திரித்துவம் எனும் சாத்தானை குறித்து பைபிள் சொல்வதென்ன?
திரித்துவம் எனும் சாத்தானை குறித்து பைபிள் சொல்வதென்ன?
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகிய 3 பேரும் ஒரே தேவனாக செயல்படுகிறார்கள் என்று சொல்கின்றனர். இதற்கு பைபிளில் எந்த விதமான ஆதாரமும் இல்லை. ஆனால் அதே சமயம் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு விரோதமாக கர்த்தர் ஒருவனே தேவன் என்பதை மெய்ப்பிக்கும் பல வசனங்கள் பைபிளில் உள்ளன.
நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.
(ஏசாயா 45:5)
ஏசாயாவில் குறிப்பிடப்பட்ட மேற்கண்ட வசனத்தில் தன்னைத் தவிர வேறு தேவன் இல்லை என்பதை கர்த்தர் மிகத் தெளிவாக சொல்கிறார். ஒருவேளை கர்த்தருடன் குமாரன் பரிசுத்த ஆவி ஆகிய இருவரும் தேவனாக இருந்திருந்தால் ஏன் இந்த வசனத்தில் தன்னைத் தவிர வேறு தேவன் இல்லை என்று கர்த்தர் பொய் சொல்ல வேண்டும்?
பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகிய மூன்று பேரும் இணைந்து தான் ஏசாயா 45:5 வசனத்தில் பேசுகிறார்கள் என்று கிறிஸ்தவர்கள் வாதிடுவதாக இருந்தாள் பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசு போதிப்பதாக உள்ள மற்ற வசனங்களையும் கிறிஸ்தவர்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
(யோவான் 17:3)
மேற்கண்ட வசனத்தில் கர்த்தர் ஒருவரே மெய்யான தேவன் என்பதையும் தான் கர்த்தரால் அனுப்பப்பட்டவர் என்பதையும் இயேசுவை மிகத் தெளிவாக சொல்கிறார். மேற்கண்ட வசனத்தில் தன்னையையோ அல்லது பரிசுத்த ஆவியையோ தேவன் என்று சொல்லாமல் கர்த்தர் ஒருவனே தேவன் என்று சொல்வதிலிருந்து திரித்துவத்திற்கு இயேசு சாவு மணி அடித்து விட்டார். இயேசு போதிக்கும் மேற்கண்ட வசனத்தில் கிறிஸ்தவர்கள் நம்பும் திரித்துவம் முற்றிலுமாக உடைந்து விடுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக