இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹிஜாப் பற்றிய சட்டம் சுதந்திரமான பெண்களையும் அடிமைப் பெண்களையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக தான் அருளப்பட்டதா?

படம்
ஹிஜாப் பற்றிய சட்டம் சுதந்திரமான பெண்களையும் அடிமைப் பெண்களையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக தான் அருளப்பட்டதா?   உலகம் முழுவதும் நடக்கும் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இஸ்லாமிய அடையாளங்கள் தடை செய்யப்பட்டு வருகின்றன. இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் மிக முக்கியமான இடத்தை ஹிஜாப் பெறுகிறது.  ஒருசில நாடுகளில் பெண்கள் ஹிஜாப் அணிவது தடைசெய்யப்பட்டு வருகிறது.  ஹிஜாபுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்வோர் ஆதாரமற்ற ஹதீஸ்களைத் தொகுத்து அதை திரித்து ஹிஜாபுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில் மிக முக்கியமானது ஹிஜாப் என்பது சுதந்திரமான பெண்களையும், அடிமைப் பெண்களையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக கொடுக்கப்பட்ட சட்டம் என்றும், ஆகவே ஹிஜாப் இந்த காலத்திற்கு தேவையற்றது என்றும், அடிமைப் பெண்கள் ஹிஜாப் அணிய இஸ்லாம் தடுத்துள்ளது என்றும் அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர். இந்த அவதூறு பிரச்சாரத்திற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களை ஒவ்வொன்றாக நாம் இனி பார்க்க இருக்கிறோம். வாதம் 1: சுதந்திரமான பெண்களையும் அடிமைப் பெண்களையும் வேறுபடுத...

கணவனது சீழை மனைவி நக்கினாலும் அவனது உரிமையை முழுமையாக நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என்று சொல்லும் செய்தி ஆதாரப்பூர்வமானதா?

கணவனது சீழை மனைவி நக்கினாலும் அவனது உரிமையை முழுமையாக நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என்று சொல்லும் செய்தி ஆதாரப்பூர்வமானதா? இஸ்லாத்தை தவறான முறையில் சித்தரிக்க விரும்புபவர்கள் பலவீனமான ஹதீஸ்களின் பக்கம் ஓடுவது வாடிக்கையான ஒன்றுதான். கீழ்க்கண்ட ஹதீஸை சுட்டிக்காட்டி பெண்களை தனது கணவன்மார்களின் உடலில் இருந்து வடியும் சீழை நக்க இஸ்லாம் சொல்கிறது என்கிற ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்த இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் முயற்சி செய்கின்றனர். அவர்களுடைய அந்த முயற்சி வீணாண ஒன்றாகும். ஏனெனில் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் கலையின் அடிப்படை ஞானம் தெரிந்தவர்கள் எவரும் இஸ்லாத்தை ஒருபோதும் தவறாக விளங்கிக் கொள்ளவே மாட்டார்கள். இஸ்லாமிய விரோதிகள் தங்களது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக வைக்கும் ஹதீஸின் தன்மை குறித்து ஆய்வு செய்வோம். 12614 - ﺣﺪﺛﻨﺎ ﺣﺴﻴﻦ، ﺣﺪﺛﻨﺎ ﺧﻠﻒ ﺑﻦ ﺧﻠﻴﻔﺔ، ﻋﻦ ﺣﻔﺺ، ﻋﻦ ﻋﻤﻪ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﻗﺎﻝ: .............ﻓﻘﺎﻝ: «ﻻ ﻳﺼﻠﺢ ﻟﺒﺸﺮ ﺃﻥ ﻳﺴﺠﺪ ﻟﺒﺸﺮ، ﻭﻟﻮ ﺻﻠﺢ ﻟﺒﺸﺮ ﺃﻥ ﻳﺴﺠﺪ ﻟﺒﺸﺮ، ﻷﻣﺮﺕ اﻟﻤﺮﺃﺓ ﺃﻥ ﺗﺴﺠﺪ ﻟﺰﻭﺟﻬﺎ، ﻣﻦ ﻋﻈﻢ ﺣﻘﻪ ﻋﻠﻴﻬﺎ، ﻭاﻟﺬﻱ ﻧﻔﺴﻲ ﺑﻴﺪﻩ، ﻟﻮ ﻛﺎﻥ ﻣﻦ ﻗﺪﻣﻪ ﺇﻟﻰ ﻣﻔﺮﻕ ﺭﺃﺳﻪ ﻗﺮﺣﺔ ﺗﻨﺒﺠﺲ ﺑﺎﻟﻘﻴﺢ ﻭاﻟﺼﺪﻳﺪ، ﺛﻢ اﺳﺘﻘﺒﻠﺘﻪ ﺗﻠﺤﺴﻪ ﻣﺎ ﺃﺩﺕ ﺣﻘﻪ» Anas ر...