சோதனையே இறைவனை நெருங்கும் வழி
🌪சோதனையே இறைவனை நெருங்கும் வழி 🌪
இவ்வுலகில் பிறந்த அனைத்து உயிர்களும் 'மரணத்தை 'சுவைத்தே ஆக வேண்டும் என்பது போல் சோதனைகளையும் சுவைத்தே ஆக வேண்டும்.மனிதன் கற்றல் ,ஆராய்ந்து அறிதல் ,கற்பித்தலுக்காகப் படைக்கப்பட்டவன் ஆனால் தனக்கு சோதனை நிகழும்போது அல்லாஹ் தன்னை தண்டித்து விட்டான் என்னும் புலம்பல் வார்த்தைகள் தான் ஏராளம்.
⭐ வறுமை, நோய் ,உயிரினும் உணர்விலும் மேலானவர்களின் இழப்பு அனைத்தும் சோதனைகளே. "அல்லாஹ்வின் நல்லாசியும், நற்கிருபையும் பொறுமையாளார்களுக்கே உரியது ".
அல்லாஹ் கூறுகிறான் ;
💎உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
(அல்குர்ஆன்: 67:2)
✍நிழல் போன்ற சோதனைகளால் உண்மை நிலையை இறை நம்பிக்கையாளர்கள் இழந்து விடக் கூடாது என்பதற்காக நபியின் வாழ்வு திருமறை அடிப்படையில் நம்மை வழி நடத்துகின்றது .
💎பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன்: 2:156).
✍சோதனைகளை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பது எதிர்மறையான எண்ணங்களை ஏற்ப்படுத்துவதர்காக அல்ல. சோதனைகளை எதிர்ப்பார்த்து நிற்க வேண்டும், இறைவழியில் வலிமை பெற வேண்டும் என்பதற்காக.
💎"அல்லாஹ் ஒருவனுக்கு நன்மை செய்ய நாடினால் துன்பங்கள் கொண்டே சோதிப்பான் (அல் புகாரி) .
தன் அன்பிற்கு உரியவர்களை பிரியும் போதும், நோய் வாய்ப்படும் போதும்
அல்லாஹ் தண்டித்து விட்டான் என கவலை அடைகின்றோம். அவ்வாறில்லை அல்லாஹ் கூறுகின்றான்;
🕌 அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.
(அல்குர்ஆன்: 42:30)
✍இவ்வுலகில் அதிகம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் நபி (அலை)அவர்களே. அவ்வாறு எனில் அல்லாஹ் நபியை தண்டித்து விட்டானா? நிச்சயமாக இல்லை. அதிகம் நம்பிக்கைக் கொண்டவர்கள் அதிகம் சோதிக்க படுவார்கள். குறைவான நம்பிக்கைக் கொண்டோர் குறைவான அளவில். ஆனால் அனைவரும் சோதிக்கப்படுவார்கள்.
💎அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை.
(அல்குர்ஆன் 2:286)
✍நமது சோதனைகளால் இறைவன் நம் பாவங்களை மன்னித்து அருளுகின்றான்.
💎5025. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரைத் தைக்கும் ஒரு முள்ளாயினும் அதைவிட அற்பமானதாயினும் அதற்குப் பதிலாக அவருக்கு ஓர் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துகிறான்; அல்லது அவருடைய தவறு ஒன்றை அவரைவிட்டுத் துடைத்துவிடுகிறான்.
ஸஹீஹ் முஸ்லிம்.
💎5030. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
(ஸஹீஹ் முஸ்லீம்)
✍நமது கவலைகளும் சோதனைகளும் இக்கட்டான சூழ்நிலைகளும் நம்மை அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை அதிகமாக்கும் மேலும் நம்பிக்கையாளர்களே மிக அதிக அளவில் சோதிக்கப்படுகின்றார்கள். நம் இறைவனிடம் நெருங்கி செல்வதற்காக அல்லாஹ்விடத்தில் நெருக்கம் கொள்ள நபி அவர்கள் சோதிக்கப்பட்டதனைப் போல் அவர்கள் வழித்தோன்றல்களாகிய நாமும் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றோம். இறைதூதர்கள் அனைவரும் பொறுமையும் உறுதியான ஈமானும் கொண்டு வெற்றி அடைந்ததை போல் நாமும் இம்மை மறுமையை அல்லாஹ்வின் கருணை பாதையில் வெற்றி பெறுவோம்.
💎நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 2:153)
இவ்வுலகில் பிறந்த அனைத்து உயிர்களும் 'மரணத்தை 'சுவைத்தே ஆக வேண்டும் என்பது போல் சோதனைகளையும் சுவைத்தே ஆக வேண்டும்.மனிதன் கற்றல் ,ஆராய்ந்து அறிதல் ,கற்பித்தலுக்காகப் படைக்கப்பட்டவன் ஆனால் தனக்கு சோதனை நிகழும்போது அல்லாஹ் தன்னை தண்டித்து விட்டான் என்னும் புலம்பல் வார்த்தைகள் தான் ஏராளம்.
⭐ வறுமை, நோய் ,உயிரினும் உணர்விலும் மேலானவர்களின் இழப்பு அனைத்தும் சோதனைகளே. "அல்லாஹ்வின் நல்லாசியும், நற்கிருபையும் பொறுமையாளார்களுக்கே உரியது ".
அல்லாஹ் கூறுகிறான் ;
💎உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
(அல்குர்ஆன்: 67:2)
✍நிழல் போன்ற சோதனைகளால் உண்மை நிலையை இறை நம்பிக்கையாளர்கள் இழந்து விடக் கூடாது என்பதற்காக நபியின் வாழ்வு திருமறை அடிப்படையில் நம்மை வழி நடத்துகின்றது .
💎பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன்: 2:156).
✍சோதனைகளை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பது எதிர்மறையான எண்ணங்களை ஏற்ப்படுத்துவதர்காக அல்ல. சோதனைகளை எதிர்ப்பார்த்து நிற்க வேண்டும், இறைவழியில் வலிமை பெற வேண்டும் என்பதற்காக.
💎"அல்லாஹ் ஒருவனுக்கு நன்மை செய்ய நாடினால் துன்பங்கள் கொண்டே சோதிப்பான் (அல் புகாரி) .
தன் அன்பிற்கு உரியவர்களை பிரியும் போதும், நோய் வாய்ப்படும் போதும்
அல்லாஹ் தண்டித்து விட்டான் என கவலை அடைகின்றோம். அவ்வாறில்லை அல்லாஹ் கூறுகின்றான்;
🕌 அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.
(அல்குர்ஆன்: 42:30)
✍இவ்வுலகில் அதிகம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் நபி (அலை)அவர்களே. அவ்வாறு எனில் அல்லாஹ் நபியை தண்டித்து விட்டானா? நிச்சயமாக இல்லை. அதிகம் நம்பிக்கைக் கொண்டவர்கள் அதிகம் சோதிக்க படுவார்கள். குறைவான நம்பிக்கைக் கொண்டோர் குறைவான அளவில். ஆனால் அனைவரும் சோதிக்கப்படுவார்கள்.
💎அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை.
(அல்குர்ஆன் 2:286)
✍நமது சோதனைகளால் இறைவன் நம் பாவங்களை மன்னித்து அருளுகின்றான்.
💎5025. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரைத் தைக்கும் ஒரு முள்ளாயினும் அதைவிட அற்பமானதாயினும் அதற்குப் பதிலாக அவருக்கு ஓர் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துகிறான்; அல்லது அவருடைய தவறு ஒன்றை அவரைவிட்டுத் துடைத்துவிடுகிறான்.
ஸஹீஹ் முஸ்லிம்.
💎5030. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
(ஸஹீஹ் முஸ்லீம்)
✍நமது கவலைகளும் சோதனைகளும் இக்கட்டான சூழ்நிலைகளும் நம்மை அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை அதிகமாக்கும் மேலும் நம்பிக்கையாளர்களே மிக அதிக அளவில் சோதிக்கப்படுகின்றார்கள். நம் இறைவனிடம் நெருங்கி செல்வதற்காக அல்லாஹ்விடத்தில் நெருக்கம் கொள்ள நபி அவர்கள் சோதிக்கப்பட்டதனைப் போல் அவர்கள் வழித்தோன்றல்களாகிய நாமும் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றோம். இறைதூதர்கள் அனைவரும் பொறுமையும் உறுதியான ஈமானும் கொண்டு வெற்றி அடைந்ததை போல் நாமும் இம்மை மறுமையை அல்லாஹ்வின் கருணை பாதையில் வெற்றி பெறுவோம்.
💎நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 2:153)
கருத்துகள்
கருத்துரையிடுக