நீங்கள் வணங்குவது இயேசுவையா அல்லது இயேசுவின் இறைவனையா?

நீங்கள் வணங்குவது இயேசுவையா அல்லது இயேசுவின் இறைவனையா?





✍️கிறிஸ்தவர்கள் வணங்கும் இயேசுவிற்கே தேவன் இருக்கும் போது இயேசு எவ்வாறு தேவனாக இருக்க முடியும்?

▶️ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், #கிறிஸ்துவுக்கு_தேவன்_தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்
(1 கொரிந்தியர் 11:3)

▶️நம்முடைய கர்த்தராகிய #இயேசுகிறிஸ்துவின்_தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
(எபேசியர் 1:17)

✍️கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் படி உயிர்த்தெழுந்த பிறகும்கூட இயேசு கர்த்தரை தேவன் என்று அழைக்கும்போது இயேசுவை தேவன் என்று சொல்வது மாபெரும் முட்டாள்தனம்.

▶️ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; #என்_தேவனுடைய_நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
(வெளிப்படுத்தின சுவிசேஷம் 3:12)

▶️இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், #என்_தேவனிடத்திற்கும்_உங்கள்_தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
(யோவான் 20:17)

▶️நமது கர்த்தராகிய #இயேசுகிறிஸ்துவின்_பிதாவாகிய_தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
(2 கொரிந்தியர் 1:3)

▶️என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட #தேவனும், #நம்முடைய_கர்த்தராகிய_இயேசுகிறிஸ்துவின்_பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.
(2 கொரிந்தியர் 11:31)

✍️தேவனுக்கு ஒரு தேவனா? இயேசு உண்மையில் ஒரு தேவன் என்றால் அவருக்கு ஏன் இன்னொரு தேவன் இருக்க வேண்டும்? இயேசுவுக்கு தேவன் இருக்கிறார் என்றால் இயேசுவும் நம்மை போன்று இறைவனால் படைக்கப்பட்டவர் தானே.

✴️இயேசுவை குறித்து இஸ்லாம்✴️

💎மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை. 
(அல்குர்ஆன் 5:75)

💎திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (இயேசு) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்ததையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். "மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருமடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்" என்று (நபியே!) நீர் கேளும்;. வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவன் நாடியதைப் படைக்கிறான்;. இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 5:17)

(#இயேசுவும்) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) #நெருக்கமான_மலக்குகளும்_அல்லாஹ்வுக்கு_அடிமையாயிருப்பதைக்_குறைவாகக்_கொள்ள_மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய் ) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ, அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.
(அல்குர்ஆன் 4:172)

ஊழியக்காரனை வணங்குவது முட்டாள்தனம். ஊழியக்காரனின் எஜமானனான அதாவது இயேசுவின் இறைவனான எல்லாம் வல்ல அல்லாஹ்வை வணங்குவதே புத்திசாலித்தனம். 

புத்தியுள்ளவன் சிந்திக்கக்கடவன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்