்பட்ட முரண்பாடுகளும் பிழைகளும் கூட்டல் கழித்தலும் நிறைய இருக்கிறது. இவர்கள் ஹதீஸை குறை காண்பதாக இருந்தால் நியாயப்படி முதலில் அவர்கள் பைபிளை குறை கண்டு அதைத் தூக்கி எறிய வேண்டும். ஏனெனில் கிறிஸ்தவர்கள் இறைவேதம் என்று நம்புகின்ற பைபிளின் தரமோ ஹதீஸின் தரத்தை காட்டிலும் கீழான ஒன்றாகும். இதன் காரணமாகத் தான் ஒவ்வொரு பதிப்பகம் வெளியிடும் பைபிள்கள் மற்ற பதிப்பகத்தார் வெளியிடும் பைபிளோடு முரண்படும். சில வசனங்கள் நீக்கப்பட்டும் சில வசனங்கள் சேர்க்கப்படும் ஒவ்வொரு பதிப்பகத்திலும் இருக்கிறது. ஏனெனில் ஒரு பைபிள் பதிப்பக ஆய்வாளரின் பார்வையில் ஒரு வசனம் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும் பட்சத்தில் அவர் அந்த வசனத்தை தனது பைபிள் மொழிபெயர்ப்பில் சேர்த்து வெளியிடுவார். ஆனால் மற்ற பைபிள் பதிப்பகத்தாரின் ஆய்வாளர் பார்வையில் ஒரு வசனம் நம்பிக்கையற்றதாக இருக்கும் பட்சத்தில் அந்த வசனத்தை தனது பதிப்பக பைபிள் மொழிபெயர்ப்பில் இருந்து நீக்கி விடுவார். இதன் காரணமாகத்தான் பல பைபிள் பதிப்பகங்களும் பைபிளில் பல வசனங்களை சேர்த்து நீக்கியும் இன்றுவரை வந்திருக்கின்றன. இனியும் அது தொடரத்தான் செய்யும்.


உதாரணத்திற்கு:


👉 பின்வரும் வசனங்கள் இட்டுக்கட்டப்பட்ட வசனங்களாக உரை விமர்சனம் செய்யும் பைபிள் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது. 


👉 மாற்கு சுவிசேஷத்தின் நீண்ட முடிவு (மாற்கு 16: 9-20), (லூக்கா 22: 43-44), (யோவான் 7: 53–8: 11), கமா ஜோஹன்னியம் (1 யோவான் 5: 7-8) போன்றவையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்