ஆப்ராஹமுக்கு முன்பே இயேசு இருந்தாரா?
ஆப்ராஹமுக்கு முன்பே இயேசு இருந்தாரா?
✍ஆப்ராஹமுக்கு முன்பே இயேசு இருந்தார் என்பதற்கு கீழ்கண்ட வசனத்தை ஆதாரமாக கிறிஸ்தவர்கள் காட்டுகின்றனர்.
➡️யோவான் 8:56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.
➡️57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
➡️58. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
✍பூமிக்கு மனிதனாக வருவதற்கு முன்பே
இயேசு இருந்துள்ளார். அதனால்தான் ஆப்ராஹம் இயேசுவை கண்டதாகவும் இதன் காரணமாக இயேசு இறைவன் என்றும் இந்த வசனத்தின் மூலம் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். இதன் உண்மை தன்மையை பற்றி பார்ப்போம்.
✍ஆப்ராஹமுக்கு முன்பே இருப்பதால் ஒருவர் இறைவன் ஆகிவிட முடியாது. உதாரணத்திற்கு வானவர்கள் சாத்தான் போன்றவர்கள் ஆப்ராஹமுக்கு முன்பே இருந்துள்ளனர். ஆப்ராஹமுக்கு முன்பே இருந்தால் இறைவன் என்று சொல்வது குருட்டு வாதமாகும். இதன் அர்த்தம் இயேசு ஆப்ராஹமுக்கு முன்பே இருந்தார் என்று ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் ஆகாது. ஆப்ராஹமுக்கு முன்பே இருப்பதால் யாரும் இறைவனாகி விட முடியாது என்று சொல்லவே இந்த கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
✍ஆப்ராஹமுக்கு முன்பே இயேசு இருந்து இருந்தால் முந்தைய தீர்க்கதரிசிகள் ஏன் திரித்துவ இறைவனை வணங்கவில்லை? ஏன் திரித்துவத்தை போதிக்கவில்லை? கிறிஸ்தவர்களால் இதற்கான ஆதாரத்துடன் உள்ள பதிலை தர முடியாது. ஏனெனில் திரித்துவம் என்பதே பொய் மற்றும் இயேசுவும் ஆப்ராஹமுக்கு முன்பே இருக்கவில்லை என்பதே உண்மை.
✍ஆப்ராஹமுக்கு முன்பே தான் இருந்ததாக சொல்லும் இயேசுவின் கூற்றுக்கு அதன் உண்மை அர்த்தம் என்ன?
✍மேசியாவின் வருகை பற்றி முந்தைய தீர்க்கதரிசிகளுக்கும், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் சொல்லப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் ஆப்ராஹமும் இதனை அறிந்து இருந்தார்.
➡️யோவான் 8:25. அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.
➡️யோவான் 8:28. ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
✍அந்த மேசியாவை யூதர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயம் அந்த மேசியாவை இறைவன் என்று எந்த தீர்க்கதரிசியும் நீதிமான்களும் போதிக்கவில்லை. அதனால் தான் எந்த தீர்க்கதரிசியும் நீதிமானும் திரித்துவ இறைவனை வணங்கவில்லை.
✍மேலும் இவ்வாறு கர்த்தரால் வாக்குதத்தம் பண்ணப்பட்டவைகளை காணாவிட்டாலும் கர்த்தரின் மீதுள்ள நம்பிக்கையால் அவற்றை பார்க்கமாலேயே தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் பார்த்து சந்தோஷப்பட்டார்கள் என்று வேதம் சொல்கிறது. இதை தான் இயேசு ஆப்ராஹம் தன்னை கண்டு களிக்கூர்ந்தான் என்று சொல்கிறார்.
➡️எபிரேயர் 11:13. இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.
✍அதுமட்டுமல்லாமல் இயேசு யூதர்களிடத்தில் இதை உபதேசித்தாரோ அதே யூதர்களிடத்தில் தன்னை மனிதன் என்றே அபையாளப்படுத்துகிறார்.
➡️யோவான் 8:40. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
✍தன்னை சாதாரண மனிதனாக காட்டிக்கொள்ளும் இயேசு இந்த பூமிக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு தான் இறைவனாக இருந்ததாக எங்கும் சொல்லவில்லை. ஏனெனில் இயேசு இறைவனல்ல. மாறாக கர்த்தரின் ஊழியக்காரர் தான் இயேசு என்பதே உண்மை.
✍ஆப்ராஹமுக்கு முன்பே இயேசு இருந்தார் என்பதற்கு கீழ்கண்ட வசனத்தை ஆதாரமாக கிறிஸ்தவர்கள் காட்டுகின்றனர்.
➡️யோவான் 8:56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.
➡️57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
➡️58. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
✍பூமிக்கு மனிதனாக வருவதற்கு முன்பே
இயேசு இருந்துள்ளார். அதனால்தான் ஆப்ராஹம் இயேசுவை கண்டதாகவும் இதன் காரணமாக இயேசு இறைவன் என்றும் இந்த வசனத்தின் மூலம் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். இதன் உண்மை தன்மையை பற்றி பார்ப்போம்.
✍ஆப்ராஹமுக்கு முன்பே இருப்பதால் ஒருவர் இறைவன் ஆகிவிட முடியாது. உதாரணத்திற்கு வானவர்கள் சாத்தான் போன்றவர்கள் ஆப்ராஹமுக்கு முன்பே இருந்துள்ளனர். ஆப்ராஹமுக்கு முன்பே இருந்தால் இறைவன் என்று சொல்வது குருட்டு வாதமாகும். இதன் அர்த்தம் இயேசு ஆப்ராஹமுக்கு முன்பே இருந்தார் என்று ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் ஆகாது. ஆப்ராஹமுக்கு முன்பே இருப்பதால் யாரும் இறைவனாகி விட முடியாது என்று சொல்லவே இந்த கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
✍ஆப்ராஹமுக்கு முன்பே இயேசு இருந்து இருந்தால் முந்தைய தீர்க்கதரிசிகள் ஏன் திரித்துவ இறைவனை வணங்கவில்லை? ஏன் திரித்துவத்தை போதிக்கவில்லை? கிறிஸ்தவர்களால் இதற்கான ஆதாரத்துடன் உள்ள பதிலை தர முடியாது. ஏனெனில் திரித்துவம் என்பதே பொய் மற்றும் இயேசுவும் ஆப்ராஹமுக்கு முன்பே இருக்கவில்லை என்பதே உண்மை.
✍ஆப்ராஹமுக்கு முன்பே தான் இருந்ததாக சொல்லும் இயேசுவின் கூற்றுக்கு அதன் உண்மை அர்த்தம் என்ன?
✍மேசியாவின் வருகை பற்றி முந்தைய தீர்க்கதரிசிகளுக்கும், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் சொல்லப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் ஆப்ராஹமும் இதனை அறிந்து இருந்தார்.
➡️யோவான் 8:25. அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.
➡️யோவான் 8:28. ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
✍அந்த மேசியாவை யூதர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயம் அந்த மேசியாவை இறைவன் என்று எந்த தீர்க்கதரிசியும் நீதிமான்களும் போதிக்கவில்லை. அதனால் தான் எந்த தீர்க்கதரிசியும் நீதிமானும் திரித்துவ இறைவனை வணங்கவில்லை.
✍மேலும் இவ்வாறு கர்த்தரால் வாக்குதத்தம் பண்ணப்பட்டவைகளை காணாவிட்டாலும் கர்த்தரின் மீதுள்ள நம்பிக்கையால் அவற்றை பார்க்கமாலேயே தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் பார்த்து சந்தோஷப்பட்டார்கள் என்று வேதம் சொல்கிறது. இதை தான் இயேசு ஆப்ராஹம் தன்னை கண்டு களிக்கூர்ந்தான் என்று சொல்கிறார்.
➡️எபிரேயர் 11:13. இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.
✍அதுமட்டுமல்லாமல் இயேசு யூதர்களிடத்தில் இதை உபதேசித்தாரோ அதே யூதர்களிடத்தில் தன்னை மனிதன் என்றே அபையாளப்படுத்துகிறார்.
➡️யோவான் 8:40. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
✍தன்னை சாதாரண மனிதனாக காட்டிக்கொள்ளும் இயேசு இந்த பூமிக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு தான் இறைவனாக இருந்ததாக எங்கும் சொல்லவில்லை. ஏனெனில் இயேசு இறைவனல்ல. மாறாக கர்த்தரின் ஊழியக்காரர் தான் இயேசு என்பதே உண்மை.
கருத்துகள்
கருத்துரையிடுக