பைபிள் போதிக்கும் இறைவன் சர்வவியாபி அல்ல.

மனிதர்களால் கறைப்படிந்த பைபிள் போதிக்கும் இறைவன் சர்வவியாபி அல்ல.




✍️ இறைவன் என்பவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் அடங்காமல் தனது ஞானத்தால் எங்கும் நிறைந்தவராக இருக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் தாங்கள் வணங்கும் இறைவன் சர்வவியாபி என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களின் வேதமான பைபிள் அவர்களின் நம்பிக்கைக்கு முரணாக கர்த்தர் சர்வ வியாதி அல்ல என்பதை தெளிவாக கூறுகிறது. கர்த்தர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கட்டுண்டுவராகவும், தனது தேவைகளுக்காக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லக் கூடியவராகவும் இருக்கிறார் என்று பைபிள் கூறுகிறது.


✍️ மனிதர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்ப்பதற்காக இறங்கி வர வேண்டிய அவசியம் பைபிள் போதிக்கும் கர்த்தருக்கு உள்ளது. இது அவர் சர்வவியாபி அல்ல என்பதை மிகத் தெளிவாக பறைசாற்றுகிறது.


👉 மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார்.

And the LORD came down to see the city and the tower, which the children of men builded. (KJV)

(ஆதியாகமம் 11:5)


✍️ மனிதர்கள் பேசக்கூடிய மொழியை ஒருவர் மற்றவர் அறிய முடியாதபடி தாறுமாறாக்க கர்த்தர் இறங்கி வர வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதாக பைபிள் கூறுகிறது.


👉 நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.

Go to, let us go down, and there confound their language, that they may not understand one another's speech. (KJV)

(ஆதியாகமம்  11:7)


✍️ பலவீனமான மனிதனைப் போன்று ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு கூட கர்த்தருக்கு கேருபீன் தேவைப்படுகிறது. 

👉 கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்.

And he rode upon a cherub, and did fly: yea, he did fly upon the wings of the wind. (KJV)

(சங்கீதம்  18:10)


👉 கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின் மீதில் தரிசனமானார்.

And he rode upon a cherub, and did fly: and he was seen upon the wings of the wind. (KJV)

(2 சாமுவேல்  22:11)


✍️ இருளை மறைவிடமாக கொண்டவர் என்று கர்த்தரை பைபிள் கூறுகிறது. இருளை மறைவிடம் ஆக கொண்டவன் சாத்தான் என்பதை அனைவரும் அறிவர்.

👉 இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; நீர் கொண்டு கறுத்த கார்மேகங்களையும் தம்மைச்சூழக் கூடாரமாக்கினார்.

He made darkness his secret place; his pavilion round about him were dark waters and thick clouds of the skies. (KJV)

(சங்கீதம் 18:11)


✍️ மோசேவிடம் தனது நாமத்தை சொல்வதற்கும் இறங்கிவர அவசியம் உள்ளவர் கர்த்தர்.

👉 கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்.

And the LORD descended in the cloud, and stood with him there, and proclaimed the name of the LORD. (KJV)

(யாத்திராகமம்  34:5)


✍️ மனிதர்கள் எவ்வாறு தங்களை புத்துணர்ச்சி படுத்திக்கொள்ள நடைபயிற்சி செய்வார்களோ அதுபோல கர்த்தர் தோட்டத்தில் உலாவுகிறவராக இருக்கிறார் என்று பைபிள் கூறுகிறது.

👉 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

And they heard the voice of the LORD God walking in the garden in the cool of the day: and Adam and his wife hid themselves from the presence of the LORD God amongst the trees of the garden. (KJV)

(ஆதியாகமம்  3:8)

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்