மத்தேயு 17:21 வசனம் ஏன் சில பைபிள் பதிப்புகளில் நீக்கப்பட்டுள்ளது?
💎மத்தேயு 17:21 வசனம் ஏன் சில பைபிள் பதிப்புகளில் நீக்கப்பட்டுள்ளது?💎
✍️மேற்கண்ட பைபிள் வசனம் ஆனது சமீபத்திய பைபிள் பதிப்புகளில் சேர்க்கப்படவில்லை.
👉அவற்றில் சில இங்கே:
American Standard Version (ASV),
Contemporary English Version (CEV),
English Standard Version (ESV),
Holman Christian Standard Bible (HCSB),
New Century Version (NCV),
New International Version (NIV),
the New Living Translation (NLT) and
the New Revised Standard Version (NRSV).
✍️மேற்கண்ட புதிய பைபிள்களில் இந்த வசனம் சேர்க்கப்படவில்லை, ஏனெனில் மத்தேயுவின் பழைய மற்றும் சிறந்த கையெழுத்துப் பிரதிகளில் மேற்கண்ட வசனம் இல்லை என்கிற காரணத்தால். பழைய பைபிள்களின் மொழிபெயர்ப்பாளர்கள் அவர்கள் பயன்படுத்திய கையெழுத்துப் பிரதிகளைத் தேர்ந்தெடுப்பதில் அவ்வளவு கவனமாக இருக்கவில்லை. கையெழுத்துப் பிரதிகளை நகலெடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களால் பின்னாளில் மார்க் நற்செய்தியிலிருந்து மேற்கண்ட வசனத்தை நகலெடுத்து மத்தேயு சுவிசேஷத்தில் சேர்த்தனர்.
✴️இதோ அந்த மார்க் சுவிசேஷத்தின் வசனம்:
➡️அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
(மாற்கு 9:29)
✍️இதுபோன்ற கூட்டல் கழித்தல் எல்லாம் பைபிளை பொருத்தவரை சர்வ சாதாரணமானது. தாங்கள் வேதம் என்ற நம்பும் நூலில் இதுபோன்று கூட்டல் கழித்தல் செய்வது பாவம் என்ற குற்ற உணர்வு சிறிதும் கிறிஸ்தவர்களுக்கு இருந்ததும் கிடையாது. அதனால் தான் பைபிளின் பதிப்புகள் மாற மாற அதன் வசனங்களும் கூட்டல் கழித்தல் உடன் மாறிக்கொண்டே இருக்கின்றன.
▶️வில்லியம் ஹென்ட்ரிக்சன் கூறுகிறார்,
➡️"இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்." என்ற மேற்கண்ட 21வது வசனம் ஆரம்பகால சிறந்த கையெழுத்துப் பிரதிகளில் இல்லை. அவை மார்க் 9:29 இலிருந்து செருகப்பட்டிருக்கலாம்.
(William Henrickson. Matthew. New Testament Commentary. Baker Book House. 1973. 676.)
✍️இவ்வாறு பல பைபிள் ஆராய்ச்சியாளர்கள் மத்தேயுவின் மேற்கண்ட வசனம் ஆரம்பகால கையெழுத்து பிரதிகளில் இல்லை என்றும், பிற்காலத்தில் மாற்கு சுவிசேஷத்தில் இருந்து சொருகப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.
✍️பைபிள் மூல பிரதிகளில் கோடெக்ஸ் வத்திக்கானஸ் பி மற்றும் கோடெக்ஸ் சினாய்டிகஸ் ஆகியவை நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆரம்பகால கையெழுத்து பிரதிகள் ஆகும்(முதல் மூன்று நூற்றாண்டை சார்ந்த பைபிள் கையெழுத்து பிரதிகள் எங்கே என்றெல்லாம் கேட்கக் கூடாது, ஏனென்றால் அவ்வாறு ஒன்று இல்லை). இந்த இரண்டு கையெழுத்துப் பிரதிகளும் பெரும்பாலான பைபிள் ஆய்வாளர்களால் நம்பத் தகுந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால் மேற்கண்ட இந்த இரண்டு கையெழுத்துப் பிரதிகளிலும் மத்தேயுவின் மேற்கண்ட வசனம் இல்லை. இதன் காரணமாகவே இன்றைய பலன் பைபிள் பதிப்பாளர்களும் மேற்கண்ட வசனத்தை தங்கள் பைபிளிலிருந்து நீக்கிவிட்டு பைபிளை வெளியிடுகின்றனர்.
✍️கோடெக்ஸ் சினாய்டிகஸ் என்பது கிரேக்க புதிய ஏற்பாட்டின் மிகப் பழமையான முழுமையான நகலாகும். கோடெக்ஸ் வத்திக்கானஸ் பி 21 வது வசனத்தை சேர்க்கவில்லை. ஆனால் கோடெக்ஸ் சினாய்டிகஸ் 21 வது வசனத்தை கையெழுத்துப் பிரதியின் மேற்புறத்தில் நகல் எடுப்பவர் குறிப்பாக சேர்க்கப்பட்டுள்ளது.
✍️ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு வந்த கையெழுத்துப் பிரதிகளில் மட்டுமே மத்தேயுவின் மேற்கண்ட வசனம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆரம்பகால கையெழுத்துப் பிரதியான கோடெக்ஸ் வத்திக்கானஸ் பி மற்றும் கோடெக்ஸ் சினாய்டிகஸில் மேற்கண்ட வசனம் இல்லை.
✍️பைபிளில் இந்த ஒரு வசனம் மட்டுமல்ல இது போன்ற பைபிளின் பல புத்தகங்களில் உள்ள வசனங்களில் கூட்டல் கழித்தல் எல்லாம் நடந்துள்ளது என்பதற்கு கிறிஸ்தவ உலகில் நிறைய ஆதாரங்கள் உள்ளன. பைபிளின் இதுபோன்ற கூட்டல் கழித்தல் எல்லாம் பைபிள் மனிதக் கரங்களால் கறைப்படுத்தப்பட்டுவிட்டது என்ற குர்ஆனின் வசனத்தை உண்மை படுத்துவதாகவே அமைகின்றன.
✍️நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆரம்ப கால கையெழுத்து பிரதியில் இருந்து காப்பி எடுக்கப்பட்ட மற்ற கையெழுத்து பிரதிகளில் இவ்வாறு கூட்டல் கழித்தல் எல்லாம் நடந்து இருக்கும் பொழுது, நான்கு நூற்றாண்டு வரை எத்தனை கூட்டல் கழித்தல் எல்லாம் பைபிளில் நடந்திருக்கும்?
✍️பைபிளில் கண்டுபிடிக்கப்பட்ட கூட்டல் கழித்தல்களே மிக ஏராளமாக இருக்கும் பொழுது, யாருக்கும் தெரியாமல் எத்தனை கூட்டல் கழித்தல் பைபிளில் நடந்து இருக்கும்?
✍️சிந்திக்கும் மக்களுக்கு இதில் தெளிவான சான்றுகள் உள்ளன.
கருத்துகள்
கருத்துரையிடுக