கிறிஸ்தவர்களால் மூன்று நூற்றாண்டுகள் வரை அறியப்படாத திரித்துவம்....
✝️ கிறிஸ்தவர்களால் மூன்று நூற்றாண்டுகள் வரை அறியப்படாத திரித்துவம்....
✍️இன்றைய கிறிஸ்தவர்களால் நம்பப்படும் திரித்துவம் என்பது ஆரம்பகால கிறிஸ்தவர்களால் அறியப்படாத ஒன்றாகும். முதல் மூன்று நூற்றாண்டுகள் வரை கிறிஸ்தவ சமூகத்தில் திரித்துவம் இல்லாமல்தான் இருந்தது. இதை ஆரம்பகால சர்ச் பிதாக்களின் மடல்களையும், அவர்களது கருத்துக்களையும் ஆய்வு செய்யும் பொழுது திரித்துவம் என்பதே ஆரம்பகால கிறிஸ்தவ சமூகத்தில் இல்லை என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. இயேசுவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவத்தை இஸ்ரவேல் அல்லாத மக்கள் ஏற்றுக் கொண்ட பொழுது தங்களுடன் தங்கள் மூடநம்பிக்கைகளையும் கிறிஸ்தவ மதத்திற்கு சேர்த்து எடுத்து வந்தனர். இது போன்ற மூட நம்பிக்கைகளை இன்றும் காணமுடியும். எவ்வாறு இந்து சமூகத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களால் எவ்வாறு இந்து மத நம்பிக்கைகள் கிறிஸ்தவ சமூகத்திலும் புகுத்தப்பட்டுள்ளதோ அதே போன்ற நிலைமைதான் ஆரம்பகாலத்தில் கிறிஸ்தவத்தில் திரித்துவம் புகுவதற்கு இஸ்ரவேல் அல்லாத சிலை வணங்கிகளின் மதம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. திரித்துவம் என்பது இயேசு உட்பட எந்த ஒரு தீர்க்கத்தரிசியாலும் போதிக்கப்படாத ஒன்று ஆகும். இயேசுவின் சீடர்களும் திரித்துவம் என்ற நம்பிக்கையை அறியாதவர்களாகவே இருந்துள்ளனர். கிறிஸ்தவர்கள் புனிதர் என்று போற்றும் பவுல் கூட திரித்துவத்தை அறியாத நபராகவே இருந்துள்ளார். அவரும் திரித்துவத்தை போதித்தார் என்பதற்கு ஒரு வரலாற்று ஆதாரமும் கிடையாது. அதற்கான வசனங்களும் பைபிளில் இல்லை. அப்படி இருக்கும் பொழுது கிறிஸ்தவம் எவ்வாறு திரித்துவத்தை தனக்குள் உள்வாங்கி கொண்டது என்று ஆய்வு செய்தால் அதற்கான பதில் கிறிஸ்தவர்களின் வரலாற்றில் மிகத் தெளிவாக உள்ளது. அதாவது ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளுக்கு பிறகு திரித்துவம் என்பது கிறிஸ்தவ சமூகத்தினால் அங்கீகரிக்கப்படுகிறது. அதற்கு முன்புவரை கிறிஸ்துவத்தை ஏற்ற சிலை வணங்கிகள் சிலை வணக்கத்தின் மூடநம்பிக்கையை கிறிஸ்தவ சமூகத்தில் மெல்லமெல்ல திணித்ததன் விளைவு அதன் இறுதி வடிவமாக திரித்துவம் கிறிஸ்தவ சமூகத்தில் பெரும்பான்மை அடைந்தது. அதுவும் பல்வேறு கலந்துரையாடல்கள் எதிர்ப்புகள் அடக்குமுறைகள் ஆகியவற்றிற்கு பிறகு திரித்துவத்தை கிறிஸ்தவ சமூகம் உள்வாங்குயது. திரித்துவத்திற்கு எதிரான யூத கிறிஸ்தவர்கள் சிலை வணக்க திரித்துவ நம்பிக்கையாளர்களால் நசுக்கப்பட்டு, அளிக்கப்பட்டு அதன் பிறகே திரித்துவம் கிறிஸ்தவ சமூகத்தில் பெரும்பான்மையை அடைந்தது.
✝️ ST. ORIGEN (184-253 CE)
புனித ஓரிஜென் ஒரு சர்ச் பிதா மற்றும் மிக முக்கியமான கிறிஸ்தவ இறையியலாளர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். அவரது போதனைகள் கிழக்கில் குறிப்பாக செல்வாக்குமிக்கவையாக இருக்கின்றது.
✍️ இன்று இருக்கும் கிறிஸ்தவர்களிடம் இயேசு சர்வ வல்லமையுள்ள தேவனா என்று கேள்வியை எழுப்பினால் இயேசு சர்வ வல்லமையுள்ள தேவனே என்று பதிலளிப்பார்கள். ஆனால் ஆரம்பகால சர்ச் பிதாக்களும் இவ்வாறு பதில் அளிக்க வில்லை. ஆரம்பகால சர்ச் பிதாக்களின் இயேசுவை பற்றிய பார்வை என்பது இன்றைய கிறிஸ்தவர்களிடம் இருந்து வேறுபட்டதாக இருந்தது. அதாவது இயேசுவை சர்வவல்லமையுள்ள தேவனாக பார்க்காமல் ஒரு துணை கடவுளாகவே இயேசுவை ஆரம்பகால சர்ச் பிதாக்கள் பார்த்தனர். ரோம சிலை வணக்கத்தில் இருந்து கிறிஸ்துவத்தை ஏற்ற மக்கள் இயேசுவை சர்வவல்லமையுள்ள தேவனாக பார்ப்பதை ஆரம்பகால சர்ச் பிதாக்கள் கண்டிக்கவும் செய்தனர்.
👉 "எங்களுடன் முழு உடன்பாடு இல்லாத, மற்றும் இரட்சகர் மிக உயர்ந்த கடவுள் என்று கவனக்குறைவாக சொல்பவர்கள் விசுவாசிகளில் சிலராக இருக்கக்கூடும்; இருப்பினும், நாங்கள் அவர்களை பற்றிப் பிடிக்காமல், மாறாக, என்னை அனுப்பிய பிதா என்னைவிட பெரியவர் என்று அவர்(இயேசு) கூறும்போது அவரையே நாங்கள் நம்புகிறோம்.
(Origen in "Contra Celsum, Book VIII, Chapter 15 here: https://www.newadvent.org/fathers/04168.htm )
👉 பிரார்த்தனையை அதன் முழு அர்த்தத்தில் ஏற்று கொள்வதாக இருந்தால், கிறிஸ்து உட்பட எவரிடமும் பிரார்த்தனை செய்யாமல், நாம் ஏற்கனவே நிறுவியுள்ளபடி, நம்முடைய இரட்சகர், தான் பிரார்தித்தும், நம்மை பிரார்த்திக்க சொன்னதுமான அனைவரின் பிதாவான அந்த ஒரே தேவனையே நாம் பிரார்த்திக்க வேண்டும். எங்களுக்கு பிரார்த்திக்க கற்று கொடும் என்று அவர் கேட்டுக்கொண்ட போது, அவர் தன்னை வணங்க சொன்னாமல், பரமமண்டலத்திலுள்ள எங்கள் பிதாவே என்று பிதாவிடமே பிரார்த்திக்க சொன்னார்.
(Origen, On Prayer, Section X. THE RECIPIENT OF PRAYER IN ITS FOUR MOODS - quoted directly here: http://www.tertullian.org/fathers/origen_on_prayer_02_text.htm)
➖➖➖➖தொடரும்.....
கருத்துகள்
கருத்துரையிடுக