பைபிளில் சொல்லப்பட்டுள்ள இஸ்லாம் பற்றிய தீர்க்கதரிசனங்கள் - பாகம் 10
1️⃣2️⃣ ஏசாயா 42
12: கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக.
இந்த சிறப்பு நபரின் தாக்கம் வெகு தொலை வரை இருக்கும் என்பதை இது குறிக்கிறது. இஸ்லாம் அரேபிய தீபகற்பம் முழுவதும் வேகமாகப் பரவியது. நபிகள் நாயகத்திற்குப் பிறகு நூறு ஆண்டுகளில் ஸ்பெயினுக்கு கூட சென்றது. இன்று உலகில் 2 பில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் உள்ளனர். இந்த உலகில் 4 பேரில் ஒருவர் முஸ்லிம்களாக உள்ளனர்.
1️⃣3️⃣ ஏசாயா 42
13: கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.
இங்கே ஏசாயா முன்னறிவிக்கப்பட்ட ஊழியக்காரர் தேவனின் எதிரிகளுக்கு எதிராக வெற்றி பெறுவார் என்று தீர்க்கதரிசனம் சொல்கிறார். முஹம்மது நபியின் வாழ்க்கையில் ஒருவர் கொஞ்சம் கவனம் செலுத்தினால், இந்த தீர்க்கதரிசனம் அவரது வருகையால் நிறைவேறியது என்பதை சிறிது கூட சந்தேகம் இல்லாமல் ஏற்றுக் கொள்வார். நீதி மற்றும் கருணையை எதிர்ப்பவர்களுக்கு எதிராக முஹம்மது நபி ஒரு "போர்வீரனாக" அனுப்பப்பட்டுள்ளார் என்பதையே மேற்கண்ட ஏசாயா வசனம் சொல்கிறது. அவர் நேரடியாக 27 போர்களில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அவருடன் சண்டையிட்ட கடவுளின் அனைத்து எதிரிகளுக்கும் எதிராகவும் அவர் வெற்றி பெற்றார். முகமது நபியை அழிக்க இஸ்லாமிய எதிரிகள் எல்லா வழிகளையும் பயன்படுத்தினாலும் அவர்கள் தோல்வியையே சந்தித்தனர். இறைவன் முஹம்மது நபியை இஸ்லாமிய எதிரிகளிடமிருந்து பாதுகாத்தான். அகல் போரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய விரோதிகள் முஹம்மது நபி மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்று திரண்ட போதிலும் அவர்கள் தோல்வியை சந்தித்தனர். இஸ்லாம் வென்றது.
வரலாற்றாசிரியர் ஹோவர்ட் ஜான்ஸ்டன் இஸ்லாத்தின் வெற்றியை கீழ்கண்டவாறு விவரிக்கிறார்:
" எல்லாவற்றிற்கும் மேலாக ஏழாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இஸ்லாம் செய்ததைப் போல, எப்போதாவது மட்டுமே ஒரு சில கருத்துக்கள் மனித சமுதாயங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வெறும் இருபது ஆண்டுகளுக்குள்ளாகவே, அரேபியாவின் மத மற்றும் அரசியல் அமைப்பின் அனைத்து அங்கீகாரங்களும் மாற்றப்பட்டது. மற்றொரு இருபதுக்குள் அரேபியாவை உள்ளடக்கிய பணக்கார, மிகவும் வளர்ந்த, இராணுவ ரீதியாக சக்திவாய்ந்த உலகம் அனைத்தும் கைப்பற்றப்பட்டது ஆசியா மைனர் மற்றும் வட ஆபிரிக்காவைத் தவிர".
[James Howard-Johnston, Witnesses to a World Crises, 2010, pp. 357-358.]
முஹம்மது நபி சிலைகளை வணங்கும் மக்களுடன் அவர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக பல போர்களில் ஈடுபட வேண்டியிருந்தது. இறுதியில் அவர்களுக்கு எதிராக வெற்றியும் பெற்றார். குர்ஆன் அதை பின்வருமாறு வர்ணிக்கிறது:
يُرِيْدُوْنَ لِيُطْفِـــٴُــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ
இவர்கள், அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களால் ஊதி அணைத்துவிட விரும்புகின்றார்கள். ஆனால், அல்லாஹ்வின் முடிவு என்னவெனில் தன் ஒளியை முழுமையாகப் பரப்பியே தீர்வது என்பதாகும்; இறைநிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!
(அல்குர்ஆன் : 61:8)
هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ
அவன்தான் தன்னுடைய தூதரை நேர்வழியுடனும், சத்தியமார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். ஏனைய மார்க்கங்களைவிட அதனை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக; இணைவைப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!
(அல்குர்ஆன் : 61:9)
1️⃣4️⃣ ஏசாயா 42
14: நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.
இஸ்மவேல் சமூகத்தில் நீண்ட காலமாக எந்த ஒரு தீர்க்கதரிசியும் அனுப்பப்படாமல் இருந்தார்கள். இயேசுவிற்கும் முஹம்மதுவுக்கும் இடையில் 600 ஆண்டு நீண்ட கால தீர்க்கதரிசிகள் இல்லாத காரணமாக இருந்தது. இந்த நேரத்தில் அரபுக்கள் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் சிலைவழிபாடு பெருமளவில் பரவி இருந்தது. இயேசுவைப் பின்பற்றுவதாக சொல்லப்படும் கிறிஸ்தவ மதத்தில் கூட சிலை வழிபாடு திரித்துவமாக புகுந்து இருந்தது. தீய பழக்கவழக்கங்களும் பெருமளவில் பரவியிருந்தது. இந்த தீமையை கடவுள் இனி பொறுத்துக்கொள்ளாமல் இந்த சிறப்பு நபர் வெளிப்பட்டு ஏகத்துவத்தை நிலைநாட்டுவார் என்று பொருள் கொள்கிறது. குர்ஆன் எங்களுக்குத் தெரிவிக்கிறது:
يٰۤـاَهْلَ الْـكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُـنَا يُبَيِّنُ لَـكُمْ عَلٰى فَتْرَةٍ مِّنَ الرُّسُلِ اَنْ تَقُوْلُوْا مَا جَآءَنَا مِنْ بَشِيْرٍ وَّلَا نَذِيْرٍ فَقَدْ جَآءَكُمْ بَشِيْرٌ وَّنَذِيْرٌ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
வேதம் அருளப்பட்டவர்களே! தூதர்களின் வருகைத் தொடர் சிறிது காலம் வரை நின்று போயிருந்த சமயத்தில் எம்முடைய இந்தத் தூதர் உங்களிடம் வந்துள்ளார். மேலும், இறைநெறியின் தெளிவான அறிவுரைகளை உங்களுக்குக் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றார். எதற்காகவெனில், நற்செய்தி கூறக்கூடிய, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடிய எவரும் எங்களிடம் வரவில்லையே என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காக! (இதோ பாருங்கள்:) இப்போது நற்செய்தி கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்து விட்டார். மேலும், அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:19)
1️⃣5️⃣ ஏசாயா 42
15: நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகப்பண்ணுவேன்.
இங்கே தேவனின் திட்டம் உவமையாக சொல்லப்படுகிறது. மலைகளையும் குன்றுகளையும் பாலாக்கி அவைகளில் உள்ள பூண்டுகளை எல்லாம் வாடிப்பட்டி, ஆறுகளையும் ஏரிகளையும் வற்றிப் போக பண்ணுவேன் என்று தேவன் சொல்வதெனில் சிலைவழிபாடு மக்களின் வழிபாட்டு முறையையும் தீய பழக்க வழக்கங்களையும் அவர்களது புனித தலங்களையும் வேறோடு அழிப்பேன் என்ற அர்த்தத்திலேயே தேவன் இங்கு உவமையாக சொல்கிறார். முஹம்மது நபி தனது நபித்துவ பணியை பூர்த்தி செய்து மரணத்தை நெருங்கும் நேரத்தில் அரபு தீபகற்பம் முழுவதும் உள்ள சிலை வழிபட்டார்கள் முஸ்லிம்களாக மாறி இருந்தனர். இதன் விளைவாக அவர்களது வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. மேலும் முஹம்மது நபியால் புதுப்பிக்கப்பட்ட மார்க்கம் எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் சிலைவழிபாடு முற்றிலுமாக அழிந்து ஏகத்துவம் நிலைபெற்றது என்பதையே ஏசாயாவின் மேற்கண்ட வசனம் தீர்க்கதரிசனமாக சொல்கிறது.
1️⃣6️⃣ ஏசாயா 42
16: குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
முஹம்மது நபி காலத்தில் வாழ்ந்த பாகன் அரேபியர்கள் இந்த விளக்கத்திற்கு சரியாகப் பொருத்துகிறார்கள். ஏனெனில் முஹம்மது நபிக்கு முன்னர் எந்த ஒரு தூதரும் அவர்களுக்கு அனுப்பப்படவில்லை என்பதற்கு குர்ஆன் சாட்சியம் அளிக்கிறது.
… இதற்கு முன்னர் எந்த எச்சரிக்கையும் வராத மக்களை எச்சரிக்கவும்… [அத்தியாயம் 32, வசனம் 3]
"நான் அவர்களுக்கு முன் இருளை ஒளியாக மாற்றுவேன் ..."
அறியாமை மற்றும் பாவத்தின் சின்னம் இருள். இவை அனைத்தும் தலைகீழாக மாறும் - பாவம் நல்லொழுக்கத்தினாலும், அறியாமை அறிவின் மூலமும் மாற்றப்படும். குர்ஆன் கூறுவது போல் இருள் வெளிச்சமாக மாறியது:
அதாவது, ஒரு தூதரை! அவரோ தெளிவாக வழிகாட்டக் கூடிய இறைவசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டுகின்றார். இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோரை இருளிலிருந்து வெளியேற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக!
(அல்குர்ஆன் : 65:11)
1️⃣7️⃣ ஏசாயா 42
17: சித்திரவேலையான விக்கிரகங்களை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.
ஏசாயா 42இல் தீர்க்கதரிசனமாக சொல்லப்படும் நபர் சிலைகளை வணங்கும் மக்களுக்கு அனுப்பப்படுவார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. சிலை வழிபாடு செய்த இஸ்லாத்திற்கு முந்திய அரபுகளுக்கு இந்த வசனம் மிக சரியாக பொருந்துகிறது. முஹம்மது நபியின் சத்திய ஏகத்துவ பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த முயன்ற சிலை வழிபாட்டாளர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியை சந்தித்து இறுதியில் கேவலப்பட்டு பின்னடைவார்கள் என்பதையே மேற்கண்ட வசனம் தீர்க்கதரிசனமாக சொல்கிறது. இது தான் முகமது நபியின் காலத்திலும் நடந்தது. இஸ்லாத்தின் இந்த வெற்றியை குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது:
اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ
அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வந்து விடும்போது
(அல்குர்ஆன் : 110:1)
وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِىْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًا ۙ
மேலும் (நபியே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் திரள்திரளாக நுழைவதை நீர் காணும்போது
(அல்குர்ஆன் : 110:2)
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؔ اِنَّهٗ كَانَ تَوَّابًا
நீர் உம் இறைவனைப் புகழ்ந்து கொண்டு அவனைத் துதிப்பீராக! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன், பாவமன்னிப்புக் கோரிக்கையை பெரிதும் ஏற்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 110:3)
1️⃣8️⃣ ஏசாயா 42:18-23 செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப்பாருங்கள். என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்? நீ அநேக காரியங்களைக் கண்டும் கவனியாதிருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதேபோகிறான். கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார். இந்த ஜனமோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள். உங்களில் இதற்குச் செவிகொடுத்துப் பின்வருகிறதைக் கவனித்துக் கேட்கிறவன் யார்?
இறுதியாக ஏசாயா 41 தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டுள்ள நபரின் போதனைகளுக்கு செவி தாழ்த்தாதவன் செவிடனாகவும் குரடனாகவும் சித்தரிக்கப்படுகிறான்.
கருத்துகள்
கருத்துரையிடுக