பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை பெற்று இருப்பதால் இயேசு இறைவனா?
பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை பெற்று இருப்பதால் இயேசு இறைவனா?
மத்தேயு 9: 6. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
மனிதர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை பரிசுத்தப்படுத்துபவன் இறைவன் மட்டுமே. இயேசு மனிதர்களுடைய பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை பெற்று இருந்ததால் இயேசுவை இறைவன் என்று கிறிஸ்தவர்கள் சொல்லுகின்றனர்.
மத்தேயு 9:6இல் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் பூமியில் இயேசுவுக்கு உண்டு என்பதாக சொல்கிறது. பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இயேசுவுக்கு இருப்பதால் இயேசு இறைவனாகி விடுவாரா என்ற கேள்விக்கு பைபிளின் மற்ற வசனங்களை படிக்கும்போது பதில் கிடைத்து விடுகிறது.
இயேசு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை சுயமாக கொண்டிருக்கவில்லை. அந்த அதிகாரம் இயேசுவுக்கு கர்த்தரால் கொடுக்கப்பட்டது. அதனால் தான் இயேசுவோடு வாழ்ந்த உண்மை கிறிஸ்தவர்கள் இயேசுவுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்த கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள்.
மத்தேயு 9:8. ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
ஆனால் இன்று தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் இயேசுவுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கொடுத்த கர்த்தரை மகிமைப்படுத்தாமல் இயேசுவை இறைவனாக்கி விட்டனர். தங்கள் மேல் பாவத்தை சுமத்தி கொண்டனர். அதிகாரத்தை சுயமாக கொண்டிராமல் பிறரிடமிருந்து வாங்குபவர் எப்படி இறைவனாக முடியும் என்பதை சிந்திக்க மறுக்கின்றனர். பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை வழங்கிய கர்த்தர் தான் இறைவன். அந்த அதிகாரத்தை கர்த்தரிடமிருந்து பெற்றுக் கொண்ட இயேசு கர்த்தரின் ஊழியக்காரர் மட்டுமே.
இன்றைய கிறிஸ்தவர்களை போலவே இயேசுவை விசுவாசிக்காத அன்றைய யூத வேதபாரகரும் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் தனக்கு உண்டு என்று இயேசு சொன்னதை..... இயேசு தன்னை கர்த்தருக்கு சமமாக்குகிறார் என்று தவறாக புரிந்து கொண்டனர். அதனை புரிந்து கொண்ட இயேசுவோ அவர்களை நோக்கி பொல்லாதவைகளை நீங்கள் சிந்திக்கிறதென்ன என்று கேட்டு அதனை மறுக்கிறார்.
மத்தேயு 9:2. அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
3. அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
4. இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
ஆனால் இயேசுவை விசுவாசம் கொண்ட மக்களோ இயேசுவுக்கு அத்தகைய அதிகாரத்தை கொடுத்த கர்த்தரை மகிமைப்படுத்தினர்.
8. ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இயேசுவுக்கு முன்பு பலருக்கும் கர்த்தரால் கொடுக்கப்பட்டுள்ளது என்று பைபிள் சொல்கிறது. பழைய ஏற்பாட்டின் படி ரப்பீகளுக்கும், புதிய ஏற்பாட்டின் படி யோவானுக்கும் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டதாக பைபிள் சொல்கிறது.
லேவியராகமம்4:31. சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனித்து, இவ்வண்ணமாய் அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
மேற்கண்ட வசனத்தில் யூத ஆசாரியன் யூதர்களின் பாவங்களை மன்னிக்கும் சடங்குகளை செய்பவராக காட்டுகிறது.
இன்னும் புதிய ஏற்பாடு யோவான் பாவமன்னிப்பு செய்ததாக காட்டுகிறது.
மாற்கு1:4. யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான்.
பாவமன்னிப்பு கொடுப்பதால் இறைவனாகி விடமாட்டார்கள் என்பதற்கு யூய ஆசாரியர்களும், யோவானும் சிறந்த உதாரணங்களாவர்.
அதுமட்டுமல்ல கர்த்தர் எவ்வாறு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசுவுக்கு கொடுத்தாரோ அதுப்போன்று இயேசு தம் சீடர்களுக்கு அந்த அதிகாரத்தை தருகிறார். பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை பெற்று இருப்பதால் இயேசு இறைவன் என்றால் இயேசுவின் சீடர்களையும் இறைவன் என்று சொல்ல வேண்டும் ஏனெனில் அவர்களும் பிறரது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளனர். உண்மை நிலை என்னவென்றால் இவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்த கர்த்தர் தான் தேவன். இயேசு உட்பட மற்றவர்கள் அனைவரும் அவரது ஊழியக்காரர்களே.
🌟 யோவான் 20:23. எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
மத்தேயு 9: 6. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
மனிதர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை பரிசுத்தப்படுத்துபவன் இறைவன் மட்டுமே. இயேசு மனிதர்களுடைய பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை பெற்று இருந்ததால் இயேசுவை இறைவன் என்று கிறிஸ்தவர்கள் சொல்லுகின்றனர்.
மத்தேயு 9:6இல் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் பூமியில் இயேசுவுக்கு உண்டு என்பதாக சொல்கிறது. பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இயேசுவுக்கு இருப்பதால் இயேசு இறைவனாகி விடுவாரா என்ற கேள்விக்கு பைபிளின் மற்ற வசனங்களை படிக்கும்போது பதில் கிடைத்து விடுகிறது.
இயேசு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை சுயமாக கொண்டிருக்கவில்லை. அந்த அதிகாரம் இயேசுவுக்கு கர்த்தரால் கொடுக்கப்பட்டது. அதனால் தான் இயேசுவோடு வாழ்ந்த உண்மை கிறிஸ்தவர்கள் இயேசுவுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்த கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள்.
மத்தேயு 9:8. ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
ஆனால் இன்று தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் இயேசுவுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கொடுத்த கர்த்தரை மகிமைப்படுத்தாமல் இயேசுவை இறைவனாக்கி விட்டனர். தங்கள் மேல் பாவத்தை சுமத்தி கொண்டனர். அதிகாரத்தை சுயமாக கொண்டிராமல் பிறரிடமிருந்து வாங்குபவர் எப்படி இறைவனாக முடியும் என்பதை சிந்திக்க மறுக்கின்றனர். பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை வழங்கிய கர்த்தர் தான் இறைவன். அந்த அதிகாரத்தை கர்த்தரிடமிருந்து பெற்றுக் கொண்ட இயேசு கர்த்தரின் ஊழியக்காரர் மட்டுமே.
இன்றைய கிறிஸ்தவர்களை போலவே இயேசுவை விசுவாசிக்காத அன்றைய யூத வேதபாரகரும் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் தனக்கு உண்டு என்று இயேசு சொன்னதை..... இயேசு தன்னை கர்த்தருக்கு சமமாக்குகிறார் என்று தவறாக புரிந்து கொண்டனர். அதனை புரிந்து கொண்ட இயேசுவோ அவர்களை நோக்கி பொல்லாதவைகளை நீங்கள் சிந்திக்கிறதென்ன என்று கேட்டு அதனை மறுக்கிறார்.
மத்தேயு 9:2. அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
3. அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
4. இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
ஆனால் இயேசுவை விசுவாசம் கொண்ட மக்களோ இயேசுவுக்கு அத்தகைய அதிகாரத்தை கொடுத்த கர்த்தரை மகிமைப்படுத்தினர்.
8. ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இயேசுவுக்கு முன்பு பலருக்கும் கர்த்தரால் கொடுக்கப்பட்டுள்ளது என்று பைபிள் சொல்கிறது. பழைய ஏற்பாட்டின் படி ரப்பீகளுக்கும், புதிய ஏற்பாட்டின் படி யோவானுக்கும் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டதாக பைபிள் சொல்கிறது.
லேவியராகமம்4:31. சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனித்து, இவ்வண்ணமாய் அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
மேற்கண்ட வசனத்தில் யூத ஆசாரியன் யூதர்களின் பாவங்களை மன்னிக்கும் சடங்குகளை செய்பவராக காட்டுகிறது.
இன்னும் புதிய ஏற்பாடு யோவான் பாவமன்னிப்பு செய்ததாக காட்டுகிறது.
மாற்கு1:4. யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான்.
பாவமன்னிப்பு கொடுப்பதால் இறைவனாகி விடமாட்டார்கள் என்பதற்கு யூய ஆசாரியர்களும், யோவானும் சிறந்த உதாரணங்களாவர்.
அதுமட்டுமல்ல கர்த்தர் எவ்வாறு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசுவுக்கு கொடுத்தாரோ அதுப்போன்று இயேசு தம் சீடர்களுக்கு அந்த அதிகாரத்தை தருகிறார். பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை பெற்று இருப்பதால் இயேசு இறைவன் என்றால் இயேசுவின் சீடர்களையும் இறைவன் என்று சொல்ல வேண்டும் ஏனெனில் அவர்களும் பிறரது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளனர். உண்மை நிலை என்னவென்றால் இவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்த கர்த்தர் தான் தேவன். இயேசு உட்பட மற்றவர்கள் அனைவரும் அவரது ஊழியக்காரர்களே.
🌟 யோவான் 20:23. எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யார் என்றும் வேத வசனங்களின் மகிமையி ன் இரகசியம் இன்னதென்றும் உங்களுக்கு வெளிப்படும்படிக்கு பரிசுத்த ஆவிக்கு நீங்கள் உங்களை விட்டுக்கொடுக்க எங்கள் விண்ணப்பங்களில் உங்களை நாஙகள் நினைவுகூற கடமைப்பட்டிருக்கிறோம்.
பதிலளிநீக்குmat :11:27. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.
லூக்கா
10 அதிகாரம்
22. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.
ரோமர்
9 அதிகாரம்
18. ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.