முஹம்மது நபி கிணற்றில் சிறுநீர் கழித்ததாக சொல்லப்படும் கிறிஸ்தவ குற்றசாட்டுக்கான பதில்

முஹம்மது நபி கிணற்றில் சிறுநீர் கழித்ததாக சொல்லப்படும் கிறிஸ்தவ குற்றசாட்டுக்கான பதில்




இமாம் அபு நுஆயிம், அனஸ் அவர்களின் வழக்கத்தை குறித்து சொன்னதாவது, 

ஒருநாள் இறைத்தூதர் அவர்கள் அவரது வீட்டில் மிக நீண்ட நேரமாக தொழுகை செய்து கொண்டிருந்தார், அப்போது அவரது வீட்டுக்குள்ளேயே இருந்த ஒரு கிணற்றில் அவர் சிறுநீர் கழித்தார். இதுகுறித்து அனஸ் கூறியதாவது, அந்தக் கிணற்றில் உள்ள தண்ணீரை போல மிகவும் குளிர்ந்ததும் சுவையானதுமான தண்ணீர் மதினாவில் எங்கும் இருந்ததில்லை என்றார்.  

எந்தவொரு சஹாபா எனது வீட்டிற்கு வந்தாலும் நான் இந்தக் கிணற்றில் உள்ள மதுரமும் குளிர்ந்ததுமான இந்த தண்ணீரையே அவருக்கு குடிக்கக் கொடுப்பேன் என்று இறைதூதர் கூறினார்.

ஜாஹிலியாவின் காலத்தில் அந்தக் கிணற்றுக்கு al-Barud (மிகவும் குளிர்ந்த கிணறு) என்று பெயர் பெற்றது. 😂😂😂


Imam Abu Nu’aym narrates the practice of Anas RA, with his chain, who said: ‘The Messenger of Allah used to pray salah at his house and made it long. Once, He [urinated in the well], which was situated inside the house. Anas said: ‘there was no well in Madinah which [tasted more cool and sweet] than it’. He said: ‘when the sahabah come to my house I [serve them with the sweet water] of that well. In the era of jahiliyyah it was known as al-Barud, ‘the cool well’’’.


–Dala’il al-Nubuwwah by al- Bayhaqi, vol 2, Makkah: Dar al-Baz Publishers, p. 381



மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தின்பால் நுழைவதை கண்டு விரக்தியடைந்த கார்ப்பரேட் கிறிஸ்துவ மிஷனரி தொழில் செய்பவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை மிக அதிக அளவில் செய்து வருகின்றனர். இதற்கு பலவீனமான ஹதீஸ்களையும் ஆதாரமற்ற செய்திகளையும் பயன்படுத்துகின்றனர். அப்படி இட்டுக்கட்டி சொல்லப்படும் செய்திகளில் ஒன்று தான் மேற்கண்ட ஹதீஸ் ஆகும்.





தலாஇல் அல் நுபுவ்வத்த என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட ஹதீஸ் அலி பின் ஹாரூன் ➡️ மூஸா பின் ஹாரூன் ➡️ உபைதுல்லாஹ் இப்னு நுஃமான் அல் மக்ரி ➡️ முஹம்மது பின் அப்துல்லாஹ் அல் அன்சாரி ➡️  தமாமா ➡️ அனஸ் என்ற அறிவிப்பாளர் வரிசையை கொண்டுள்ளது. அந்த அறிவிப்பாளர் வரிசையில் வந்துள்ள உபைதுல்லாஹ் இப்னு நுமான் அல் மக்ரி என்ற நபர் யார் என்றே அறியப்படாதவர் என்பதால், அவர் மூலமாக வந்துள்ள இந்த ஹதிஸ் ஆதாரமற்றதும், ஏற்றுக் கொள்ளப்படாததும் ஆகும். இதுப்போன்று யார் என்று தெரியாதவர் மூலமாக வந்துள்ள ஹதிஸ்களை, ஹதிஸ் மஜ்ஹூல்  என்று கூறுவர்.


தேங்கி நிற்கும் தண்ணீரில் கூட சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று நபியவர்கள் தடை செய்திருக்கும் போது, குடிக்கும் கிணற்று நீரில் நபியவர்கள் சிறுநீர் கழித்தார்கள் என்று சொல்வது அபத்தமாகும்‌


ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் : 474. 

அத்தியாயம் : 2. தூய்மை


அபு நுயீம் (ர) அவர்களிடமிருந்து இதே செய்தி சொற்களில் மாறுபாட்டுடன், அதாவது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சிறுநீர் கழிப்பதற்கு பதிலாக, அவர் கிணற்றில் துப்பினார்கள் என்று சொல்லக்கூடிய செய்தியும் இதே அறிவிப்பாளர் வரிசையை மூலமாக வேறு சில புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:


➖ கசாஸ் அல்-குப்ராவில் (1/107) அல்லாமா சுயூதி (ரலி) 



 ➖ வஃபா அல்-வஃபாவில் அல்லாம சம்ஹுடி (ர) (ப .951) 



➖ சுபுல் அல்-ஹுதா வால்-ரஷாத்தில் (7/223) அல்லாமா முஹம்மது இப்னு யூசுப் அல்-சாலிஹி அல்-ஷமி (ரலி)



இதேபோன்ற அறிவிப்பாளர் வரிசையில் உமர் பின் முஹம்மது அல் புஜாய்ரி இதே ஹதீஸை பின்வரும் வார்த்தைகளுடன் அறிவிக்கிறார்:


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், வீட்டில் இருந்த கிணற்றில் துப்பியதாக அனஸ் (ரதியல்லாஹு ‘அன்ஹு) கூறினார்.  மதீனாவில் அதை விட இனிமையான கிணறு இல்லை.  விருந்தினர் வருகைக்கு வந்தபோது, ​​அதிலிருந்து அவர்களுக்கு உணவளிக்க நான் பயன்படுத்தினேன்.  இஸ்லாமியத்திற்கு முந்தைய காலத்தில் இது ‘அல்-பருத்’ (குளிர்ந்த கிணறு) என்று அழைக்கப்பட்டது.  (இத்தாஃப் அல்-மஹாரா 1/575)


மேற்கண்ட ஹதீஸிலும் அறிவிப்பாளர் வரிசையில் உபைதுல்லாஹ் இப்னு நுமான் அல் மக்ரி என்ற அறியப்படாத நபர் வருவதால் இந்த ஹதீஸையும் ஆதாரபூர்வமாக எடுத்துக்கொள்ள முடியாது. இவ்வாறு யாரென்று அறியப்படாத நபர் மூலமாக ஒரு இடத்தில் சிறுநீர் கழித்ததாகவும் மற்றுமொரு இடத்தில் உமிழ்நீர் துப்பியதாகவும் மாறுபட்ட செய்தியுடன் வரும் இந்த செய்தி பலவீனமானதாகும். இதைவைத்து ஒருபோதும் கிறிஸ்தவர்கள் முஹம்மது நபியை குறை காண முடியாது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்