பைபிளில் சொல்லப்பட்ட முஹம்மது நபி பற்றிய முன்னறிவிப்பு
⭐பைபிளில் சொல்லப்பட்ட முஹம்மது நபி பற்றிய முன்னறிவிப்பு⭐
✍உலக மக்கள் அனைவருக்காகவும் இறுதி தூதராய் வரப்போகின்ற முஹம்மது நபியை குறித்து முந்தைய வேதங்களில் அல்லாஹ் சொல்லப்பட்டுள்ளதாக குர்ஆனில் அல்லாஹ் சொல்கின்றான்.
➡️எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
(அல்குர்ஆன் 7:157)
✍முந்தைய வேதமான பைபிளில் இயேசுவும் முஹம்மது நபியின் வருகையை பற்றி முன்னறிவிப்பு செய்துள்ளார்.
👉நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
யோவான் 14:16
✍ஆனால் மேற்கண்ட வசனம் முஹம்மது நபிக்கு பொருந்தாது என்பதற்கு கிறிஸ்தவர்கள் இரண்டு காரணங்களை கூறுகின்றனர்.
1. அந்த வசனம் மனிதரை குறித்து பேசவில்லை. பரிசுத்த ஆவியை குறித்து பேசுகிறது.
2. தேற்றவாளன் என்றென்றைக்கும் இருப்பார். அதனால் தேற்றவாளன் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை.
அந்த காரணங்களை ஒவ்வொன்றாக இங்கு பார்ப்போம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💎1💎 தேற்றவாளன் பரிசுத்த ஆவியா அல்லது மனிதரா?
➡️நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
யோவான் 14:16
✍மேற்கண்ட வசனம் முஹம்மது நபியை குறித்து தான் பேசுகிறது. பரிசுத்த ஆவி என்பது இயேசுவின் காலத்திலும், இயேசுவுக்கு முன்பும் அறியப்பட்டவராக தான் இருந்தார். ஆனால் இயேசுவோ வேறொரு தேற்றவாளனை கர்த்தர் உங்களுக்கு தருவதாக சொல்கிறார். வரப்போகும் தேற்றவாளன் அறியப்படாத நபர் என்பதால் தான் "வேறொரு" என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்துகிறார். எல்லோராலும் அறியப்பட்ட நபராக இருந்திருந்தால் வேறொரு என்ற வாசகத்தை இயேசு பயன்படுத்த அவசியமில்லை.
➖➖➖➖➖➖➖
➡️உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
(யோவான் 14:17)
✍மேற்கண்ட வசனத்தில் இயேசு சொன்ன தேற்றவாளன் பற்றிய முன்னறிவிப்பில் இந்த உலகம் அந்த சத்திய ஆவியானவரை காணாமலும், அறியாமலும் இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியோ இஸ்ரவேலர்கள் எல்லோராலும் அறியப்பட்ட நபராக உள்ளார். யாராலும் அறியப்படாத வேறொரு நபர் தான் தேற்றவாளன் என்பதை இயேசு சொன்ன முன்னறிவிப்பில் இருந்து அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் தேற்றவாளன் என்பது பரிசுத்த ஆவியை குறிக்காது, முஹம்மது நபியை தான் குறிக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
➖➖➖➖➖➖➖
➡️நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
(யோவான் 16:7)
✍தேற்றவாளனை குறித்து இயேசுவின் முன்நிபந்தனை என்னவெனில் தான் போகும் வரை தேற்றவாளன் வரமாட்டார் என்பதே. ஆனால் பரிசுத்த ஆவி இயேசுவின் காலத்திலும் அவரது காலத்திற்கு முன்பும் இருந்தவர். இயேசுவின் நிபந்தனையின் படி வரப்போகும் தேற்றவாளன் இயேசு சென்ற பிறகே வரக்கூடியவர். ஆனால் பரிசுத்த ஆவி இயேசு ஞானஸ்தானம் பெறும்போது அவர் மீது இறங்கியதாக பைபிள் சொல்கிறது.
➡️பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.
(யோவான் 1:32)
✍மேற்கண்ட இயேசுவின் போதனையின் படி தேற்றவாளர் இயேசு சென்ற பிறகே வரக்கூடியவர். அதனால் இயேசுவின் காலத்தில் இருந்த பரிசுத்த ஆவி ஒருப்போதும் தேற்றவாளனாக இருக்க முடியாது.
➖➖➖➖➖➖➖
➡️சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
(யோவான் 16:13)
✍மேற்கண்ட வசனம் வரப்போகும் தேற்றவாளன் சுயமாக பேசாமல், கர்த்தரிடமிருந்து கேட்டதையே பேசுவார் என்று சொல்கிறது. ஆனால் கிறிஸ்தவர்கள் நம்பும் பரிசுத்த ஆவி கர்த்தரிடத்தில் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர் இறைத் தன்மையில் கர்த்தருக்கு சமமானவர் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறவர். வரப்போகும் தேற்றவாளன் பரிசுத்த ஆவி என்று கிறிஸ்தவர்கள் நம்பினால் அது அவர்களின் திரித்துவ நம்பிக்கைக்கு எதிரானதாகும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💎2💎 தேற்றவாளன் என்றென்றைக்கும் இருப்பார்.
✍கிறிஸ்தவர்கள் முஹம்மது நபி தேற்றவாளன் இல்லை என்பதற்கு வைக்கும் இரண்டாவது குற்றச்சாட்டு யோவான் 14:16 இன் படி "தேற்றவாளன் என்றென்றைக்கும் இருப்பார், முஹம்மது நபி இறந்து விட்டார். அதனால் அவர் தேற்றவாளன் இல்லை" என்று கூறுகின்றனர். யோவான் 14:16 இல் என்றென்றைக்கும் இருக்கும்படி என்று இயேசு சொன்ன உவமையை கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர். இறைவன் புறத்தில் இருந்து முஹம்மது நபிக்கு கொடுக்கப்பட்ட குர்ஆன் மற்றும் ஹதிஸ்கள் மூலமாக என்றென்றைக்கும் மனிதர்களுடன் அவர் வாழ்ந்து வருகிறார். இது குறித்து தான் அந்த வசனத்தில் உவமையாக சொல்லப்பட்டுள்ளது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💎யோவான் 14:16 முஹம்மது நபியை மட்டும் ஏன் குறிக்கிறது?💎
✍ஏனெனில் முஹம்மது நபி மட்டுமே கர்த்தரால் அனுப்பப்பட்ட முந்தைய தீர்க்கதரிசிகள் மற்றும் முந்தைய வேதங்களையும் உண்மைப்படுத்துகிறார்.
👉(முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக.
(அல்குர்ஆன் 2:136)
✍அதுமட்டுமல்ல இயேசுவின் அதிசிய பிறப்பையும். அவரது தாயாரின் பரிசுத்த தன்மையையும் முஹம்மது நபி உண்மைப்படுத்தினார். இயேசு மேசியா தான் என்பதையும் முஹம்மது நபி உண்மைப்படுத்தினார். இதனால் முஹம்மது நபி தான் இயேசு சொன்ன தேற்றவாளன் என்பதை புரிந்து கொள்ளலாம்.
👉அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; "மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை" என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
(அல்குர்ஆன் 5:110)
✍யூதர்கள் எவ்வாறு இயேசுவை பற்றி சொல்லப்பட்ட பழைய ஏற்பாட்டு வசனங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளார்களோ அவ்வாறே முஹம்மது நபி பற்றி பைபிளில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசினங்களை கிறிஸ்தவர்களும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். பைபிள் வசனங்களை தவறாக புரிந்து கொண்டு இயேசுவையும் முஹம்மது நபியையும் நிராகரிப்பதால் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தான் நஷ்டம். அத்தூதர்களை நம்பிக்கை கொள்ளும் முஸ்லீம்களுக்கு இறைவனின் திருப்பொருத்தமே கிடைக்கும். நஷ்டவாளர்களாக ஆவதை விட்டும் தங்களை பாதுகாத்து கொள்ள விரும்பினால் கிறிஸ்தவர்கள் முஹம்மது நபியை பின்பற்ற வேண்டியது அவசியம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
⭐⭐எமது தளம் பற்றி⭐⭐
✍இஸ்லாத்திற்கெதிராக அவதூறுகளை பரப்பி வரும் கிறிஸ்தவர்களுக்கு தகுந்த மறுப்பு கொடுக்கும் தளம் இது.
✍இன்னும் அவர்கள் நம்பும் அசத்தியத்தை பைபிளை கொண்டு நிரூபிக்கும் தளம் இது.
✍மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுக்கும் தளம் இது.
✍எமது பக்கத்தை Like செய்து எம்மோடு இணைந்திருங்கள்.
✍இந்த அழைப்பு மற்றவர்களுக்கும் சேர பதிவுகளை SHARE செய்யுங்கள்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍உலக மக்கள் அனைவருக்காகவும் இறுதி தூதராய் வரப்போகின்ற முஹம்மது நபியை குறித்து முந்தைய வேதங்களில் அல்லாஹ் சொல்லப்பட்டுள்ளதாக குர்ஆனில் அல்லாஹ் சொல்கின்றான்.
➡️எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
(அல்குர்ஆன் 7:157)
✍முந்தைய வேதமான பைபிளில் இயேசுவும் முஹம்மது நபியின் வருகையை பற்றி முன்னறிவிப்பு செய்துள்ளார்.
👉நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
யோவான் 14:16
✍ஆனால் மேற்கண்ட வசனம் முஹம்மது நபிக்கு பொருந்தாது என்பதற்கு கிறிஸ்தவர்கள் இரண்டு காரணங்களை கூறுகின்றனர்.
1. அந்த வசனம் மனிதரை குறித்து பேசவில்லை. பரிசுத்த ஆவியை குறித்து பேசுகிறது.
2. தேற்றவாளன் என்றென்றைக்கும் இருப்பார். அதனால் தேற்றவாளன் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை.
அந்த காரணங்களை ஒவ்வொன்றாக இங்கு பார்ப்போம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💎1💎 தேற்றவாளன் பரிசுத்த ஆவியா அல்லது மனிதரா?
➡️நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
யோவான் 14:16
✍மேற்கண்ட வசனம் முஹம்மது நபியை குறித்து தான் பேசுகிறது. பரிசுத்த ஆவி என்பது இயேசுவின் காலத்திலும், இயேசுவுக்கு முன்பும் அறியப்பட்டவராக தான் இருந்தார். ஆனால் இயேசுவோ வேறொரு தேற்றவாளனை கர்த்தர் உங்களுக்கு தருவதாக சொல்கிறார். வரப்போகும் தேற்றவாளன் அறியப்படாத நபர் என்பதால் தான் "வேறொரு" என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்துகிறார். எல்லோராலும் அறியப்பட்ட நபராக இருந்திருந்தால் வேறொரு என்ற வாசகத்தை இயேசு பயன்படுத்த அவசியமில்லை.
➖➖➖➖➖➖➖
➡️உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
(யோவான் 14:17)
✍மேற்கண்ட வசனத்தில் இயேசு சொன்ன தேற்றவாளன் பற்றிய முன்னறிவிப்பில் இந்த உலகம் அந்த சத்திய ஆவியானவரை காணாமலும், அறியாமலும் இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியோ இஸ்ரவேலர்கள் எல்லோராலும் அறியப்பட்ட நபராக உள்ளார். யாராலும் அறியப்படாத வேறொரு நபர் தான் தேற்றவாளன் என்பதை இயேசு சொன்ன முன்னறிவிப்பில் இருந்து அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் தேற்றவாளன் என்பது பரிசுத்த ஆவியை குறிக்காது, முஹம்மது நபியை தான் குறிக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
➖➖➖➖➖➖➖
➡️நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
(யோவான் 16:7)
✍தேற்றவாளனை குறித்து இயேசுவின் முன்நிபந்தனை என்னவெனில் தான் போகும் வரை தேற்றவாளன் வரமாட்டார் என்பதே. ஆனால் பரிசுத்த ஆவி இயேசுவின் காலத்திலும் அவரது காலத்திற்கு முன்பும் இருந்தவர். இயேசுவின் நிபந்தனையின் படி வரப்போகும் தேற்றவாளன் இயேசு சென்ற பிறகே வரக்கூடியவர். ஆனால் பரிசுத்த ஆவி இயேசு ஞானஸ்தானம் பெறும்போது அவர் மீது இறங்கியதாக பைபிள் சொல்கிறது.
➡️பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.
(யோவான் 1:32)
✍மேற்கண்ட இயேசுவின் போதனையின் படி தேற்றவாளர் இயேசு சென்ற பிறகே வரக்கூடியவர். அதனால் இயேசுவின் காலத்தில் இருந்த பரிசுத்த ஆவி ஒருப்போதும் தேற்றவாளனாக இருக்க முடியாது.
➖➖➖➖➖➖➖
➡️சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
(யோவான் 16:13)
✍மேற்கண்ட வசனம் வரப்போகும் தேற்றவாளன் சுயமாக பேசாமல், கர்த்தரிடமிருந்து கேட்டதையே பேசுவார் என்று சொல்கிறது. ஆனால் கிறிஸ்தவர்கள் நம்பும் பரிசுத்த ஆவி கர்த்தரிடத்தில் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர் இறைத் தன்மையில் கர்த்தருக்கு சமமானவர் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறவர். வரப்போகும் தேற்றவாளன் பரிசுத்த ஆவி என்று கிறிஸ்தவர்கள் நம்பினால் அது அவர்களின் திரித்துவ நம்பிக்கைக்கு எதிரானதாகும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💎2💎 தேற்றவாளன் என்றென்றைக்கும் இருப்பார்.
✍கிறிஸ்தவர்கள் முஹம்மது நபி தேற்றவாளன் இல்லை என்பதற்கு வைக்கும் இரண்டாவது குற்றச்சாட்டு யோவான் 14:16 இன் படி "தேற்றவாளன் என்றென்றைக்கும் இருப்பார், முஹம்மது நபி இறந்து விட்டார். அதனால் அவர் தேற்றவாளன் இல்லை" என்று கூறுகின்றனர். யோவான் 14:16 இல் என்றென்றைக்கும் இருக்கும்படி என்று இயேசு சொன்ன உவமையை கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர். இறைவன் புறத்தில் இருந்து முஹம்மது நபிக்கு கொடுக்கப்பட்ட குர்ஆன் மற்றும் ஹதிஸ்கள் மூலமாக என்றென்றைக்கும் மனிதர்களுடன் அவர் வாழ்ந்து வருகிறார். இது குறித்து தான் அந்த வசனத்தில் உவமையாக சொல்லப்பட்டுள்ளது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💎யோவான் 14:16 முஹம்மது நபியை மட்டும் ஏன் குறிக்கிறது?💎
✍ஏனெனில் முஹம்மது நபி மட்டுமே கர்த்தரால் அனுப்பப்பட்ட முந்தைய தீர்க்கதரிசிகள் மற்றும் முந்தைய வேதங்களையும் உண்மைப்படுத்துகிறார்.
👉(முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக.
(அல்குர்ஆன் 2:136)
✍அதுமட்டுமல்ல இயேசுவின் அதிசிய பிறப்பையும். அவரது தாயாரின் பரிசுத்த தன்மையையும் முஹம்மது நபி உண்மைப்படுத்தினார். இயேசு மேசியா தான் என்பதையும் முஹம்மது நபி உண்மைப்படுத்தினார். இதனால் முஹம்மது நபி தான் இயேசு சொன்ன தேற்றவாளன் என்பதை புரிந்து கொள்ளலாம்.
👉அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; "மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை" என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
(அல்குர்ஆன் 5:110)
✍யூதர்கள் எவ்வாறு இயேசுவை பற்றி சொல்லப்பட்ட பழைய ஏற்பாட்டு வசனங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளார்களோ அவ்வாறே முஹம்மது நபி பற்றி பைபிளில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசினங்களை கிறிஸ்தவர்களும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். பைபிள் வசனங்களை தவறாக புரிந்து கொண்டு இயேசுவையும் முஹம்மது நபியையும் நிராகரிப்பதால் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தான் நஷ்டம். அத்தூதர்களை நம்பிக்கை கொள்ளும் முஸ்லீம்களுக்கு இறைவனின் திருப்பொருத்தமே கிடைக்கும். நஷ்டவாளர்களாக ஆவதை விட்டும் தங்களை பாதுகாத்து கொள்ள விரும்பினால் கிறிஸ்தவர்கள் முஹம்மது நபியை பின்பற்ற வேண்டியது அவசியம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
⭐⭐எமது தளம் பற்றி⭐⭐
✍இஸ்லாத்திற்கெதிராக அவதூறுகளை பரப்பி வரும் கிறிஸ்தவர்களுக்கு தகுந்த மறுப்பு கொடுக்கும் தளம் இது.
✍இன்னும் அவர்கள் நம்பும் அசத்தியத்தை பைபிளை கொண்டு நிரூபிக்கும் தளம் இது.
✍மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுக்கும் தளம் இது.
✍எமது பக்கத்தை Like செய்து எம்மோடு இணைந்திருங்கள்.
✍இந்த அழைப்பு மற்றவர்களுக்கும் சேர பதிவுகளை SHARE செய்யுங்கள்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
நல்ல முயற்சி ஆனால் சத்தியத்தை யாராலும் மாற்ற இயலாது.....
பதிலளிநீக்குயோவான் 15:26
பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.
யோவான் 16:7
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
இந்த இரண்டு வசனமும் இயேசுகிறிஸ்து தான் அந்த தேற்றரவாளனை அனுப்பப் போவதாக சொல்கிறார்.....
குரான்படி அல்லாஹ் மட்டும்தான் நபியை அனுப்ப முடியும் என்று சொல்கிறது....அப்படியென்றால் நீங்கள் தேற்றரவாளனை முகமது நபி என்று சொல்கிறீர்கள் அப்படி என்றால் அந்த நபியை இயேசு அனுப்பினார் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தமாகிவிடும் ...அதாவது குரான்படி பார்த்தால் இயேசு முகமதுவை அனுப்புகிற தினால் அவர் கடவுளாக நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா??? ஏனென்றால் கடவுளை தவிர நபியை யாராலும் அனுப்ப முடியாதே......
பைபிளில் சொல்லப்பட்ட தேற்றரவாளன் முகமது நபி என்றால் இயேசுவை நீங்கள் கடவுளாக இருக்க வேண்டும் என்றால் குரான் அப்படித்தான் சொல்கிறது......
இயேசு கிறிஸ்து குறிப்பிட்ட பரிசுத்த ஆவியானவர் முகமது அல்ல ஏனென்றால் அவர் என்றென்றைக்கும் இருக்கும் தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவர். முகமது நபி இறந்து விட்டார். இயேசு கிறிஸ்து குறிப்பிட்ட பரிசுத்த ஆவியானவர் இவர் என்றால் ஏன் மரித்தார்?
பதிலளிநீக்குHoly spirit is not your mohammad.mohammad is sinner don't compare with holy spirit. Christian and jews not accepted Mohammad. Because scholar is lier .tell only true
பதிலளிநீக்கு