பைபிளில் இறை மகன் என்பவர் கர்த்தருக்கு ஆராதனை செய்பவரே.!
பைபிளில் இறை மகன் என்பவர் கர்த்தருக்கு ஆராதனை செய்பவரே.!
இயேசுவும் கர்த்தருக்கு ஊழியம் செய்பவரே.
பைபிளில் சொல்லப்பட்டுள்ள இறைமகன் என்ற சொல்லை கிறிஸ்தவர்கள் இறைவனுக்கு அதாவது கர்த்தருக்கு சமமானவராக காட்ட பயன்படுத்துகின்றனர். கிறிஸ்தவத்தை பொறுத்தவரையில் இரண்டு வகை கருத்துகள் உண்டு. ஒன்று வேதம் சொல்வது. மற்றொன்று வேதத்தில் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை சார்ந்தது. இறை மகன் என்ற சொல்ல கர்த்தருக்கு சமமாக்குவது என்பது வேதத்தின் கருத்து அல்ல. அது கிறிஸ்தவர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கை. இந்த நம்பிக்கை அவர்களின் வேதத்தோடு முற்றிலும் முரண்படுகிறது.
எந்த ஒரு நம்பிக்கைக்கும் வேதம் தான் ஆதாரமாக இருக்க வேண்டும். ஆனால் இறை மகன் என்பவர் கர்த்தருக்கு சமம் என்று கிறிஸ்தவர்கள் சொல்வது கிறிஸ்தவர்களின் குருட்டு நம்பிக்கை தானே தவிர பைபிள் அதனை ஆதரிக்கவில்லை.
பழைய ஏற்பாட்டில் யாக்கோபு தாவீது போன்ற தனிமனிதர்களும் இன்னும் இஸ்ரவேல் என்ற ஒட்டுமொத்த சமூகமும் கூட கர்த்தரால் இறை மகன் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களை எல்லாம் சாதாரண மனிதர்களாக பார்க்கும் கிறிஸ்தவர்கள் பைபிளில் இயேசுவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இறை மகன் என்ற சொல்லை கர்த்தருக்கு சமமாக்குகின்றனர். உண்மையில் கர்த்தர் இறை மகன் என்ற சொல்லை தன்னை மட்டுமே வணங்குபவர்களை குறிக்கவே பயன்படுத்துகின்றார்.
யாத்திராகமம் 4:22. அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.
23. எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.
மேலே உள்ள வசனத்தில் இஸ்ரவேல் மக்களை தனது குமாரன் என்று குறிப்பிடும் கர்த்தர் தன்னை வணங்குவதற்கு அவர்களை அனுப்பி விடு என்று பார்வோனிடம் சொல்ல மோஸேக்கு சொல்கிறார். கர்த்தரின் குமாரன் என்ற சொல் பிரயோகம் கர்த்தரை வணங்கும் அவரது அடியார்களை கண்ணியப்படுத்தும் நோக்கில் தான் பைபிள் பயன்படுத்துகிறது என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
அதனால் தான் இயேசு தன்னுடைய இறைவனான கர்த்தர் ஒருவரையே வணங்கினார். இன்னும் திரித்துவத்தின் மற்றொரு ஆள் தத்துவம் என்று (கற்பனையாக) நம்பப்படுகின்ற பரிசுத்த ஆவியை வணங்கவில்லை. ஏனெனில் பரிசுத்த ஆவி என்பது இறைவனல்ல கர்த்தரின் ஊழியக்காரர் என்று இயேசு அறிந்து இருந்தார்.
இன்னும் இயேசு தனது வாழ்நாளில் கர்த்தர் ஒருவரேயே வணங்கியவராகவும் அவரை மட்டுமே இறைவன் என்றும் மக்களுக்கு போதித்தார்.
லூக்கா 6:12. அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
மத்தேயு 14:23. அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் இயேசு கர்த்தர் ஒருவரையே வணங்கியதை தெளிவாக காட்டுகின்றன. இதில் இருந்து இயேசு இறைவனல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஒட்டுமொத்த பைபிளிலும் எங்கு தேடினாலும் இயேசுவை இறைவன் என்று சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக சொல்லும் ஒரு வசனமும் இல்லை. அதே சமயம் கர்த்தர் ஒருவரையே வணங்க வேண்டும் என்றும் தன்னை நோக்கி கர்த்தாவே என்று சொல்லுகிறவன் பரலோக சாம்ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று இயேசுவின் தெளிவான எச்சரிக்கையை பைபிளில் காண முடிகிறது.
மத்தேயு 7:21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
இயேசுவும் கர்த்தருக்கு ஊழியம் செய்பவரே.
பைபிளில் சொல்லப்பட்டுள்ள இறைமகன் என்ற சொல்லை கிறிஸ்தவர்கள் இறைவனுக்கு அதாவது கர்த்தருக்கு சமமானவராக காட்ட பயன்படுத்துகின்றனர். கிறிஸ்தவத்தை பொறுத்தவரையில் இரண்டு வகை கருத்துகள் உண்டு. ஒன்று வேதம் சொல்வது. மற்றொன்று வேதத்தில் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை சார்ந்தது. இறை மகன் என்ற சொல்ல கர்த்தருக்கு சமமாக்குவது என்பது வேதத்தின் கருத்து அல்ல. அது கிறிஸ்தவர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கை. இந்த நம்பிக்கை அவர்களின் வேதத்தோடு முற்றிலும் முரண்படுகிறது.
எந்த ஒரு நம்பிக்கைக்கும் வேதம் தான் ஆதாரமாக இருக்க வேண்டும். ஆனால் இறை மகன் என்பவர் கர்த்தருக்கு சமம் என்று கிறிஸ்தவர்கள் சொல்வது கிறிஸ்தவர்களின் குருட்டு நம்பிக்கை தானே தவிர பைபிள் அதனை ஆதரிக்கவில்லை.
பழைய ஏற்பாட்டில் யாக்கோபு தாவீது போன்ற தனிமனிதர்களும் இன்னும் இஸ்ரவேல் என்ற ஒட்டுமொத்த சமூகமும் கூட கர்த்தரால் இறை மகன் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களை எல்லாம் சாதாரண மனிதர்களாக பார்க்கும் கிறிஸ்தவர்கள் பைபிளில் இயேசுவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இறை மகன் என்ற சொல்லை கர்த்தருக்கு சமமாக்குகின்றனர். உண்மையில் கர்த்தர் இறை மகன் என்ற சொல்லை தன்னை மட்டுமே வணங்குபவர்களை குறிக்கவே பயன்படுத்துகின்றார்.
யாத்திராகமம் 4:22. அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.
23. எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.
மேலே உள்ள வசனத்தில் இஸ்ரவேல் மக்களை தனது குமாரன் என்று குறிப்பிடும் கர்த்தர் தன்னை வணங்குவதற்கு அவர்களை அனுப்பி விடு என்று பார்வோனிடம் சொல்ல மோஸேக்கு சொல்கிறார். கர்த்தரின் குமாரன் என்ற சொல் பிரயோகம் கர்த்தரை வணங்கும் அவரது அடியார்களை கண்ணியப்படுத்தும் நோக்கில் தான் பைபிள் பயன்படுத்துகிறது என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
அதனால் தான் இயேசு தன்னுடைய இறைவனான கர்த்தர் ஒருவரையே வணங்கினார். இன்னும் திரித்துவத்தின் மற்றொரு ஆள் தத்துவம் என்று (கற்பனையாக) நம்பப்படுகின்ற பரிசுத்த ஆவியை வணங்கவில்லை. ஏனெனில் பரிசுத்த ஆவி என்பது இறைவனல்ல கர்த்தரின் ஊழியக்காரர் என்று இயேசு அறிந்து இருந்தார்.
இன்னும் இயேசு தனது வாழ்நாளில் கர்த்தர் ஒருவரேயே வணங்கியவராகவும் அவரை மட்டுமே இறைவன் என்றும் மக்களுக்கு போதித்தார்.
லூக்கா 6:12. அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
மத்தேயு 14:23. அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் இயேசு கர்த்தர் ஒருவரையே வணங்கியதை தெளிவாக காட்டுகின்றன. இதில் இருந்து இயேசு இறைவனல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஒட்டுமொத்த பைபிளிலும் எங்கு தேடினாலும் இயேசுவை இறைவன் என்று சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக சொல்லும் ஒரு வசனமும் இல்லை. அதே சமயம் கர்த்தர் ஒருவரையே வணங்க வேண்டும் என்றும் தன்னை நோக்கி கர்த்தாவே என்று சொல்லுகிறவன் பரலோக சாம்ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று இயேசுவின் தெளிவான எச்சரிக்கையை பைபிளில் காண முடிகிறது.
மத்தேயு 7:21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக