முஹம்மது நபியவர்கள் பிணத்துடன் உடலுறவுக் கொண்டாரா???
✴️முஹம்மது நபியவர்கள் பிணத்துடன் உடலுறவுக் கொண்டாரா???✴️
❌கிதாப் கன்ஸ் அல்-உம்மல் ஹதீஸ் எண் 37611 (வேலையாட்களின் புதையல்கள்)
❌அதிகாரம் : பெண்களின் பிரச்சனைகள் , (அலி இபின் ஹுஸாம் (அல்-தீன் அல்-முத்தாக்கி அல்-ஹிந்தி ஜலால் உல் தீன்) அவர்கள், அல்-சுயூத்தியின் அல்-ஜ’மி அல்-சாஃகிர் கிதாபிலிருந்து எடுக்கப்பட்ட ஹதீஸ்களில் சில)
▶️அப்துல்லாஹ் இபின் அப்பாஸ் அறிவித்தார் :
நபி (ஸல்) கூறியதாவது : (பிரேதங்களை அடக்கம் செய்யும் இடத்தில்) "அவர், அல்-ஜன்னத்தின் ஆடையை அணியவேண்டும் என்பதற்காக என்னுடைய ஆடையை அவருக்கு அணிவித்து, நான் அவளுடன் சவப்பெட்டில் படுத்தேன். இதன் மூலம் அவளின் மரண (கல்லறை) அழுத்தம் குறையும் என்பதற்காக. அபு-தாலிப்பிற்கு பிறகு அல்லாஹ்வின் படைப்புகளில் எனக்கு மிக சிறந்தவள் அவரே" என்றார். (அல்லாஹ்வின் தூதர் (அவர் என) அலியின் தாயாகிய பாத்திமாவையே (ரலி) குறிப்பிட்டார்).
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
👉 மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாக சுட்டிக்காட்டி முஹம்மது நபியவர்கள் பிணத்துடன் உடலுறவு கொண்டார்கள் என்று கிறிஸ்தவர்கள் வாதிடுகின்றனர். இதை குறித்து கீழே காண்போம்.
✍️(இத்தஜா)اضطجع
- சாய்ந்துபடுத்தார்" என அர்த்தம் கொண்டது. இந்த சொல் எந்த இடத்திலும் உடலுறவுக்காக பயன்படுத்தப்படவில்லை.
இங்கு நபிகளாரின் பெரியம்மா (தாயின் ஸ்தானம்) இறந்த போது, தனது பெரியம்மாவின் உடலை கல்லறை நெருக்கக் கூடாது என்பதற்காக அவரது கல்லறையில் படுத்தார்கள். எங்கு நபியவர்கள் படுத்தார்கள் என்பதைச் சுட்டிக் காட்டவே இத்தஜா" எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
✍️பல நபர்கள் கூடியிருக்கும் கல்லறையில் தனது பெரியம்மாவை கௌரவிப்பதற்காக பல பேர் முன்னிலையில் அவரை அடக்கம் செய்யப் போகும் கல்லறையில் படுப்பது என்பது எந்த ஒரு காலத்திலும் உடலுறவுக்காக இருக்காது என்பதை சிந்திக்கும் எவரும் அறிவர். இந்த செயல் ஒருவரது இரக்கத்தின் வெளிப்பாடாகவே இருக்கும். முஹம்மது நபியவர்களுக்கு தனது பெரியம்மாவின் மீது கொண்ட இரக்கத்தின் வெளிப்பாடு கிறிஸ்தவர்களுக்கு அவர் மீது பொய்யைப் புனைந்து அவதூறு பேசுவதற்கு வசதியாக அமைந்துவிட்டது போலும்.
ضاجع (தாஜா)✍️
என்ற சொல் பாலியல் அர்த்தத்தில் ஒருவருடன் படுத்துக் கொள்வதைக் குறிக்கிறது. மேலும் اضطجعت (Id'tajat) என்ற சொல் ஒரு பாலியல் அல்லாத அர்த்தத்தில் ஒருவருடன் படுத்துக் கொள்வதைக் குறிக்கிறது. கிறிஸ்தவர்கள் முஹம்மது நபியின் மீது குற்றம் சாட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள ஹதிஸிலுள்ள வார்த்தையானது اضطجعت (Id'tajat) ஆகும். இதன் மூலம் உடல் உறவு என்ற அர்த்தத்தில் அந்த வார்த்தை பயன்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.
✍️ஒருவருடன் படுப்பது என்பது ஒருவருடன் உடலுறவு கொள்வதாகும் என்று கிறிஸ்தவர்கள் நினைக்கின்றனர். படுப்பது என்ற சொல் உடலுறவு என்ற ஒரே அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை சிந்திக்கும் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் நேற்றிரவு நீங்கள் உங்கள் தாயுடன் படுத்து இருந்தீர்கள் என்று நீங்கள் கூறும்போது, நேற்று இரவு உங்கள் தாயுடன் நீங்கள் உடலுறவு கொண்டதாக யாரும் கருதமாட்டார்கள். ஏனெனில் உங்கள் தாய் நீங்கள் திருமணம் செய்யும் உறவு முறை அல்ல என்பதால். ஹதீஸ் اضطجعت (இத்தஜாத்) என்ற வார்த்தைக்கு பதிலாக ضاجع (தாஜா) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், இதன் பொருள் நபி முகமது நபி தனது பெரியம்மாவுடன் உடலுறவு கொண்டார் என்பதல்ல, ஏனெனில் பெரியம்மா என்னும் உறவு முறையானது ஒருவர் திருமணம் செய்ய முடியாத உறவு முறையாகும்.
✍️பாத்திமா பின் ஆசாத் அவர்கள் முஹம்மது நபியவர்கள் ஆறு வயதில் தனது தாயை இழந்த போதிலிருந்து தாயாக இருந்து அவரை வளர்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
👉மேலும் மேற்கண்ட ஹதீஸிக்கு ஜகாரியா என்பவர் கூறுவதாவது:👈
➡️முஹம்மது நபியவர்கள் அவருடன் படுத்ததால் அவள் அவனுக்கு மனைவியாகி விட்டாள். அதனால் அவள் மூமின்களுக்கு தாய் எனும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விட்டார் என்று குறிப்பிடுகிறார்.
✍️முதலாவது இது ஒரு பொருந்தாத வாதம் ஆகும். ஏனெனில் திருமணத்திற்கு என்பது இரு தரப்பு உடன்படிக்கையையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதனால் இறந்து போன ஒருவர் உடன் படுப்பதன் மூலம் மனைவி என்ற அந்தஸ்தை ஒருவருக்கு கொடுத்து விட முடியாது.
✍️இரண்டாவது இஸ்லாத்தில் ஒருவருக்கு திருமணம் செய்ய முடியாத உறவு முறைகள் என்று சில உறவு முறைகள் வரையறை செய்யப்பட்டுள்ளது. அத்தகையை உறவுமுறைகளில் அம்மா சித்தி பெரியம்மா அத்தை போன்ற உறவு முறைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இஸ்லாம் தடுத்திருக்கும் ஒரு உறவுடன் திருமணத்தை முஹம்மது நபியவர்கள் செய்தார் என்பது பொய்யானது.
✍️மூன்றாவது நபியின் மனைவி என்ற சிறப்பு அந்தஸ்தை காட்டிலும் நபியின் வளர்ப்பு தாய் என்ற மிக உயர்ந்த அந்தஸ்தை அவர் பெற்றிருந்தார். அதனால் பாத்திமா அவர்கள் சிறப்பு அந்தஸ்தை பெற வேண்டும் என்பதற்காக முஹம்மது நபியவர்கள் அவரை திருமணம் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இதன் மூலம் சக்கரியாவின் வாதம் இங்கு உடைந்துவிடுகிறது.
✍️நான்காவது உடலுறவு கொள்வதற்கு முன் எந்த ஒரு மனிதனும் ஆடையை தான் உடலுறவு கொள்ள போகும் பெண்ணுக்கு அணிவிக்க மாட்டான். ஆனால் மேற்கண்ட ஹதீஸில் முஹம்மது நபியவர்கள் இறந்து போன தனது பெரியம்மாவிற்கு ஆடையை அணிவித்தார்கள் என்றும் அதன் பிறகே மண்ணரையில் படுத்தார்கள் என்றும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் முஹம்மது நபி அவர்கள் உடலுறவு கொள்ளவே படுத்தார்கள் என்று எவராலும் வாதிட முடியாது.
✍️ஐந்தாவது ஜக்கரியா அவர்கள் தனது இந்த வாதத்திற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் வைக்கவில்லை என்பதாகும்.
✍️ஆறாவது இஸ்லாத்தின் மீதும் முஹம்மது நபியின் மீதும் ஆறாத விரோதம் கொண்டிருந்த இஸ்லாமிய விரோதிகள் முஹம்மது நபி ஏதேனும் ஒரு தவறு செய்வாரா என்று காத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் இதுபோன்ற ஒரு செயலை முகம்மது நபி அவர்கள் செய்திருந்தால் முஹம்மது நபிக்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்வதற்கு மதினாவில் வாழ்ந்த யூதர்களும் மக்காவின் சிலை வணங்கிகளும் இந்த செயலை பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் பிணத்துடன் உடலுறவு கொண்டார் என்று யூதர்களும் சிலை வணங்கிகளும் முஹம்மது நபிக்கு எதிராக பிரச்சாரம் செய்யவில்லை என்பதிலிருந்து அப்படி ஒரு செயல் அங்கு நடைபெறவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
👉எகிப்திலிருந்து வந்த கிறிஸ்தவ பிண்ணனி கொண்ட ஜகரிய்யா, மேற்கண்ட தனது கூற்றின் மூலம் தனது நயவஞ்சகத்தன்மையை வெளிக்காட்டுகிறார். பைபிளில் இதே வார்த்தை "கிடந்தார், படுத்திருந்தார்" போன்ற சாதாரண அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டு இருப்பதை தெரிந்து இருந்தும் முஹம்மது நபிக்கு எதிராக மட்டும் உடலுறவு என்னும் அர்த்தத்தில் கொடுக்கும் விளக்கமானது இவர் ஒரு நயவஞ்சகர் என்பதையும், இஸ்லாத்திற்கு விரோதமான மனப்பாங்கு கொண்டவர் என்பதையும் காட்டுகிறது.
👉அனஸ் இப்னு மாலிக் கூறுகிறார். அலி(ரலி) அவர்களின் தாயார் பாத்திமா பின் ஆசாத் காலமானபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிற்குச் சென்று, அவருக்கு அருகில் அமர்ந்து, 'என் அன்புத் தாயே, அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டட்டும். அல்லாஹ் உங்களை தனது பாதுகாப்பில் வைத்திருப்பானாக. என் அம்மாவுக்குப் பிறகு, அக்கறையுள்ள தாய் தன் குழந்தையை நேசிப்பது போன்று நீங்கள் என்னை நேசித்தீர்கள். பலமுறை எனக்கு நன்றாக உணவளிப்பதற்காக நீங்கள் பசியுடன் இருந்தீர்கள்; நீங்கள் எனக்கு ஆடைகளை உடுத்தி, நீங்கள் உண்ணாமல் சுவையான உணவுகளை எனக்கு உணவளித்தீர். அல்லாஹ்வின் இன்பத்தையும் வெகுமதியையும், மறுமையில் வெற்றியையும் அடைவீர்கள் என்ற நம்பிக்கை வைக்கின்றேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், பாத்திமா பின் ஆசாத் அவர்களை மூன்று முறை (குஸ்ல்) கழுவ வேண்டும் என்று கட்டளையிட்டார். அவற்றில் ஒன்று கற்பூரத்துடன் கலந்த தண்ணீரை தனது கையால் ஊற்றினார். இதற்குப் பிறகு, அவர் தனது கமீஸை (நீண்ட சட்டை) கழற்றி அவர் மீது வைத்து அவரை ஒரு பர்தாவில் (வெளி ஆடை) மூடினார். பின்னர் அவர் உசாமா இப்னு சயீத், அபு அய்யூப் அல்-அன்சாரி, உமர் இப்னு கத்தாப் மற்றும் ஒரு கருப்பு அடிமை ஆகியோரை அவருக்கு கல்லறையைத் தோண்டுமாறு கேட்டு கொண்டார். அவர்கள் கல்லறையை சென்றடைந்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கல்லரையை தோண்டி குப்பையை நீக்கிவிட்டார்கள். பின்னர், அவர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), மண்ணரையில் படுத்துக் கொண்டு அல்லாஹ்விடம், 'ஓ அல்லாஹ்! மரணம் மற்றும் வாழ்வுக்கான அதிகாரத்தை கொண்டவனே! முடிவு இல்லாதவனே, என் தாய் பாத்திமாவை மன்னியும். அல்லாஹ்வே! அவருடைய மறுமையின் வீட்டை விரிவாக்கும்; உனது நபி முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மற்றும் கடந்த கால நபிமார்களின் பெயரில் நான் உன்னை கோருகிறேன். அல்லாஹ்வே, கருணையாளர்களில் மிக்க கருணையாளன்! என்று கூறிவிட்டு ' அதற்குப் பிறகு, அவர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), ‘அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவர்)’ என்று சொன்னார். பிறகு அல்-அபாஸ் மற்றும் அபூபக்கர் ஆகியோரின் உதவியுடன், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவரை மண்ணரையில் வைத்தார்.
(Usdu'l-Ghaba, 5: 517; Mustadrak, 3: 108; Hz. Muhammed ve İslamiyet, 4137; Tabaqat, 8: 222.)
[At-Tabraani in Al-Kabeer and Al-Awsat]
✍️மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் மண்ணறையில் படுத்து இறைவனிடம் பிரார்த்தித்தார்கள் என்றும் அதன் பிறகே பாத்திமா பின் ஆசாத் அவர்களை மண்ணறையில் வைத்தார்கள் என்று மிக தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட ஹதீஸின் மூலம் உடலுறவு எனும் நோக்கத்திற்க்காக நபியவர்கள் மண்ணறையில் படுத்தார்கள் என்ற கிறிஸ்தவர்களின் பொய் பிரச்சாரம் முறியடிக்கப்படுகிறது.
✍️இத்தஜா என்ற சொல் பல்வேறு ஹதீஸ்களில் சாதாரணமாக கீழே படுத்து இருந்தார்கள் என்பதற்குத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர உடலுறவை குறிக்கும் வகையில் எந்த ஒரு இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை.
✔️உதாரணத்திற்கு
حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا صَلَّى {سُنَّةَ الْفَجْرِ} فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً حَدَّثَنِي وَإِلاَّ اضْطَجَعَ حَتَّى يُؤْذَنَ بِالصَّلاَةِ.
▶️1160. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 19. தஹஜ்ஜுத்
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ أَبُو النَّضْرِ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً حَدَّثَنِي وَإِلاَّ اضْطَجَعَ. قُلْتُ لِسُفْيَانَ فَإِنَّ بَعْضَهُمْ يَرْوِيهِ رَكْعَتَىِ الْفَجْرِ. قَالَ سُفْيَانُ هُوَ ذَاكَ.
▶️1161. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லாவிடில் தொழுகைக்கு அழைக்கும் வரை படுத்துக் கொள்வார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 19. தஹஜ்ஜுத்
✍️ இஸ்லாமிய ஆதாரங்களான குர்ஆன் மற்றும் ஹதீஸின் படி மேற்கண்ட இத்தஜா என்ற வார்த்தையானது எந்த ஒரு இடத்திலும் உடலுறவு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் படவில்லை. மாறாக சாய்ந்து படுத்தார் என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அச்சொல்லுக்கான அர்த்தம் உடலுறவு என்று அரபு அகராதியிலும் குறிப்பிடப்படவில்லை.
✍️அதே அரபு வார்த்தை பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது (2 கிங்ஸ் 4:32) மேலும் அந்த வார்த்தை உடலுறவு என்ற அர்த்தத்தில் மொழிபெயர்க்கப்படாமல் கட்டிலில் கிடந்தது என்னும் அர்த்தத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ودخل اليشع البيت واذا بالصبي ميت ومضطجع على سريره.
▶️எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, அந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான்.
(2 இராஜாக்கள் 4:32)
وَهُوَذَا الرَّبُّ وَاقِفٌ عَلَيْهَا، فَقَالَ: «أَنَا الرَّبُّ إِلهُ إِبْرَاهِيمَ أَبِيكَ وَإِلهُ إِسْحَاقَ. الأَرْضُ الَّتِي أَنْتَمُضْطَجِعٌ عَلَيْهَا أُعْطِيهَا لَكَ وَلِنَسْلِكَ.
▶️அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.
(ஆதியாகமம் 28:13)
✍️ யாக்கோபுக்கு அவன் படுத்திருந்த பூமியை அவனுக்கு கொடுப்பதாக கர்த்தர் வாக்களிக்கும் போதும் அந்த வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
👉பைபிள் உடலுறவை குறிக்க சில வார்த்தைகளை பயன்படுத்துகிறது. இது எபிரேய கலாச்சாரத்தில் அவ்வாறான வார்த்தைகள் உடலுறவை குறிக்கும்.
➡️உதாரணமாக שָׁכַב "ஷாகப" என்ற வார்த்தைக்கு நேரடி அர்த்தம் சாய்ந்து படுத்தல் என்பதாகும். இந்த வார்த்தையானது சயனித்தல் என்ற அர்த்தத்திலும் உவமையாக சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
✍️உதாரணமாக, லோத்தின் மகள்மார் தன் தகப்பனோடு உடலுறவு கொண்டதை குறிக்க பைபிளில் இதேவார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை அரபி பைபிளில் நேரடியாக மொழிபெயர்க்கும்போது "இத்தாஜா" என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. (ஆதியாகமம் 19:31-36)
✍️இதேபோல, ரூபன் தன் சித்தியை புணர்ந்தது (ஆதி 35:22), தாவீது பாத்சபாவை புணர்ந்தது (2சாமு 11:2-4), கர்த்தர் தாவீதின் மனைவிகளை புணரவைப்பதாக வாக்களித்தது (2 சாமு12:11-12) எஜமானனின் மனைவி யோசப்பை புணர அழைத்தபோது (ஆதியாகமம் 39:7) போன்ற பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பல இடங்களில் மேற்கண்ட வார்த்தைக்கு படுத்திருத்தல் என்ற சாதாரண அர்த்தத்தில்தான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மட்டுமே உடலுறவை குறிக்கும் சயனத்தில் என்னும் அர்த்தத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
✔️இந்த வார்த்தைக்கு அரபியில் மொழி பெயர்க்கப்பட்ட இத்தஜா என்ற சொல்லை பொறுத்தவரையில் படுத்து இருத்தல் என்பதே சரியான அர்த்தமாக உள்ளது.
✍️பைபிள் அடிப்படையில் இவ்வார்த்தை உடலுறவை சில இடங்களில் குறிப்பதால், கிறிஸ்தவ பின்னணியை கொண்ட ஜகரியா என்ற அயோக்கியன் மேற்கண்ட ஹதீஸிற்கு தவறான விளக்கத்தை கொடுத்துள்ளான்.
▶️இஸ்லாமிய ஆதாரங்களான குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை பொறுத்தவரையில் இத்தஜா என்ற சொல்லானது படுத்திருத்தல் என்ற அடிப்படையிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு இடத்திலும் உடலுறவை குறிக்கும் வகையில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. காம ரசம் நிறைந்த ஆபாசப் புத்தகமான பைபிள் படித்த கிறிஸ்தவர்கள் மேற்கண்ட ஹதீஸை தவறான நோக்கத்தில் சித்தரிக்க முயல்வதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் பைபிள் அவர்களை அவ்வாறு தான் சிந்திக்கத் தூண்டி உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக