கணவனது சீழை மனைவி நக்கினாலும் அவனது உரிமையை முழுமையாக நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என்று சொல்லும் செய்தி ஆதாரப்பூர்வமானதா?

கணவனது சீழை மனைவி நக்கினாலும் அவனது உரிமையை முழுமையாக நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என்று சொல்லும் செய்தி ஆதாரப்பூர்வமானதா?



இஸ்லாத்தை தவறான முறையில் சித்தரிக்க விரும்புபவர்கள் பலவீனமான ஹதீஸ்களின் பக்கம் ஓடுவது வாடிக்கையான ஒன்றுதான். கீழ்க்கண்ட ஹதீஸை சுட்டிக்காட்டி பெண்களை தனது கணவன்மார்களின் உடலில் இருந்து வடியும் சீழை நக்க இஸ்லாம் சொல்கிறது என்கிற ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்த இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் முயற்சி செய்கின்றனர். அவர்களுடைய அந்த முயற்சி வீணாண ஒன்றாகும். ஏனெனில் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் கலையின் அடிப்படை ஞானம் தெரிந்தவர்கள் எவரும் இஸ்லாத்தை ஒருபோதும் தவறாக விளங்கிக் கொள்ளவே மாட்டார்கள். இஸ்லாமிய விரோதிகள் தங்களது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக வைக்கும் ஹதீஸின் தன்மை குறித்து ஆய்வு செய்வோம்.


12614 - ﺣﺪﺛﻨﺎ ﺣﺴﻴﻦ، ﺣﺪﺛﻨﺎ ﺧﻠﻒ ﺑﻦ ﺧﻠﻴﻔﺔ، ﻋﻦ ﺣﻔﺺ، ﻋﻦ ﻋﻤﻪ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﻗﺎﻝ: .............ﻓﻘﺎﻝ: «ﻻ ﻳﺼﻠﺢ ﻟﺒﺸﺮ ﺃﻥ ﻳﺴﺠﺪ ﻟﺒﺸﺮ، ﻭﻟﻮ ﺻﻠﺢ ﻟﺒﺸﺮ ﺃﻥ ﻳﺴﺠﺪ ﻟﺒﺸﺮ، ﻷﻣﺮﺕ اﻟﻤﺮﺃﺓ ﺃﻥ ﺗﺴﺠﺪ ﻟﺰﻭﺟﻬﺎ، ﻣﻦ ﻋﻈﻢ ﺣﻘﻪ ﻋﻠﻴﻬﺎ، ﻭاﻟﺬﻱ ﻧﻔﺴﻲ ﺑﻴﺪﻩ، ﻟﻮ ﻛﺎﻥ ﻣﻦ ﻗﺪﻣﻪ ﺇﻟﻰ ﻣﻔﺮﻕ ﺭﺃﺳﻪ ﻗﺮﺣﺔ ﺗﻨﺒﺠﺲ ﺑﺎﻟﻘﻴﺢ ﻭاﻟﺼﺪﻳﺪ، ﺛﻢ اﺳﺘﻘﺒﻠﺘﻪ ﺗﻠﺤﺴﻪ ﻣﺎ ﺃﺩﺕ ﺣﻘﻪ»


Anas رضي الله عنه narrates that the Messenger ﷺ. said:

“It is not permissible for a human being to prostrate to another human being. Were it permissible for a human being to prostrate to another human being, I would have commanded the woman to prostrate to her husband because of his great right upon her. By the One in Whose hand is my soul, if he (the husband) had, from his feet to the top of his head, an ulcer oozing blood and pus, and she came to lick it off for him, she would not have fulfilled his right.”


"ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்வது அனுமதிக்கப்படவில்லை.  ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் ஸஜ்தாச் செய்ய அனுமதி இருந்திருந்தால், ஒரு பெண் தன் கணவனுக்கு அவள் மீதுள்ள பெரும் உரிமையின் காரணமாக அவனுக்கு ஸஜ்தா செய்யும்படி கட்டளையிட்டிருப்பேன்.  என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, அவன் (கணவனின்) பாதத்திலிருந்து தலையின் உச்சி வரை இரத்தமும் சீழும் வடியும் புண் இருந்து, அவனுக்காக அவள் அதை நக்கயிருந்தாலும், அவள் அந்த உரிமையை நிறைவேற்றியிருக்க மாட்டாள்."


இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை கீழ்க்கண்டவாறு உள்ளது:


ஹுஸைன் ➡️ கலாஃப் பின் கலீஃபா ➡️ ஹஃப்ஸ் ➡️ அவரது மாமா அனஸ் பின் மாலிக்


இது ஒரு நீண்ட ஹதீஸாகும். இந்த ஹதீஸ் மூன்று பாகங்களாக நாம் பிரிக்கலாம். முதல் பாகம் ஒட்டகத்தோடு தொடர்புடைய சம்பவமாகும். இரண்டாவது பாகம் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்வது தடுக்கப்பட்டது.  ஸஜ்தா செய்வது அனுமதிக்கப்பட்டதாக இருந்திருந்தால் ஒரு மனைவி தனது கணவனுக்கு செய்ய அனுமதித்து இருந்திருப்பேன் என்று சொல்லக்கூடிய பகுதியாகும். இதன் மூன்றாவது பகுதி தான் "என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக ஒரு பெண் தனது கணவனின் தலை முதல் கால் வரை வடிகின்ற சீழை நக்கினாலும் கணவனுக்கு அவள் மீதுள்ள உரிமை முழுமையடையாது என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்ட பகுதியாகும். 


இது குறித்து Shuaib Al-Arna'oot கூறுகிறார்:


"என் ஆன்மா யாருடைய கையில் இருக்கிறதோ, ...."  என்கிற இந்த செய்தி கலாஃப் பின் கலீஃபாவின் அறிவிப்பின்  பேரில் ஹுசைன் அல்-மர்வாதியின் தனித்த செய்தியாகும் மற்றும் இது கலாஃப் அவரது இறப்பதற்கு முன் புனையப்பட்டது ஆகும்.


 இது அல்-பஸார் 2454 மற்றும் அல்-தலாயில் 287 இல் அபு நைம் ஆகியோரால் முஹம்மது பின் முஆவியா பின் மலிஜ் அல்-பாக்தாதியின் பாதையில் இருந்து கலஃப் பின் கலீஃபாவின் அறிவிப்பின் பேரில் சொல்லப்பட்ட ஹதீஸில் "கணவரது சீழை மனைவி நக்குவதாக சொல்லும்" இறுதி பகுதி இல்லை. இதன் மூலம் இப்பகுதி மூளை குழம்பிய வயதான காலத்தில் கலஃப் பின் கலீஃபாவினால் புனையப்பட்ட செய்தி என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.


மேலும் இங்கு ஹதீஸில் இடம் பெறும் ஹலஃப் இப்னு கலிஃபாவை குறித்து:

مسلمة بن القاسم الأندلسي : وثقه وقال: من سمع منه قبل التغير فروايته صحيحة


 ஹலஃப் இப்னு கலிஃபா நம்பகமானவர் தான். ஆயினும் குழம்புவதற்கு முன் அவரிடம் கேட்டவை சஹீஹ் ஆனது என்று முஸ்லிம் பின் காசிம் அல் அண்டலூசி சொல்கிறார்..

ابن حجر العسقلاني : صدوق اختلط في الآخر

இப்னு ஹஜர் இவரை பற்றி சதூக் என்றும், (ஹதீஸில்) கலப்படம் செய்பவர்..என்று கூறுகிறார்

عثمان بن أبي شيبة العبسي : صدوق ثقة، لكنه خرف فاضطرب عليه حديثه

உஸ்மான் இப்னு அபிஷைபா குறிப்பிடுகையில் நம்பகமானவர் தான் ஆயினும் மூளை குழம்பிய பிறகு அவரது ஹதீஸில் குழப்பம் ஏற்பட்டுவிட்டதுகூறுகிறார்...

ﺻﺤﻴﺢ ﻟﻐﻴﺮﻩ ﺩﻭﻥ ﻗﻮﻟﻪ: "ﻭاﻟﺬﻱ ﻧﻔﺴﻲ ﺑﻴﺪﻩ ﻟﻮ ﻛﺎﻥ ﻣﻦ ﻗﺪﻣﻪ ... اﻟﺦ"، ﻭﻫﺬا اﻟﺤﺮﻑ ﺗﻔﺮﺩ ﺑﻪ ﺣﺴﻴﻦ اﻟﻤﺮﻭﺫﻱ ﻋﻦ ﺧﻠﻒ ﺑﻦ ﺧﻠﻴﻔﺔ، ﻭﺧﻠﻒ ﻛﺎﻥ ﻗﺪ اﺧﺘﻠﻂ ﻗﺒﻞ ﻣﻮﺗﻪ.

அதனால் இந்த செய்திக்கான விளக்கத்தில் ஷேக்  சுஐப் அர்நாவுத் கூறுகையில் "எனது உயிர் யாருடைய கையில் உள்ளதோ.........." என்று இடம் பெறும் பகுதி ஹுசைன் அல் மரூதி , ஹலஃப் பின் கலீஃப வழியாக அறிவிக்கும்  தனித்த செய்தியாகும்.  மரணத்திற்கு முன்பு ஹலஃப் குழம்பி போய்விட்டார்...


ஆகவே இந்த ஹதீஸின் இந்த புன்னை நக்கும் பகுதி நிராகரிக்கப்படுகிறது......


ﺃﺧﺒﺮﻧﺎ اﻟﺤﺴﻦ ﺑﻦ ﻳﻌﻘﻮﺏ اﻟﻌﺪﻝ، ﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻮﻫﺎﺏ اﻟﻔﺮاء، ﺃﻧﺒﺄ ﺟﻌﻔﺮ ﺑﻦ ﻋﻮﻥ، ﺛﻨﺎ ﺭﺑﻴﻌﺔ ﺑﻦ ﻋﺜﻤﺎﻥ، ﻋﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﺣﺒﺎﻥ، ﻋﻦ ﻧﻬﺎﺭ اﻟﻌﺒﺪﻱ، ﻭﻛﺎﻥ ﻣﻦ ﺃﺻﺤﺎﺏ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪ اﻟﺨﺪﺭﻱ، ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪ اﻟﺨﺪﺭﻱ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: ﺟﺎء ﺭﺟﻞ ﺇﻟﻰ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﺎﺑﻨﺔ ﻟﻪ، ﻓﻘﺎﻝ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﻫﺬﻩ اﺑﻨﺘﻲ ﻗﺪ ﺃﺑﺖ ﺃﻥ ﺗﺰﻭﺝ. ﻓﻘﺎﻝ ﻟﻬﺎ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺃﻃﻴﻌﻲ ﺃﺑﺎﻙ» ﻓﻘﺎﻟﺖ: ﻭاﻟﺬﻱ ﺑﻌﺜﻚ ﺑﺎﻟﺤﻖ ﻻ ﺃﺗﺰﻭﺝ ﺣﺘﻰ ﺗﺨﺒﺮﻧﻲ ﻣﺎ ﺣﻖ اﻟﺰﻭﺝ ﻋﻠﻰ ﺯﻭﺟﺘﻪ؟ ﻗﺎﻝ: " §ﺣﻖ اﻟﺰﻭﺝ ﻋﻠﻰ ﺯﻭﺟﺘﻪ: ﺃﻥ ﻟﻮ ﻛﺎﻧﺖ ﺑﻪ ﻗﺮﺣﺔ ﻓﻠﺤﺴﺘﻬﺎ ﻣﺎ ﺃﺩﺕ ﺣﻘﻪ «ﻫﺬا ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ اﻹﺳﻨﺎﺩ، ﻭﻟﻢ ﻳﺨﺮﺟﺎﻩ» K2767 - ﺑﻞ ﻣﻨﻜﺮ ﻗﺎﻝ ﺃﺑﻮ ﺣﺎﺗﻢ ﺭﺑﻴﻌﺔ ﻣﻨﻜﺮ اﻟﺤﺪﻳﺚ


“A man came to the Prophet ﷺ and said: O Messenger of Allah, this daughter of mine refuses to get married. The Prophet (peace and blessings of Allaah be upon him) said to her: “Obey your father.” She said: By the One Who sent you with the truth, I will not get married until you tell me what the husband’s rights over his wife are. He said: “The husband’s rights over his wife are such that if he had an ulcer and she licked it, she would not have fulfilled his rights.” She replied By the one who sent you with truth, I will never marry now. He peace be upon him said. Do not marry them (the girls) without their consent. [Targheeb wat-Tarheeb 3/35, Ibn Hibban 4163, Mustadrak al Haakim hadith no: 2767]


“ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே, என்னுடைய மகள் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாள்.  நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "உன் தந்தைக்குக் கீழ்ப்படியுங்கள்" என்று கூறினார்கள்.  அவள் சொன்னாள்: உங்களை உண்மையுடன் அனுப்பியவன் மீது சத்தியமாக, கணவனுக்கு மனைவி மீது என்ன உரிமை இருக்கிறது என்பதை நீங்கள் கூறும் வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.  நபி(ஸல்) கூறினார்கள்: “கணவனுக்கு மனைவியின் மீதான உரிமைகள், அவனுக்கு புண் ஏற்பட்டு, அவள் அதை நக்கினாலும், அவள் அவனுடைய உரிமைகளை நிறைவேற்றியிருக்க மாட்டாள்.” என்று நபி(ஸல்) கூறினார்:  உங்களை உண்மையுடன் அனுப்பியவன் மீது சத்தியமாக, நான் இப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பதிலளித்தாள். அவர்களின்(பெண்கள்) சம்மதம் இல்லாமல் அவர்களுக்கு திருமணம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.


 மேற்கண்ட ஹதீஸ் பின்வரும் அறிவிப்பாளர் வரிசையை கொண்டுள்ளது.அபூ ஸயீத் அல் குத்ரி➡️ நஹர் அல் அப்தி➡️ முஹம்மது பின் யாஹ்யா பின் ஹிப்பான் ➡️ ராபியா இப்னு உத்மான் ➡️ ஜாஃபர் பின் அவ்ன்  ➡️ இப்னு அபி ஷய்பா 


மேற்கண்ட ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள ராபியா இப்னு உஸ்மான் குறித்த விமர்சனம்:


أبو حاتم الرازي : منكر الحديث، يكتب حديثه

அபூ ஹாத்திம் கூறுகையில்: ஹதீஸில் விடப்பட்டவர். ஹதீசை அவரே எழுதி கொள்வார் என்று கூறுகிறார்.


ابن حجر العسقلاني : صدوق له أوهام

ஹாபிழ் இப்னு ஹஜர் கூறும் போது: நம்பகமானவர் ஆனால் குழம்பிப்போனவர்.

أبو زرعة الرازي : إلى الصدق ما وليس بذاك القوى

அபூ சர்ஆ கூறுகையில்: நம்பகமானவர் ஆனால் வழுவானவர் அல்ல என்று கூறுகிறார்.


ஆக இவ்விரண்டு செய்தியும் பலவீனமானது .....


ஆரம்பகால ஹதீஸ் அறிஞர்களின் கூற்றுப்படி, ஷேக் ‘அப்துல்லா அல்-ஜுதாய்’ ஹதீஸின் மறைக்கப்பட்ட குறைபாடுகளின் அறிகுறிகளைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:


 “ஹதீஸ் விமர்சகர்கள் பலவீனத்தின் அறிகுறிகளையும், இறை வெளிப்பாடு மற்றும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மொழிக்கும் சற்றும் பொருந்தாத மறைக்கப்பட்ட குறைபாடுகளைக் கண்டறிந்ததால், இது ஒரு ஹதீஸ் முன்கர் (நிராகரிக்கப்பட்ட) என்று அறிவிக்கப்படுகிறது.  பலவீனத்தின் அறிகுறிகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக அபு சயீத் அல்-குத்ரியின் அறிவிப்பில் கூறப்பட்ட செய்தியில், 'ஒரு பெண் தன் கணவனின் தலை முதல் கால் வரை பாயும் புண்ணீன் சீலை நக்கினாலும்...'.  என்கிற செய்தியாகும். இந்த ஹதீஸின் பலவீனம் பற்றிய வலுவான உணர்வு, அதன் பலவீனத்தை நான் உறுதியாக நம்பும் வரை எனக்கு இருந்தது... இந்த ஹதீஸ் தனது மனைவி மீது கணவனுக்கு உள்ள உரிமைகளை இப்படி வெறுக்கத்தக்க மொழியில் விவரிக்கும் விதம், சுன்னாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மொழியுடன் ஒப்பிடும்போது அந்நியமானது மற்றும் வித்தியாசமானது.  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மிகவும் சிந்தனைமிக்க மற்றும் மென்மையான வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து, ஞானம், சொற்பொழிவு மற்றும் சுருக்கமான ஆனால் விரிவான அர்த்தமுள்ள வார்த்தைகளை உருவாக்கும் திறன் கொண்டவர்.  கண்ணியமிக்க அல்லாஹ், திருக்குர்ஆனிலும், அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவிலும் தனது மனைவியின் மீதுள்ள உரிமைகளை மிக நேர்த்தியான மற்றும் விரிவான கூற்றுகளில் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்.  உதாரணமாக, கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்: ஆண்களுக்கு முறைப்படி பெண்களின் மீதுள்ள உரிமைகள் போன்றதே. [குர்ஆன் 2:228]."  [தஹ்ரீர் உலூம் அல்-ஹதீத், 2/757]


ஒரு வாதத்திற்காக இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று நாம் கருதினாலும், கணவனுக்கு மனைவி மீதுள்ள உரிமையின் மகத்துவத்தை வெளிப்படுத்துவதே இதன் ஒரே நோக்கமாகும்.  இந்த அர்த்தம் பல ஆதாரப்பூர்வமான மற்ற செய்திகளில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.  கணவனிடமிருந்து வெளியாகும் சீழை நக்குமாறு மனைவி கட்டளையிடப்படுகிறாள் என்பது இதன் அர்த்தமல்ல. ஏனென்றால் சீழ் தூய்மையற்றது மற்றும் அசுத்தமானது.  மாறாக கணவனுக்கு மனைவி மீதுள்ள பெரும் உரிமைகளை வலியுறுத்துவதன் மிகைப்படுத்தலே இச்செய்தியாகும். மேலும் அறிவிப்பாளரில் உள்ள பலவீனங்கள் மூலமாகவும், வேறு அறிவிப்புகளில் வரும் ஸஹீஹான ஹதீஸ்கள் மூலமாகவும் இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்று நிருபணமாகிறது. புனையப்பட்ட ஒரு செய்தியை அடிப்படையாக வைத்து ஒருபோதும் இஸ்லாத்தை விமர்சிக்க முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்