கிறிஸ்தவர்கள் புறக்கணித்த மோசேவின் ஓரல் தோரா

 

⭐மோசேக்கு கொடுக்கப்பட்ட ஓரல் தோராவை புறக்கணித்த கிறிஸ்தவர்கள்⭐




✍️ யூத மதத்தின்படி, ஓரல் தோரா என்பது மோசேயின் ஐந்து புத்தகங்களில் பதிவு செய்யப்படாத சட்டங்கள் மற்றும் சட்ட விளக்கங்களை குறிக்கிறது. ஓரல் தோரா முழுமையான யூத நடத்தை நெறிமுறைகள் சடங்குகள், வழிபாட்டு முறைகள், கடவுள்-மனிதன் மற்றும் ஒருவருக்கொருவரான உறவுகள், உணவுச் சட்டங்கள் முதல் சப்பாத் வரை, திருவிழா அனுசரிப்பு, திருமண உறவுகள், விவசாய நடைமுறைகள் மற்றும் சிவில் உரிமைகோரல்கள் மற்றும் சேதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. யூத மரபின் படி, ஓரல் தோரா தலைமுறை தலைமுறையாக ஒரு உடைக்கப்படாத சங்கிலி தொடர் அறிவிப்பாளர்கள் வாய் வழியாக தொடரப்பட்டு, அதன் உள்ளடக்கங்கள் இறுதியாக பொ.ச. 70 ல் இரண்டாம் கோயில் அழிக்கப்பட்டு யூத நாகரிகம் அச்சுறுத்தலை எதிர்கொண்டபோது எழுத்து வடிவம் பெற தொடங்கியது.


✍️ ஓரல் தோராவின் முக்கிய களஞ்சியங்கள் மிஷ்னா ஆகும். இது கி.பி 200–220 க்கு இடையில் ரப்பி யெஹுதா ஹனாசி தொகுத்தது. மற்றும் கெமாரா, மிஷ்னாவைப் பற்றிய தொடர்ச்சியான வர்ணனைகள் மற்றும் விவாதங்கள். இவை ஒன்றாக ரப்பானிக் யூத மதத்தின் முக்கிய உரையான தல்மூத்தை உருவாக்குகின்றன.  உண்மையில், தல்மூத் இரண்டு பதிப்புகளை கொண்டுள்ளது: ஒன்று கலிலீயில் பொ.ச 300–350 எழுதப்பட்டது ஜெருசலேம் தல்முத், மற்றும் பாபிலோனியாவில் தொகுக்கப்பட்ட இரண்டாவது விரிவான தல்முத் பொ.ச 450-500 இல் எழுதப்பட்டதுபாபிலோனிய தல்முத் ஆகும்.


👉 மோசேயிடமிருந்து வாய்வழிச் சட்டத்தை ஆரம்பகால ரப்பானிக் காலத்திற்குக் கொண்டுவருவதற்கு ஒப்படைக்கப்பட்ட தனிநபர்களின் உடைக்கப்படாத வரலாற்றுச் சங்கிலியை யூத பாரம்பரியம் அடையாளம் காட்டுகிறது: "மோசே தோராவைப் பெற்று யோசுவாவிடம் ஒப்படைத்தார்; யோசுவா மூப்பர்களிடத்திலும்; மூப்பர்கள் தீர்க்கதரிசிகளிடமும்;  தீர்க்கதரிசிகள் அதை பெரிய சபையின் மனிதர்களிடம் ஒப்படைத்தனர்."

(Mishna avot 1:1)


✍️ பழைய ஏற்பாட்டில் இருக்கின்ற முதல் ஐந்து ஆகமங்களும் கர்த்தரால் மோஸேவுக்கு கொடுக்கப்பட்டதாக யூதர்களும் கிறிஸ்தவர்களும் நம்புகின்றனர். இயேசுவுக்கு பின்பு கொள்கையளவில் யூதர்களிடம் இருந்து பிரிந்து வந்தவர்கள் தான் கிறிஸ்தவர்கள் என்பதினால் பழைய ஏற்பாட்டில் இருக்கின்ற முதல் ஐந்து ஆகமத்தில் இருக்கின்ற ஒவ்வொரு வசனத்தின் பின்னணியும், அந்த வசனங்கள் எந்த அர்த்தத்தில் கர்த்தரால் மோஸோவுக்கு கொடுக்கப்பட்டது என்பதையும் கிறிஸ்தவர்களை காட்டிலும் யூதர்களே மிக நன்றாக அறிவார்கள். ஏனெனில் யூதர்கள் இஸ்ரவேல் பாரம்பரியத்தை சார்ந்தவர்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் இஸ்ரவேல் அல்லாத மக்கள் ஆவார்கள். யூதர்களின் நம்பிக்கையின்படி எழுதப்பட்ட தோராவுடன் ஓரல் தோராவும் மோசஸூக்கு கர்த்தரால் கொடுக்கப்பட்டதாக நம்புகின்றனர். அதற்கான ஆதார வசனத்தை எழுதப்பட்ட தோராவிலிருந்து யூதர்கள் கொடுக்கின்றனர். இனி அவற்றை குறித்து பார்ப்போம்.


אָז לֹא אֵבוֹשׁ, בְּהַבִּיטִי אֶל כָּל מִצְו‍ֹתֶיךָ:כָּל הַמִּצְווֹת שֶׁנִּתְּנוּ לוֹ לְמֹשֶׁה בְּסִינַי – בְּפֵרוּשָׁן נִתְּנוּ, שֶׁנֶּאֱמָר "וְאֶתְּנָה לְךָ אֶת־לֻחֹת הָאֶבֶן, וְהַתּוֹרָה וְהַמִּצְוָה" (שמות כד, יב): "תּוֹרָה", זוֹ תּוֹרָה שֶׁבִּכְתָב; וּ"מִצְוָה", זֶה פֵּרוּשָׁהּ. וְצִוָּנוּ לַעֲשׂוֹת הַתּוֹרָה, עַל פִּי הַמִּצְוָה. וּמִצְוָה זוֹ, הִיא הַנִּקְרֵאת תּוֹרָה שֶׁבְּעַל פֶּה.


👉 சினாய் மீது மோசேக்கு வழங்கப்பட்ட கட்டளைகள் அனைத்தும் அவற்றின் வாய்வழி விளக்கத்துடன் சேர்த்து ஒன்றாக வழங்கப்பட்டன. அதனால் தான் இவ்வாறு கூறப்படுகிறது:


அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.

(யாத்திராகமம்  24:12)


👉 தோரா என்பது புனித எழுத்து;  மற்றும் கட்டளை(கற்பனை) என்பது அதன் வாய்வழி விளக்கம்.  மேலும் கட்டளையின் வார்த்தையால் தோராவை கடைபிடிக்கும்படி அவர் நமக்குக் கட்டளையிட்டார்;  ஆகவே இந்த கட்டளைதான் ஓரல் தோரா அதாவது வாய்வழி தோரா என்று அழைக்கப்படுகிறது.

(Mishneh Torah, Transmission of the Oral Law1:1)


👉 ரப்பி ஷிமோன் பென் லக்கிஷ் கூறியதாக ரப்பி லெவி பார் ஹமா கூறினார்: கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.”(யாத்திராகமம் 24:12), இதன் பொருள் கடவுள் மோசேக்கு எழுதப்பட்ட தோராவை மட்டுமல்ல, தோரா முழுவதையும் வெளிப்படுத்தினார். அது பல தலைமுறைகள் வழியாக பரப்பப்பட்டது.  “பலகைகள்” என்பது உடன்படிக்கை பலகையில் எழுதப்பட்ட பத்து கட்டளைகளாகும். "தோரா" என்பது மோசேயின் ஐந்து புத்தகங்கள் ஆகும். "மிட்ச்வா(கட்டளைகள்)" என்பது மிஷ்னா ஆகும். இதில் மிட்ஸ்வோட் மற்றும் அவை எவ்வாறு நிகழ்த்தப்பட வேண்டும் என்பதற்கான விளக்கங்கள் உள்ளன.  "நான் எழுதியது" என்பது தெய்வீக உத்வேகத்துடன் எழுதப்பட்ட தீர்க்கதரிசிகள் மற்றும் எழுத்துக்களைக் குறிக்கிறது.

"நீங்கள் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்" என்பது மிஷ்னாவை விளக்கும் தல்மூத்தை குறிக்கிறது.

இந்த விளக்கங்கள் நடைமுறை ஹலகாவின்(யூத சட்டங்கள்) தீர்ப்புகளுக்கு அடித்தளம்.  தோராவின் அனைத்து அம்சங்களும் சினாயிலிருந்து மோசேக்கு வழங்கப்பட்டதாக இந்த வசனம் கற்பிக்கிறது.

(Berakhot 5a:3)


וְהַמִּצְוָה, שְׁהִיא פֵּרוּשׁ הַתּוֹרָה – לֹא כְתָבָהּ; אֵלָא צִוָּה בָּהּ לַזְּקֵנִים וְלִיהוֹשׁוּעַ וְלִשְׁאָר כָּל יִשְׂרָאֵל, שֶׁנֶּאֱמָר "אֵת כָּל־הַדָּבָר, אֲשֶׁר אָנֹכִי מְצַוֶּה אֶתְכֶם – אֹתוֹ תִשְׁמְרוּ, לַעֲשׂוֹת . . ." (דברים יג, א). וּמִפְּנֵי זֶה נִקְרֵאת תּוֹרָה שֶׁבְּעַל פֶּה.


👉 ஆனால் தோராவின் வாய்வழி விளக்கமான கட்டளைகளை அவர் எழுத சொல்லவில்லை, ஆனால் மூப்பர்கள், யோசுவா மற்றும் மற்ற இஸ்ரவேலர் அனைவரையும் அதைக் கடைப்பிடிப்பது குறித்து அவர் கட்டளையிட்டார்: "நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்."(உபா. 13.1.);  ஆகையால் இந்த கட்டளையின் வார்த்தையே ஓரல் தோரா என்று அழைக்கப்படுகிறது.


אַף עַל פִּי שֶׁלֹּא נִכְתְּבָה תּוֹרָה שֶׁבְּעַל פֶּה, לִמְּדָהּ מֹשֶׁה רַבֵּנוּ כֻּלָּהּ בְּבֵית דִּינוֹ לְשִׁבְעִים זְקֵנִים; וְאֶלְעָזָר וּפִינְחָס וִיהוֹשׁוּעַ, שְׁלָשְׁתָּן קִבְּלוּ מִמֹּשֶׁה. וְלִיהוֹשׁוּעַ שְׁהוּא תַּלְמִידוֹ שֶׁלְּמֹשֶׁה רַבֵּנוּ, מָסַר תּוֹרָה שֶׁבְּעַל פֶּה וְצִוָּהוּ עָלֶיהָ; וְכֵן יְהוֹשׁוּעַ, כָּל יְמֵי חַיָּיו לִמַּד עַל פֶּה.


👉 ஓரல் தோரா எழுத்தில் கோர்க்கப்படவில்லை என்றாலும், எங்கள் எஜமானன் மோசே தனது தீர்ப்பாயத்தில், எழுபது பெரியவர்களுக்கு அதன் முழு நோக்கத்தில் அறிவுறுத்தல்களைக் கொடுத்தார்.  எலியாசார், பினேஹாஸ் மற்றும் யோசுவா, அவர்கள் மூவரும் அதை மோசேயிடமிருந்து பெற்றார்கள்;  ஆயினும், யோசுவாவிடம், அவர் எங்கள் எஜமானான மோசேயின் சீடராக இருந்ததால், அவர் ஓரல் தோராவை பரப்பி, அதைக் கடைப்பிடிப்பது குறித்து  கட்டளையிட்டார்.  யோசுவாவும் தனது வாழ்நாள் முழுவதும் அதை வாய்வழியாகப் படித்தார்;

(Mishneh Torah, Transmission of the Oral Law1:3-4)


✍️ இதற்கு அடுத்தடுத்த வசனங்களில் ஓரல் தோரா தலைமுறைகள் தோறும் எவ்வாறு பரப்பப்பட்டது என்பதற்கான அறிவிப்பாளர் வரிசைகளை கூறுகிறது. அவற்றை முழுவதும் பதிவு செய்தால் பதிவு மிகப் பெரியதாக இருக்கும் என்கிற காரணத்தால் அவற்றை இங்கு நாம் பதிவு செய்யவில்லை.


✍️ ஓரல் தோரா இல்லாமல் மோசேவின் ஐந்து ஆகமங்களை செயல்படுத்த முடியாது என்பது யூதர்களின் வாதமாகும். அதற்கான சில ஆதாரங்களை மோசேயின் ஐந்து ஆகமங்களில் இருந்து எடுத்து வைக்கின்றனர். 


👉 உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானம் உனக்குத் தூரமானால், கர்த்தர் உனக்கு அளித்த உன் ஆடுமாடுகளில் எதையாகிலும் நான் உனக்கு விதித்தபடி நீ அடித்து, உன் இஷ்டப்படி உன் வாசல்களிலே புசிக்கலாம்.

(உபாகமம்  12:21)


✍️ ஆடு மாடுகள் பலிவிடுவது சம்பந்தமாக நான் உங்களுக்கு கட்டளையிட்டதைப் போலவே செய்ய வேண்டும் என்று தேவன் கூறுகிறார். ஆனால் அந்தக் கட்டளை   மோசேவின் ஐந்து ஆகமங்களில் எங்கும் இல்லை. எனவே அது வாய்வழியாக வழங்கப்பட்ட கட்டளைகளைக் குறிக்கிறது. எனவே எழுதப்பட்ட தோரா வாய்வழி தோராவை நம்பியிருப்பத்தாக யூதர்கள் கூறுகின்றனர். ஓரல் தோராவை கிறிஸ்தவர்கள் நிராகரிப்பதாக இருந்தால், ஆடு மாடுகளை எவ்வாறு பலியிட வேண்டும் என்ற கட்டளையை மோசேவின் ஐந்து ஆகமங்களில் இருந்து எடுத்துத் தரவேண்டும். ஆனால் அவர்களால் நிச்சயம் அது முடியவே முடியாது. ஏனெனில் அது தொடர்பான வசனம் மோசேயின் 5 ஆகமங்களில் எங்கும் இல்லை.


✍️ மேலும் சப்பாத் நாள் குறித்த மேலதிக தகவல்கள் ஓரல் தோராவில் தான் மேலதிக விளக்கத்துடன் இருக்கின்றது.


👉 உங்கள் வேலையை வாரத்தின் ஆறு நாட்களும் செய்யுங்கள். ஆனால் ஏழாம் நாள் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தும்படி ஓய்வெடுக்க வேண்டிய நாள். எனவே அந்நாளில் நீங்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் வேலை செய்யக்கூடாது. உங்கள் மிருகங்களையோ, உங்கள் நகரங்களில் வாழும் அந்நியர்களையோ வேலை வாங்கக்கூடாது. (யாத்திராகமம் 20:9-10)


✍️ மேற்கண்ட வசனத்தில் வாரத்தின் ஏழாம் நாள் எந்த நாள் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. வாரத்தின் முதலாம் நாள் அடையாளப்படுத்துவது சமூகங்களுக்கு இடையே பல முரண்பாடுகள் இருக்கின்றன. உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால் சிலர் ஞாயிற்றுக்கிழமையை வாரத்தின் முதல் நாளாகவும் இன்னும் சிலர் திங்கட்கிழமையை வாரத்தின் முதல் நாளாகவும் கணக்கிடு செய்கின்றனர். யூதர்களைப் பொறுத்தவரை சப்பாத் நாள் என்பது சனிக்கிழமையாகும். சப்பாத் நாள் சனிக்கிழமை தான் என்பதை மோசேவின் ஐந்து ஆகமங்கள் எங்கும் சொல்லவில்லை. மாறாக ஓரல் தோராவே அது குறித்து பேசுகிறது. எழுதப்பட்ட தோரா சப்பாத்தை இழிவுபடுத்துவதற்கான இறுதி தண்டனையை விதித்த போதிலும், சப்பாத்தில் என்னென்ன வேலை செய்யலாம் மற்றும் செய்யக்கூடாது என்பதற்கு வெளிப்படையான வழிகாட்டுதலை அளிக்கவில்லை.


👉 என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.

இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.

(யோசுவா 1:7-8)


✍️ யோசுவா 1:8வது வசனத்தில் "நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டு பிரியாது இருப்பதாக" என்பது மோசேக்கு கொடுக்கப்பட்ட ஐந்து புத்தகங்களை குறிக்கும். ஆனால் யோசுவா 1:7 ஆவது வசனத்தில் என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப் பிரமாணங்கள் என்று கர்த்தர் சொல்வது கர்த்தர் மோசேக்கு வெளிப்படுத்திய ஓரல் தோரா ஆகும். இதன் காரணமாகவே எழுதப்பட்ட தோராவை பற்றிய கர்த்தர் சொல்லும் பொழுது "நியாயப்பிரமாண புஸ்தகம்" என்று சொல்கிறார். ஆனால் அதே சமயம் ஓரல் தோரா பற்றி கர்த்தர் சொல்லும் பொழுது "மோசே கற்பித்த நியாயப்பிரமாணம்" என்று சொல்கிறார். இதிலிருந்து கர்த்தர் மோசேவுக்கு எழுதப்பட்ட தோரா மற்றும் வாய்வழி(ஓரல்) தோரா கொடுத்துள்ளார் என்பது நிரூபணமாகிறது.


            ➖➖➖➖தொடரும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்