இயேசுவை இறைவன் இல்லை என்று சொல்லும் 15 பைபிள் வசனங்கள்

✔️இயேசுவை இறைவன் இல்லை என்று சொல்வதற்கான 15 முக்கிய காரணங்கள் பைபிளிலிருந்து....




👉1. அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
(மாற்கு 13:32)

✍️மேற்கண்ட வசனத்தில் அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர குமாரன் மற்றும் தூதர்கள் உட்பட வேறு யாரும் அறிய மாட்டார்கள் என்று மிகத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மேற்கண்ட வசனத்தில் இயேசுவுக்கு என்ன தெரியும் மற்றும் கர்த்தருக்கு என்ன தெரியும் என்பதையும் பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

👉2. சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
(மத்தேயு 26:39)

✍️இயேசுவும் கர்த்தரும் தனித்தனியே சுயமான சித்தம் கொண்டவர்கள் என்பதையும், இயேசு கர்த்தரின் சித்தத்திற்கு கீழ்படிந்தவர் என்பதையும் மேற்கண்ட வசனம் உறுதி செய்கிறது.

👉3. ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.
(யோவான் 5:26)

✍️இயேசு தனது ஜீவனை கர்த்தரிடமிருந்து பெற்றிருக்கிறார் என்பதையும் ஆனால் கர்த்தரோ சுயமாக தனது ஜீவனை கொண்டவர் என்பதையும் மேற்கண்ட வசனம் உறுதி செய்கிறது.  சுயமாக தனது ஜீவனை கொண்டிராத இயேசு கர்த்தரின் அடியானே என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

👉4. நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
(யோவான் 5:30)

✍️தான் சுயமாய் ஒன்றும் செய்வது இல்லை என்று இயேசு சொல்வதிலிருந்து இயேசு கர்த்தரின் கட்டளைக்கு கீழ்படிந்தவர் என்பதையும் தன்னை அனுப்பின தனது இறைவனான பிதாவின் சித்தத்தையே இயேசு விரும்புகிறவர் என்பதையும் மேற்கண்ட வசனம் உறுதி செய்கிறது.

👉5. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
(யோவான் 5:19)

✍️தனது இறைவனான கர்த்தர் செய்கிறது எதை இயேசு காண்கிறாரோ அதையே தான் செய்வதாகவும், தான் சுயமாக ஒன்றும் செய்வதில்லை என்றும் இயேசு சொல்வதிலிருந்து, தான் கர்த்தரின் பிரதிநிதி என்பதை உறுதி செய்கிறார்.

👉6. அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;
(மாற்கு 10:18)

✍️தன்னை நல்லவன் என்று சொன்ன விசுவாசியிடம், கர்த்தர் ஒருவரைத் தவிர வேறு எவனும் நல்லவன் இல்லை என்று சொல்லி தன்னையையும் கர்த்தர் இயேசு வேற்றுமைப்படுத்துகிறார். அதுமட்டுமில்லாமல் மேற்கண்ட வசனத்தில் கர்த்தர் ஒருவரையே இறைவன் என்பதையும் மிகத் தெளிவாக உணர்த்துகிறார்.

👉7. ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
(யோவான் 14:28)

✍️மேற்கண்ட வசனத்தில் தன்னை காட்டிலும் கர்த்தர் மிகப் பெரியவர் என்று சொல்லி தன்னையையும் கர்த்தரையும் இயேசு மிகத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகிறார்.

👉8. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
(மத்தேயு 6:9)

✍️கர்த்தரின் நாமத்தால் பிராத்தனையை தொடங்க வேண்டும் என்று இயேசு சொல்கிறாரே தவிர தன்னை வணங்க சொல்லவில்லை.

👉9. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
(மத்தேயு 27:46)

✍️இறை நிராகரிப்பாளர்கள் எவ்வாறு இறைவனின் மீது நிராசை அடைந்து புலம்புவார்களோ அதுபோன்று  இயேசு புலம்பினார் என்று மேற்கண்ட வசனம் சொல்கிறது. இது போன்று புலம்பிய ஒருவரை இறைவன் என்று சொல்வது முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.

👉10. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
(யோவான் 17:21-22)

✍️பிதாவும் இயேசுவும் ஒன்றாயிருக்கிறது போல் விசுவாசிகளும் அவர்களிடம் ஒன்றாக இருக்க இயேசு பிரார்த்தனை செய்வதிலிருந்து பிதாவும் இயேசுவும் ஒன்றாயிருக்கிறார்கள் என்று பைபிள் சொல்வது, இருவரும் ஒரே நபர் என்ற அடிப்படையில் சொல்லப்படவில்லை என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. இயேசுவும் பிதாவும் ஒருவராக இருக்கிறார்கள் என்று எவரேனும் அர்த்தம் கொண்டால் இயேசுவும் கர்த்தரும் விசுவாசிகளும் ஒருவராக இருக்கிறார்கள் என்றும் விசுவாசிகளும் இயேசுவைப் போன்று இறைவன் என்றும் அர்த்தம் கொள்ள வேண்டி வரும். ஆனால் இந்த அர்த்தத்தை கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் மேற்கண்ட வசனத்திலிருந்து மற்ற விசுவாசிகளை போன்று இயேசுவும் கர்த்தரும் வெவ்வேறானவர்கள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

👉11. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்
(1 கொரிந்தியர் 15:28)

✍️இயேசு கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தவர் என்பதை மிகத் தெளிவாக மேற்கண்ட வசனம் போதிக்கிறது. கர்த்தருக்கு கீழ்படிந்து இருக்கும் ஒருவரையே இறைவன் என்று சொல்வது அறியாமையின் உச்சகட்டம். அதனால் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து இருக்கும் இயேசுவை இறைவன் இல்லை என்று மிக எளிமையாக புரிந்து கொள்ளலாம்.

👉12.  இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.
(எபிரேயர் 1:3)

✍️கர்த்தருடைய மகிமையின் பிரகாசம் மற்றும் அவருடைய தன்மையின் சொரூபம் என்று சொல்வதில் இருந்து இயேசுவை கர்த்தருடைய பிரதிநிதி என்று சொல்வதை மிக எளிதாக புரிந்து கொள்ளலாம்.  இயேசு கர்த்தராக இருந்திருந்தால் அவர் தனக்கு சுயமான மகிமையை கொண்டிருப்பார். இயேசு கர்த்தரின் பிரதிநிதி என்பதால்தான் கர்த்தருடைய மகிமையைப் பிரதிபலிக்கிறார்.

👉13. நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
(எபிரேயர் 4:15)

✍️மற்ற மனிதர்களைப் போல சோதிக்கப்படுகின்றன பிரதான ஆசாரியராகத் தான் இயேசு இருந்தார் என்பதை மிக தெளிவாக சொல்கிறது.

👉14. சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
(யாக்கோபு 1:13)

✍️சோதிக்கப்படுகின்ற எவரும் தேவன் அல்ல என்பதையும், சோதிக்கப்பட்ட இயேசு இறைவன் அல்ல என்பதையும் மிக தெளிவாக உணர்த்தும் வசனம் இது.

👉15. ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
(அப்போஸ்தலர் 2:36)

✍️புதிய ஏற்பாட்டில் ஆண்டவர் என்ற சொல் இயேசுவுக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதால் அவரை இறைவன் என்று நம்பும் கிறிஸ்தவர்களுக்கான வசனம் தான் இது. இயேசு கர்த்தரால் தான் ஆண்டவராகப்பட்டுள்ளார் என்பதை மிகத் தெளிவாக மேற்கண்ட வசனம் உணர்த்துகிறது. இவ்வாறு கர்த்தரால் ஆண்டவர் ஆக்கப்பட்ட இயேசுவை கர்த்தருக்கு சமமான இறைவன் என்று சொல்வது அறியாமையாகும். இந்த அறியாமையிலிருந்து கிறிஸ்தவர்கள் விடுபட முயற்சி செய்ய வேண்டும் என்பதற்கான பதிவுதான் இது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்