முஹம்மது நபியவர்கள் சாத்தானின் வார்த்தையை வெளிப்படுத்தினார்களா?
முஹம்மது நபியவர்கள் சாத்தானின் வார்த்தையை வெளிப்படுத்தினார்களா?
✍️முஹம்மது நபியின் மீது எவ்வாறாவது அரும்பாடுபட்டு அவதூறு பரப்ப வேண்டும் என்ற முயற்சிக்கு கிறிஸ்தவர்கள் தஞ்சமடைவது பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்களின் பக்கமே ஆகும். அவ்வாறான அவதூறுகளின் ஒன்றுதான் முஹம்மது நபி சாத்தானின் வெளிப்பாட்டை வெளிப்படுத்தினார் என்றும் அதன்காரணமாக மக்காவில் வாழ்ந்த இணைவைப்பாளர்களின் பொய் தெய்வங்களை முஹம்மது நபி அவர்கள் புகழ்ந்துரைத்தார் என்ற குற்றச்சாட்டை நபியின் மீது சுமத்தி தங்களைத் தாங்களே ஆறுதல் படுத்திக் கொள்கின்றனர். முகமது நபியின் மீதான இந்த குற்றச்சாட்டுக்கு அவர்கள் அல் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருந்து எந்த ஒரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்காமல் வரலாற்று புத்தகமான அல் தபரி என்ற நூலை தங்களது ஆதாரமாக முன்வைக்கின்றனர். அல் தபரி என்ற வரலாற்றுப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள அந்த பொய்யான சம்பவம் குறித்து சுருக்கமான கதையை கீழே காண்போம்.
👉முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து வஹி இறங்கி கொண்டிருந்த போது, ஷைத்தான் அவரின் நாக்கை பயன்படுத்தி வஹியாக கூறியது : “இவைகள் லாத், உஸ்ஸா,மனத்) உயர பரப்பவைகள். இவைகளின் பரிந்துரை அங்கீகரிக்கப்பட்டது“.
அல்லாஹ்வின் தூதர் இப்படி ஓதியதை கேட்டவுடன், குரைஷிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். மேலும் அவர், தங்களின் (குல) தெய்வங்களை பற்றி பேசும் விதத்தை கண்டு, களிப்புற்று, அவர் கூறுவதை கவனிக்க தொடங்கினார்கள். இதனை தொடர்ந்து, (அந்த) முழு அத்தியாயத்தையும் (அன் நஜ்ம்) அவர் ஓதினார்.
மேலும் அவர் வஹியாக கொண்டுவந்ததை நம்பி அவருக்கு பின்னால் இருந்த முஃமின்களும், குரேஷி மக்களும், அவருடன் சேர்ந்து பள்ளிவாசலில் சஜ்தா செய்தனர். இருப்பினும் அவர்களுள், அல்-வாலித் அல்-முக்ஹீரா எனும் வயது முதிர்ந்தவர், தன் இயலாமையால் அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கைமண்ணை எடுத்து அதில் தலை குனிந்தார்.
பின்பு, அவர்கள் மிகுந்த ஆனந்தத்துடன் , “முஹம்மது தங்கள் தெய்வங்களை அற்புதமாக வர்ணித்தார்” என கூறியபடி கலைந்து சென்றார்கள். இந்த செய்தி குரேஷி முழுவதும் பரவியது.
பின்பு ஜிப்ராயில் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து : “முஹம்மதே ! நீர் என்ன காரியம் செய்திருக்கிறீர் ?, நான் இறைவனிடமிருந்து உம்மிடம் கொண்டு வராத செய்தியை, அவன் கூறாத ஒன்றை, இம்மக்களுக்கு நீர் வஹியாக ஏன் அறிவித்ததென்ன ?”, என்றார். முகமது மிகவும் பயந்துப்போகிறார், அல்லாவைப்பற்றிய பயம் அவரை பற்றிக்கொள்கிறது.
முகமது(ஸல்) அவர்களின் வேதனையை தனது வசனங்களை இறக்கி நீக்குகிறான். அந்த வசனம்
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த எந்த ஒரு தூதரும், நபியும் (வஹியை ஓத) முற்படும்போது, அவர்களுடைய அந்த முயற்சியில், ஷைத்தான் தன்னுடைய விருப்பதினை (வஹியாய்) எறிந்ததில்லை. இருப்பினும் ஷைத்தான் எறிந்ததை அல்லாஹ் ரத்து செய்து, தம் வசனங்களை சரி செய்கிறான். மேலும் அல்லாஹ் அறிந்தவன் ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் 22:52)
(Al-Tabari VI:109 and 110)
நான் கடவுளுக்கு விரோதமாக புனைந்தேன். அவர் சொல்லாத வார்த்தைகளை அவர் சொல்லியதாக சொன்னேன்.
(Al tabari 6:111)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💎குர்ஆனின் மறுப்பு💎
✍️சத்திய மார்க்கமான இஸ்லாத்திற்கு விரோதமான என்னதான் அவதூறு பரப்பினாலும் இஸ்லாம் தனித்து பிரகாசமாக ஜொலித்து நிற்கும். இஸ்லாத்திற்கு விரோதமான பொய்தான் நிரப்பப்பட்ட அத்தனை அவதூறுகளும் தவிடுபொடியாகும் என்பதற்கு கிறிஸ்தவர்களின் இந்த அவதூறும் விதிவிலக்கல்ல. அந்த அவதூறுக்கு சம்பந்தமான குர்ஆன் வசனங்களை கீழே காண்போம்.
👉19. நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?
👉20. மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?)
✖️ இவைகள் லாத், உஸ்ஸா,மனத்) உயர பரப்பவைகள். இவைகளின் பரிந்துரை அங்கீகரிக்கப்பட்டது“.(மேலேயுள்ள இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள சாத்தானின் வெளிப்பாடான வசனம் இதுதான்)
👉21. உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?
👉22. அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.
👉23. இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை, நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை, நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள், எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
(அல்குர்ஆன் 53:19-23)
✍️கிறிஸ்தவர்கள் தங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக வைக்கும் இந்த ஹதீஸ் பொய்யானது என்பதற்கு மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மிகத் தெளிவான ஆதாரங்களாக இருக்கின்றன. மேற்கண்ட ஹதீஸில் கூறியுள்ளது படி லாத் உஸ்ஸா மனாத் இந்த மூன்றும் உயர பரப்பவைகள் என்றும் இவைகளின் பரிந்துரை அல்லாஹ்விடம் ஏற்கப்பட்டது என்றும் சொல்லி அந்த அத்தியாயத்தின் மற்ற வசனங்கள் அனைத்தும் முழுமையாக ஓதப்பட்டு அதன் இறுதியில் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாத குறைஷிகளும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்தனர் என்று அந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த குர்ஆன் அத்தியாயத்தில் அதன்பிறகு உள்ள வசனங்கள் லாத் உஸ்ஸா மனாத் இவைகள் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட வெறும் கற்பனை பெயர்கள் தான் என்று சொல்லப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த வசனங்களை ஓதிய பிறகு தான் முஸ்லிமல்லாத குறைஷிகள் தங்கள் தெய்வங்களை முஹம்மது நபி அங்கீகாரம் செய்தார் என்பதற்காக முஸ்லிம்களுடன் சேர்ந்து அல்லாஹ்வை சிரம் வணங்கினர் என்று சொல்லுவது மடமையிலும் மடமை. ஏனெனில் அந்த அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் மிக தெளிவாக மக்காவில் வாழ்ந்த குறைஷிகள் வணங்கி வந்த பொய்யான தெய்வங்களான லாத் உஸ்ஸா மனாத் இவை மூன்றையும் நிராகரிக்கின்றது. இதன் பிறகும் மக்காவில் வாழ்ந்த குறைஷிகள் தங்கள் தெய்வங்களை முஹம்மது அங்கீகாரம் செய்தார் என்பதற்காக அல்லாஹ்வை வணங்கினார்கள் என்று சொல்வது இட்டுக்கட்டப்பட்ட பொய் என்பதற்கு இந்த குர்ஆன் வசனங்களை காட்டிலும் வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💎 அல் தபரி தரும் மறுப்பு 💎
✍️தபரி ஒரு வரலாற்றாசிரியர் மட்டுமே, அவர் ஒரு ஹதீஸ் கலை வல்லுனர் அல்ல. எனவே அவர் தனது வரலாற்றுக்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் தொகுத்தார். இஸ்லாத்தைப் பொருத்த வரையில் ஆதாரங்கள் என்பது குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது பொதுவான நிபந்தனை. இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் தங்களது வரலாற்று புத்தகத்திற்கு தேவையான ஆதாரங்களை பலமான, பலவீனமான மற்றும் பொய்யான ஹதீஸ்களை கொண்டும் தொகுத்தனர். ஆனால் அவர்கள் அந்த ஹதீஸ்களை பலமானது பலவீனமானது மற்றும் பொய்யானது என்று எந்த வகையிலும் பிரிக்கவில்லை. அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் தங்களது வரலாற்று புத்தகத்தை தொகுத்தனர். ஹதீஸ் கலை வல்லுனர்கள் தான் அந்த வரலாற்றுப் புத்தகத்தில் உள்ள ஹதீஸ்களை அதிலுள்ள அறிவிப்பாளர்களின் அடிப்படையில் பலமான ஹதீஸ் என்றும் பலவீனமானது என்றும் பொய்யானது என்றும் தனித்தனியாக பிரித்து இனம் கண்டனர். அறிவிப்பாளர்கள் அடிப்படையில் பலமானது என்றும் பலவீனமானது என்றும் இட்டுக்கட்டப்பட்டது என்றும் ஹதீஸ்களை பிரிப்பது என்பது ஹதீஸ் கலை வல்லுனர்களால் மட்டுமே முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பணியை ஒரு வரலாற்று ஆசிரியரால் செய்ய முடியாது. ஆதலால் தபரி உட்பட எந்த ஒரு வரலாற்று ஆசிரியர்களும் சொல்லும் வரலாற்று தகவல்களுக்கு தகுந்த ஆதாரங்களை அவர்கள் முன் வைக்கும் போது மட்டுமே அது ஏற்றுக்கொள்ள முடியும். அவர்கள் முன் வைக்கும் ஆதாரங்கள் பலவீனமானவையாகவோ அல்லது பொய்யானவையாக இருக்கும் பட்சத்தில் அந்த வரலாற்று தகவல் நிராகரிக்கப்படும். இது அல் தபரி உட்பட அனைத்து இஸ்லாமிய வரலாற்று நூல்களுக்கும் பொருந்தும். அதனால்தான் அல் தபரியும் கூட தனது வரலாற்று நூலின் முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.
✍️ என்னுடைய இந்த புத்தகத்தில் கடந்தகால மனிதர்களின் மூலமாக வாசகர்கள் நிராகரிக்கக் கூடிய மற்றும் வெறுக்கக்கூடிய தகவல்கள் இருக்கலாம். மேலும் அந்தத் தகவல்களில் உண்மையில் அர்த்தமும், உறுதியும் இல்லாமல் இருப்பதை அவர் காணலாம். அத்தகைய சூழ்நிலையில் என் மேல் தவறு இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். யார் என்னிடத்தில் அந்த தகவலை கொடுத்தார்களோ அவர்களின் மீது தான் அந்த குற்றம் உள்ளது. என்னிடத்தில் என்ன தகவல் கொடுக்கப்பட்டதோ அதையே நான் இதில் பதிவு செய்கின்றேன்.
(Tareekh at-Tabari, Vol.1, Introduction)”
✍️அதனால் வரலாற்று நூலில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எவை ஆதாரபூர்வமாக உள்ளதோ அவை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட முடியும் மற்றவை நிராகரிக்கப்பட கூடியவை.
✍️பொய்களை உருவாக்குவது என்பது பொய்யர்களுக்கு பெரிய பிரச்சினை அல்ல. இது அவர்களின் வேலை. நபி ஒருமுறை மக்காவில் உள்ள பாகன்களுக்கு சில சூராக்களை (குர்ஆனிலிருந்து வரும் வசனங்களை) ஓதினார். இறுதியில் சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு சிரம் பணியுங்கள் என்று சொல்லப்பட்டுள்ள வசனத்தை நபி ஓதியவுடன் முஸ்லிம்களுடன் குர்ஆன் வசனத்தின் அழகைக் கண்டு மயக்கத்தில் இருந்த பாகன்களும் சிரம் பணிந்தனர். இந்த செய்தி பாகன்களின் தலைவர்களிடம் பரவியபோது, அவர்கள் வருத்தமடைந்து ஸஜ்தா செய்த அந்த பாகன்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயன்றனர். தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக, அந்த சிலை வணங்கிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் பொய்யான தெய்வங்களைப் பற்றி நல்ல விஷயங்களைச் சொன்னதாக பொய் சொன்னார்கள். இவ்வாறு தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே அவர்கள் கூறிய பொய் தான் மேற்கண்ட ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
✍️குர்ஆனின் வசனங்களை கேட்டு இறை நிராகரிப்பாளர்கள் மனம் மாறுவது என்பது புதிதான விஷயமல்ல. ஏனெனில் முகமது நபியை கொல்வதற்காக சென்ற உமர் ரலி அவர்களும் குர்ஆனின் வசனங்களை கேட்டு மனம் மாறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்பது இஸ்லாமிய வரலாறு ஆகும்.
➖➖➖➖➖➖➖➖➖➖
💎 கிறிஸ்தவர்கள் சிந்திக்க 💎
✍️முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பின்னால் சாத்தான் இருக்கிறான் என்ற கிறிஸ்தவர்களின் பொய் பிரச்சாரம் என்பது சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வின் அனுமதியால் இயேசு (ஸல்) அவர்கள் அற்புதங்கள் நிகழ்த்திய போது இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளாத யூதர்கள் இயேசுவை பிசாசின் தலைவன் என்று சொன்னதை ஒத்திருக்கிறது. இறைவனது தீர்க்கதரிசிகள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவரை நிராகரிக்கும் மக்களால் எழுப்பப்படுவது என்பது முகமது நபி அவர்களுக்கு முன்பும் பல தீர்க்கதரிசிகளுக்கும் நடந்துள்ளதால் முகமது நபியின் மீது கிறிஸ்தவர் வைக்கும் குற்றச்சாட்டில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. முகமது நபியின் பின்னால் சாத்தான் இருக்கிறான் என்று கிறிஸ்தவர்கள் நம்புவதாக இருந்தால் இயேசுவின் பின்னாலும் சாத்தான் இருந்தான் என்ற யூதர்களின் குற்றச்சாட்டை கிறிஸ்தவர்கள் நம்பியாக வேண்டும்.
👉பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.
(மத்தேயு 12:24)
✍️ பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அடிப்படையாக கொண்டு சாத்தானின் தூண்டுதலினால் முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை கூறினார்கள் என்ற கிறிஸ்தவரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது மற்றும் சிறுபிள்ளைத்தனமானது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💎 இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் ஆதாரமாகாது 💎
✍️அல்லாஹ்வின் மீது முஹம்மது நபி அவர்கள் பொய்யுரைத்தார் என்று சொல்லக்கூடிய ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது. அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வருகின்ற முஹம்மது இப்னு கஆப் அல்-கராத் என்ற நபர் நம்பத்தகுந்தவர் அல்ல என்று ஹதீஸ் கலை வல்லுனர்களால் சொல்லப்பட்டுள்ளது.
✍️இமாம் ஷம்ஸ் அல்-டீன் அல்-தஹாபி மவாசிஸ் அல்-ரிசலா பதிப்பு எழுதிய சியார் ஆலம் ஒரு நுபாலா புத்தகத்தில் மேற்கண்ட ஹதீஸின் ஆரம்ப அறிவிப்பாளரான முஹம்மது இப்னு கஅப் அல்-கராத்தி நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பிறந்திருக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முஹம்மது நபியின் காலத்தில் பிறந்திராத ஒருவர் நபி சொன்னதாக சொல்லும் ஒரு ஹதீஸ் எள்ளளவும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. அந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ள தகுந்ததும் கிடையாது. ஹதீஸ் கலை வல்லுனர்களால் பொய்யான ஹதீஸ் என்று மேற்கண்ட வகைப்படுத்தப் பட்டுள்ளது.
➖➖➖➖➖➖➖
💎 வரலாற்று ரீதியான மறுப்பு 💎
✍️ மேற்கண்ட பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதிஸில் சொல்லப்பட்ட சம்பவமானது முஹம்மது நபியவர்கள் தனது தூதுத்துவத்தை அறிவித்து ஐந்தாவது ஆண்டில் அதாவது அபிசீனிய ஹிஜ்ரத்துக்கு பிறகு சூரா அந் நஜ்ம் இறங்கியது. முஹம்மது நபிக்கு சாத்தானால் கொடுக்கப்பட்ட வசனம் அல்லாஹ்வால் நீக்கப்பட்டு, தனது வசனத்தை உறுதிப்படுத்தினான் என்று அர்த்தத்தில் சொல்லப்படுகின்ற சூரா அல்-ஹஜ் (22:52) வசனமாவது ஹிஜ்ரி முதலாவது ஆண்டில் அதாவது நபித்துவத்தின் 13 வது ஆண்டில் இறங்கியதாகும்.
✍️ அதாவது மக்காவில் வாழ்ந்த சிலை வணங்கிகளின் பொய்யான தெய்வங்களை முஹம்மது நபியை புகழ்ந்தார் என்று சொல்லப்படுகின்ற அத்தியாயமான சூரா அந் நஜ்ம் வசனத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அல்லாஹ் சாத்தானுடைய அந்த வார்த்தையை நீக்கிவிட்டு தனது வார்த்தையைக் கொண்டு நிலைநாட்டினான் என்று சொல்லப்படக்கூடிய அந்த வசனம் இறங்கியது என்று எவர் சொன்னாலும் அது நம்பத் தகுந்தது அல்ல. ஏனெனில் அந்த இடைப்பட்ட காலங்களில் மக்காவிலுள்ள சிறை வணங்கிகளின் கொடுமைகள் தாங்க முடியாமல்தான் முகமது நபி அவர்கள் இறைவனின் கட்டளையின்படி முஸ்லிம்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முஹம்மது நபி அவர்கள் உண்மையில் இணைவைப்பாளர்களின் பொய்யான தெய்வங்களை புகழ்ந்து இருந்திருந்தால் அவரை ஹிஜ்ரத் செய்ய வேண்டிய அவசியம் ஒரு போதும் வந்திருக்காது. இதன் மூலமாகவும் நபி இறைவனின் பெயரால் பொய் சொன்னார் என்று வரக்கூடிய அந்த ஹதீஸ் நம்பத்தகுந்தது அல்ல என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
➖➖➖➖➖➖
💎 ஆதாரப்பூர்வமான ஹதீஸ் சொல்வது என்ன 💎
👉1071. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பவர்களும் ஏனைய மக்களும் ஜின்களும் ஸஜ்தாச் செய்தனர்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 17. குர்ஆனிலுள்ள ஸஜ்தா வசனங்கள்
✍️குர்ஆனின் சொல்லாடலில் கவர்ந்த மக்காவின் இணைவைப்பாளர்கள் தங்களை மறந்து முஸ்லிம்களோடு எல்லாம் வல்ல இறைவனுக்கு முன்பாக சிரம் பணிந்தனர் என்பதையே ஆதாரப்பூர்வமான ஹதீஸ் காட்டுகிறது. மேற்கண்ட ஹதீஸில் எந்த ஒரு இடத்திலும் நபியவர்கள் இணைவைப்பாளர்களின் பொய்யான தெய்வங்களை புகழ்ந்தார் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. இதன் மூலமும் முஹம்மது நபிக்கு எதிரான கிறிஸ்தவர்களின் வாதம் தவிடுபொடியாகிறது.
➖➖➖➖➖➖➖
💎 இந்த ஹதீஸை குறித்து மற்ற இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வது என்ன?💎
✍️இப்னு கதிர் கூறுகிறார்; இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை ஆதாரமற்றது. இந்த சம்பவம் சம்பந்தமான எந்த ஒரு ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையும் இல்லை.
(Ibn Kathir in his Tafsir 5/441-442)
✍️இதில் உண்மை எதுவும் இல்லை இதன் அறிவிப்பாளர் வரிசையில் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று சவுகானி(Shaukani) குறிப்பிடுகிறார்.
👉(Fath al-Qadeer 5/128)
✍️இது குறித்து இப்னு குசைமாவிடம் கேட்கப்பட்டபோது, "இந்தக் கதை இஸ்லாமிய மார்க்க விரோதிகளால் புனையப்பட்டது" என்று கூறினார்.
👉(Tafsir al-Raazi 11/134)
✍️இப்னு ஜாவ்ஸி கூறுகிறார்: ‘இது சரியானதல்ல.
👉(Zaad al-Muyassar 4/391)
✍️பைஹாக்கி கூறினார்; "இந்த ஹதீஸ் ஆனது ஹதீஸ்களை விதியின்படி சரியானது என நிரூபிக்கப்படவில்லை".
👉(Al-Shifa 2/125)
✍️இவர்களுடன் மேலும் இமாம் ராஷி (தனது குர்ஆன் தப்ஷிரில் 11/135), காஜி அபு பக்ர் இப்னு அல்- அரபி (அல் ஷிஃபா 2/126), அலுஷி (தனது குர்ஆன் தப்ஷிரில் 13/99) etc. போன்றவர்களும் இந்த ஹதீஸை நிராகரிக்கின்றனர்.
➖➖➖➖➖➖➖
✴️ (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 22:52)
👉அல்லாஹ்வால் வெளிப்படுத்தப்பட்ட வசனங்களை நபியவர்கள் மக்களுக்கு ஓதி வெளிப்படுத்தும்போது, சாத்தானால் உருவாக்கப்படும் அதன் உண்மை மற்றும் அர்த்தங்கள் குறித்து மக்களின் மனதில் உள்ள பல்வேறு வகையான சந்தேகங்களையும் அல்லாஹ் அழித்து, தனது வசனத்தை உறுதிப்படுத்துகிறான் என்பதே இதன் பொருள் ஆகும். மக்களுக்கு அல்லாஹ்வின் வசனங்களை ஓதிக் காண்பிக்கின்ற ஒவ்வொரு தீர்க்கதரிசிக்கும் இதற்கு முன்பு இதுபோன்ற குழப்பத்தை மக்களின் உள்ளங்களில் சாத்தான் ஏற்படுத்தியுள்ளான் என்றும் இந்த வசனம் கூறுகிறது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
💎 கிறிஸ்தவர்கள் சிந்திக்க பைபிளில் இருந்து ஒரு கேள்வி 💎
✍️சாதாரண மனிதராக இந்த உலகத்தில் வாழ்ந்த முஹம்மது நபியவர்களை சாத்தான் தீண்டினான் என்று பொய்யாக குற்றப்படுத்தும் கிறிஸ்தவர்கள், தாங்கள் இறைவன் என்றும் புனிதமானவர் என்றும் நம்புகின்ற இயேசு சாத்தானால் சீண்டபட்டு சோதிக்கப்பட்டவர் என்பதை ஏனோ மறந்து விட்டார்கள்.
👉அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
(மத்தேயு 4:1)
👉நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
(லூக்கா 4:2)
✍️ஆனால் தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுபவர் அல்ல என்று பைபிள் கூறுகிறது.
👉தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல.
(யாக்கோபு 1:13)
✍️இயேசு (ஸல்) அவர்கள் ஒரு தெய்வீக மனிதர் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அவர்களை இறைவன் என்று நம்பும் இயேசு பிசாசினால் சோதிக்கப்படுகின்றார். பொல்லாங்கு நாலு சோதிக்கப்படுகிறது இறைவன் இல்லை என்று பைபிள் தெளிவாக போதித்தும் பிசாசினால் சோதிக்கப்பட்ட இயேசுவைக் இறைவன் என்று கிறிஸ்தவர்கள் நம்புவது மடமையிலும் மடமை. தங்களது இந்த மடமையை முஸ்லீம்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காகவே முஹம்மது நபியின் மீது முஸ்லிம்களால் புறக்கணிக்கப்பட்ட பொய்யான ஹதீஸை கொண்டு இந்த அவதூறு பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். வழக்கம்போல் பொய்யை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவர்களின் பொய் பிரச்சாரம் மீண்டும் முறியடிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக