மூவினைச் சேர்க்கையை முஹம்மது நபியோடு தொடர்புபடுத்திப் பேசும் கிறிஸ்தவர்களுக்கான மறுப்பு:

மூவினைச் சேர்க்கையை முஹம்மது நபியோடு தொடர்புபடுத்திப் பேசும் கிறிஸ்தவர்களுக்கான மறுப்பு:


👉 அல் முஸ்தத்ரக் அ’லா அல் சாஹீஹைன், ஹக்கீம் அல் நிஷாபுரி பாகம் 3, பக்கம் 410 :


அறிவிப்பாளர்கள் :


i) அபு அல் அப்பாஸ் முஹம்மது இப்னு யாகூப் 

ii) முஹம்மது இப்னு சினான் அல் காஸாஸ் 

iii) இஸ்ஹாக் இப்னு இத்ரீஸ் 

iv) முஹம்மது இப்னு ஹாசிம் 

v) ஹிஷாம் இப்னு உர்வா மற்றும் தன்னுடைய தந்தை 

vii) அப்துல்லாஹ் இப்னு அல் ஸுபைர் மற்றும் அவரின் தந்தை 


அல் ஸுபைர் கூறும்போது :


👉 குளிரான ஓர் இரவில், அல்லாஹ்வின் தூதுர் ஆள் அனுப்பி (நான் வருமாறு) என்னை அழைத்தார், நான் சென்றிருந்தபோது, அவர், தன் மனைவிகளில் ஒருவரோடு போர்வைக்குள் படுத்திருந்தார். என்னை கண்டவுடன் (நானும்) அதனுள் வர அனுமதித்தார். நாங்கள் மூவரானோம்.


விளக்கம்:


இதில் இடம் பெறும் இரண்டு அறிவிப்பாளர்களால் இந்த ஹதிஸ் நிராகரிக்கப்படுகிறது.


👉 முஹம்மது இப்னு ஸினான் குறித்து இப்னு ஹாஜர் குறிப்பிடும் போது இவர் பலவீனமானவர் என்கிறார். அபிஹாத்தம் அர் ராஸீ பொய்யர் என்கிறார். முஹம்மது இப்னு ஸினான் பெரும் பொய்யர் என்று அபூதாவூத் மற்றும்  இப்னு கராஷ் அல்-முக்னி போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.



👉 அடுத்து இஸ்ஹாக் இப்னு இத்ரீஸ் பொருத்தவரை அவர் ஹதீஸில் நிராகரிக்கப்படவர் என்று அபூ ஹாத்தம் அல்ராஸி கூறுகிறார்....மேற்குறிபிட்ட ஹதீஸ் பலவீனமானதாகும்.......மேலும் இந்த ஹதீஸ் குறித்த அடிக்குறிப்பு பின் வருமாறு கூறுகிறது....முஹம்மது இப்னு சினானை பொய்யர் என்று அபுதாவுத் கூறுகிறார்...அதே போல் இஸ்ஹாக் இப்னு  இத்ரீஸை  விடப்பட்டவர்னு ஒதுக்கப்பட்டவர்னு புஹாரி இமாம் கூறுகிறார்.



அல்-நஸயீயால் இந்த ஹதீஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹதீஸ் பலவீனமானது என்று அபு ஸரா கூறுகிறார். அல்-ராஸி இந்த ஹதீஸ் பலவீனமானது என்று கூறுகிறார். பலவீனமான ஹதீஸ் என்று கூறி நிராகரித்ததாக அல்-தராகுட்னி கூறுகிறார்.


ஆதாரம்:

Lisan al-Mizan by Ibn Hajar 1/352

Ibn Abi Hatim 7/279

Al-Dhahabi 2/589.

இப்னுல் ஜவ்ஸி 1/99 




2️⃣ அலி இப்னு அபி தாலிப் கூறுவதாவது: அவர் ஒரு முறை நபிகள் நாயகம்(ஸல்) மற்றும் அவரது மனைவி ஆயிஷாவுடன் ஒரே படுக்கை மற்றும் ஒரே போர்வையின் கீழ் தூங்கியதாகவும் பின்னர் நபி அவர்கள் இருவரையும் [அலி மற்றும் ஆயிஷா] ஒரே படுக்கை மற்றும் ஒரே போர்வையில் விட்டுவிட்டு தொழுகைக்கு எழுந்ததாகவும் கூறுகிறார்.

(பிஹார் அல்-அன்வர் தொகுதி 40, பக். 2)



ஷியா அறிஞர்களின் கூற்றுப்படி  இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள அபான் பின் அபி ஆயாஷ் பலவீனமானர் மற்றும் மதிப்பற்றவர் ஆவார்.  ஷியா அறிஞர்கள் மத்தியில் அவர் 'பலவீனமானவர்' என்று ஷேக் துசி கூறினார் (ரிஜால் துசி, பக்கம் 126), இப்னு கடேரி (ரிஜால் இப்னு கடேரி, பக்கம் 36) மற்றும் ஷேக் பகார் மஜ்லிசி  (ரிஜால் மஜ்லிசி, பக்கம் 141) ஆகியோரும் அபான் பின் அபி ஆயாஷை பலவீனமானவர் என்றே குறிப்பிடுகின்றனர். அல்லாமா ஹெலி  அவரை 'மிகவும் பலவீனமானவர்' என்று அறிவிக்கிறார்.

(குலாசத் அல்-அக்வால், பக்கம் 325).



இவ்வாறு ஷியாக்களே நிராகரித்த ஹதீஸை எடுத்து வைத்துக்கொண்டு முஸ்லிம்களிடம் கேள்வி கேட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் முட்டாள்தனத்தை காட்டுகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்