அல் வாரிசு என்றால்???

💎அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று அல் வாரிஸூ💎

✍அல் வாரிசு "என்பது வாரிசு, வாரிசுதாரர், உரிமையாளர், பாதுகாப்பவர் மற்றும் உயிர் பிழைத்தவர் என்பதாகும்.

✍"வாரிசு" என்ற வார்த்தையின் பொது பயன்பாடானது, ஒருவரது மரணத்திற்குப் பிறகு அவரது உரிமையை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்பவர் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இங்கு வாரிசு என்று அல்லாஹ்வை குர்ஆன் சொல்வது ஏன் என்ற கேள்வி எழும்.

✍ உயர்ந்தவனான அல்லாஹ்வே அனைத்திற்கும் உண்மையான உரிமையாளராகவும், அதன் வாரிசாகவும் இருக்கின்றான். மனிதர்கள் தாங்கள் உரிமையாக்கி கொண்ட அனைத்தும் தற்காலிகமானவையே, அவைகள் குறிப்பிட்ட காலக்கெடு கொண்டவை. நியாயத்தீர்ப்பு நாளில் அனைத்தும் அழிந்து போகும். மனிதர்கள் இந்த பூமியில்  தாங்கள் உரிமையாக்கி கொண்டிருந்த அனைத்திற்கும் அல்லாஹ்வே அந்நாளில் வாரிசாக இருப்பான். இதன் காரணமாகவே அல்லாஹ் அல் வாரிசு என்று அழைக்கப்படுகின்றான்.

⭐ நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள்.
(அல்குர்ஆன் 19:40)

✍ அல்லாஹ் தான் எப்பொழுதும்  எல்லாவற்றிற்கும் உரிமையாளராக இருக்கின்றான். அல்லாஹ் தான் நாடியவர்களை அவன் தன் அருட்கொடையை கொண்டு அவர்களை ஈடேற்றுகிறான்.

➡️மூஸா தம் சமூகத்தாரிடம்; "அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி(வாரிசாக்கி) விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்" என்று கூறினார்.
(அல்குர்ஆன் 7:128)

👉அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று அல்-வாரிசு. இந்த உலக வாழ்க்கையில் அலட்சியமாக வாழும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை விடுக்கின்றான். இந்த வாழ்க்கை விரைவில் அனைவரிடமிருந்தும் பிரிக்கப்படும். அல்லாஹ் தான் படைப்பாளன். எல்லாவற்றிற்கும் உரிமையாளராகவும்(அல் வாரித்) மற்றும் கட்டுப்பாட்டாளராகவும் அல்லாஹ் இருக்கின்றான். படைப்புகள் அனைத்தும் அழிந்துபோகும்.  உன்னதமானவரும் மகா பரிசுத்தருமான அல்லாஹ் மட்டுமே அழியாது இருப்பான். படைப்பிலும் காரியங்களை நிர்வகிப்பதிலும் அல்லாஹவுடன் வேறு யாரும் உரிமை கோர முடியாது. படைப்புகள் எல்லாவற்றுக்கும் அல்லாஹ் ஒருவனே வாரிசாவான். அனைத்தும் அழிந்து போனாலும் அல்லாஹ் மட்டுமே நித்தியமானவனாக இருக்கின்றான். எனவே ஒரு கொசு அல்லது ஒரு அணுவின் எடை கூட எந்த ஒரு ஆத்மாவும் எந்த அநியாயமும் இழைக்கப்படமாட்டாது.
(தப்ஸீர் இப்னு கதீர்)

✍இந்த உலகில் நாம் அனுபவிக்கும் செல்வம், அந்தஸ்து , மரியாதை எல்லாம் தற்காலிகமானவை. அல்லாஹ்  சோதிக்கும் பொருட்டு,  தான் நாடியவர்களுக்கு இவ்வுலகில் தான் நாடியவற்றை அளிப்பான்;  பின்னர் அவற்றை அவன் எடுத்துக் கொள்கிறான். அவனே எல்லாவற்றிற்கும் இறுதியில் உரிமையாளனாக இருக்கின்றான். அனைத்தும் இறுதியில் அல்லாஹ்விடமே திரும்பி செல்கின்றன. அதன் காரணமாகவே அல்லாஹ் அல் வாரிசு என்று அழைக்கப்படுகின்றான். இதை கீழ்கண்ட வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

💎1💎 நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள்.
(அல்குர்ஆன் 19:40)

💎2💎 நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம்.
(அல்குர்ஆன் 15:23)

💎3💎 மேலும், எத்தனையோ ஊர்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். அந்த ஊர் மக்கள் தங்களுடைய அதிகப்படியான வாழ்க்கை வசதிகள் குறித்து கர்வம் கொண்டிருந்தார்கள். (இதோ! பார்த்துக்கொள்ளுங்கள்) இவை அவர்கள் குடியிருந்த இல்லங்கள். இவற்றில் அவர்களுக்குப் பின்னர் யாருமே வசிக்கவில்லை ஒரு சிலரைத் தவிர! இறுதியில் நாமே வாரிசுகளாகிவிட்டோம்.
(அல்குர்ஆன் 28:58)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்