அமெரிக்கா வரை நீளும் இந்துத்வா பாசிசம்

அமெரிக்கா வரை நீளும் இந்துத்வா பாசிசம்




மார்ச் 4, 2020 அன்று, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) இந்தியாவின் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டங்கள் மற்றும் மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சினை ஆகிய பிரச்சினைகளின் தாக்கம் குறித்து அமெரிக்க அரசாங்கத்திற்கான கொள்கை பரிந்துரைகளை உருவாக்க உதவுவதற்காக  ஒரு விசாரணையை கூட்டியது. அழைக்கப்பட்ட கமிஷன் உறுப்பினர்கள் மற்றும் நிபுணர் குழுவை சார்ந்தவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, இந்த சட்டம் இந்தியாவில் வாழுகின்ற பெருவாரியான முஸ்லிம்களின் குடியுரிமையை பறிப்பதற்கு வழிவகுக்கும் என்று கூறி தங்கள் கவலையை தெரிவித்தனர்.

இந்துத்துவா ஆதிக்கம் செலுத்தும் நாடாளுமன்றம் 2019 டிசம்பரில் நிறைவேற்றிய புதிய இந்திய குடியுரிமைச் சட்டம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாத மத சிறுபான்மையினருக்கு குடியுரிமையை வழங்குகிறது, ஆனால் முஸ்லிம்களுக்கு அல்ல. இந்த சட்டம் இயற்றப்பட்ட பின்னர், CAA சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தை ஓரங்கட்டக்கூடும் என்ற அச்சத்தில் நாடு முழுவதும் எதிர்ப்புக்கள் வெடித்தன. உண்மையில் இந்த சட்டம் முஸ்லிம்களை மட்டுமில்லாமல், இந்துத்துவாவை எதிர்க்கும் மக்கள் அனைவரையும் ஓரங்கட்டுவதற்கு வழிவகுக்கும் என்ற அடிப்படையில் பெருவாரியான மக்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்து அமெரிக்க அறக்கட்டளை (எச்.ஏ.எஃப்),

அமெரிக்காவின் முன்னணி இந்து அமைப்புகளில் ஒன்றான இந்து அமெரிக்க அறக்கட்டளை (எச்.ஏ.எஃப்), யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் இந்தியாவின் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டங்களின் நோக்கம் மற்றும் தாக்கம் குறித்த தவறான தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது.  HAF இன் இத்தகைய குற்றச்சாட்டுகள் நகைப்புக்குரியவை!
அமெரிக்காவில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு இடையே நரேந்திர மோடியின் இந்துத்துவ கொள்கையை ஊக்குவிப்பதற்காக இந்த அமைப்பு நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. மதவெறி மற்றும் சகிப்புத்தன்மையற்ற செயலை ஊக்குவிப்பதாக இந்த அமைப்புஅதன் விமர்சகர்களால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

காந்தி ஆசாத் நேருவின் இந்தியா, இன்று இந்து அல்லாதவர்களுக்கு பாதுகாப்பு அற்றதாக  மாறி வருகிறது. சசி தரூர் கூறியது போல் இந்தியாவில் ஒரு முஸ்லீமாக இருப்பதைவிட பசுவாக இருப்பது பாதுகாப்பானது. பாசிஸ்டுகள் மட்டுமில்லாமல், பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறையினரும் பாசிஸ்டுகளுடன் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை வேட்டையாடியது இந்தியாவின் நவீன பாசிச முகத்தை அடையாளப்படுத்துகிறது. இனப்படுகொலையின் போது முஸ்லிம்களை கொல்வது ஒன்றும் காவல்துறையினருக்கு புதிது அல்ல. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் குஜராத்தில் முதலமைச்சராக மோடி இருந்த பொழுது எவ்வாறு முஸ்லிம்கள் காவல்துறையினர் மற்றும் பாசிசக் இந்துத்துவவாதிகளால் கொலை செய்யப்பட்டார்களோ அதேப்போன்று இன்று மோடி பிரதமராக இருக்கும்போது டெல்லியில் முஸ்லிம்கள் காவிகள் மற்றும் காவல்துறையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய குற்றங்களை சாதாரணமாக வகுப்புவாத கலவரம் என்று சொல்ல முடியாது. மாறாக இதனை கூட்டுப் படுகொலை என்றே சொல்ல வேண்டும். ஆளும் பாஜக அரசாங்கத்தின் மிகவும் பாரபட்சமான குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இந்தியர்களின் அமைதியான போராட்டத்தை கண்டு சகிக்க முடியாத பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் குண்டர்களின்  இனப்படுகொலை தான் டெல்லி கலவரம் ஆகும்.

டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடியே முஸ்லிம்களுக்கு எதிரான நச்சு விதையை முதலில் கக்கினார். தேர்தல் பேரணியின்போது, முஸ்லிம்களை சுட்டிக்காட்டும் விதமாக, "சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை அவர்களின் ஆடைகளை கொண்டு அடையாளம் காணமுடியும்" என்று கூறினார். பிரதமர் மோடியின் இந்த கூற்று பொய்யானது. ஏனெனில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் முஸ்லிம்களுடன், முஸ்லிமல்லாத சிறுபான்மையின தாழ்த்தப்பட்ட மக்களும் பெருவாரியாக கலந்து கொண்டனர். இருந்தாலும் மோடியின் இந்த வெறுப்பு பேச்சு இந்துத்துவவாதிகளுக்கு, முஸ்லிம்களுக்கு எதிராக மாபெரும் கலவரத்தை தொடங்க வெறுப்பு விதையை விதைக்க உதவியது. இதனைத்தொடர்ந்துஉள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சை டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது மென்மேலும் விதைத்தார். ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் மின்னோட்டத்தை உணரும் வகையில், கோபத்துடன் வாக்களிக்கும் பொத்தானை அழுத்துமாறு அமித்ஷா வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார். பொதுவாக டெல்லி பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை சுட்டு தள்ளுங்கள் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதை சர்வசாதாரணமாக காணமுடிந்தது.  டெல்லியில் சமீபத்திய படுகொலை தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையின் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில், இந்தியா பிரிவினையின் போது 1947 ல் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார். இவரது எரிச்சல் பேச்சுக்கு பின்னர் மோடியின் பாஜகவை சேர்ந்த மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் கபில் மிஸ்ராபுதுடெல்லியில் ஒரு உயர்மட்ட காவல்துறை அதிகாரியின் அருகில் நின்று கொண்டு ஆத்திரமூட்டும் உரையை நிகழ்த்தினார். அதில் பாரபட்சம் காட்டும் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் ஷாகின் பாக் ஆர்ப்பாட்டக்காரர்களை கடும் கண்டனம் செய்ததுடன், "ஒன்று போலீசார் அவர்களை கலைக்க வேண்டும் அல்லது விஷயத்தை நாங்கள் கையில் எடுத்துக் கொள்வோம்" என்று அவர் கூறினார். இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு பின் சில மணி நேரங்களிலேயே காவி குண்டர்கள் காவி கொடிகளை தங்கள் கைகளில் ஏந்திய வண்ணம் மசூதிகளை தாக்கத் தொடங்கினர் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு தீ வைத்தனர். டைம் பத்திரிக்கையின் செய்தியின்படி இந்த கலவரத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்துடன் 85 வயதான ஒரு பெண்மணி உயிருடன் எரிக்கப்பட்டார். சிசிடிவி கேமராக்களை போலீசார் உடைத்தனர். தங்கள் செல்போனில் வீடியோ எடுத்த முஸ்லிம் ஆண்களையும் போலீஸ்காரர்கள் தாக்கினர். 52 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர். இத்தகைய முஸ்லிம் விரோத படுகொலைகளை, படுகொலைகளின் செய்திகளை பக்கச்சார்பற்ற புலனாய்வு பத்திரிகையாளர்களால் பரவலாக ஆவணப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும் போது அது தவறான தகவல் என்று HAF சொல்வது ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் கொடூரமான குற்றங்களை மறைக்கும் அருவருப்பான செயல்களில் ஒன்றாகும். HAF பாசிச மோடி அரசாங்கத்தின் குற்றங்களை மறைக்க முயற்சி செய்கிறது. HAF இன் இத்தகைய இழிவான செயலை கண்டு நாம் ஆச்சரியப்பட அவசியமில்லை ஏனெனில் இது அவர்களுக்கு வாடிக்கையான ஒன்றுதான். 2019 செப்டம்பரில் HAF 230 இந்திய-அமெரிக்க அமைப்புகளின் கையெழுத்திட்ட கடிதத்தை வெளியிட்டது. அதில் பன்மை தத்துவத்திற்கு நிற்பது, இந்துத்துவத்தை நிராகரிப்பது மற்றும் இந்துக்கள் முஸ்லீம்கள் சீக்கியர்கள் பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் சம உரிமைக்காக பேசுவது என்பது அமெரிக்காவில் வாழ்கின்ற ஹிந்து மதத்தை சார்ந்த ஒவ்வொருவரது கடமை என்று கூறிய காரணத்திற்காக அமெரிக்க காங்கிரஸின் ரோ கண்ணாவை பாகிஸ்தான் மீதான காங்கிரஸ் கூட்டத்தில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டது. 

மோடியின் முதல் ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் இந்துத்துவ கொலைகாரர்கள் சுதந்திரமாக நடந்துகொண்டிருந்த போது பசுவை பாதுகாக்கும் போலி காரணத்தின் கீழ் முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர். மோடியின் இரண்டாவது தேர்தல் வெற்றியோ குஜராத் பரிசோதனையை மிகப்பெரிய அளவில் மீண்டும் செய்ய  மோடியை தைரியப்படுத்தியுள்ளது.  முன்பை விட மிக மிக அதிகமாக அரச பயங்கரவாதத்தின் கீழ் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது. மோடியின் தொடர்ச்சியான வெற்றி என்பது மதச்சார்பின்மைக்கும் ஜனநாயகத்திற்கும் முன்மாதிரியாக கருதப்பட்ட இந்தியா இன்று மக்கள் ஆதரவைப் பெற்ற இந்துத்துவாவின் புதிய காவி முகத்தின் அடையாளமாக மாறி உள்ளது.  மில்லியன் கணக்கான ரோஹிங்கியா மக்களின் குடியுரிமை உரிமைகளை அழித்த பர்மாவின் மிகவும் பாரபட்சமான 1982 குடியுரிமைச் சட்டத்தைப் போலவே, CAA, இந்தியாவில் முஸ்லீம்-விரோத வன்முறையை நியாயப்படுத்த தேவையான பின்னணியை வழங்குகிறது.  அதிகாரத்தின் மிக உயர்ந்த கோட்டையில் இயற்றப்பட்ட இத்தகைய பாசிச சட்டங்கள், குற்றவியல் ஆட்சியாளர்களால் ஒரு தேசிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இனப்படுகொலைக்கு அனுமதித்து, சிறுபான்மையினரை இலக்கு வைத்து அகற்றுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.  

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்களையும் படுகொலைகளையும் மறைப்பதன் மூலம் இந்துத்துவா இந்தியாவின் இரத்தக் கறை படிந்த முகத்தைத் தூய்மைப்படுத்த முடியாது என்பதை HAF பிரச்சாரகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். சஷி தரூர் தனது 2015 மக்களவைத் உரையில், "சகிப்புத்தன்மை, வகுப்புவாத வெறுப்பு மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பின்மை ஆகியவற்றை நாட்டிற்குள் ஊக்குவிக்கும் அதே வேளையில் இந்தியா "பன்மைவாதம், சகிப்புத்தன்மை மற்றும் காந்தியவாதம் ஆகியவற்றின் நிலமாக உலகுக்கு தன்னை காட்ட முடியாது" என்று குறிப்பிட்டதை இந்தியாவின் ஆட்சியாளர்கள் நினைவு கூற வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்