பவுல் அல்லாஹ்வின் தூதரா?

பவுல் அல்லாஹ்வின் தூதரா?




இயேசு கொண்டு வந்த மார்க்கத்தை சிதைத்தவர் தான்  பவுல் என்ற இஸ்லாமியர்களின் பிரச்சாரத்தினால் விரக்தியடைந்த கிறிஸ்தவர்கள் தங்களது மதத்தின் தூணான பவுலை காப்பாற்ற பல்வேறு வழிகளில் முயற்சி செய்கின்றனர். முஸ்லீம்களை சமாளிக்க முடியாத கிறிஸ்தவர்கள்   இறுதியில் பவுல் அல்லாஹ்வின் தூதர் என்று குர்ஆன் சொல்வதாக  இஸ்லாத்தின் பக்கம் தஞ்சம் புகுந்துள்ளனர்.


இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரமான குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் பவுல் என்ற பெயர் சொல்லப்படவில்லை. இஸ்லாத்தின் இரண்டாவது ஆதாரமான நபி மொழி எனும் ஹதிஸ்களிலும் பவுல் பற்றி சொல்லப்படவில்லை. அப்படியிருந்தும் கிறிஸ்தவர்கள் இயேசுவின் மார்க்கத்தை சிதைத்த பவுலை காப்பாற்ற தப்ஸீர்கள் மற்றும் இஸ்லாமிய வரலாற்று அறிஞர்களின் சுயக்கருத்துகளின் பக்கம் ஓடுகின்றனர்.

குர்ஆன்  36:14 வசனத்திற்கு கொடுக்கப்பட்ட இப்னு கதிரீன்   தப்ஸீரையே தங்கள் தவறான வாதத்திற்கு ஆதாரமாக வைக்கின்றனர். ஆனால் அந்த ஆதாரமும் அவர்களின் நம்பிக்கைக்கு விரோதமாக தான் உள்ளது.


 குர்ஆன் 36:14  நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்" என்று அவர்கள் கூறினார்கள்.


இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள மூன்று நபர்கள் யார் என்பதற்கு குர்ஆன்  மற்றும் ஹதிஸில் எந்த ஆதாரமும் இல்லை.  இஸ்லாமிய வரலாற்று அறிஞர்களின் கணிப்பை தான் கிறிஸ்தவ மிஷனரிகள் தங்கள் ஆதாரமாக காட்டுகின்றனர்.

இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள மூன்று தூதர்கள் ஷாமூன்(sha'mun), யுஹன்னா(yuhanna) மற்றும் புலூஸ்(buloos). இந்த மூவரும் அனுப்பப்பட்ட ஊர் அந்தியோகியா என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதில் மூன்றாவதாக சொல்லப்பட்ட புலூஸ் என்பவரை தான் பவுல் என்று கிறிஸ்தவர்கள் சொல்லுகின்றனர். இந்த மூன்று நபர்களின் பெயர்களும் தப்ஸீர் இப்னு கதிரீல் பதியப்பட்டுள்ளது என்றாலும் இது இப்னு கதிரீன் சொந்த கருத்து அல்ல. மாறாக சுஅய்ப் அல் ஜபாய்(Shu`ayb Al-Jaba’i) என்ற அறிஞரின் கருத்து என்றே இப்னு கதிர் பதிவு செய்துள்ளார்.

இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள மூன்று தூதர் யார் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.  அதனால் இப்னு கதிர் மற்ற அறிஞர்களின் கருத்தையும் பதிவு செய்துள்ளார்.


இப்னு இஸ்ஹாக் என்ற அறிஞரின் கூற்றுஎப்படி அந்த மூன்று தூதர்கள் யார் என்பதையும் இப்னு கதிர் பதிவு செய்துள்ளார்.

அந்த மூன்று தூதர்கள்.
(i)ஸாதிக் (Sadiq)

(ii)ஸாதுக் Saduq

(iii)ஸாலும் Shalum


இப்னு இஸ்ஹாக் பதிவு செய்த மூன்று நபர்களில் புலூஸ் அதாவது கிறிஸ்தவர்கள் நம்பும் பவுல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 மேற்கண்ட பெயர்கள் மற்றும் ஊரை(அந்தியோகியா) இப்னு கதிர் பதிவு செய்தாலும் இறுதியில் அதே அத்தியாயத்தில் உள்ள 29வது வசனத்தின் தப்ஸீர்க்கு அதை மறுத்து அல்லாஹ் மட்டுமே அந்த விவரங்களை அறிவான் என்று சொல்லி மேற்கண்ட அறிஞர்கள் கூறிய பெயர்களை மறுக்கிறார். ஏனெனில் அந்த மூன்று தூதர்களையும் அந்த ஊர் மக்கள் நிராகரித்த காரணத்தால் அழிக்கப்பட்டதாக  29 வது வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.  இப்னு இஸ்ஹாக் மற்றும் சுஅய்ப் அல் ஜபாய்(Shu`ayb Al-Jaba’i)  போன்ற அறிஞர்கள் பதிவு செய்த ஊரான அந்தியோகியா இயேசுவின் காலத்தில்  அழிக்கப்பட்டதான ஆதாரங்கள் இல்லை. அதனால் மேற்கண்ட அறிஞர்கள் பதிவு செய்த நபர்கள் மற்றும் ஊர்களின் பெயர்களை மறுக்கிறார்.


குர்ஆன் 36:29 ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.

அதாவது இயேசுவின் காலத்திற்கு முன்பு உள்ள அந்தியோகியா அல்லது அதிகம் அறியப்படாத அந்தியோகியாகவோ அல்லது அந்தியோகியா அல்லாத வேறு ஊராகவோ இருக்கலாம் என்றும் அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்  என்று தம் கருத்தை முன் வைக்கின்றார். இந்த மூன்றில் எது உண்மையாக இருந்தாலும் பவுல் அதில் ஒரு நபராக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பவுல் வாழ்ந்தது இயேசுவின் காலக்கட்டமாகும்.  இயேசுவின் மார்க்கத்தை சிதைத்த பவுல் வாழ்ந்த காலக்கட்டத்திற்கும் இப்னு கதிர் பதிவு செய்யும் காலக்கட்டத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை.





இஸ்லாத்தில் அனுப்பப்பட்ட இறுதி நபியான முஹம்மது நபியின் கூற்றும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு மாற்றமாக உள்ளது. அதாவது தனக்கும் இயேசுவுக்கும் இடையே எந்த தூதரும் அனுப்பப்படவில்லை என்று முஹம்மது நபி கூறியுள்ளார்.

3442.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் - இறைத் தூதர்கள். தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் - எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்

இதே கருத்தை வலியுறுத்தும் ஆதாரப்பூர்வமான ஹதிஸ்கள் மற்ற ஹதிஸ் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இயேசுவுக்கு பிறகு வந்த ஒரே இறைத் தூதர் முஹம்மது நபி மட்டுமே. ஆதலால் பவுல் அல்லாஹ்வின் தூதர் என்ற கிறிஸ்தவர்களின் கட்டுக்கதை தவிடுபொடியாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்