கிறிஸ்தவர்கள் புறக்கணித்த மோஸேவின் ஓரல் தோரா - பாகம் 3
கிறிஸ்தவர்கள் புறக்கணித்த மோஸேவின் ஓரல் தோரா - பாகம் 3
✍️ சினாய் மலையில் எழுதப்பட்ட தோராவுடன் ஓரல் தோராவும் மோசேக்கு வழங்கப்பட்டது என்று யூதர்கள் நம்புகின்றனர். கடவுளிடமிருந்து மோசேக்கு ஒரு வாய்வழி போதனை இருந்தது என்று கூறி யாத்திராகமம் 24:12 வசனங்கள் இந்த கோட்பாட்டை ஆதரிக்கின்றன. ஓரல் தோரா இல்லாமல் எழுதப்பட்ட தோரா முழுமையடையாது என்பது ரப்பானிய யூதர்களின் வாதம். ஓரல் தோராவின் பல போதனைகளும் இயேசுவால் போதிக்கப்பட்டுள்ளது. ஓரல் தோராவை பின்பற்றிய இயேசுவை குறித்து ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்தோம்.
அதன் லிங்க்:
https://www.facebook.com/156500341661379/posts/626176681360407/
இதன் தொடர்ச்சியை இந்த பதிவில் காண்போம்.
1️⃣ மத்தேயு 5
7: இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.
👉மற்றவர்களிடம் இரக்கமுள்ளவன் பரலோகத்திலிருந்து கருணை பெறுவான்.
Gamaliel Beribbi, Shabbath 151b
2️⃣ மாற்கு 2
27: பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;
👉ரப்பி ஜொனாதன் பென் ஜோசப் கூறினார்: இது (சப்பாத்) உங்கள் கைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதன் கைகளுக்கு அல்ல.
Talmud: Yoma 85b:
3️⃣ மத்தேயு 5
22: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
👉அண்டை வீட்டாரை பகிரங்கமாக கேவலப்படுத்துவது அவரை இரத்தம் சிந்துவது போலாகும்.
Talmud: Bava Mezia 58b:
4️⃣ மத்தேயு 5
28: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
👉திருமணமான ஒரு பெண்ணின் சிறிய விரலைப் காமமாகப் பார்க்கிறவன், அவன் அவளுடன் விபச்சாரம் செய்ததைப் போன்றது.
Kallah, Ch. 1:
5️⃣ மத்தேயு 5
45: இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
👉ரப்பி அப்பாஹு கூறினார்: மழை இல்லாத நாள் [இறந்தவர்களின்] உயிர்த்தெழும் நாளை விட அதிகமாக உள்ளது. ஏனென்றால் இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் நீதிமான்களுக்கு மட்டுமே - அதேசமயம் மழை நீதிமான்களுக்கும் துன்மார்க்கருக்கும் உண்டு
Talmud Taanit 7a :
6️⃣ மத்தேயு 6
3: நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.
👉இயற்கைக்கு மாறான மரணத்திலிருந்து ஒரு மனிதனை விடுவிப்பது என்ன வகையான தர்மம்? ஒரு மனிதன் யாருக்கு கொடுக்கிறான் என்று தெரியாமல் கொடுக்கும்போது. பிச்சைக்காரன் யாரிடமிருந்து பெறுகிறான் என்று தெரியாமல் பெறுகிறான்.
Talmud Bava Batra 10a – 10b:
7️⃣ மத்தேயு 6
31: ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
👉ரப்பி எலியேசர் தி கிரேட் அறிவிக்கிறார்: இன்று சாப்பிட தனது கூடையில் ரொட்டி வைத்திருப்பவர் கூறுகிறார்: நாளை நான் என்ன சாப்பிட வேண்டும் என்று. அதாவது நாளைக்கு அவர் எப்படி ரொட்டி பெறுவார் என்று அவருக்குத் தெரியாது. அவர் சிறிய நம்பிக்கை கொண்டவரே தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒருவர் தனது வாழ்வாதாரத்தை பெற கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
Talmud Sotah 48b
8️⃣ மத்தேயு 5
37: உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
👉உங்களில் உள்ளதை ஆம் என்றும், இல்லாததை இல்லை என்றும் சொல்லுங்கள்.
Talmud Baba Metzia 49a
9️⃣ மத்தேயு 6
14: மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
👉நீங்கள் மற்றவர்களை மன்னித்தால் மட்டுமே கடவுள் உங்களை மன்னிப்பார்.
Talmud Rosh Hashanah 17a
1️⃣0️⃣ மத்தேயு 7
2: ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
👉நீங்கள் மற்றவர்களை எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்களோ, அவ்வாறு கடவுள் உங்களை நியாயந்தீர்க்கிறார்.
Talmud Shabbat 127b
👉"எவ்வாறு அளவிடுகிறாரோ அவ்வாறே அவருக்கும் அளவிடப்படும்."
Talmud Sanhedrin 100a,
கருத்துகள்
கருத்துரையிடுக