யோவான் 14:14 இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா?
யோவான் 14:14 இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா?
✍️பைபிளில் உள்ள எந்த ஒரு வசனமும் இயேசுவை இறைவன் என்று நேரடியாக எங்கும் போதிக்கவே இல்லை. அதுமட்டுமில்லாமல் இயேசுவும் தன்னை இறைவன் என்று எங்கும் சொல்லவும் இல்லை. இதனால் விரக்தி அடைந்த கிறிஸ்தவர்கள் தங்களது தவறான நம்பிக்கைக்கு சப்பை கட்டு கட்டுவதற்காக பைபிளில் உள்ள வசனங்களை தவறாக திரித்து தங்களது மூடநம்பிக்கையை நியாயப்படுத்த முயல்கின்றனர். பைபிளில் பல வசனங்களை கிறிஸ்தவர்கள் தவறான விளக்கம் கொடுத்து இயேசுவை இறைவன் என்று சொல்ல முயற்சி செய்வதில் யோவான் 14 14 வசனம் மிக முக்கியமானது.
👉என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
(யோவான் 14:14)
✍️மேற்கண்ட வசனத்தின் படி பார்த்தாலும் இயேசுவை இறைவன் என்று சொல்ல முடியாது என்பதற்கான காரணங்களை இனி நாம் பார்ப்போம்.
1. மேற்கண்ட வசனத்தில் இயேசு தன்னை கர்த்தர் என்று எங்கும் சொல்லவில்லை.
2. நீ குறிப்பிட்ட யோவான் 14 14 வசனம் என் பெயரில் நீங்கள் எதைக் கேட்டாலும் நான் தருவேன் என்று இயேசு சொல்வதாக சொல்லப்பட்டுள்ளது. உண்மையில் இது ஒரு தெளிவான முரண்பாடாகும். ஏனெனில் நான் சுயமாக ஒன்றும் செய்வதில்லை என்று இயேசு தெளிவாகச் சொல்லும் போது தனது நாமத்தில் கேட்கும் போது மட்டும் அவரால் என்ன செய்ய முடியும்?
👉 யோவான் 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை;
3. ஒருவேளை இந்த வசனத்தை ஏற்றுக் கொண்டாலும், இந்த வசனத்தில் சொல்லி உள்ளபடி இயேசுவின் நாமத்தால் அவரது விசுவாசிகள் எதை கேட்டாலும் இயேசு கொடுக்கமாட்டார், மாறாக கர்த்தர் தான் அதை கொடுப்பார். இதையும் யோவான் தனது அடுத்த அதிகாரத்திலேயே பதிவு செய்துள்ளார்.
👉என் பெயரில் தகப்பனிடம் எதைக் கேட்டாலும் அதை அவர் உங்களுக்குத் தருவார்.
(யோவான் 15:16)
4. இயேசுவை கர்த்தர் என்று சொல்வதற்கு யோவான் 14 14 வசனம் எந்த வகையிலும் கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்யாது. யோவான் 14 14 வசனத்தில் சொல்லியுள்ளபடி இயேசுவின் நாமத்தில் எதை கேட்டாலும் யோவான் பதிவு செய்தபடி அதை கொடுக்கப் போவது கர்த்தர்தான். அதுமட்டுமில்லாமல் யோவான் 14வது அதிகாரத்தில் என்னைக் காட்டிலும் என் பிதா தான் உயர்ந்தவர் என்று சொல்லி இயேசு தன்னை கர்த்தரிடமிருந்து பிரித்தும், தன்னைக் காட்டிலும் கர்த்தர்தான் உயர்ந்தவர் என்றும் மிகத் தெளிவாக போதனை செய்துள்ளார்.
👉ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
(யோவான் 14:28)
✍️இதனால் மேற்கூறிய நான்கு காரணங்களினாலும் இயேசுவை கர்த்தர் என்று யோவான் 14வது அதிகாரத்தைக் கொண்டு எந்த ஒரு வகையிலும் கிறிஸ்தவர்கள் இயேசுவை இறைவனாக்க முடியாது.
✍️தன்னை கர்த்தர் என்று சொல்பவன் பரலோக சாம்ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று இயேசு சொல்லி கிறிஸ்தவர்கள் நரகத்திற்கு உரியவர்கள் என்பதை மிக ஆணித்தரமாக மத்தேயு 7 21 இல் பதிவு செய்துள்ளார்.
👉பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
(மத்தேயு 7:21)
கருத்துகள்
கருத்துரையிடுக