பைபிளில் சொல்லப்பட்டுள்ள இஸ்லாம் பற்றிய தீர்க்கதரிசனங்கள் பாகம் - 6
பைபிளில் சொல்லப்பட்டுள்ள இஸ்லாம் பற்றிய தீர்க்கதரிசனங்கள் பாகம் - 6
اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ
திண்ணமாக, மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வணக்கத்தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள்நலம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் அது உள்ளது.
(அல்குர்ஆன் : 3:96)
ஆதிமனிதன் கட்டிய முதல் இறை வீடு "மக்கா"வாகும், இவ் இடத்தை "பக்கா" எனவும் அழைப்பர். நோவா (நூஹ்)வின் காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரலயத்தினால் பாதிக்கப்பட்ட கர்த்தருடைய இந்த பலிபீடம் ஆபிரகாமுடைய காலத்தில் மீள்
கட்டுமானம் செய்யப்பட்டது. பணம் படைத்தவர்கள் வாழ்வில் ஒரு முறையேனும் இந்த முதல் இறைவீட்டுக்கு பயணப்படுவது கடமையாகும். அதை ஹஜ் என்று முஸ்லிம்கள் அழைப்பார்.
ஆபிரகாமுக்கு மக்காவை பலிபீடம் நிர்மாணிக்கும் பொறுப்பை கர்த்தர் வழங்கினார். மேலும் ஆபிரகாமும், அவரது குடும்பத்தினரும் பட்ட கஸ்டங்கள் மற்றும் தியாகத்தை ஞாபகமூட்டுவதே ஹஜ் கடமையின் முதன்மை நோக்கம் ஆகும்.
ஆனால் பல கிறிஸ்தவர்கள் ஆபிரகாம் "பக்கா" எனும் கர்த்தருக்கான பலிபீடத்தை அமைக்கவில்லை என்பர். ஆக முதலில் ஆபிரகாம் மீளமைத்த பலி பீடம் 'பக்கா' என்பதனை பைபிள் கொண்டு நிறுவ நினைக்கிறேன்.
பைபிளில் ஆதியாகமம் அதிகாரம் 12 இல் முதல் இரு வசனமும் பதிவு செய்கிறது. 'கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். (ஆதியாகமம் 12: 1,2)". ஆபிரகாம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள்.
கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். (ஆதியாகமம் 12:6,7) இந்த பலி பீடம்தான் "பக்கா" ஆகும்.
இதனை கிறிஸ்தவ சகோதரர்கள் மறுப்பீர்கள். மறுப்பவர்களுக்காக இன்னும் விளக்கமாக பார்ப்போம்..
ஆபிரகாம் "மோரே" என்னும் சமபூமி வந்தடைந்ததாக பைபிளில் கூறப்படுகிறது. அது இன்று பக்கா நகரில் மர்வா குன்றின் அருகில் உள்ள சமவெளியாகும் எனலாம். மேலும் அத்தேசத்தில் "கானானியர்" இருந்தார்கள் என்கிறது பைபிள்.
"கானானியர்" என்றால் கன்மலையில் குடியிருப்பவர்கள். அப்படி குடி இருந்த கானானியர்கள் அரபியராகும். அதற்கு இன்றும் வரலாற்று ஆவணங்கள் உண்டு. அரபியில் "கஹ்தானியர்" என்று அழைப்பார். இந்த அரபியர் பரம்பரை இன்றும் சவுதி அரேபியாவில் மக்கா நகரத்தை ஒட்டி வாழ்கின்றனர். இவர்கள் யார் என்பதை மேலதிகமாக பைபிளின் படி தெரிந்து கொள்ள பைபிள் ஏசாயா 42:11 ஐ புரட்ட வேண்டும். அது சொல்கிறது "பாலைநிலமும், அதின் ஊர்களும், கேதாரியா குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக."(ஏசாயா 42:11)
இங்கு பேசப்படும் அனைத்து இடமும் அரேபியர்கள் வாழ்ந்த வாழும் இடமாகிய மக்கா நகரமாகும். மேலும் இன்றுவரை அங்கு சபா மர்வா குண்றுகளில் ஹஜ் காலங்களில் பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பவர்களாக இருக்கின்றனர்.
ஆபிரகாம் கட்டியதாக ஆதியாகமம் 12:6,7 இல் குறிப்பிடும் இடம் 'பக்கா' எனும் பலி பீடமே ஆகும் .
ஆதியாகமம் 12:6,7 இல் பைபிள் பேசும் அதே செய்தியை குர்ஆனும் வேறு தொனியில் பதிவு செய்கிறது.
குர்ஆனின் 2:127 அது சொல்கிறது
وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ
மேலும் நினைவுகூருங்கள்: இப்ராஹீமும் இஸ்மாயீலும் அவ் வீட்டின் சுவர்களை உயர்த்திக் கொண்டிருந்த பொழுது இவ்வாறு பிரார்த்தித்தார்கள்: “எங்கள் இறைவனே! எங்களுடைய இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் எல்லாவற்றையும் செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்.
(அல்குர்ஆன் : 2:127)
ஆக ஆபிரகாம் கர்த்தரின் கட்டளை பிரகாரம் "பக்கா" வில் ஒரு பலீபீடத்தை கட்டினார் என்பது தெளிவாகிறது.
"ஸம் ஸம் " நீர் கிணறும், "ஸபா , மர்வா" மலைகளுக்கு இடையான ஓட்டமும் ஹஜ் செய்பவர்களுக்கு ஆபிரகாமின் மனைவியான ஆகார் மற்றும் ஆபிரகாமின் மகனான இஸ்மவேலும் பட்ட கஸ்டத்தை எடுத்து ஞாபகமூட்டும் ஒரு அடையாளமாகும் என முஸ்லீம்கள் நம்புகின்றனர்.
அதை பற்றி பைபிள் என்ன பேசுகிறது என பார்ப்போம்.
ஆகார்(ஹாஜரா) , இஸ்மவேல் (இஸ்மாயில்) போன்றவர்களை ஆபிரகாம் "பக்கா" பாலைவனத்தில் விட்டு சென்ற போது தண்ணீர் இல்லாத நிலையில் ஆகார் ( அலை) நீர் தேடி சபா மர்வா மலைகளுக்கிடையில் அங்குமிங்கும் ஓடினார்கள் , அதை நினைவு கூறவே இன்றும் ஹஜ் செய்பவர்கள் அம்மலைகளுக்கிடையில் ஆகார் (அலை) ஓடியது போல் ஓடுகின்றனர்.. சரி இச்சம்பவத்தை பைபிள் எடுத்துறைக்கிறதா என்றால் ... ஆம்...
பைபிலில் ஆதியாகமம் அதிகாரம் 21 சொல்கிறது ..
"தோற்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின் அவள் புதர் ஒன்றின் அடியில் குழந்தையைக் கிடத்தினாள்.
பின்பு அவள் முன்புறம் சென்று அம்பு எறியும் தூரத்தளவில் உட்கார்ந்து கொண்டாள். "குழந்தை சாவதைப் பார்க்கச் சகியேன் "என்று கூறி, முன்புறமிருந்து கொண்டே கூக்குரலிட்டு அழுதாள். அப்பொழுது கடவுள் அவள் கண்களைத் திறந்துவிட, அவள் நீருள்ள கிணற்றைக் கண்டாள். அவள் அங்குச் சென்று தோற்பையை நீரால் நிரப்பிப் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். கடவுளும் பையனோடு இருந்தார். அவன் வளர்ந்து பாலை நிலத்தில் குடியிருந்தான். அம்பு எய்வதில் வல்லவனானான். "
(தொடக்கநூல் 21:15-20)
அந்த "தேவனும் பையனோடு இருந்து வளர்த்த பாலை நிலத்தின்" பெயர்தான் "பக்கா" ஆகும். அங்குதான் இன்றும் முஸ்லிம்கள் ஹஜ் எனும் புனித பயணத்தை மேற் கொண்டு மூதாதையான அபிரகாமுக்கும் அவரது குடும்பத்திற்கும் உதவியதற்கு கர்த்தருக்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.
மேலும் பைபிள் இஸ்மவேலுக்காக கர்த்தர் நீர் ஏற்படுத்திய இடம் 'பக்கா' என பைபிள் இடத்தின் பெயருடனே (சங்கீதம் : 84:6) இல் பதிவிடுகிறது.
அவ்வசனம் வறண்ட "பக்கா(Baca)" பள்ளத்தாக்கை அவர்கள் கடந்து செல்கையில், அது நீருற்றுகள் உள்ள இடமாக மாறுகின்றது; முதல் பருவமழை அதனை நீர்நிலைகள் நிறைந்த இடமாக்கும்.
(திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 84:6),
KJV
Who passing through the valley of Baca make it a well; the rain also filleth the pools.
ESV
As they go through the Valley of Baca they make it a place of springs; the early rain also covers it with pools.
இது சில தமிழ் பைபிள்களில் நயவஞ்சக தனமாக பக்கா என்ற பெயரை மறைத்து அழுகையின் பள்ளத்தாக்கு என்று மாத்திக் கொண்டனர் சில கிறிஸ்தவர்கள்.
{மாற்றப்பட்ட வசனம் :அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.
(சங்கீதம் 84:6)}
ஆக பைபிளின் படி இஸ்மவேலும் ஆபிரகாமும் , ஆகாரும் வாழ்ந்து, பலிபீடம் கட்டி, கர்த்தரை வணங்கிய இடம் பக்கா என்பது தெளிவாகிறது.
அவ் விடத்தையே இன்று ஆபிராகமினது தியாகத்தை நினைவு கூற ஹஜ் பயணம் முஸ்லிம்கள் மேற்கொள்கின்றனர். ஆனால் இப் புனித பயணத்தை பைபிளின் படி கிறிஸ்த்தவர்களும் செய்து கர்த்தரை வணங்க வேண்டும் என்பதே உண்மை.
தொடரும்➖➖➖➖➖➖➖
கருத்துகள்
கருத்துரையிடுக