இயேசுவின் சரீரம் தேவத்துவம் பெற்று இருந்ததா????

இயேசுவின் சரீரம் தேவத்துவம் பெற்று இருந்ததா????




கொலோசெயர் 2:9  ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.

இயேசு தேவன் என்பதற்கு மேலே உள்ள பைபிள் வசனத்தை ஆதாரமாக கிறிஸ்தவர்கள் கட்டுகின்றனர்.  அதாவது இயேசுவின் மனித உடலினுள் தேவத்துவம் பரிபூரணம் பெற்று இருந்தது என்று இந்த வசனம் சொல்வதால் இயேசுவை இறைவன் என்கின்றனர். இந்த வசனம் சொல்ல வரும் செய்தி என்னவென்பதை பைபிளின் மற்ற வசனங்களை கொண்டு ஆராயலாம்.



கொலோசெயர் 2:9 வசனத்தின் படி   இயேசுவின் மனித உடலில்  தேவத்துவம் என்பது கடவுள் என்ற அடிப்படையில் பரிபூரணத்தோடு இருந்திருந்தால் ஏன் இயேசுவுக்கு மறுமை நாள் எப்போது வரும் என்று தெரியவில்லை?

''அந்த நாளையும், அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்: பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.''(மத்தேயு – 24:36)

பிதாவைத் தவிர வேறு யாருமே அந்த நாளை (நியாயத்தீர்ப்பு நாளை) அறியமாட்டார்கள் என்று இயேசுவே கூறியுள்ளார். இயேசு கடவுளாக இருந்தால் அதை அவர் அறிந்திருப்பாரல்லவா?

இயேசு ஏன் தன்னை காட்டிலும் தன் பிதா உயர்ந்தவர் என்று ஏன் சொல்ல வேண்டும்?

யோவான்  10

29: அவைகளை எனக்குத் தந்த #என்_பிதா_எல்லாரிலும்_பெரியவராயிருக்கிறார்;

திரித்துவ நம்பிக்கைப்படி பிதா குமாரன் பரிசுத்த ஆவி இம்மூவரும் இறைத்தன்மையில் சமம் என்று நம்புவது ஆகும்.  இயேசுவின் உடல் தேவத்துவத்தில் பரிபூரணம் பெற்று இருந்தால் தன்னை காட்டிலும் தன் பிதா பெரியவர் என்று ஏன் இயேசு இயேசு சொல்ல வேண்டும்? தன்னை காட்டிலும் தன் பிதா பெரியவர் என்று இயேசு சொல்வது அவர் இறைவன் இல்லை என்பதையே காட்டுகிறது.

பிதா ஒருவரே நல்லவர்

☉ அதற்கு இயேசு, 'நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே' என்றார்.

(மார்க்கு 10:18)

இயேசு தனது சரீரப்பிரகாரமாக தேவத்துவம் பரிபூரணமாக பெற்று வாழ்ந்தது உண்மையென்றால் "என்னை நல்லவன் என்று சொல்லாதே. பிதா ஒருவர் தவிர வேறு யாரும் நல்லவர் இல்லை" என்று ஏன் இயேசு சொல்ல வேண்டும்?

மேற்கண்ட பைபிள் வசனங்கள் இயேசு சரீரப்பிரகாரமாக இறைவனாக வாழவில்லை என்பதை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.  உண்மையில் அந்த வசனம் இயேசுவுக்கு கர்த்தரால் கொடுக்கப்பட்ட தேவத்துவம் அதாவது தூதுத்துவத்தை பற்றி தான் பேசுகிறது. அதனால் தான் இயேசு தனது விருப்பத்தின் படி ஒன்றும்  செய்யாமல் தன்னை அனுப்பிய கர்த்தரின் விருப்பத்தின் அடிப்படையில் செய்வதால் தன் தீர்ப்பு நீதியாக உள்ளது என்று  இயேசு சொல்கிறார்.

நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. '' (யோவான் 5:30)


கர்த்தரால் அனுப்பப்பட்ட  ஊழியக்காரரான இயேசு எப்போதும் கர்த்தருக்கு சமமானவரல்ல என்றும் கர்த்தரே தனக்கு எஜமானன் என்றும் இயேசு இங்கு கூறுகிறார்.

⭐ 16. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
John 13


அப்போஸ்தலர் 3: 13
நம் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் கடவுள் தன்னுடைய #ஊழியரான_இயேசுவை மகிமைப்படுத்தியிருக்கிறார்;  அவரைத்தான் முன்பு நீங்கள் எதிரிகளிடம் ஒப்படைத்தீர்கள். பிலாத்து அவரை விடுதலை செய்யத் தீர்மானித்தபோதும் அதை ஏற்றுக்கொள்ளாமல் பிலாத்துவுக்கு முன்னால் அவரை ஒதுக்கித்தள்ளினீர்கள்.


இயேசு இந்த பூமிக்கு வந்ததன் நோக்கமே இயேசுவின் வார்த்தைகளை கேட்டு அவரை அனுப்பிய பிதாவையே நாம் விசுவாசிக்க வேண்டும் என்பதே.


''என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ''(யோவான் 5:24)

இயேசு இறைவனால் அனுப்பப்பட்ட தூதரே. 

'' இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.'' (யோவான் 5:37)

''என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ''(யோவான் 5:24)


இயேசுவோடு வாழ்ந்த மக்கள் இயேசுவை தீரக்கதரிசி என்றே நம்பினர்.
மத்தேயு 21:46. அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசி என்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.


இஸ்லாமும் இயேசுவை அல்லாஹ்வின் தூதர் என்று சொல்லி இயேசுவை உண்மைப்படுத்துகிறது.


அல்குர்ஆன் 4:171 வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் ("குன்" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்;. அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்