மாற்கு சுவிசேஷத்தின் இடைச்செருகல்

💎மாற்கு சுவிசேஷத்தின் இடைச்செருகல்💎




✍️பைபிளை படிக்கும் எவரும் மத்தேயு தான் பைபிளின் முதல் சுவிசேஷம் என்று புரிந்து கொண்டால் அது தவறானதாகும். ஏனெனில் முதன்முதலாக எழுதப்பட்ட சுவிசேஷம் மாற்கு ஆகும். இதை பைபிள் அறிஞர்களும் வரலாற்று அறிஞர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

✍️மற்ற மூன்று நற்செய்திகளைப் போலவே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மகதலேனா மரியாவும் அவளுடைய தோழிகளும் இயேசுவின் கல்லறைக்குச் சென்றதை மார்க் விவரிக்கிறார்.  கல்லறையின் நுழைவாயிலில் இருந்த தடுப்புக் கல் அகற்றப்பட்டதைக் காண்கிறார்கள். இயேசுவை கலிலேயாவில் பார்க்கலாம் என்று இயேசுவின் சீடர்களிடத்தில் சொல்லுங்கள் என்று ஒரு இளைஞன் சொல்கிறான். 

➡️நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள்.
(மாற்கு 16:7-8)

✍️இதோடு மாற்கு சுவிசேஷம் வெறுமனே முடிகிறது! அதாவது மார்க் சுவிசேஷத்தின் ஆரம்பகால கையெழுத்து பிரதிகள் 16-வது அத்தியாயத்தில் எட்டாவது வசனத்தோடு முடிவடைந்து விடுகிறது. அதற்கு மேல் 9 லிருந்து 20 வரை உள்ள வசனங்கள் ஆரம்பகால கையெழுத்துப் பிரதிகளில் இல்லை.

✍️நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த மார்க் சுவிசேஷத்தின் கோடெக்ஸ் சினைடிகஸ் மற்றும் கோடெக்ஸ் வத்திக்கானஸ் ஆகியவற்றின் ஆரம்பகால முழுமையான கையெழுத்துப் பிரதிகள்,  கடைசி பன்னிரண்டு வசனங்களான 16: 9-20 வசனங்களை கொண்டிருக்கவில்லை.  கோடெக்ஸ் வத்திக்கானஸ் (4 ஆம் நூற்றாண்டு) 16: 8 இல் முடிவடைந்து இறுதியாக "kata Markon(மார்க்கின் படி)"(படம் 1 ஐ பார்க்க) என்று குறிப்பிட்டு விட்டு ஒரு வெற்று நெடுவரிசை மட்டுமே உள்ளது.

✍️மத்தேயு லூக்கா யோவான் சுவிசேஷங்களைப் போன்று உயிர்த்தெழுந்த இயேசுவை எவரும் பார்த்ததாக மாற்கு எங்கும் குறிப்பிடவில்லை. அதுமட்டுமில்லாமல் கலிலியோவில் இயேசுவை பார்க்கலாம் என்று மார்க் சொல்கிறார். ஆனால் மற்ற சுவிசேஷங்கள் இயேசுவை ஜெருசலேமில் பார்க்கலாம் என்று சொல்லி ஆரம்பகாலச் விசேஷமான மார்க்குக்கு முரண்பட்டு போதிக்கின்றன.

✍️மாற்கு சுவிசேஷம் 16 அத்தியாயத்தில் எட்டாவது வசனத்தோடு முடிவடைந்ததை பிற்கால கிறிஸ்தவர்கள் மிகவும் குறைபாடாகக் கருதினர். இதன் காரணமாகவே புதிய ஏற்பாட்டில் மார்க் சுவிசேஷம் இரண்டாவது இடத்தைப் பிடித்து பின் நிலையில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பிற்காலத்தில் சில கையெழுத்துப்பிரதி ஆசிரியர்கள் மற்றும் நகலெடுப்பாளர்களால் பல்வேறு வசனங்கள் மார்க் சுவிசேஷத்தில் சேர்க்கப்பட்டது.

✍️இருப்பினும் மாற்கு சுவிசேஷத்தின் 16-வது அத்தியாயத்தின் 9-20 வசனங்கள் அலெக்ஸாண்ட்ரினஸ் (ஏ, 5 ஆம் நூற்றாண்டு), எஃப்ரேமி-ரெஸ்கிரிப்டஸ் (சி, 5 ஆம் நூற்றாண்டு), பெஸா (டி, 6 ஆம் நூற்றாண்டு) மற்றும் வாஷிங்டனியஸ் (டபிள்யூ, 5 ஆம் நூற்றாண்டு) ஆகிய கையெழுத்துப் பிரதிகளில்  காணப்படுகின்றது. மாற்கு சுவிசேஷத்தின் ஆரம்பகால கையெழுத்து பிரதியில் இருந்து திருத்தியமைக்கப்பட்ட இறுதி வசனங்களை மேற்கண்ட கையெழுத்துப் பிரதிகள் கொண்டுள்ளன.

✍️மாற்கு சுவிசேஷத்தோடு இவ்வாறு பல வசனங்கள்(9-20) புனையப்பட்டது மிகவும் தவறானது என்றாலும், பிற்கால கிறிஸ்தவர்கள் அதை நேசித்தார்கள். இன்றுவரை பழமைவாத கிறிஸ்தவர்கள் இந்த மோசடியை சுட்டிக்காட்டும் பைபிள் அறிஞர்களை தவறாமல் கண்டிக்கிறார்கள். மார்க் சுவிசேஷத்தில் புனையப்பட்ட வசனங்களை தவறு என்று சுட்டிக்காட்டும் அறிஞர்களை "கடவுளின் வார்த்தையை" அழிக்க முயற்சிக்கிறார்கள் என்று பழமைவாத கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மாற்கு சுவிசேஷம் உண்மையில் இறைவார்த்தை என்று கிறிஸ்தவர்கள் நம்பி இருந்தால் அந்த சுவிசேஷத்தில் எந்த ஒரு வசனத்தையும் சேர்த்திருக்க மாட்டார்கள் ஏனெனில் தனது வசனத்தோடு ஒன்றியம் கூட்டவோ அல்லது குறைக்கவோ கூடாது என்று கர்த்தர் கட்டளையிட்டு இருக்கும் போது மார்க்கு சுவிஷேசத்தில் மற்றச் இலவசங்களை சேர்த்து இருப்பது என்பது கர்த்தரின் கட்டளைக்கு விரோதமானது.

✍️ஆரம்பகால மாற்கு சுவிசேஷத்தின் கையெழுத்துப் பிரதியில் 16:9-20 வசனங்கள் இல்லை என்ற ஆதாரம் மிக தெளிவாக உள்ளது. மாற்கு சுவிசேஷத்தின் இறுதி வசனங்கள் ஆதாரபூர்வமான மற்றும் நம்பத்தகுந்த ஆரம்பகால எந்த ஒரு கையெழுத்துப் பிரதிகளிலும் இல்லை. புரூஸ் மெட்ஜெரின் கூற்றுப்படி, “அலெக்ஸாண்ட்ரியா கிளெமெண்ட் மற்றும் ஆரிஜன்[மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி] இந்த வசனத்தின் இருப்பைப் பற்றி எங்கும் சொல்லவில்லை. மேலும் யூசிபியஸ் மற்றும் ஜெரோம் ஆகியோர் தங்களுக்குத் தெரிந்த மார்க்கின் கிட்டத்தட்ட எல்லா கிரேக்க பிரதிகளிலும் இந்த வசனங்கள்(மாற்கு 16;9-20) இல்லை என்று சான்றளிக்கின்றனர். இந்த இறுதி வசனங்கள் மொழிநடை மாற்கு சுவிசேஷத்தின் மொழி நடையில் இருந்து வேறுபடுகிறது என்றும் இந்த வசனங்கள் மத்தேயு லூக்கா யோவான் போன்ற பிற்கால சுவிசேஷத்தின் இறுதி வசனங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்றும் கூறுகின்றார்.

✍️மாற்கு சுவிசேஷம் இயேசு ஜெருசலேமில் காட்சியளித்ததையும், உணவு சாப்பிட்டதையும், தனது காயத்தை காட்டி காட்டியதையும் மற்ற சுவிசேஷங்கள் போன்று எடுத்துச் சொல்லாமல் இருந்தபோதிலும் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் மாற்கு சுவிசேஷத்தை கொண்டு திருப்தி அடைந்துள்ளனர். ஆனால் பிற்காலத்தில் வந்தவர்கள் தான் மாற்கு சுவிசேஷத்தில் உள்ளதை கொண்டு திருப்தி அடையாமல் அதனோடு இன்னும் பிற வசனங்களை சேர்த்து இட்டு கட்டியுள்ளனர். இது பைபிள் மனிதக் கரங்களால்  கறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக நிரூபிக்கிறது.

✍️அதுமட்டுமில்லாமல் இன்னும் ஒரு சில கையெழுத்து பிரதியில் மேலும் சில கூடுதலான வசனங்களும் மாற்கு சுவிசேஷத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை பைபிளின் சில பதிப்புகளில், மார்க் நற்செய்தியின் முடிவில் "ஃப்ரீயர் லாஜியன்" என்று பெயரிடப்பட்ட ஒரு பத்தியைக் காணலாம். மார்க் 16:14 இல் கூடுதலான ஒரு பதிப்பும் உள்ளது. இது கோடெக்ஸ் வாஷிங்டனியஸில் (சுமார் 5 ஆம் நூற்றாண்டு) காணப்படுகிறது. அங்கு இது ஒரு வெளிப்படுத்தல் முடிவைப் பற்றி பேசுகிறது. இதன் இறுதி வசனங்கள் சாத்தான் உலகை ஆளுகிறான் என்றும், சாத்தானின் காரணமாக கடவுளால் உலகை ஆள முடியாது என்றும் அந்த கையெழுத்துப் பிரதி கூறுகிறது.

➡️"இந்த அக்கிரமம் மற்றும் அவநம்பிக்கையின் யுகம் சாத்தானின் கீழ் உள்ளது. அவன் ஆவிகளின் அசுத்தமான விஷயங்கள் மேலோங்க கடவுளின் சத்தியத்தையும் சக்தியையும் மேலோங்க அனுமதிக்காதவன்."

✍️மாற்கு சுவிசேஷத்தின் ஆரம்பகால கையெழுத்துப் பிரதியிலிருந்து மாறுபாடான முடிவுகளை கொண்டிருக்கும் பிந்தைய கையெழுத்து பிரதிகள் எவ்வாறெல்லாம் மாற்கு சுவிசேஷம் மனித கரங்களால் கறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு சாட்சியம் அளிக்கின்றது. மாற்கு சுவிசேஷம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பைபிளும் இதுபோன்றே மனித கரங்களால் கறைப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்