முஹம்மது நபியவர்கள் ஹஸனின் நாக்கை ஏன் ஈரப்படுத்தினார்கள்?

 [முஆவியா கூறினார்]: நபியவர்கள்(ஸல்) அலியின் மகன் அல்-ஹஸனின் உதடு அல்லது உதடுகளில் உறிஞ்சுவதை நான் கண்டேன். நபியவர்கள் உறிஞ்சிய எந்த நாவும் அல்லது உதடுகளும் (நரக நெருப்பால்) துன்புறுத்தப்படாது.

Musnad ahmad 16245



மேற்கண்ட ஹதீஸை சுட்டிக் காட்டி முஹம்மது நபியவர்களை எப்படியாவது குற்றப்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் அன்பின் வெளிப்பாடு காரணமாக செய்த செயலை கூட தங்களது கேவலமான புத்திகளால் தவறாக சித்தரிக்க கிறிஸ்தவர்கள் முயல்கின்றனர்.


வறண்ட பாலைவன சூழ்நிலையில் வாழ்ந்த அரேபியர்கள் தாகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தாகத்தை தீர்க்க குழந்தைகளின் உதடுகளையும் வாயையும் ஈரமாக்குவது அவர்களின் வழக்கமாக இருந்தது.  ஒரு குழந்தைக்கு  தண்ணீர் தாகம் இருந்தால், உமிழ்நீரைப் பகிர்வதன் மூலம் அவர்களின் தாகம் தீர்க்கப்படுகிறது .  அவர்கள் வாழ்ந்த கடினமான காலநிலையில் இந்த  நடைமுறை அவசியமான ஒன்றாக இருந்தது.



அபு ஹுரைரா அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஹசன் மற்றும் ஹுசைன் ஆகியோர் தங்கள் தாயுடன் இருந்தபோது அழுவதைக் கேட்டார்கள். எனவே அவர் அவர்களிடம் விரைந்து சென்று ஏன் அழுகிறார்கள் என்று கேட்டார். தாகத்தால் அழுகிறார்கள் என்று அவர்களின் தாய் கூறினார். நபி நீர் ஆதாரத்திற்குச் சென்றார், ஆனால் அந்த நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது.   யாரிடமாவது தண்ணீர் இருக்கிறதா என்று நபி கேட்டார். ஆனால் யாரிடமும் தண்ணீர் இல்லை. எனவே நபி(ஸல்) அவர்கள் அவர்களின் தாயிடம் கூறினார்: அவர்களில் ஒருவரை என்னிடம் கொண்டு வாருங்கள். அக்குழந்தை அமைதியாகும் வரை தனது நாக்கால் ஈரப்படுத்தினார்.

al-Mu’jam al-Kabīr 2588


ஹசன் மற்றும் ஹுசைன் தாகத்தால் அழுதப்போது நபி(ஸல்) அவர்கள் தனது நாக்கால் ஈரப்படுத்தியதால் அவர்கள் அமைதி அடைந்தனர்.

Kitāb al-Shifā 1/326



தண்ணீர் வரட்சியான சூழ்நிலையில் நபி(ஸல்) தனது இரண்டு இளம் பேரன்கள் தாகத்தால் அழுத போது அவர்களுடன் தனது உமிழ்நீரைப் பகிர்ந்துகொண்டு அவர்களின் தாகத்தை போக்கினார். தண்ணீர் கிடைக்காத கடினமான சூழலில் இதுபோன்ற செயல்கள் அவசியமான ஒன்றாகும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்