இயேசு இறந்தவர்களை உயிர்த்தெழ செய்வதால் இறைவனாகி விடுவாரா?
இயேசு இறந்தவர்களை உயிர்த்தெழ செய்வதால் இறைவனாகி விடுவாரா?
இயேசு தனது வாழ்நாளில் பல அற்புதங்களை செய்துள்ளார். அதில் மிக முக்கியமானது இறந்தவர்களை உயிர்ப்பித்தலும் ஒன்று. இறந்தவர்களை உயிர்ப்பித்தல் என்பது இறைவன் மட்டுமே செய்யும் காரியம் என்பதால் அதை செய்த இயேசுவை இறைவன் என்று சொல்வதற்கு கிறிஸ்தவர்கள் ஆதாரமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் இயேசு அந்த அற்புதத்தை கர்த்தரின் அனுமதி கொண்டு தான் செய்கிறாரே தவிர சுயமாக செய்யவில்லை என்பதை பைபிள் தெளிவாக சொல்கிறது. இயேசுவை விசுவாசம் கொண்டு இயேசுவோடு வாழ்ந்த மக்களும் இயேசு அத்தகைய அற்புதங்களை சுயமாக செய்யவில்லை .... கர்த்தர் தான் அத்தகைய அற்புதங்களை செய்கிறார் என்பதையும் அறிந்து வைத்து இருந்தனர். தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்ளக்கூடிய இன்றைய கிறிஸ்தவர்கள் கர்த்தரின் அனுமதியின் அடிப்படையில் தான் இயேசு அற்புதங்கள் நிகழ்த்தினார் என்ற உண்மையை மறைத்து இயேசுவை இறைவன் என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அதன் உண்மை தன்மையை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும் நோக்கத்தில் தான் இந்த கட்டுரை எழுதப்படுகிறது.
மார்த்தாளின் சகோதரன் லாசருவை உயிர்ப்பிக்கும் அற்புதம் இயேசு தனது இறைவனின் பெயரால் செய்கிறார் என்பதற்கு தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது.
யோவான் 11:41. அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
42. நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.
இவ்வாறு இறந்தவரை உயிர்ப்பிப்பதற்கு முன்பு தனது வேண்டுதல் கர்த்தரால் செவி கொடுக்கப்பட்டதற்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறார். அதன் பின்பு இதனை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் சொல்கிறேன் என்பதையும் யோவான் 11:42 வசனத்தில் தெளிவுப்படுத்துகிறார்.
இயேசுவை விசுவாசித்த ஆரம்ப கால கிறிஸ்தவர்களும் இயேசு செய்யும் அற்புதங்களை கர்த்தர் தான் இயேசுவின் மூலமாக நடத்துகிறார் என்று அறிந்து கர்த்தரை புகழ்ந்து வணங்கினர்.
யோவான்11:22. இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
அப்போஸ்தலர் 2:22. இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்து இயேசுவை விசுவாசம் கொண்டவர்கள் அனைவரும் இயேசுவின் அற்புதங்கள் அனைத்தும் கர்த்தரே நடத்தினார் என்பதை அறிந்து இயேசுவை போதகர் என்றும் தீர்க்கதரிசி என்றுமே அறிந்து வைத்திருந்தனர்.
யோவான் 3:2. அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
மத்தேயு 21:46. அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசி என்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.
குர்ஆனும் இயேசு தனது அற்புதங்களை அல்லாஹ்வின் அனுமதி கொண்டு தான் நிகழ்த்தினார் என்றும் இயேசு அல்லாஹ்வின் அடியார் மற்றும் தூதர் என்பதை உண்மைப்படுத்துகிறது.
இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக்ஃ குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்).
இயேசு தன்னை அனுப்பிய அந்த ஏக இறைவனையே வணங்க சொன்னார் என்றே பைபிளும் குர்ஆனும் சொல்கிறது.
“இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (மாற்கு 12:29)
"நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்." (குர்ஆன் 3:51)
இயேசு உட்பட கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தீரக்கதரிசிகளும் நீதிமான்களும் அந்த ஏக இறைவனையே வணங்கினர். அந்த கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டு உலக மக்களுக்கு இறுதி நபியாக அனுப்பப்பட்ட முஹம்மது நபியும் அந்த ஏக இறைவனையே வணங்கினார். கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகமான முஸ்லீம்களும் அந்த ஏக இறைவனையே வணங்குகிறோம். எங்கள் சகோதரர்களான உங்களையும் அந்த ஏக இறைவனை வணங்கும் மார்க்கத்தின் பக்கம் அழைக்கின்றோம். சத்தியத்தின் பக்கம் வாருங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். அந்த ஏக இறைவனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் நமது பாவங்களை மன்னிக்க போதுமானவன்.
"என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்" (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (குர்ஆன் 39:53)
இயேசு தனது வாழ்நாளில் பல அற்புதங்களை செய்துள்ளார். அதில் மிக முக்கியமானது இறந்தவர்களை உயிர்ப்பித்தலும் ஒன்று. இறந்தவர்களை உயிர்ப்பித்தல் என்பது இறைவன் மட்டுமே செய்யும் காரியம் என்பதால் அதை செய்த இயேசுவை இறைவன் என்று சொல்வதற்கு கிறிஸ்தவர்கள் ஆதாரமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் இயேசு அந்த அற்புதத்தை கர்த்தரின் அனுமதி கொண்டு தான் செய்கிறாரே தவிர சுயமாக செய்யவில்லை என்பதை பைபிள் தெளிவாக சொல்கிறது. இயேசுவை விசுவாசம் கொண்டு இயேசுவோடு வாழ்ந்த மக்களும் இயேசு அத்தகைய அற்புதங்களை சுயமாக செய்யவில்லை .... கர்த்தர் தான் அத்தகைய அற்புதங்களை செய்கிறார் என்பதையும் அறிந்து வைத்து இருந்தனர். தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்ளக்கூடிய இன்றைய கிறிஸ்தவர்கள் கர்த்தரின் அனுமதியின் அடிப்படையில் தான் இயேசு அற்புதங்கள் நிகழ்த்தினார் என்ற உண்மையை மறைத்து இயேசுவை இறைவன் என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அதன் உண்மை தன்மையை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும் நோக்கத்தில் தான் இந்த கட்டுரை எழுதப்படுகிறது.
மார்த்தாளின் சகோதரன் லாசருவை உயிர்ப்பிக்கும் அற்புதம் இயேசு தனது இறைவனின் பெயரால் செய்கிறார் என்பதற்கு தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது.
யோவான் 11:41. அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
42. நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.
இவ்வாறு இறந்தவரை உயிர்ப்பிப்பதற்கு முன்பு தனது வேண்டுதல் கர்த்தரால் செவி கொடுக்கப்பட்டதற்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறார். அதன் பின்பு இதனை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் சொல்கிறேன் என்பதையும் யோவான் 11:42 வசனத்தில் தெளிவுப்படுத்துகிறார்.
இயேசுவை விசுவாசித்த ஆரம்ப கால கிறிஸ்தவர்களும் இயேசு செய்யும் அற்புதங்களை கர்த்தர் தான் இயேசுவின் மூலமாக நடத்துகிறார் என்று அறிந்து கர்த்தரை புகழ்ந்து வணங்கினர்.
யோவான்11:22. இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
அப்போஸ்தலர் 2:22. இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்து இயேசுவை விசுவாசம் கொண்டவர்கள் அனைவரும் இயேசுவின் அற்புதங்கள் அனைத்தும் கர்த்தரே நடத்தினார் என்பதை அறிந்து இயேசுவை போதகர் என்றும் தீர்க்கதரிசி என்றுமே அறிந்து வைத்திருந்தனர்.
யோவான் 3:2. அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
மத்தேயு 21:46. அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசி என்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.
குர்ஆனும் இயேசு தனது அற்புதங்களை அல்லாஹ்வின் அனுமதி கொண்டு தான் நிகழ்த்தினார் என்றும் இயேசு அல்லாஹ்வின் அடியார் மற்றும் தூதர் என்பதை உண்மைப்படுத்துகிறது.
இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக்ஃ குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்).
இயேசு தன்னை அனுப்பிய அந்த ஏக இறைவனையே வணங்க சொன்னார் என்றே பைபிளும் குர்ஆனும் சொல்கிறது.
“இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (மாற்கு 12:29)
"நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்." (குர்ஆன் 3:51)
இயேசு உட்பட கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தீரக்கதரிசிகளும் நீதிமான்களும் அந்த ஏக இறைவனையே வணங்கினர். அந்த கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டு உலக மக்களுக்கு இறுதி நபியாக அனுப்பப்பட்ட முஹம்மது நபியும் அந்த ஏக இறைவனையே வணங்கினார். கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகமான முஸ்லீம்களும் அந்த ஏக இறைவனையே வணங்குகிறோம். எங்கள் சகோதரர்களான உங்களையும் அந்த ஏக இறைவனை வணங்கும் மார்க்கத்தின் பக்கம் அழைக்கின்றோம். சத்தியத்தின் பக்கம் வாருங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். அந்த ஏக இறைவனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் நமது பாவங்களை மன்னிக்க போதுமானவன்.
"என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்" (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (குர்ஆன் 39:53)
கருத்துகள்
கருத்துரையிடுக