பைபிளில் சொல்லப்பட்டுள்ள இஸ்லாம் பற்றிய தீர்க்கதரிசனங்கள் பாகம் 1
முஹம்மது நபி பற்றிய முன்னறிவிப்பு.
இந்த தொடர் முஹம்மது நபி பற்றிய முன்னறிவுப்பு பற்றி பைபிளில் காணப்படும் செய்திகளை நடுநிலையான கிறிஸ்த்தவர்களுக்கு எடுத்து வைக்க உதவும் என எதிர்பார்க்கிறோம்.
முஹம்மது நபி பற்றி இதற்கு முன்னர் யூதர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களில் ( தவ்ராத்திலும் இன்ஜீலிலும்) யூதர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டிருந்ததாக குர்ஆன் பதிவு செய்கிறது.
اَ لَّذِيْنَ يَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِىَّ الْاُمِّىَّ الَّذِىْ يَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِى التَّوْرٰٮةِ وَالْاِنْجِيْلِ يَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَيَنْهٰٮهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبٰۤٮِٕثَ وَيَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِىْ كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِيْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَ اتَّبَـعُوا النُّوْرَ الَّذِىْۤ اُنْزِلَ مَعَهٗ ۤ ۙ اُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
(அல்குர்ஆன் : 7:157)
قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ جَمِيْعَاْ ۨالَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ يُحْىٖ وَيُمِيْتُ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ النَّبِىِّ الْاُمِّىِّ الَّذِىْ يُؤْمِنُ بِاللّٰهِ وَكَلِمٰتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ
(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”
(அல்குர்ஆன் : 7:158)
தூய வடிவிலான மோஸேக்கும் , இயேசுவுக்கும் வழங்கப் பட்ட வேதத்தில் முகம்மது நபிபற்றிய முன்னறிவிப்பு தெளிவாக இருந்தால் இன்றைய பைபிளில் ஏன் முஹம்மது நபியின் பெயர் மற்றும் அவர் சார்ந்த நேரடி செய்திகள் இல்லையே என கேட்பது நியாயமான கேள்வியே.. அதற்கு குர்ஆன் பதிலளிக்க யூதர்கள் மீது சில குற்றச்சாட்டை முன்வைக்கிறது.
குர்ஆன் கூறுகிறது
مِنَ الَّذِيْنَ هَادُوْا يُحَرِّفُوْنَ...
யூதர்களில் சிலர், (வேத) வசனங்களை அதற்குரிய இடங்களிலிருந்து (அவற்றின் கருத்து வேறுபடும்படியான விதத்தில்) புரட்டுகின்றனர், ..
(அல்குர்ஆன் : 4:46)
மேலும்
فَوَيْلٌ لِّلَّذِيْنَ يَكْتُبُوْنَ الْكِتٰبَ بِاَيْدِيْهِمْ ثُمَّ يَقُوْلُوْنَ هٰذَا ..
ஆகவே., தங்கள் கரங்களால் நூலை எழுதி, பின்னர் அதை அற்பக்கிரயத்திற்கு விற்பதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்றும் கூறுகின்றார்களே, ..
(அல்குர்ஆன் : 2:79)
அதாவது சொற்களை பொருள் மாறும்விதமாக தூய வடிவிலான வேதத்தில் மாற்றியும், தங்கள் கொள்கைக்கு ஏற்றால் போல் யூதர்கள் புதிய வசனங்களை சேர்த்தும் உண்மையான வசனங்களை மாற்றியும் வேதத்தை அழித்து புதிய நூலை வேதமாக உருவாக்கி கொண்டதாக குர்ஆன் குற்றம் சுமத்துகிறது.
மோசேவின் வேதத்தை யூதர்கள் எப்படி கையாண்டார்கள் என பைபிளும் இதே குற்றச்சாட்டை மறைமுகமாக பேசுகிறது. பைபிளில் 2 கொரிந்தியர் 3:14,15 இல் பவுல் பதிவு செய்கிறார். மேலும லூக்காவும் பதிவு செய்கிறார்.
14 அவர்களின் உள்ளம் மழுங்கிப் போயிற்று. இன்றுவரை அந்தப் பழைய உடன்படிக்கை நூல்களை அவர்கள் வாசிக்கும்போது அதே முக்காடு இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறது. கிறிஸ்துவின் வழியாய்த்தான் அது அகற்றப்படும் இன்றுவரை மோசேயின் திருச்சட்டம் வாசிக்கப்படும்போதெல்லாம் அவர்களின் உள்ளத்தை ஒரு திரை மூடி இருக்கிறது.
2 கொரிந்தியர் 3:14, 15
27 மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.
28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார்.
29 அவர்கள் அவரிடம், "எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.
30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.
31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.
32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, "வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?" என்று பேசிக் கொண்டார்கள்.
லூக்கா நற்செய்தி 24: 27- 32
ஆக யூதர்கள் தனது வேதத்தில் உள்ள வசனங்களையும் சொற்களையும் தங்களது கொள்கைக்கு ஏற்றால் போல் மாற்றி கொண்டனர் .
இது குர்ஆன், பைபிள் போன்றவை மட்டும் சுமத்தும் குற்றச்சாட்டு அல்ல மாறாக பல கிறிஸ்தவ அறிஞர்கள் யூதர்கள் தனது தூய வேதத்தை கறைபடுத்தி விட்டதாக கூறுகின்றனர்.
முன்னால் கிறிஸ்த்தவ அறிஞர் jasrin martyr (apologist) (கி.பி 165) , father of theology - chapter 72, 73 இல் யூததலைவர்கள் அனேக விடயங்களை வேதத்திலிருந்து தூக்கி எரிந்து ம், மாற்றியும் , மறைத்தும் விட்டார்கள் என்கிறார்.
இந்த உண்மை பைபிளின் மூலப்பிரதிகளை பற்றி ஆய்வுக்குட்படுத்தும் போது இது மேலும் தெளிவாகிறது.
பழைய ஏற்பாடுகளை கொண்ட அடிப்படை மூல நூல்கள் இன்று எம் கையில் கிடையாது . ஆனால் மூலப்பிரதிகளில் இருந்து பதிவு செய்ததாக நம்பப்படும் பழைய மூலப்பிரதிகள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை
01. Dead sea scrolls (சாவுக்கடல் ஆகமம்) - இது கி.மு 2ம் நூற்றாண்டுக்குறியது. qumran எனும் யூத கோத்திரம் இதனை வைத்திருந்தனர். இந்த மூல நூல் பிரதா நூலில் இன்றைய பைபிளில் உள்ள நூலும் , இல்லாத நூலும், கத்தோலிக்க சில நூலும், சில விரிவுறைகளும் காணப்படுகின்றன. ஆனால் ஒரு நூலை தவிர எந்த நூலும் முழுமையாக இல்லை. (எசாயா நூல் மாத்திரமே முழுமையாக உண்டு) இன்றைய எமது கையில் உள்ள பைபிளுக்கும் இதற்கும் பாரிய மாறுபாடு உண்டு. இது கி.பி 1947 - 1950 இல் சாவக்கடலில் வடக்கு கரையில் கண்டுபிடிக்கப்பட்டது . எபிரேய மொழியில் எழுதப்பட்டுள்ளது.
(https://www.britannica.com/topic/Dead-Sea-Scrolls)
02. Nashpapyrus மூலப்பிரதி: இது கி.மு 2ம் நூற்றாண்டுக்குறியது. இதில் மோசேவின் 10 கட்டளையும் உபாகமம் 6:4 வசனமும் மாத்திரமே உள்ளது . இது யாரிடம் இருந்தது, யார் பாதுகாத்தனர் என எந்த ஆதாரமான தகவலும் கிடையாது. இதுவும் ஹிப்ரு மொழிக்குறியது. https://en.m.wikipedia.org/wiki/Nash_Papyrus
https://www.britannica.com/topic/Nash-Papyrus
03. leningrate codex : இது கி.பி 10 ம் நூற்றாண்டுக்குறியது. இன்றைய பைபிளின் பழைய ஏற்பாட்டு நூல் முழுமையாக இருந்தாலும் காலகட்டம் அன்மித்தது. ஹிப்ரு மொழியில் உள்ளது.
https://en.m.wikipedia.org/wiki/Leningrad_Codex
4.Aleppo cordex இது கி.பி 900 ஆம் ஆண்டுக்குறியது. இன்றைய பைபிளின் பழைய ஏற்பாட்டு நூல் முழுமையாக இதில் இல்லை. மூலப்பிரதியின் ஒரு பகுதி இப்போது இல்லை
5. silver serolls இது கி.மு 500 ஆம் ஆண்டுக்குறியது. இன்றைய பைபிளின் பழைய ஏற்பாட்டு சில வசனங்களை கொண்டது. ஹிப்ரு மொழியில் quineform latter எழுத்து வடிவில் உள்ளது.
6. samariten thora இது 11 ம் நூற்றாண்டுக்குறியது. இதனை samariten இன யூதர்கள் வைத்துள்ளனர். இன்றைய பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலில் உள்ள அதியாகமம் - உபகாமம் வரையிலான 5 ஆகமங்களை மாத்திரம் கொண்டது எனப்படுகிறது. சமாரியா மொழியில் இது உள்ளது.
thora எனப்படும் மூல நூலில் இரண்டு வகை உள்ளது . mosaretic text ( கி.பி 11 ம் நூற்றாண்டுக்குறியது ஹிப்ரு மொழியில் உள்ளது), மற்றது samariten thora . இவை இரண்டுக்குமிடையே கூட 600 வித்தியாசங்கள் வசன கருத்து ரீதியில் உண்டு என்கினறனர் கிறிஸ்த்தவ அறிஞர்களின்.
7. septuagent LXX இது கி.மு 3 ம் நூற்றாண்டுக்குறியது. இதனை 70 யூத ரபிகள் மொழிபெயர்த்தனர்.
இன்றைய பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலில் உள்ள அதியாகமம் - உபகாமம் வரையிலான 5 ஆகமங்களை மாத்திரம் மொழிபெயர்க்கப்பட்டது என tovia singer என்ற யூதர்களும் , இன்றைய பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலினை முழுக்க மொழிபெயர்த்தனர் என்று கிறிஸ்தவர்களும் நம்புகின்றனர். இது கிரேக்க மொழியில் உள்ளது.
8. codex sinaiticus இது கி. பி 3ம் நூற்றாண்டுக்குறியது. இந்த நூலில் இன்றைய பைபிளில் உள்ள நூலும் , இல்லாத நூலும், கத்தோலிக்க சில நூலும், சில விரிவுறைகளும் காணப்படுகின்றன. இதுவும் கிரேக்க மொழிக்குறியது.
இந்த வரலாற்று செய்திகள் ஒன்றை உணர்த்துகின்றன. அதாவது ஆரம்பம் தொட்டு யூதர்கள் தங்களது நம்பிக்கை பிரகாரம் தமக்கு எதிரானதையும் , தமது நம்பிக்கைக்கு புறம்பானவையையும் நீக்கியும் சேர்த்தும் வந்துள்ளனர். யூதர்கள் மூலப்பிரதிகள் இல்லாது மொழிபெயர்ப்பு மூல பிரதிகளை கொண்ட நூற்களில் புத்தகங்கள் சேர்க்கப்ட்டதையும், வசனங்கள் மாற்றப்பட்டதையும் , வசனங்கள் பிழையாக பொருளை மாற்றி இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.
மேலும் பைபிளை தொகுக்கும்போது நீக்கப்பட்ட புத்தகங்களில் புதிய ஏற்பாட்டு புத்தகங்களை தொகுக்கும் போது யூதர்களை போன்று கிறிஸ்த்தவர்களும் வசனங்களையும் புத்தகங்களையும் நீக்கியும், மாற்றியும், புறக்கணித்தும் , பொருள் தவறாக கொடுத்தும் திரிவுபடுத்தியும் உள்ளனர் .
அதையும் குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது.
وَاِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ التَّوْرٰٮةِ وَمُبَشِّرًا بِرَسُوْلٍ يَّاْتِىْ مِنْ بَعْدِى اسْمُهٗۤ اَحْمَدُ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَيِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ
மேலும், மர்யமின் புதல்வர் ஈஸா, “இஸ்ராயீலின் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தியவனாகவும், எனக்குப் பின்னர் அஹ்மது எனும் பெயருள்ள ஒரு தூதர் வருவார் என நன்மாராயம் கூறுபவனாகவும் நிச்சயமாக உங்கள்பால் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராக நான் இருக்கிறேன்” என்று கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக) பின்னர், (அவர் கூறியவாறு) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் (அத்தூதராகிய) அவர் வந்தபொழுது, இது தெளிவான சூனியம்” என்று அவர்கள் கூறினர்.
(அல்குர்ஆன் : 61:6)
அந்த வகையில் பழைய ஏற்பாட்டு மூலப்பிரதியில் முகம்மது நபியின் நேரடியான முன்னறிவிப்புக்களை காண்பது கடினமானது. அதே சமயம் புதிய ஏற்பாட்டு பிரதியிலும் இதே சிக்கல் உண்டு.
வரலாற்றில் 1600களின் முற்பகுதியில் இன்றைய நவீன பைபிள் மொழிபெயர்ப்புகளின் தாயான கிங்ஸ் ஜேம்ஸ் பதிப்பு உருவாக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் ரோமன் கத்தோலிக்கம் இங்கிலாந்து முழுக்கப் பரவியிருந்தது. இந்த KJV மொழிபெயர்ப்பை உருவாக்க 54 பேர் நியமிக்கப்பட்டார்கள். அதில் ஒருவராகிய Sir Henry Savile தவிர மற்ற அனைவரும் இங்கிலாந்து திருச்சபைகளின் மதகுருமார்களாகும். இம்மொழிபெயர்ப்பாளர்கள் மத்தியில் திரித்துவ நம்பிக்கை பெரிதும் நம்பப்பட்டு அது மொழிபெயர்ப்பில் பெரும் தாக்கத்ததை ஏற்படுத்தியது.
மேலும், ஆச்சரியம் என்னவெனில், அந்த நேரத்தில் மிகப்புகழ் பெற்ற எபிரேய அறிஞர் Hugh Broughton அவர்களை இந்த 54 மொழிபெயர்ப்பாளர்களுக்குள் உள்வாங்க அரசு விடவில்லை. அதே நேரம், Hugh Broughton அவர்கள் இந்த KJV மொழிபெயர்ப்பினை பலவாறு விமர்சித்தது மட்டுமன்றி, குற்றமும் சுமத்தினார்.
அத்தோடு, மொழிபெயர்ப்புக்கு பெரிதும் மூலமாகப் பயன்படுதிய மூலப்பிரதியாகிய Jerome இன் லத்தின் Vulgate அவருடைய காலகட்டத்திலேயே பல புகழ்பெற்ற தகுதியான அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவொன்று என்பதையும், மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் மூலப்பிரதியை மிகச்சரியாகப் பிரதிபளிக்கவில்லை என்றும், மன்னனின் தலையீடும், திரித்துவ நம்பிக்கையும் சபைகளின் ஆதிக்கமும் மொழிபெயர்ப்பில் பிழையான ஒரு நடையை ஏற்படுத்தியுள்ளது என விமர்சித்தார். இவ்விமர்சனம் பிற்காலத்தில் பல மொழிபெயர்ப்பிற்கு வழிவகுத்தது.
இவ்வரலாற்றின் அடிப்படையில் பைபிள் கிறிஸ்தவத்திற்கு எதிரான வசனங்கள், முகம்மது நபிவர்களின் நேரடியான முன்னறிவுப்புக்களை நீக்கி, திரித்திருப்பதை உணர முடிகிறது.
இத்தனை வசன புத்தக நீக்கம் இன்றை பைபிளில் இருந்த போதிலும் சேர்க்கப்படாத பர்னபாசின் கடிதத்தில் சுமார் 10 இடங்களில் நேரடியாக முகம்மது நபியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன. அவைகளின் வசன எண்கள் 39,41,44,54,55,97,112,136,165,220
முகம்மது நபியின் பெயர் இருந்ததால் பைபிளில் இருந்து நீக்கப்பட்டதா? என்ற சந்தேகம் வந்தாலே.. கிறிஸ்தவர்களும் யூதர்களை போல் வேதத்தை மாற்றிவிட்டனர் என்று உறுதியாகிவிடுகிறது.
சரி இத்தனை நீக்கத்திற்கு பிறகும் பைபிளில் எஞ்சியுள்ள முகம்மது நபி பற்றி பேசும் பைபிள் வசனங்களை காண்போம். ( இவ் விடயங்களை இத்தொடர் முழுக்க மனதில் வைத்து வாசியுங்கள்)
கருத்துகள்
கருத்துரையிடுக