பைபிளில் சொல்லப்பட்டுள்ள இஸ்லாம் பற்றிய தீர்க்கதரிசனங்கள் பாகம் 3
பைபிளில் சொல்லப்பட்டுள்ள இஸ்லாம் பற்றிய தீர்க்கதரிசனங்கள்
பாகம் 3
✍️ உபாகமம் 18 :18 வசனம் முஹம்மது நபியை குறித்து பேசுகிறது என்பதை முந்தைய பதிவில் நாம் பார்த்திருந்தோம். அதற்கு மறுப்பாக சில கிறிஸ்த்தவர்கள் உபாகமம் 18 :18 வசனம் இயேசுவைக் குறித்து பேசுகிறது என்று சில கிறிஸ்தவர்கள் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றனர். அந்த வாதத்தின் உண்மை தன்மையை பற்றி இங்கு நாம் ஆய்வு செய்வோம்.
👉 அப்போஸ்தலர் 3 22:
"மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக."
✍️ மேற்கண்ட வசனத்தை ஆதாரமாக சுட்டிக்காட்டி மோசே சொன்ன தீர்க்கதரிசி இயேசுதான் என்று கிறிஸ்தவர்கள் வாதிடுகின்றனர்.
✍️ ஆனால் இது உண்மை அல்ல. மோசே போன்ற தீர்க்கதரிசி இஸ்ரவேல் சமூகத்தில் மீண்டும் எழும்ப போவதே இல்லை என்று உபாகமம் மிக தெளிவாக சொல்லி இருக்கும் பொழுது இஸ்ரவேல் சமூகத்தை சார்ந்த இயேசு எவ்வாறு மோசே போன்ற தீர்க்கதரிசியாக எவ்வாறு இருக்க முடியும்?நிச்சயமாக இருக்கவே முடியாது.
👉உபாகமம் 34:12
"கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும். "
✍️ மோசேக்கு பின் காலங்களில் மோசே போன்ற தீர்க்கதரிசி இஸ்ரவேல் சமூகத்தில் ஒருபோதும் வரமாட்டார்கள் என்ற அர்த்தத்திலேயே மேலே இருக்கின்ற வசனம் இருக்கிறது. ஆனால் கிறிஸ்தவர்கள் மோசே சொன்ன தீர்க்கதரிசி இயேசு தான் என்று தவறாக சித்தரிப்பதற்கு மேலே இருக்கின்ற வசனம் இறந்த காலத்தில் இருக்கிறது என்று பொருள் கொடுக்கப்பார்க்கின்றனர்.
✍️ மேலே இருக்கின்ற வசனம் இறந்தகாலத்தில் சொல்லப்பட்டு இருந்தாலும் அது எதிர் காலத்தை குறிக்கும் என்பதற்கு பைபிளிலேயே பல ஆதாரங்கள் இருக்கின்றன.
✍️ உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால் மேசியாவை பற்றிய தீர்க்கதரிசனம் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றன ஏசாயா 9:6 வசனம் இறந்த காலத்தில் தான் இருக்கிறது என்பது இதற்கு சிறந்த ஆதாரமாக இருக்கிறது.
👉"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9:6"
✍️ இதனாலும் உபாகமம் 18:18 இல் சொல்லப்பட்டுள்ள மோசே போன்ற தீர்க்கதரிசி உன் சகோதரர்கள் இருந்து எழுப்புவேன் என்ற வசனம் இஸ்ரேலில் இருந்து வருகின்ற எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் பொருந்தாது.
✍️ மாறாக இஸ்ரவேலரின் சகோதரர்களான இஸ்மவேல் சந்ததியில் வந்த முஹம்மது நபிக்கு தான் அது பொருந்தும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
✍️ மோசேவிற்கு பிறகு கர்த்தரை முகமுகமாய் அறிந்த தீர்க்கதரிசி முஹம்மது நபியை தவிர வேறு எவரும் இல்லை .
✍️ ஏனெனில் முஹம்மது நபியை மிஃராஜ் பயணத்தில் அல்லாஹ்விடம் முகமுகமாக நேரடியாய் பேசினார் என்பதை இஸ்லாம் மிகத் தெளிவாக பதிவு செய்திருக்கிறது.
👉“அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அது அவருக்கு அறிவிக்கப்படும் வஹியேயன்றி வேறில்லை”
(அல்குர்ஆன் 53:3-4)
👉முஹம்மது நபி அல்லாஹ்விடம் நேரடியாக மிஃராஜ் பயணத்தில் பேசியுள்ளார்.
279. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூஹர் (ஸல்) அவர்கள் (விண்ணுலகப் பயணத்திற்காக)இரவில் அழைத்துச் செல்லப்பட்ட போது (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா” வரை அவர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். அ(ந்த மரத்தில் வேர்பகுதியான)து ஆறாம் வானத்தில் அமைந்துள்ளது. பூமியிலிருந்து மேலே கொண்டு செல்லப்படும் (உயிர்கள், மனிதர்களின் செயல்கள் பற்றிய குறிப்புகள்) யாவும் அங்கு தான் சென்று சேர்கின்றன; அங்கே அவை கையகப்படுத்தப்படுகின்றன.அதற்கு மேலேயிருந்து கிழே கொண்டு வரப்படும் (இறைக்கட்டளைகள்) யாவும் அங்குதான் வந்து சேர்கின்றன; அங்கே (வானவர்களால்) அவை பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
“சித்ரத்துல் முன்தஹா எனும் அம்மரத்தை ஏதோ (பிரமாண்டமான) ஒன்று சூழ்ந்து கொண்டிருக்கிறது” எனும் (53:16 ஆவது) வசனம் தங்கத்தாலான விட்டில் பூச்சிகளையே குறிக்கிறது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்று(கட்டளைகள்) வழங்கப்பட்டன. அவையாவன: 1. ஐவேளைத்தொழுகைகள் வழங்கப்பட்டன. 2. அல்பகரா அத்தியாயத்தின் இறுதி (மூன்று) வசன்ங்கள் அருளப்பெற்றன. 3. அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்(படுவதாக அறிவிக்கப்)பட்டது.
(ஸஹீஹ் முஸ்லிம்)
✍️ மேலும் உபாகமம் 34:12 இல் குறிப்பிடப்படும்
"கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல.." என்ற வாசகத்துக்கு கர்த்தரை நேருக்கு நேர் சந்தித்தார் மோசே என்று பொருள் கொள்ள முடியாது .(அப்படி பொருள் கொண்டாலும் கர்த்தரை முஹம்மது நபி அவர்கள் விண்ணுலகில் நேரடியாக கண்டர்கள்)
✍️ ஏன் எனில் முகம் முகமாய் பேசுயது மோஸே மாத்திரம் அல்ல என பைபிள் பேசுகிறது .
👉"Deuteronomy 5:4 இல்
கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாய் உங்களோடே பேசினார்.
The LORD talked with you face to face in the mount out of the midst of the fire,"
✍️ மோசே மட்டுமல்லாது பலருடன் கர்த்தர் முகம் முகமாய் பேசியுள்ளார் என்கிறது பைபிள், அதே நேரம் பைபிள் யோவானில் பின்வருமாறு கூறுகிறது .
👉 "என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
(யோவான் 5:37)"
✍️ ஆகவே உபாகமம் 34:12 இல் குறிப்பிட்டுள்ள
"கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல,.. "என்றால் கர்த்தரை நெருக்கமாக புரிந்து கொண்டார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
✔️ எப்படி பார்த்தாலும் உபாகமம் 18:18 முஹம்மது நபிக்கு மாத்திரமே பைபிள் படி பொருந்துகிறது என்பது உறுதியாகிறது.
தொடரும்…….
கருத்துகள்
கருத்துரையிடுக