ஹிஜாப் பற்றிய சட்டம் சுதந்திரமான பெண்களையும் அடிமைப் பெண்களையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக தான் அருளப்பட்டதா?
ஹிஜாப் பற்றிய சட்டம் சுதந்திரமான பெண்களையும் அடிமைப் பெண்களையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக தான் அருளப்பட்டதா?
உலகம் முழுவதும் நடக்கும் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இஸ்லாமிய அடையாளங்கள் தடை செய்யப்பட்டு வருகின்றன. இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் மிக முக்கியமான இடத்தை ஹிஜாப் பெறுகிறது. ஒருசில நாடுகளில் பெண்கள் ஹிஜாப் அணிவது தடைசெய்யப்பட்டு வருகிறது. ஹிஜாபுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்வோர் ஆதாரமற்ற ஹதீஸ்களைத் தொகுத்து அதை திரித்து ஹிஜாபுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில் மிக முக்கியமானது ஹிஜாப் என்பது சுதந்திரமான பெண்களையும், அடிமைப் பெண்களையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக கொடுக்கப்பட்ட சட்டம் என்றும், ஆகவே ஹிஜாப் இந்த காலத்திற்கு தேவையற்றது என்றும், அடிமைப் பெண்கள் ஹிஜாப் அணிய இஸ்லாம் தடுத்துள்ளது என்றும் அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர். இந்த அவதூறு பிரச்சாரத்திற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களை ஒவ்வொன்றாக நாம் இனி பார்க்க இருக்கிறோம்.
வாதம் 1: சுதந்திரமான பெண்களையும் அடிமைப் பெண்களையும் வேறுபடுத்தி காட்டுவதற்காகத்தான் ஹிஜாப் சட்டத்தை குர்ஆன் போதிக்கிறதா?
Al-Ahzab 33:59
Tamil - Abdul Hameed Baqavi
நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளுக்கும், உங்களுடைய பெண் மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில்) இறக்கிக் கொள்ளும்படி நீங்கள் கூறுங்கள். அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவ னாகவும் இருக்கின்றான்.
மேற்கண்ட குர்ஆன் வசனத்தை சுட்டிக்காட்டி அடிமைப் பெண்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுவதற்காகவே முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப் உடைய சட்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த குர்ஆன் வசனத்தில் எந்த ஒரு இடத்திலும் அடிமைப் பெண்கள் குறித்து பேசவில்லை. அது மட்டுமில்லாமல் இந்த வசனத்தில் முஸ்லிமான பெண்கள் என்று பொதுவாக தான் சொல்லப்பட்டுள்ளதே தவிர, முஸ்லிமான சுதந்திரமான பெண்கள் என்றும் அடிமை பெண்கள் என்றும் பிரித்து எங்கும் சொல்லப்படவில்லை. இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டுதல் என்பது முஸ்லிமான பெண்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். மேலும் ஹிஜாபுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்வோர் இந்த குர்ஆன் வசனத்தோடு சம்பந்தப்படுத்தும் வேறு சில ஹதீஸ்களையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர். அதை குறித்தும் அடுத்த தலைப்போடு சேர்த்து பார்ப்போம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
வாதம் 2:- அடிமைப் பெண்கள் எனக்கருதி சுதந்திரமான பெண்கள் பாலியல் சீண்டல் செய்யப்படுவதை தவிர்க்க தான் ஹிஜாப் சட்டம் அருளப்பட்டதா?
عبد الرزاق عن معمر عن الحسن قال كن إماء بالمدينة يقال لهن كذا وكذا كن يخرجن فيتعرض لهن السفهاء فيؤذوهن لأنه فكانت المرأة الحرة تخرج فيحسبون أنها أمة فيتعرضون لها ويؤذونها أخبرنا فأمر النبي صلى الله عليه وسلم المؤمنات أن يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن من الإماء أنهن حرائر فلا يؤذين
Al-Hassan al-Basri said: Slave women in Medina used to be told certain things when they went outside. (One night) some foolish people accosted a group of women and bothered (or hurt) them because they thought they were slave women, but they were actually free women. Because of this, the Prophet ordered the believing women to cast their jilbabs upon themselves, so they would be distinguished as free women, and known from the slave women, and not bothered.
அல்-ஹஸன் அல்-பஸ்ரி அறிவிக்கிறார்: மதீனாவில் அடிமைப் பெண்கள் வெளியில் செல்லும்போது சில விஷயங்களைக் கூறுவார்கள். (ஒரு நாள் இரவு) ஒரு பெண்கள் குழு வெளியே சென்ற போது அடிமை பெண்கள் என கருதி அவர்கள் சில மூடர்களால் தொந்தரவு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினர். ஆனால் அவர்கள் உண்மையில் சுதந்திரமான பெண்கள். இதன் காரணமாக, நபியவர்கள் நம்பிக்கை கொண்ட (சுதந்திரமான) பெண்கள் தங்கள் மீது ஜில்பாப்களை போடும்படி கட்டளையிட்டார்கள். எனவே அவர்கள் சுதந்திரமான பெண்களாகவும், அடிமைப் பெண்களிடமிருந்து வேறுபடுத்திஅறியப்பட்டவர்களாகவும், தொல்லைப்படுத்தப்படாமலும் இருப்பார்கள்.
அல் ஹசன் அல் பஸரி(21 ஹி-110ஹி)
➡️முஅம்மர் இப்னு ராஸித் (96 ஹி- 153 ஹி)➡️ அப்துர் ரஸாக் (126ஹி - 211ஹி)
மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்கள் அனைவரும் பலமாக இருந்த போதிலும் அதன் அறிவிப்பாளர் தொடர் சஹாபாக்கள் வரை செல்லவில்லை. இந்த ஹதீஸை அறிவிக்கும் ஹசன் அல் பஸரி தாபியீ...சஹாபி அல்ல. இதன்காரணமாக இந்த ஹதீஸ் முர்ஸல் வகை ஹதீஸாகும். முர்ஸல் வகையை ஹதீஸை ஆதாரப்பூர்வமாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் அந்த முர்ஸல் வகை ஹதீஸானது ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரணாக இருக்கும் பட்சத்தில் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஹசன் அல் பஸ்ரி அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸானது ஸஹீஹ் புகாரியில் பதிவு செய்யப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸூக்கு மாறுபட்டு அமைந்துள்ளது.
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَزْوَاجَ النَّبِيِّ، صلى الله عليه وسلم كُنَّ يَخْرُجْنَ بِاللَّيْلِ إِذَا تَبَرَّزْنَ إِلَى الْمَنَاصِعِ ـ وَهُوَ صَعِيدٌ أَفْيَحُ ـ فَكَانَ عُمَرُ يَقُولُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم احْجُبْ نِسَاءَكَ. فَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُ، فَخَرَجَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيْلَةً مِنَ اللَّيَالِي عِشَاءً، وَكَانَتِ امْرَأَةً طَوِيلَةً، فَنَادَاهَا عُمَرُ أَلاَ قَدْ عَرَفْنَاكِ يَا سَوْدَةُ. حِرْصًا عَلَى أَنْ يَنْزِلَ الْحِجَابُ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ الْحِجَابِ.
'நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி(ஸல்) அவர்களிடம், 'உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் போது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்' என உமர்(ரலி) சொல்லிக் கொண்டிருந்தார். ஆயினும் நபி(ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா(ரலி) இஷா நேரமான ஓர் இரவில் (கழிப்பிடம் நாடி) வீட்டைவிட்டு வெளியே சென்றார். நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் அவர்களே உயரமான பெண்மணியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்த உமர்(ரலி), 'ஸவ்தாவே! உங்களை யார் என்று புரிந்து கொண்டோம்' என்றார். (அப்போதாவது பெண்கள்) முக்காடிடுவது பற்றிய குர்ஆன் வசனம் அருளப்படாதா என்ற பேராசையில் உரத்து அழைத்தார். அப்போதுதான் பெண்கள் முக்காடு போடுவது பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான்' ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 146.
அத்தியாயம் : 4. உளூச் செய்வது
ஸஹிஹ் புகாரியில் அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் ஆனது முக்காடு பற்றிய அல்குர்ஆன் சட்டம் எந்த சூழ்நிலையில் இறங்கியது என்பதை மிகத் தெளிவாக சொல்லுகிறது. இதனால் ஹஸனுல் பஸரி அறிவிற்கும் முர்ஸல் வகை ஹதீஸ் ஆனது அன்னை ஆயிஷா அறிவிக்கும் ஸஹீஹான ஹதீஸீக்கு முரணாக இருப்பதால் ஒரு போதும் அதை ஆதாரபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
➖➖➖➖➖➖➖➖➖
வாதம் 3: ஹிஜாப் என்பது சுதந்திரமான பெண்களுக்கும் அடிமைப் பெண்களுக்கும் இடையே இருக்கின்ற வேறுபாடாக சஹாபாக்கள் புரிந்து கொண்டிருந்தார்களா?
முகம்மது நபி மற்றும் அன்னை ஸஃபியா அவர்களின் திருமண நிகழ்வை அடிப்படையாக வைத்து புர்கா அல்லது ஹிஜாப் பற்றிய இறை சட்டம் முஸ்லிமான சுதந்திரமான பெண்களுக்கும் மற்றும் அடிமைப் பெண்களுக்கும் வேறுபடுத்தி காட்டுவதற்காகவே அருளப்பட்டது என்பதை தங்களது ஆதாரமாக இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முன்வைக்கின்றனர். அந்த ஹதீஸை குறித்தும் பார்ப்போம்.
அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.
நபி(ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள 'சத்துஸ் ஸஹ்பா' என்னுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மண முடித்து) மூன்று நாள்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் வலீமா - மண விருந்துக்கு முஸ்லிம்களை அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை.
நபி(ஸல்) அவர்கள், பிலால்(ரலி) அவர்களிடம் தோல்விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, அவ்வாறே அது கொண்டு வந்து விரிக்கப்பட்டது. பிறகு, அதில் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். ('ஹைஸ் எனும் எளிமையான உணவு தயாரானது. அதை அங்கிருந்த முஸ்லிம்கள் உண்டனர்.) அப்போது முஸ்லிம்கள் 'ஸஃபிய்யா அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (-நபியவர்களின் துணைவி)-யரில் ஒருவரா? அல்லது நபி(ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா?' என்று பேசிக் கொண்டனர். 'ஸஃபிய்யா அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஹிஜாப் - திரையிட்(டுக் கொள்ளும் படி கட்டளையிட்)டால், அவர் *இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவர். அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்' என்று (மக்களில் சிலர்) கூறினர்.* நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் புறப்பட்டபோது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4213.
அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
மேற்கண்ட ஹதீஸில் அன்னை ஸஃபியா திரையிடப்பட்டால், அவர் முஃமின்களின் அன்னையர் அதாவது முகம்மது நபியின் மனைவியரில் ஒருவர் என்றும் அவ்வாறு திரையிடபடாவிட்டால் முகமது நபியின் அடிமை பெண்களில் ஒருவர் என்றும் வேறுபடுத்தி அறிந்துகொள்ளலாம் என்று சஹாபாக்கள் பேசிக் கொண்டதாக அறிய முடிகிறது. இதன் விளக்கம் என்னவெனில், முஹம்மது நபியின் மனைவிமார்கள் சில பிரத்யேகமான சட்டங்களை கொண்டிருக்கின்றனர். அவர்கள் நபியின் மனைவிமார்கள் என்ற அந்தஸ்து காரணமாக அவர்களுக்கென்று சில கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. இதில் ஒன்று முஹம்மது நபியின் மனைவியரிடம் விசுவாசிகள் பேச வேண்டுமென்றால் திரைக்கு அப்பால் இருந்தே பேச வேண்டும் என்று இறை சட்டம் கூறுகிறது. அதேபோன்று முஹம்மது நபியின் மறைவுக்குப் பிறகு அவருடைய மனைவியை எவரும் திருமணம் செய்யக்கூடாது என்றும் அல்குர்ஆன் சொல்கிறது. அதுமட்டுமில்லாமல் மற்ற முஸ்லிமான பெண்கள் செய்யும் பாவத்திற்கு கிடைக்கும் தண்டனையை காட்டிலும் நபியின் மனைவியரான இவர்கள் பாவம் செய்யும் பட்சத்தில் அதிகமாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் வேதம் கூறுகிறது. இவ்வாறு முகமது நபியின் மனைவிமார்கள் அதாவது மூமின்களின் அன்னையர் சிறப்பான சில சட்டங்களை கொண்டிருக்கின்றனர். இதன் ஒரு பகுதிதான் அவர்கள் திரைக்கு அப்பால் இருந்து மற்ற ஆண்களுடன் பேச வேண்டும் என்பதே. இதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் ஸஃபியா அவர்களுடன் முஹம்மது நபி திருமணம் செய்த பொழுது திரையிட்டு அவர்களை மறைத்ததும் அடங்கும். இந்த திரை கட்டாயம் மற்ற முஸ்லிமான பெண்களுக்கு கிடையாது.
நபியுடைய மனைவிகளிடம் யாதொரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும்.
(அல்குர்ஆன் 33:53)
உண்மையில் இந்த சட்டம் நபியின் மனைவிகளையும் மற்ற பெண் விசுவாசிகளையும் வேறுபடுத்தி காட்டக்கூடிய சட்டமே தவிர, அது அடிமைப் பெண்களையும் சுதந்திரமான பெண்களையும் வேறு படுத்திக் காட்டக் கூடிய சட்டம் அல்ல. இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப் அல்லது புர்கா சட்டமானது முஸ்லிமான சுதந்திரமான பெண்களுக்கும் மற்றும் அடிமைப் பெண்கள் என அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
வாதம் 4: அடிமைப் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?
Al-Ahzab 33:59
Tamil - Abdul Hameed Baqavi
நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளுக்கும், உங்களுடைய பெண் மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில்) இறக்கிக் கொள்ளும்படி நீங்கள் கூறுங்கள். அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவ னாகவும் இருக்கின்றான்.
மேற்கண்ட குர்ஆன் வசனத்தையும் மற்றும் வாதம் இரண்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஹஸன் அல் பஸரி அறிவிக்கும் ஹதீஸை அடிப்படையாக வைத்தும் அடிமைப் பெண்களை சுதந்திரமான ஆண்கள் எவரும் கற்பழிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது என்று ஒருசில வாதத்தை இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முன் வைக்கின்றனர். இது ஒரு முற்றிலும் பிழையான வாதமாகும். தங்களுடைய மனைவிமார்கள் மற்றும் தங்களுடைய அடிமைப் பெண்களுடன் மட்டுமே உடலுறவு கொள்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறது. மேலும் தங்களுடைய அடிமைப் பெண்களை மற்ற ஆண்களுடன் உடலுறவு கொள்வதற்கு அல்லது அவர்களுடன் விபச்சாரம் செய்வதற்கு நிர்பந்திக்க கூடாது என்றும் அல்குர்ஆன் கட்டளை இடுகிறது.
தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஒரு அற்பப் பொருளை நீங்கள் அடையும் பொருட்டு விபசாரம் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்கள் எவரேனும் (அவர்கள் விருப்பத்திற்கு மாறாக) நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் நிர்ப்பந்தத்திற்குள்ளான அவர்களை மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 24:33)
عَنْ هَارُونَ بْنِ الأَصَمِّ قَالَ بَعَثَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ خَالِدَ بْنَ الْوَلِيدِ فِي جَيْشٍ فَبَعَثَ خَالِدٌ ضِرَارَ بْنَ الأَزْوَرِ فِي سَرِيَّةٍ فِي خَيْلٍ فَأَغَارُوا عَلَى حَيٍّ مِنْ بَنِي أَسَدٍ فَأَصَابُوا امْرَأَةً عَرُوسًا جَمِيلَةً فَأَعْجَبَتْ ضِرَارًا فَسَأَلَهَا أَصْحَابَهُ فَأَعْطَوْهَا إِيَّاهُ فَوَقَعَ عَلَيْهَا فَلَمَّا قَفَلَ نَدِمَ وَسُقِطَ بِهِ فِي يَدِهِ فَلَمَّا رُفِعَ إِلَى خَالِدٍ أَخْبَرَهُ بِالَّذِي فَعَلَ فَقَالَ خَالِدٌ فَإِنِّي قَدْ أَجَزْتُهَا لَكَ وَطَيَّبْتُهَا لَكَ قَالَ لا حَتَّى تَكْتُبَ بِذَلِكَ إِلَى عُمَرَ فَكَتَبَ عُمَرُ أَنْ أَرْضِخْهُ بِالْحِجَارَةِ فَجَاءَ كِتَابُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ وَقَدْ تُوُفِّيَ فَقَالَ مَا كَانَ اللَّهُ لِيُخْزِيَ ضِرَارَ بْنَ الأَزْوَرِ
Harun ibn al-Asim reported: Umar ibn al-Khattab, may Allah be pleased with him, dispatched Khalid ibn al-Walid with the army. Khalid sent Dirar ibn al-Azwar along with a company of horsemen and they raided a district belonging to the tribe of Asad. They captured a woman who was a beautiful bride-to-be and she amazed Dirar. He asked his companions for her and they gave her to him, then he had intercourse with her. When he returned from the expedition, he regretted what he had done and he collapsed in dismay. It was referred to Khalid and told him what he had done. Khalid said, “Indeed, I have made her permissible and wholesome for you.” Dirar said, “No, not until you write to Umar.” Umar replied that he should be stoned to death, but he had passed away from natural causes by the time Umar’s letter arrived. Khalid said, “Allah did not want to disgrace Dirar ibn al-Azwar.”
Source: al-Sunan al-Kubrá 16761
ஹாருன் இப்னு அல்-ஆசிம் அறிவித்தார்: உமர் இப்னு அல்-கத்தாப்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் காலித் இப்னு அல்-வாலித்தை(ரலி) இராணுவத்துடன் அனுப்பினார். காலித் அவர்கள் திரார் இப்னு அல்-அஸ்வரை குதிரை வீரர்களுடன் அனுப்பினார். அவர்கள் ஆசாத் பழங்குடியினருக்குச் சொந்தமான ஒரு மாவட்டத்தில் சோதனை நடத்தினர். அழகான மணமகளாக இருந்த ஒரு பெண்ணை அவர்கள் கைப்பற்றினர், அவள் திராரை ஆச்சரியப்படுத்தினாள். அவர் தனது தோழர்களிடம் அவளைக் கேட்டார். அவர்கள் அவளை அவருக்குக் கொடுத்தனர். பின்னர் அவர் அவளுடன் உடலுறவு கொண்டார். அவர் பயணத்திலிருந்து திரும்பியபோது, அவர் செய்ததை நினைத்து வருந்தினார். அவர் துயரத்தில் சரிந்தார். தான் செய்ததை குறித்து காலித்திடம் அவர் கூறினார், "உண்மையில், நான் அவளை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவளாகவும், நன்மையானவளாகவும் ஆக்கிவிட்டேன்." என்று காலித் கூறினார். நீங்கள் உமருக்கு இதை எழுதும் வரை, அவ்வாறு கூற வேண்டாம்" என்றார் திரார். கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்று உமர் பதிலளித்தார். ஆனால் உமரின் கடிதம் வருவதற்குள் அவர் இயற்கையான காரணங்களால் இறந்துவிட்டார். "திரார் இப்னுல் அஸ்வரை இழிவுபடுத்த அல்லாஹ் விரும்பவில்லை" என்று காலித் கூறினார்.
அடிமை பெண்ணை கற்பழித்தவருக்கு மரண தண்டனை என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் போதுமான ஆதாரமாகும். தனது அடிமை இல்லாத வேறொருவரின் அடிமையுடன் உடலுறவு கொள்வது தடுக்கப்பட்டு இருக்கும்போது இஸ்லாம் அடிமை பெண்களை கற்பழிக்க தூண்டுகிறது என்று சொல்வது அபத்தமானது.
قال الشافعي وَإِذَا اغْتَصَبَ الرَّجُلُ الْجَارِيَةَ ثُمَّ وَطِئَهَا بَعْدَ الْغَصْبِ وَهُوَ مِنْ غَيْرِ أَهْلِ الْجَهَالَةِ أُخِذَتْ مِنْهُ الْجَارِيَةُ وَالْعُقْرُ وَأُقِيمَ عَلَيْهِ حَدُّ الزِّنَا
Al-Shafi’i said, “If a man forcefully acquired a slave girl and then has intercourse with her thereafter, and he is not ignorant, the slave girl is taken away from him, he is fined, and he is punished for adultery.”
Al-Shafi'i கூறுகிறார், “ஒருவன் ஒரு அடிமைப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பெற்று, அதன்பின் அவளுடன் உடலுறவு கொண்டால், அவன் அறியாதவனல்ல, அடிமைப் பெண் அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, அவனுக்கு அபராதம் விதிக்கப்படும், மேலும் விபச்சாரத்திற்காக அவன் தண்டிக்கப்படுவான். ”
Source: al-Umm 3/253
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
வாதம் 5: உமர் ரலி அவர்களின் அடிமை பெண்கள் தலைமுடி தெரிய பணியாற்றிக் கொண்டிருந்தார்களா?
قال البيهقي رحمه الله في سننه (3222) :
أَخْبَرَنَا أَبُو الْقَاسِمِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُبَيْدِ اللهِ الْحِرَفِيُّ بِبَغْدَادَ أنبأ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ الزُّبَيْرِ الْكُوفِيُّ ، ثنا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ ، ثنا زَيْدُ بْنُ الْحُبَابِ ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ قَالَ : حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللهِ بْنِ أَنَسٍ ، عَنْ جَدِّهِ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : " كُنَّ إِمَاءُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ يَخْدِمْنَنَا كَاشِفَاتٍ عَنْ شُعُورِهِنَّ تَضْرِبُ ثُدِيّهُنَّ " .
وهذا إسناد حسن
Anas ibnu malik Said: The slaves of `Umar (ra) used to serve us with their hair uncovered and hitting their breast.”
அனஸ் இப்னு மாலிக் அறிவிக்கிறார்: உமர் (ரலி) அவர்களின் அடிமைகள் அவிழ்ந்த தலைமுடி தங்கள் மார்பில் இடித்துக்கொண்டிருந்த நிலையில் எங்களுக்கு சேவை செய்தார்கள்.
இந்த ஹதீஸில் இடம் பெறும் ஹம்மாத் இப்னு சலமா குறித்த விமர்சனம்....
حَمَّادِ بْنِ سَلَمَةَ
وقال أحمد بن حنبل أثبتهم في ثابت حماد بن سلمة
சாபித் வழியாக அறிவிக்கும் செய்திகள் உறுதியானவை என்று ஹம்மாத் இப்னு சலமா குறித்து அஹ்மத் இப்னு ஹம்பல் கூறுகிறார். (Taqrib al thahtheeb P.No.178)
قال أحمد بن حنبل هو أعلم من غيره بحديث علي بن زيد بن جدعان
அலி இப்னு ஜைத் இப்னு ஜித்ஆநின் அறிவிப்புகளில் இவரை போன்று அறிந்தவர் இல்லை என்று அஹ்மத் இப்னு ஹம்பள் கூறுகிறார்.
أبو أحمد بن عدي الجرجاني :
كثير الرواية خاصة عن إبراهيم، ويقع في حديثه أفراد وغرائب، وهو متماسك في الحديث، لا بأس به
அதிகமான ஹதீஸ்களை குறிப்பாக இப்ராகிம் இடம் இருந்து அறிவிக்கிறார். அவற்றுள் நூதனமானதும், தனித்தவைகளும் உண்டு. மற்ற ஹதீஸ்களுடன் ஒத்தமைந்தால் மட்டுமே அது ஏற்கப்படும் என்று அபூ அஹ்மத் இப்னு அதீ அல் ஜுர்ஹானி கூறுகிறார்கள்.
ابن حجر العسقلاني : ثقة عابد أثبت الناس في ثابت وتغير حفظه بأخرة
சாபித் இன் அறிவிப்பாளர்களில் நம்பகமான அறிவிப்பாளர். ஆனால் இறுதிக்காலத்தில் மறதி ஏறபட்டுவிட்டது.
يحيى بن سعيد القطان : حماد عن زياد الأعلم، وقيس بن سعد ليس بذاك
ஹாம்மாத் , ஜைத் அல் அஃலம், மற்றும் கைஸ் இப்னு சயீத் ஆகியோரிடம் இருந்து அறிவிப்பது ஏற்கப்படாது.
قال البرديجي : فأما أحاديث قتادة التي يرويها الشيوخ ، مثل حماد بن سلمة ، وهمام ، وأبان والأوزاعي ننظر في الحديث فإن الحديث يحفظ من غير طريقهم عن النبي ـ A ـ، وعن أنس بن مالك، من وجه آخر، لم (يدفع) ، وإن كان لا يعرف عن أحد عن النبي ـ A ـ ولا من طريق عن أنس إلا من رواية هذا الذي ذكرت لك كان منكراً. انتهى
அல் பரத்எஜி கூறினார்கள்: கத்தாதா வின் செய்திகளை பின்வரும் ஷேக்ககள் , அதாவது ஹம்மாத் இப்னு சலாமா ,ஹம்மாம், ஆபான் மற்றும் அவ்ஸாயீ ஆகியோர் அறிவிக்கும் போது அந்த செய்தியை பார்ப்போம். அந்த ஹதீஸ் அவர்கள் அல்லாதவர்கள் வழியாக நபியிடம் இருந்து , அனஸ் பின் மாலிக் அவர்களிடம் வேறு வழியாக, அப்படி இல்லையென்றால் நபியிடம் இருந்து வேறு வழியாகவோ, அனஸ் அவர்களிடம் இருந்து வேறு வழியாகவோ இல்லாமல், மேற்குறிப்பிட்டவர்கள் வழியாக மட்டும் வந்தால் நாங்கள் அதை நிராகரித்து விடுவோம் (சரஹ் அலல் திர்மிதி இப்னு ரஜப் அல் ஹம்பலி 2/697-698)
எனவே இவரது செய்திகளை சஹீஹ் முஸ்லிம் இமாம் பின்வருமாறு கையாண்டுள்ளார்.
ஹம்மாத் இப்னு சலமா வழியாக சஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் பதியபட்ட செய்தி
மொத்தம்: 86 ஹதீஸ்
அதில் ஸாபித் இப்னு அஸ்லம் அல்பனானி வழியாக அறிவிக்கப்பட்டது: 64
மீதம் இருக்கும் 22 ஹதீஸ்கள் ஒவ்வொன்றும் 3க்கு மேற்பட்ட ஹம்மாத் இப்னு சலமா இல்லாத அறிவிப்பாளர் தொடரை கொண்டிருக்கிறது. ஆனால் ஸாபித் இப்னு அஸ்லம் அல்பனானி வழியாக ஹம்மாத் இப்னு சலமா அறிவிக்கும் ஹதீஸ்களில் பல இவரை மட்டுமே கொண்ட ஒற்றை அறிவிப்பாளர் தொடரை கொண்டிருக்கிறது.
எனவே மேற்குறிப்பிட்ட இந்த செய்தி சுமாமா அவர்கள் அறிவிப்பது ஹம்மாத் இப்னு சலமா வழியாக மட்டுமே உள்ளது. எனவே இந்த செய்தி நிராகரிக்கபடுகிறது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
வாதம் 6: அடிமை பெண்கள் ஹிஜாப் அணிவதை உமர்(ரலி) அவர்கள் தடுத்தார்களா?
عبد الرزاق عن بن جريج عن نافع أن صفية بنت أبي عبيد حدثته أن عمر رأى - وهو يخطب الناس - أمة خرجت من بيت حفصة تجوس الناس ملتبسة لباس الحرائر فلما انصرف دخل على حفصة ابنة عمر فقال من المرأة التي خرجت من عندك تجوس الرجال قالت تلك جارية جارية عبد الرحمن قال فما يحملك أن تلبسي جارية أخيك لباس الحرائر فقد دخلت عليك ولا أراها إلا حرة فأردت أن أعاقبها
நஃபியின் அதிகாரத்தில் இப்னு ஜுரைஜின் அதிகாரத்தில் அப்துல் ரசாக் கூறுவதாவது, உமர் மக்களிடம் பேசிக் கொண்டிருந்த போது - ஹஃப்ஸாவின் வீட்டில் இருந்து வெளியே வந்த ஒரு பெண் சுதந்திரமான பெண் உடையில் ஆண்களிடம் கள்ளத்தனமாக சுற்றி திரிந்ததை, மக்களிடம் உரையாற்றி கொண்டிருந்த போது உமர்(ரலி) கவனித்ததார். அது அப்துர் ரஹ்மானின் அடிமைப் பெண். அவர், "உன் சகோதரனின் அடிமைப் பெண்ணுக்கு சுதந்திரமான பெண்ணின் ஆடை உடுத்துவதற்கு உன்னைத் தூண்டியது எது? ஏனென்றால், நான் அவளை ஒரு சுதந்திரப் பெண்ணாக மட்டும் பார்த்திருந்தால், அதனிமித்தம் அவளைத் தண்டிக்க விரும்பியே உங்களிடத்தில் நான் வந்தேன்" என்றார்கள்.
இவர்கள் கூறுவது போல ஹிஜாப் அணிந்ததால் உமர்(ரலி) அவர்கள் "அவர் சுதந்திரமான பெண்ணாக இருந்திருந்தால் அவளை தண்டிக்க விரும்பினேன்." என்று எப்படி கூறியிருப்பார்கள்? சுதந்திரமான பெண் ஹிஜாப் அணிந்து சென்றால் ஏன் உமர்(ரலி) தண்டிக்க போகிறார்? ஆக இந்த ஹதீஸின் உண்மை பொருளை அறிந்து கொள்ள இதற்கு முந்தைய ஹீதிஸை பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
5061 - عبد الرزاق عن معمر عن أيوب عن نافع أن عمر رأى جارية خرجت من بيت حفصة متزينة عليها جلباب أو من بيت بعض أزواج النبي صلى الله عليه و سلم فدخل عمر البيت فقال من هذه الجارية فقالوا أمة لنا - أو قالوا أمة لآل فلان - فتغيظ عليهم وقال أتخرجون إماءكم بزينتها تفتنون الناس
Umar once saw a young girl leaving the house of Hafsa (his daughter), adorned with a jilbab — or, from one of the houses of the Prophet’s wives. Umar entered the house and said, “Who is this girl?” They said, “A slave of ours” — or, a slave of someone’s family. He became enraged at them and said, “Your slave girls left with their adornment, and created discord amongst the people (while they were unable to distinguish her from the free Muslim women).”
அப்துல் ரஸாக், முஅம்மரின் அதிகாரத்தின் பேரில், அய்யூபின் அதிகாரத்தின் பேரில், நாஃபியின் அதிகாரத்தின் பேரில் அறிவிக்கிறார்: ஹஃப்ஸாவின் வீட்டிலிருந்து அல்லது வேறு சிலரது வீட்டிலிருந்து ஒரு அடிமைப் பெண்மணி ஜில்பாப் அணிந்து வெளியே வந்ததை உமர் பார்த்தார். நபிகள் நாயகத்தின் மனைவியரில் (அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அவர்கள் மீது உண்டாவதாக) வீட்டிற்குள் உமர் நுழைந்து, "யார் இந்த அடிமைப் பெண்? என்று கேட்டார்கள். அவர்கள், "எங்களுடைய ஒரு அடிமை - அல்லது இன்ன குடும்பத்தாரின் அடிமை என்று சொன்னார்கள்." அதனால் அவர் கோபமடைந்து அவர்களிடம் "உங்கள் அடிமைப் பெண்களை அலங்காரத்துடன் வெளியே விட்டு மக்களை தூண்டுகிறீர்களா? என்று அவர் கேட்டார்:
மேற்குறிப்பிட்ட செய்தியில் நீங்கள் எப்படி அடிமையை அலங்காரத்துடன் (بزينتها) திரிய விடுவீர்கள்???? என்று உமர் ரலி கேட்கிறார்கள்; இதன் பொருள் அந்த அடிமைப்பெண் ஜில்பாப்பில் இருந்தும் முழுமையாக தனது அலங்காரத்தை மறைக்கும்படி அணிந்து இருக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
ஜில்பாப் அரைக்குரையாக அணிந்து அலங்காரத்தை அடிமை பெண் வெளியே காட்டக்கூடாது என்ற பொருளில்தான் மேலே உள்ள செய்தி (முதல் செய்தி) உள்ளதை காட்டுகிறது.....
➖➖➖➖➖➖
Yūsuf b. Abī Yūsuf (Kufan, d. c. 200/815–6) – al-Qāḍī Abū Yūsuf (Kufan, d. 182/789) – Abū Ḥanīfa (Kufan, d. 150/767) – Ḥammād b. Abī Sulaymān (Kufan, d. 120/738) – Ibrāhīm al-Nakhaʿī (Kufan, d. 96/714): Slave women are not obligated to veil (laysa ʿalā al-īmāʾ qināʿ) for prayer or otherwise. [People] used to consider it reprehensible (yukrah) that slave women veil, making them resemble free women.21
(Abū Yūsuf, Kitāb al-Āthār, ed. Abū l-Wafāʾ al-Afghānī (Beirut: Dār al-kutub al-ʿilmiyya, n.d.),29. I have included this report because it seems to be a variant of version 5, reported from the same isnād to Abū Ḥanīfa.)
தொழுகைக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ அடிமைப் பெண்கள் முக்காடு போட வேண்டிய கடமையில்லை. அவர்கள் சுதந்திரமான பெண்களை ஒத்திருப்பார்கள் என்பதால் அடிமைப் பெண்கள் முக்காடு போடுவதைக் கண்டிக்கத்தக்கதாக [மக்கள்] கருதினர்.
மேற்கண்ட ஹதீஸ் யூசுப் பின் அபூ யூசுஃப் – அல்-காதி அபூ யூசுஃப் – அபூ ஹனிஃபா – ஹம்மாத் பின் அபூ சுலைமான் – இப்ராஹிம் அல்-நகாய் எனும் அறிவிப்பாளர் வரிசையை கொண்டுள்ளது. இந்த ஹதிஸீல் வரும் ஹம்மாத் பின் அபூ சுலைமான் நம்பகமானவர் என்றாலும் வயதான் காலத்தில் மூளை குழம்பியவர். அதனால் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள முடியாது.
ابن حجر العسقلاني : فقيه صدوق له أوهام
இப்னு ஹஜர் அவர்கள் ஹம்மாத் இப்னு அபீ சுலைமான் பற்றி நம்பகமானவர் ஆனால் இறுதி காலத்தில் மூளைகுழம்பியவர் என்று கூறுகிறார்.
محمد بن سعد كاتب الواقدي : ضعيف في الحديث واختلط في آخر أمره وكان مرجئا
முஹம்மத் இப்னு சஃத் கூறுகையில் ஹதீசில் பலவீனமானவர். இறுதிக்காலத்தில் மூளை குழம்பி விட்டது. மூர்ஜியா ஆவார் என்று கூறுகிறார்.
➖➖➖➖➖➖
ا220 - ﻣﺤﻤﺪ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﺃﺑﻮ ﺣﻨﻴﻔﺔ، ﻋﻦ ﺣﻤﺎﺩ، ﻋﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ، ﺃﻥ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﻛﺎﻥ ﻳﻀﺮﺏ اﻹﻣﺎء ﺃﻥ ﻳﺘﻘﻨﻌﻦ، ﻳﻘﻮﻝ «§ﻻ ﺗﺘﺸﺒﻬﻴﻦ ﺑﺎﻟﺤﺮاﺋﺮ»
- ﻗﺎﻝ ﻣﺤﻤﺪ: ﻭﺑﻪ ﻧﺄﺧﺬ، ﻻ ﻧﺮﻯ ﻋﻠﻰ اﻷﻣﺔ ﻗﻨﺎﻋﺎ ﻓﻲ ﺻﻼﺓ ﻭﻻ ﻏﻴﺮﻫﺎ، ﻭﻫﻮ ﻗﻮﻝ ﺃﺑﻲ ﺣﻨﻴﻔﺔ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ
Muḥammad b. al-Ḥasan (Kufan, d. 189/804) – Abū Ḥanīfa – Ḥammād b.
Abī Sulaymān – Ibrāhīm al-Nakhaʿī: ʿUmar b. al-Khaṭṭāb—may God be pleased with him—used to strike slave women for veiling, saying, “Do not imitate free women (lā tatashabbahīna bi-l-ḥarāʾir)!”22
(Muḥammad b. al-Ḥasan al-Shaybānī, Kitāb al-Āthār, ed. Abū l-Wafāʾ al-Afghānī, 2 vols.
(Beirut: Dār al-kutub al-ʿilmiyya, 1413/1993), 1: 611–12.)
உமர் பின் அல்-கத்தாப்(ரலி) அவர்கள் முக்காடு போட்டதற்காக அடிமைப் பெண்ணை தாக்கி, “சுதந்திரமான பெண்களைப் போன்று ஒப்பனை செய்யாதீர்கள்” என்று கூறினார்.
முஹம்மது பின் அல்-ஹாசன் – அபூ ஹனிஃபா – ஹம்மாத் பின்
அபூ சுலைமான் - இப்ராஹிம் அல்-நகாய் எனும் அறிவிப்பாளர் வரிசையை மேற்கண்ட ஹதீஸ் கொண்டுள்ளது.
மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையிலும் ஹம்மாத் இப்னு அபீ சுலைமான் வருவதால் இந்த ஹதீஸ் பலவீனமானது.
ابن حجر العسقلاني : فقيه صدوق له أوهام
இப்னு ஹஜர், ஹம்மாத் இப்னு அபீ சுலைமான் நம்பகமானவர் ஆனால் முளைகுழம்பியவர் என்று கூறுகிறார்.
محمد بن سعد كاتب الواقدي : ضعيف في الحديث واختلط في آخر أمره وكان مرجئا
முஹம்மத் இப்னு சஃத் கூறுகையில் ஹதீசில் பலவீனமானவர். இறுதிக்காலத்தில் மூளை குழம்பி விட்டது. மூர்ஜியா ஆவார்..
ﻓﺤﺪﺛﻨﺎ ﺳﻌﻴﺪ، ﻋﻦ ﻗﺘﺎﺩﺓ، ﻋﻦ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﺃﻥ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﺭﺃﻯ ﺃﻣﺔ ﻋﻠﻴﻬﺎ ﻗﻨﺎﻉ ﻓﻀﺮﺑﻬﺎ ﺑﺎﻟﺪﺭﺓ ﻓﻲ ﺣﺪﻳﺚ ﺳﻌﻴﺪ
(tafsir yahya ibn sallam p.No.441)
6. Yaḥyā b. Sallām (Basran, d. 200/815) – Saʿīd b. Bashīr (Basran, d. 168/784– 5) – Qatāda b. Diʿāma (Basran, d. 117/735) – Anas b. Mālik (Basran, d. 93/712): ʿUmar b. al-Khaṭṭāb saw a slave woman wearing a veil and struck her with his switch. Saʿīd added, “He poked her with his switch, commanding ‘uncover your head!’” Saʿīd added, “Do not imitate free women.”23
(Yaḥyā b. Sallām, Tafsīr, 441.
உமர் பின் அல்-கத்தாப் ஒரு அடிமைப் பெண் முக்காடு அணிந்திருப்பதைக் கண்டு அவளைத் தனது சாட்டையை கொண்டு அடித்தார். சயீத் மேலும் கூறுகிறார், "அவர் தனது சாட்டையால் அவளைக் குத்தி, 'உங்கள் தலை முக்காடை நீக்குங்கள்!' என்று கட்டளையிட்டார். மேலும் "சுதந்திரமான பெண்களைப் போன்று ஒப்பனை செய்ய வேண்டாம்" என்று உமர் ரலி கூறியதாக சயீத் கூறினார்.
மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை அனஸ் பின் மாலிக்(ரலி) ➡️ கத்தாதா ➡️சயீத் பின் யாசிர் அல்பஸரீ➡️யஹ்யா பின் சலாம் ஆகும். இதில் கத்தாதா முதல்லிஸ் ஆவார்.
ابن حجر العسقلاني : ثقة ثبت، وفي مقدمة الفتح: ربما، وذكره في الطبقة الثالثة من طبقات المدلسين، وهي التي لا يقبل حديث أصحابها إلا إذا صرحوا بالسماع
இப்னு ஹஜர் கூறுகையில் இவர் நேரடியாக கேட்டதற்கான வார்த்தைகள் இல்லாவிடில் இவரது செய்திகள் ஏற்கப்படாது. சமிஹ்னா, அக்பர்னா, ஹத்தஸ்னா போன்ற வார்த்தைகள் இல்லாமல் அன் அனா போன்றவை கொண்டு அறிவித்தால் இவரது செய்தி நிராகரிக்கப்படும்.
أبو بكر البيهقي : ليس بالقوي، ونقل عن أبي عبد الله الحاكم، قوله: كثير الوهم
அபூ பக்ர் ஆல் பைஹக்கி : பலமானவர் அல்ல. அப்துல்லாஹ் அல் ஹாக்கிம் கூறுகையில் இவர் குழம்பிப்போனவர் என்று கூறுகிறார்...
➖➖➖➖➖➖
اﺑﻦ ﺟﺮﻳﺞ ﻋﻦ اﺑﻦ ﺟﺮﻳﺞ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﻋﻄﺎء، ﺃﻥ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﻛﺎﻥ §ﻳﻨﻬﻰ اﻹﻣﺎء ﻣﻦ اﻟﺠﻼﺑﻴﺐ ﺃﻥ ﻳﺘﺸﺒﻬﻦ ﺑﺎﻟﺤﺮاﺋﺮ "، ﻗﺎﻝ اﺑﻦ ﺟﺮﻳﺞ: ﻭﺣﺪﺛﺖ ﺃﻥ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﺿﺮﺏ ﻋﻘﻴﻠﺔ ﺃﻣﺔ ﺃﺑﻲ ﻣﻮﺳﻰ اﻷﺷﻌﺮﻱ ﻓﻲ اﻟﺠﻠﺒﺎﺏ ﺃﻥ ﺗﺠﻠﺒﺐ
musannaf abdur razzak 5059
ʿAbd al-Razzāq al-Ṣanʿānī (d. 211/826) – Ibn Jurayj (Meccan, d. 150/767) – ʿAṭāʾ b. Abī Rabāḥ (Meccan, d. 114/732): ʿUmar b. al-Khaṭṭāb used to forbid slave women from wearing robes (jalābīb) and imitating free women.
உமர் பின் அல்-கத்தாப் அவர்கள் அடிமைப் பெண்கள் ஜில்பாப் அணிவதையும், சுதந்திரமான பெண்களைப் போன்று பாவனை செய்வதையும் தடை செய்தார்.
(ʿAbd al-Razzāq b. Hammām al-Ṣanʿānī, Muṣannaf ʿAbd al-Razzāq, 11 vols. (Dār al-taʾṣīl, 1436/2015), 3: 89.)
உமர் (மரணம்.23AH) ➡️ அதா இப்னு அபூ ரபா (பிறப்பு 25 AH) ➡️ இப்னு ஜுரைஜ்(b. 80AH) ➡️ அப்துர் ரசாக்
இது அறிவிப்பாளர் முறிந்த செய்தி ஆகும். உமர்(ரலி) அவர்கள் மரணித்து இரண்டு ஆண்டுகள் கழித்து பிறந்த ஒருவர் உமர்(ரலி) குறித்து அறிவிக்கிறார். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானது ஆகும்.
➖➖➖➖➖➖
. ﻗﺎﻝ اﺑﻦ ﺟﺮﻳﺞ: ﻭﺣﺪﺛﺖ ﺃﻥ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﺿﺮﺏ ﻋﻘﻴﻠﺔ ﺃﻣﺔ ﺃﺑﻲ ﻣﻮﺳﻰ اﻷﺷﻌﺮﻱ ﻓﻲ اﻟﺠﻠﺒﺎﺏ ﺃﻥ ﺗﺠﻠﺒﺐ
ʿAbd al-Razzāq al-Ṣanʿānī – Ibn Jurayj: I was informed that ʿUmar b. al-Khaṭṭāb struck ʿAqīla, a slave woman belonging to Abū Mūsā al-Ashʿarī, for wearing a robe.
அப்துர் ரஸாக் அறிவிக்கிறார்: உமர் பின் அல் கத்தாப் அவர்கள் அபு மூசா அல்-அஷ்அரியின் அடிமைப் பெண்ணான 'அகிலாவை ஜில்பாப் அணிந்ததற்காக அடித்தார்.
(musannaf abdur razzak 5059)
(ʿAbd al-Razzāq b. Hammām al-Ṣanʿānī, Muṣannaf ʿAbd al-Razzāq, 11 vols. (Dār al-taʾṣīl, 1436/2015), 3: 89. )
Umar (death.23AH) ➡️ Ibn Jurayj(b. 80AH) ➡️ Abdur Razzak
இது அறிவிப்பாளர் முறிந்த செய்தி ஆகும். உமர்(ரலி) அவர்கள் மரணித்து 57 ஆண்டுகள் பிறகு பிறந்த ஒருவர் உமர்(ரலி) குறித்து அறிவிக்கிறார். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானது ஆகும்.
➖➖➖➖➖➖➖
1️⃣ Ibn Khuzaymah said in the hadith of Ali bin Hajar [101] that Ali told us on the authority of Ismail on the authority of Hamid on the authority of Anas that he said: Omar bin Al-Khattab came to his family for a need, so if in his house there was a woman wearing a jilbab masked with it . She left, then came back and found her gone, and when he entered, he said to his family: Who is this that has cursed us since today? His wife said to him: O Commander of the Faithful, what is wrong with you, she is the nation of so-and-so. He said: When he went, he said: O people, do not compare the nation to its mistress. Ah right.
وقال ابن خزيمة في حديث علي بن حجر [١٠١] حدثنا علي ثنا إسماعيل ثنا حميد عن أنس أنه قال: جاء عمر بن الخطاب إلى أهله لحاجة فإذا في منزله امرأة عليها جلباب متقنعة به، قال: فرجع حين رآها، قال: ثم عاد فوجدها لم تبرح، ثم عاد فوجدها قد ذهبت، فلما دخل قال لأهله: من هذه التي قد عنتنا منذ اليوم؟ فقالت له امرأته: يا أمير المؤمنين، ما كان عليك منها، هي أمة فلان، قال: فلما راح قال: أيها الناس لا تشبه الأمة بسيدتها. اهـ صحيح.
P.34 - Kitab Al-Ateeq,
அலி பின் ஹஜரின் [101] ஹதீஸில் இப்னு குஸைமா, அனஸின் அதிகாரத்தில் ஹமீதின் அதிகாரத்தில் இஸ்மாயிலின் அதிகாரத்தில் அலி எங்களிடம் கூறினார்: உமர் பின் அல்-கத்தாப் தனது குடும்பத்திற்கு ஒரு தேவைக்காக வந்தார். அங்கு அவரது வீட்டில் ஜில்பாப் அணிந்த ஒரு பெண் முகத்திரை அணிந்திருந்தாள்.
அவள் கிளம்பி, திரும்பி வந்து அவள் போனதைக் கண்டு, உள்ளே நுழைந்ததும் தன் குடும்பத்தாரை நோக்கி: இன்று நம்மைச் சபித்த இவர் யார்? என்று கேட்டார்கள். அவருடைய மனைவி, விசுவாசிகளின் தலைவரே, உங்களுக்கு என்ன பிரச்சினை. அவள் இன்னாருடைய அடிமை என்றார்கள். அவர் சென்றபோது மக்களே, அடிமையை அதன் சுதந்திரமான பெண்ணுடன் ஒப்பாக்காதீர்கள் என்றார்கள்.
2️⃣ Ibn Abi Shaybah said [6294] Abd al-Ala told us on the authority of Muammar on the authority of al-Zuhri on the authority of Anas, he said: Omar saw a maid wearing a mask and hit her, and said: Do not look like free women.
وقال ابن أبي شيبة [٦٢٩٤] حدثنا عبد الأعلى عن معمر عن الزهري عن أنس قال: رأى عمر جارية متقنعة فضربها، وقال: لا تشبهين بالحرائر.
முகத்திரை அணிந்திருந்த பணிப்பெண்ணைக் கண்ட உமர், அவளைத் தாக்கி, "சுதந்திரமான பெண்களைப் போல் பாவனை செய்யாதீர்கள்" என்றார்.
மேற்கூறப்பட்ட இரண்டு ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களாக அறியப்படுகின்றன. முஸ்லிமான சுதந்திரமான பெண்கள் ஜில்பாப் அணிந்து முகத்தை மூடுவது போன்று அடிமைப் பெண்கள் முகத்தை மூட வேண்டாம் என்று இங்கு உமர் ரலி கட்டளை இடுகின்றார். முகத்தை மூடுவது என்பது இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிமான பெண்கள் பின்பற்றக்கூடிய கலாச்சாரம் என்றாலும் கூட, முகத்தையும் உள்ளங்கைகளையும் காட்டுவதற்கு இஸ்லாம் அனுமதித்து உள்ளது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
திருக்குர்ஆன் 24 : 31
மேற்கண்ட வசனத்தில் வெளியே தரும் அலங்காரம் என்பது முகம் மற்றும் உள்ளங்கை என்பதே ஆகும்.
தொழுகையிலும் அதேபோல் ஹஜ்ஜின்போது இஹ்ராம் அணிந்த நிலையிலும் பெண்கள் முகத்தை காட்ட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதே சமயம் மற்ற நேரங்களில் பெண்கள் விருப்பப்பட்டு முகத்தை மறைப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. மேற்கூறப்பட்ட இரண்டு ஹதீஸ்களில் உமர் ரலி அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நிர்வாக காரணத்திற்காகவே அடிமைப் பெண்கள் முகத்திரை அணிந்து சுதந்திரமான பெண்களைப் போன்று பாவனை செய்யவேண்டாம் என்று தடுக்கிறார். இது ஒரு தற்காலிக சட்டம் மட்டுமே. சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒரு சில சட்டங்களை வகுப்பதற்கு ஆட்சியாளருக்கு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தின் அடிப்படையிலேயே சுதந்திரமான பெண்களைப் போன்று முகத்திரை அணிய வேண்டாம் என்று அடிமை பெண்களுக்கு கட்டளையிடுகின்றார். சில கால இடைவெளியில் சொல்லப்படக்கூடிய தலாக் விஷயத்திலும் கூட, இது போன்றே அவசரகதியில் எதற்கெடுத்தாலும் தலாக் சொல்வதை தடுக்க வேண்டும் என்பதற்காக, ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லப்படும் முத்தலாக்கை திரும்ப பெற்றுக் கொள்ள முடியாத தலாக்காக உமர் சட்டம் போட்டதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதுவெல்லாம் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட சட்டம் தானே தவிர அது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வகுத்த வழிமுறைகளாக ஒருபோதும் கருதமுடியாது. பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்தவில்லை. அடிமை பெண்கள் தங்களது பணியின் காரணமாக சுதந்திரமான பெண்களை காட்டிலும் மிக அதிகமாக வெளியே செல்ல கூடியவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் தங்களது சுய அடையாளத்தை மறைத்து சுதந்திரமான பெண்களைப் போன்று முகத்தை மறைக்கும் ஜில்பாப் அணிவது சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிற காரணத்தினாலே உமர் ரலி அவர்கள் இவ்வாறு சுதந்திரமான பெண்களைப் போன்று பாவனை செய்ய வேண்டாமென்று அடிமைப் பெண்களை தடுத்து இருக்கின்றார். அதே சமயம் இஸ்லாம் வலியுறுத்தும் முகம் மற்றும் உள்ளங்கையை தவிர்த்து ஏனைய பகுதிகளை முஸ்லிமான பெண்கள் மூட வேண்டும் என்கிற விதியை உமர் ரலி மீறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உமர் ரலி அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நிர்வாக காரணங்களுக்காக, மக்களிடையே குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கத்தில், அடிமைப் பெண்கள் சுதந்திரமான பெண்களைப் போன்று ஜில்பாப் அணிந்து முகத்திரை அணிய வேண்டாம் என்று கட்டளைய இட்டுள்ளார் என்பதே இங்கு சரியான காரணமாகும்.
இஸ்லாத்தின் முதன்மை ஆதாரமான அல்குர்ஆன், நம்பிக்கை கொண்ட பெண்கள் அனைவருக்கும் ஹிஜாபை வலியுறுத்துகிறது. அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் கட்டளைகள் மற்றும் போதனைகள் மட்டுமே இஸ்லாம் ஆகும். இவைகளை தவிர்த்து வேறு எவர் எதை சொன்னாலும் அது இஸ்லாமிய போதனையாக இருக்காது என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஹிஜாபை குறித்து அருளப்பட்ட அல்குர்ஆன் வசனத்தில் எந்த ஒரு இடத்திலும் அச்சட்டம் சுதந்திரமான பெண்களுக்கும் அடிமைப் பெண்களுக்கும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக தான் என்று எங்கும் சொல்லப்படவில்லை. அதே சமயத்தில் முஸ்லிமான பெண்கள் என்று பொதுவான அர்த்தத்தில் தான் ஹிஜாப் பற்றிய வழி முறைகளை அல்குர்ஆன் பேசுகிறது. அதேபோல் முஹம்மது நபியின் போதனைகளிலும் அடிமைப் பெண்கள் ஹிஜாப் அணிய கூடாது என்கிற எந்த ஒரு தடையும் சொல்லப்படவில்லை. முஹம்மது நபியின் காலத்தில் அடிமை பெண்கள் ஹிஜாப் அணியாமல் இருந்தார்கள் என்பதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மட்டுமே இஸ்லாமிய வழிகாட்டுதலுக்கு அடிப்படையானவர்கள். அல்குர்ஆன் மற்றும் நபியின் சுன்னாவை தவிர்த்து ஸஹாபாக்கள் உட்பட வேறு எவர் எதைச் சொன்னாலும், அது அவர்களுடைய தனிப்பட்ட புரிதல்கள் ஆகவே பார்க்கப்பட வேண்டுமே தவிர இஸ்லாமிய போதனையாக ஒருபோதும் கருதப்படாது. அதுமட்டுமில்லாமல் ஹிஜாப் அணிய வேண்டும் என்கிற சட்டம் சுதந்திரமான பெண்களையும் அடிமைப் பெண்களையும் வேறுபடுத்தி காட்டுவதற்காகத்தான் அருளப்பட்டது என்ற வாதத்தை ஒருபோதும் எவராலும் வைக்கவே முடியாது. ஏனெனில் எந்த இடத்தில் சுதந்திரமான நபர்களுக்கும், அடிமை நபர்களுக்கும் வெவ்வேறு சட்டம் இருக்கிறதோ அத்தகைய சூழ்நிலைகளில் அதைப் பற்றி தெளிவான விளக்கத்தை அல்குர்ஆன் மற்றும் நபியின் சுன்னாவில் தெளிவாக காண முடிகிறது. உதாரணத்திற்கு விபச்சார குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனையை குறித்து பார்த்தோமென்றால் சுதந்திரமானவர்களுக்கும், அடிமைகளுக்கும் இதில் வெவ்வேறு சட்டங்கள் இருக்கின்றன. இதை குறித்து அல்குர்ஆனும் நபியின் சுன்னாவும் தெளிவாக பதிவு செய்து இருக்கின்றன. விபச்சாரம் செய்த திருமணமான ஆண் மற்றும் பெண்களுக்கு கல்லால் அடித்து மரண தண்டனையை வழங்கும் இஸ்லாம், விபச்சாரம் செய்த திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் 100 கசையடிகள் கொடுக்க சொல்லி வலியுறுத்துகிறது. அதேசமயம் அடிமையான ஆண் அல்லது பெண் விபச்சாரம் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கான தண்டனை இதில் பாதி மட்டுமே, அதாவது 50 கசையடிகள் மட்டுமே கொடுக்கப்படும் என்பதையும் அல்குர்ஆனும் நபியின் போதனையும் தெளிவாகக் கூறுகின்றன.
An-Nisa' 4:25
Tamil - Abdul Hameed Baqavi
உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஸ்லிம் பெண்களை திருமணம் செய்துகொள்ள சக்தியில்லையோ, அவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களிலிருந்து திருமணம் செய்து கொள்ளலாம். அல்லாஹ் உங்களுடைய நம்பிக்கையை நன்கறிந்தே இருக்கின்றான். (இவ்வடிமைப் பெண்களைக் கேவலமாக எண்ணாதீர்கள். நம்பிக்கையாளர்களாகிய) உங்களில் எவரும் மற்றவருக்குச் சமம்தான். ஆகவே (நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களையும்) அவர்களுடைய எஜமானனின் அனுமதியைப் பெற்று சட்டப்படி அவர்களுக்குரிய மஹரையும் கொடுத்தே நீங்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும். (அப்பெண்கள்) பத்தினிகளாக இருக்கவேண்டும். விபச்சாரிகளாகவோ அல்லது கள்ள நட்புக் கொள்பவர்களாகவோ இருக்கக்கூடாது. திருமணம் செய்துகொள்ளப்பட்ட (அடிமைப்) பெண் விபச்சாரம் செய்து விட்டால் அவளுக்கு (இத்தகைய குற்றம் செய்த அடிமையல்லாத) திருமணமான சுதந்திரமான பெண்ணுக்கு விதிக்கப்படும் தண்டனையில் பாதி விதிக்கப்படும். தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடுமென பயப்படுகின்றாரோ அவருக்குத்தான் இந்த அனுமதி (அதாவது அடிமைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்பது.) எனினும், நீங்கள் சகித்துக்கொண்டு பொறுத்திருப்பது (முடியுமாயின் அதுவே) உங்களுக்கு நன்று. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் அவளுக்கு. எஜமானன் கசையடி கொடுக்கட்டும்! (அவளை தண்டித்துவிட்டதால்) குற்றம் சொல்ல வேண்டாம்! பிறகு மறுபடியும் அவள் விபச்சாரம் செய்தால் அவளுக்குக் கசையடி கொடுக்கட்டும்! குற்றம் சொல்ல வேண்டாம்! மூன்றாம் முறையும் விபச்சாரம் செய்தால் அவளை (அவளுடைய எஜமானன்) முடியாலான ஒரு கயிற்றுக்காகவாவாது விற்று விடட்டும்!'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2152.
அத்தியாயம் : 34. வியாபாரம்
ஹம்ஸா அல் அஸ்லமி(ரலி) அறிவித்தார்
உமர்(ரலி) என்னை ஸகாத் வசூலிப்பவராக அனுப்பினார். (நான் சென்ற ஊரில்) ஒருவர் தம் மனைவியின் அடிமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தார். உடனே நான் அந்த மனிதருக்காக ஒரு பிணையாளைப் பிடித்து வைத்துக் கொண்டு உமர்(ரலி) அவர்களிடம் சென்றேன். உமர்(ரலி) அதற்கு முன்பே அவருக்கு, அவர் (மனைவியின் அடிமைப் பெண் தமக்கும் அடிமைப்பெண்தான் என்று கருதி) அறியாமையால் செய்த காரணத்தினால் (கல்லெறிந்து கொல்லாமல்) நூறு கசையடி கொடுத்திருந்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2290.
அத்தியாயம் : 39. கஅபாலா (பிணையாக்கல்)
மேற்கண்டவாறு விபச்சாரம் செய்த அடிமை ஆண் மற்றும் பெண்களுக்கு சுதந்திரமானவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையில் பாதி தான் என்பதை அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் தெளிவாக விளக்கிச் சொல்லும் பொழுது, உண்மையில் ஹிஜாப் பற்றிய சட்டம் சுதந்திரமான பெண்களையும் அடிமைப் பெண்களையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக தான் அருளப்பட்டது என்றால் அதை குறித்து தெளிவான வார்த்தைகள் அல்குர்ஆனிலும் அதேபோல் நபியின் போதனையிலும் இடம்பெற்று இருக்கும். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. மாறாக முஸ்லிமான பெண்கள் என்கிற பொதுவான வார்த்தை தான் ஹிஜாப் பற்றிய சட்டத்திற்கு சொல்லப்பட்டுள்ளது. இதிலிருந்து ஹிஜாப் பற்றிய சட்டம் முஸ்லிமான சுதந்திரமான பெண்கள் மற்றும் அடிமையான பெண்கள் என அனைவருக்கும் பொதுவானது என்பது உறுதியான ஒன்றாகும். இதிலிருந்து ஹிஜாப் பற்றிய சட்டம் சுதந்திரமான பெண்களையும் அடிமைப் பெண்களையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக இறக்கி அருளப்பட்டது என்கிற வாதம் பொய் என்பதும் நிரூபணமாகிறது. இதன்மூலம் ஹிஜாப் பற்றிய சட்டம் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியது என்பதும் உறுதியாகி விடுகிறது
நிச்சயமாக உண்மை
பதிலளிநீக்கு